Friday, October 14, 2016

நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக! - பெரியார்

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படியிருந்தாலும், நாகம்மாளை 'மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் சுயலநல வாழ்வில் 'மைனராய்', 'காலியாய்', 'சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு.

ஆனால், அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும், நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!

'குடிஅரசு' 14.5.1933"

Monday, July 11, 2016

என் மௌனங்கள்

என் மௌனங்கள்
மென்று தின்னுகிறது
வார்த்தைகளை

அதற்கு
பெயரிடுகிறாய்
சம்மதமென்று

அமைதியாய்
இருந்துவிட்ட
காரணத்தால்
எனது ஆசாபாசங்களை
தொலைத்துவிட்டு
தவிக்கிறேன்

எவ்வாறாயினும்
காகிதமொன்றில்
மௌனம் தின்று
போட்ட எச்சங்களை
எழுத்தாக்கி
கடிதமொன்றை
வரைகிறேன்

எனது கைகளுக்காவது
தெம்பிருக்குமா
அதை உன்னிடத்தில்
தருவிக்கவென்று
தெரியாதெனக்கு

வலிக்கத்தான்
செய்கிறதென்
இயலாமையும்
தயக்கங்களும்

இறுதியில்
கோழைத்தனமாய்
உன்னை
மணமுடிக்கிறேன்
மனதை கல்லாக்கி

கசக்கத்தானே
செய்யும் இந்த
வாழ்வெனக்கு
விருப்பமில்லாதது
எனும் பொழுது

அழுத்தமாய்
உணர்த்துகிறது
சில மௌனங்கள்
சம்மதங்களாகாதெனும்
உண்மை

அதை உணரத்தான்
யாருமில்லை
இங்கே என்னையும்
சேர்த்து ,,,

Monday, July 04, 2016

புத்தனுக்கு

அமைதியாக
புத்தன்
அமர்ந்திருக்கிறான்

ஆசைகள்
அனைத்தும்
சிலைகளாக
வடித்தாகிவிட்டது

அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அல்லாமல்
உலகெங்குமாய்

ஆனாலும்
புத்தனுக்கு
பேச வேண்டும்
போலிருந்தது

என்னை ஏன்
கடவுளாக்கினீர்கள்
என்று

வாய்ப்பூட்டு
புத்தனுக்கும்
வாய்ப்புகளை
சிலைகளுக்கும்
தந்தாகி விட்டது
நிரந்தரமாய்

மௌனம்
புத்தனுக்கு
பொருந்திப் போனதென்று
போலியாய்
பரப்புரையும்
செய்தாகிவிட்டது

இனி
பேசுதல் பற்றி
சிந்தித்தல்
கூட புத்தனுக்கு
பக்தர்களின்
அனுமதி வேண்டி
வரிசையில்
நின்றாக வேண்டுமே,,,

Sunday, July 03, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு



*தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, குடிமக்கள் தாங்கள் தெரிந்து
கொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை
உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டம்.
*2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம்,
பெண்கள் என்ன பலன்கள் எல்லாம் பெற முடியும், அதற்கு விண்ணப்பிப்பது
எப்படி, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும் என்பது பற்றி
இப்போது காண்போம்…
மனுவை எப்படி எழுத வேண்டும்?
*`ஆமாம்’, `இல்லை’ என்பது போன்ற கேள்வி – பதில் உரையாடலாக
இல்லாமல்,நமக்குத் தேவையான தகவல் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும்
கேட்க வேண்டும்.உதாரணமாக, நான் வாக்காளர் அடையாள அட்டைக்கு
விண்ணப்பித்தேன். உரிய நாட்கள் கடந்தும் அது இன்னும் எனக்குக்
கிடைக்கவில்லை. என் விண்ணப்பத்துக்கான ரசீதை இதனுடன் இணைக்கிறேன். என்
விண்ணப்பத்தின் நிலைத்தகவல் என்ன? இன்னும் எத்தனை நாட்களில் வாக்காளர்
அடையாள அட்டை என் கைகளில் கிடைக்கும்? நான் செய்ய வேண்டிய அலுவல் எதுவும்
இருக்கிறதா?’ என விளக்கமாக எழுதி,தாசில்தார் அலுவலகத்தில் `ஆர்டிஐ’ மனுவை
அளிக்க வேண்டும்(இந்தச் செயல் முறை, புது குடும்ப அட்டைக்கு
விண்ணப்பித்துக் கிடைக்க வில்லை என்றாலும் பொருந்தும்).நினைவில் கொள்க:…
போதிய விவரங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். மனுவை யாருக்கு
அனுப்ப வேண்டும்? எந்த அரசு அலுவலகத்தில் தகவல் கோரப்படுகிறதோ, அந்த
அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.‘பெறுநர்’
முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு,எந்த அலுவலகமோ,
அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்ததபாலில் 10 ரூபாய்க்கான
நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை ஒட்டி அனுப்ப வேண்டும்.தமிழ்நாட்டில்
இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே
பதில் தரச்சொல்லிக் கோரலாம். மனுவுக்கு பதில் வரவில்லை என்றால்? பொதுத்
தகவல் அதிகாரியிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை என்றால், அவருக்கு
மேலே உள்ளமேல்முறையீட்டு அதிகாரிக்கு மனு அனுப்பலாம். அந்த மனுவில்
‘பொருள்’ என்பதன் கீழ், பொது தகவல் அதிகாரி இந்நாள் வரை தகவல் தராததன்
காரணமாக,“ஆர்டிஐ” சட்டத்தின் படி அவர் பணிபுரியவில்லை எனத் தெளிவாக
குறிப்பிட்டு, முதலில் அனுப்பிய மனுவின் நகலையும் தவறாமல் இணைத்து
அனுப்பவும்.
அதிகாரிகள் எத்தனை நாட்களுக்குள் நமக்கு பதில் தரவேண்டும்?
பொதுத் தகவல் அதிகாரி,30 முழு வேலைநாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
அதேபோல, மேல்முறையீடு செய்த அதிகாரியும் 30 நாட்களுக்குள் பதிலளிக்க
வேண்டும்.
இரண்டு அதிகாரிகளிடம் இருந்தும் பதில் இல்லை என்றால்? அடுத்ததாக,
`ஆர்டிஐ’யின் தலைமையான மாநில தகவல் ஆணையத்துக்கு,`மாநிலத் தகவல் ஆணையம்,
எண் 2, ஆலையம்மன் கோயில் தெரு, தி. நகர், சென்னை-18’என்ற முகவரிக்கு மனு
அனுப்பலாம். மிகப்பெரும்பாலும், முதல் இரண்டு மனுக்களுக்கே பதில்
கிடைத்துவிடும். மனுவுக்கு பதில் வரும்போது கவனிக்க வேண்டிய அம்சம் என்ன?
தபால் வந்தவுடன், அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டு
வாங்கும்பட்சத்தில், ‘உள்ளே உள்ளவற்றை படித்துப் பார்க்காமல்
பெற்றுக்கொள்கிறேன்’ என்று ரசீதில் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுக்கலாம்.
போதிய தகவல்கள் இல்லை என்று மேல்முறையீடு செய்யும்போது, அது உதவும்.
பெண்களுக்கு எப்படி பயன்படும்? ஒருபெண் தன் குடும்ப சொத்தில் தனக்கு
உரிமை இருக்கிறதாஎன்பதை அறிந்துகொள்ள, தன் குடும்பத்தின் விவரிக்கக்கூடிய
அனைத்துத் தகவல்களையும் மனுவில் எழுதலாம்.
இந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் தந்தையின் சுயசம்பாத்தியமா, பரம்பரைச்
சொத்தா என்பதைக் குறிப்பிட்டு, ‘இதில் என்னுடன் பிறந்தவர்கள் போக, எனக்கு
எவ்வளவு சதவிகித பங்கு இருக்கிறது? நானும் சம்மதித்தால்தான் இதனை விற்க
முடியுமா?’ என கேட்கவிரும்பும் கேள்விகளை அடுக்கலாம். மனுவை மாவட்ட
நீதிமன்றத்துக்கு தபாலில் அனுப்பலாம் (முகத்துக்கு நேராகவோ, தொலைபேசி
மூலமாகவோ தொடர்புகொள்ளக் கூடாது).ஒருவேளை கோரிய மூன்று கேள்விகளில், ஒரு
கேள்விக்கு மட்டுமே தகவல்கள் பதிலாகக் கிடைத்தால், அந்த இரண்டு கேள்விகளை
மீண்டும் மேல்முறையீட்டு அதிகாரிக்கு மனுவாக அனுப்பலாம். தினமும் இரவு
யாரோ வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, காலையில் எடுத்துச்
செல்கிறார்கள். அது அச்சம் தருவதாக இருக்கிறது எனில், போக்குவரத்துத்
துறை அதிகாரிக்கு வண்டியின் பதிவெண்ணைக் குறிப்பிட்டு, விவரத்தைக் கூறி,
அது யாருடைய வண்டி என்ற தகவலைக் கோரிப் பெறலாம். அவர் மேல் நடவடிக்கை
எடுக்கச் சொல்லலாம். அல்லது 101 என்கிற அவசர எண்ணுக்கு அழைத்தும்
புகாரைப் பதிவு செய்யலாம். விதவைப் பெண் ஓய்கூதியம் பெறுவோர், கணவனால்
கைவிடப்பட்டவர்கள் (குழந்தையுடன் வசிக்கும் பெண்கள்) உள்ளிட்ட பெண்கள்,
‘எனக்கு வேலை கிடைக்குமா?’ என்பதையும், ‘கணவர் கைவிட்டுப்போய் 7 ஆண்டுகள்
ஆகிவிட்டபோதிலும், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவருக்கு ‘இறப்பு
சான்றிதழ்’ வழங்கப்படுமா’ என்பது போன்ற விவரங்களையும் கேட்கலாம். வேலை
வாய்ப்பு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வேண்டும். கணவர் காணாமல் அல்லது
கைவிட்டுப் போனால், அவர் காணவில்லை என்கிற புகாரை உடனே அருகில் இருக்கும்
காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில்(எஃப்.ஐ.ஆர்)பதிவு செய்ய
வேண்டும். அப்போதுதான், ஒருவேளை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் எந்தத்
தகவலும் இல்லை என்றால், `எஃப்.ஐ.ஆர்’ நகலைக்கொண்டு அணுக முடியும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிந்தவர்கள், ‘சீனியாரிட்டி அடிப்படையில்
முன்னுரிமை வழங்கப்பட்டு எனக்கு எப்போது வேலை கிடைக்கும்’ என்ற தகவலை,
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துக்கு மனு அனுப்பிப் பெறலாம்.மகளிர்
குழுக்களுக்கான சுயதொழிலுக்கு எவ்வளவு கடன் கொடுக்கப்படும், எதன்
அடிப்படையில் கொடுக்கப்படும், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது போன்ற தகவல்களை, மாநில அரசாங்கத்துக்கு
மனு அளித்துப் பெறலாம்.அரசாங்கம் சார்ந்த தகவல் பெற தலைமைச்
செயலகத்துக்கே அனுப்பலாம். ஆனால், அந்தந்த துறை சார்ந்த தகவலுக்கு,
அதற்கேற்ற துறையைத்தான் அணுக வேண்டும்.முகவரி தெரியவில்லை என்றால் உடனே
அவர்களுக்கு அனுப்பிவிடக் கூடாது. அதுமட்டுமின்றி, மகளிர் சுயதொழில்
குழுக்களுக்கு தரப்படும் தொகை, ஆட்சிக்கு ஏற்றவாறு மாறுபடும்.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்குபி.எஃப்தகுதியுடைமை
இருந்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்தே பள்ளி நிர்வாகம் ஒரு தொகையைப்
பிடித்து வைத்திருக்கும்.வேறு வேலைக்குச் செல்லும்போது, அதனை பள்ளி,
சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு அளித்துவிட வேண்டும். அது தொடர்பான தகவல்களை
அறிய, பி.எஃப் அலுவலகத்துக்கு `ஆர்டிஐ’ மனு அனுப்பலாம். அரசாங்கத்திடம்
இருந்து ஊக்கத்தொகையோ, மானியமோ பெறும் எந்த நிறுவனமும் இதற்குக் கீழே
வரும்.
- தீக்கதிர்

Saturday, July 02, 2016

இந்துத்துவ ஆர் எஸ் எஸ் ஓர் அறிமுகம்



ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?
அவர்கள் யார்?
அவர்களின் பணி என்ன?
1.ஆர் எஸ் எஸ் என்பது –
ராசிடிரிய சேவை சங்கம் –
இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட
பார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்,
2.இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி
வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு இது
.
3,இதுதான் கோட்சே மூலம் காந்தியை
சுட்டு கொன்றது. இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..
4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணம் இந்த அமைப்புதான் ..
5. இதன் நோக்கம் பார்ப்பனர்கள்  தொடர்ந்து
அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள்
அடிமையாக , தீண்ட தகாதவர்களாக
இருக்கவேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள் .
6. இது உலகின் மிக பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.
7.இந்த அமைப்பில் ராணுவ தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினார்கள் இருப்பார்கள்
பெரும்பாலும் “பார்ப்பனர்கள் பல
அதிகாரத்தில் இருப்பார்கள்
8.இந்த அமைப்பில் அடியாளாக “ஆதிக்க  சாதி
இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட –
தலித் மக்களுக்கு எதிராகவும் ,
சிறுபான்மை மக்களுக்கு எதிராக ,
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்
9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கை கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட  “கதாபாத்திரங்களை , உணமையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள் ,-
ராமன் என்பவன் ஒரு
கதையின் கதா பாத்திரம் -அதை
உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , பாபர் மசூதி
உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று
பொய் சொல்லி , முட்டாள் இந்துக்களை ,
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி ,
பாபர் மசூதியை குண்டு வைத்து
இடித்து , இந்த நாட்டில் “பயங்கரவதத்தை
‘விதைத்தனர்
11. விநாயகர் ஊர்வலம் ஒன்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை ,
இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு
வந்து மத நல்லிணக்கத்தை சிதைத்தனர் –
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கபடுகிறது ..
12, இவர்கள் அரை டவுசர் போட்டு
,கையில் தடியுடன் , பொது
சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக
முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள் ..
இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட
“காவல் துறை ” முழு பாதுகாப்பு
கொடுக்கும்
13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ,
ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல் ,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்ச்சிகளை
கொடுப்பார்கள்
14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள்
கிடைக்கும்
15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய –
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது “பெரிய குற்றவியல் அல்லது
நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது
என்பது யதார்த்தம்
16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதை கண்டு கொள்ளாது .
17. சமஸ்கிருதம் -இந்தி இவை
இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்
.பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
“மாட்டு கறி உண்பதை தடை
செய்வார்கள்
18. அதிகமான “அம்மண-சாமியார்கள் –
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் “
ரிஷிகள் அமைப்பு என ” ரவுடிகளாக
பயன்படுத்தி கொள்ளுவார்கள்
19. இவர்களின் மூட நம்பிக்கை
கருத்துக்களை எதிர்க்கும் –
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யூனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் ஆகியோர்களை
தாக்கி கலவரம் செய்வார்கள்
பல நேரங்களில்
கொலையும் செய்வார்கள்
இப்படி பல
அறிஞர்களை கொலை செய்திருக்கின்றனர்
20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் –அவை
” விஷ்வ ஹிந்து பரிசாத்,
பஜ்ரங் தல் ,
ஹிந்து முன்னணி,
ஹிந்துஸ்தான் விராத் ,
நிர்மான் சபா ,
ஹிந்து சபா ,
அகில பாரத் வித்யார்த்தி
பவன் எனற மாணவர் அமைப்பு , சேவாதல் மாநில
சுயாட்சிகொண்ட “சிவா சேனா ,
ரன்பீர் சேனா ( பிகாரில் நிலபிரபுக்கள் படை )
-அரசியல் கட்சியாக -பாரதிய ஜனதா
பார்டி .
21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் – இந்திய தேசிய
மூவண்ண கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்று
கொள்ளாது மரியாதையையும் செய்யாது
22. இவர்களின் தலைமை பீடம் “(RSS )
நாக்பூரில் , சென்ற ஆண்டு வரை
தேசிய கொடி ஏற்ற படவே இல்லை
23. இவர்களின் அமைப்பு ” சமூக நீதிக்கு
-இடஒதுகீட்டு எதிரானது .
24. இவர்களது அமைப்பு ” சமத்துவத்தை
“எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு
25- உரிமை — ஜனநாயகம் அதற்க்கான
போராட்டம் -இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது –
அந்த தருணத்தில் -ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டது -ஆங்காங்கே
உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை
செய்து கொண்டிருக்கிறது .
26. இந்தியாவில் இதுவரை 10000
மேற்பட்ட கலவரங்களை தூண்டி
லட்சக்கனக்கான மக்களை காவு வாங்கி உள்ளது
26. உயர் சாதி – கிழ் சாதி – தீண்டாமை
என்பவை – மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாக
கொண்டவை
27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும் “
இவர்கள்தான் “தலைமை பொறுப்பை
கைபற்றி கொண்டனர் ( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
“யுவராஜ் கூட ஆர் எஸ் எஸ் அமைப்பின்
முக்கிய பிரமுகர் என்பது
குறிபிடத்தக்கது
28. இந்தியாவில் உள்ள அச்சு மற்றும்
தொலைகாட்சி ஊடங்கங்கள்,
ஆர் எஸ் எஸ்
ஆதரவாலர்கலால்தான் நடத்தபடுகிறது
29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின்
முக்கிய முடிவுகளை
தீர்மானிக்கிறது . பாஜக கட்சியின்
மோடி – அமீத்சா எல்லோரும்
ஆர் எஸ் எஸ் அடிப்படை கோர் உறுப்பினர்கள்
30 .இவர்களின் ஆலோசனையின்படியே
“இந்திய உளவுத்துறைகளான ” ரா “
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..
ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன -அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்……….>
31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது -பெண்கள் படிக்க கூடாது
-வேலைக்கு போக கூடாது –
பெண்ணின் வேலை -பிள்ளை பெற்று
வீட்டில் இருந்து பரமரிக்கவேண்டியதுதான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம் –
32.வெள்ளையர்களுக்கு எதிராக போரட திராணி இல்லாமல்
இந்த தேசத்தின் தியாகிகளை காட்டிக்கொடுத்தவர்கள் இந்த RSS
33.கோவில்களில் “பார்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பணர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால்
தீட்டு என்ற கொள்கையை அமுல்
படுத்தியதும் இந்தஆர் எஸ் எஸ். தான்
34.பாரத் மாதா கி ஜே! என முழக்கமிடுவார்கள்
வீதியெங்கும் பெண்களை
போகப்பொருளாகவே
பயன்படுத்துவார்கள் ஆர் எஸ் எஸ்

இந்த தேசத்துரோகிகளை பற்றி இன்னும் நிறைய இருக்கிறது,,,

கபாலியும் கொலையும்

நான்
கபாலி
திரைக் காவியம்
பற்றியும்

ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும்
ஓயாது
மந்திரங்களோதும்
பலகோணத்து
புது படங்களை
பற்றியும்
பேசிக்கொண்டிருந்தேன்

இடையிடையே
அரட்டையும்
அங்கலாய்ப்புகளும்
அடுத்த சூப்பர் ஸ்டார்
தலயா தளபதியா?
என்கிற ஆராய்ச்சி
விவாதங்களுடனும்
அந்த பயணங்களில்

எனதருகில்
ஒரு தற்கொலை
ஒரு படுகொலை

கண்டும்
காணாமல்
நகர்ந்து விட்டேன்

உடனே
விமரிசனம் எழுதியாக
வேண்டுமே

அதுபற்றியல்லாமல்
திரைக் காவியங்களை
பற்றி
தல தளபதிகளை
பற்றி,,,

சுவா(தீ)க்களோ
வினுபிரியாக்களோ
ஜிஷாவோ
நிர்பயாக்களோ
நிர்வாணமாய்
பிணமாய்
கிடந்தாலும்

என் பக்கங்களை
நிரப்பியாக
வேண்டும்
என் விமரிசன
காணொளிகளை
ஏற்றியாக
வேண்டும்

சமூக நீதிகள்
செத்துக் கிடப்பதாய்
பேச
எனக்கொன்று
வாய்த்திருக்கிறது
சென்சார் போர்டு
என்கிற பெயரில்
அதுமட்டுமே
போதுமெனக்கு
பெண்ணியம்
பேசிடவும்
போர்க் கொடி
தூக்கிடவும்,,,

மாவோ எனும் மாமனிதன்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியினை விரும்பும் கம்யூனிஸ பாட்டாளி
வர்க்கத் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருங்கிணைத்தலை
,வழிநடத்தும் பண்பு கொண்ட ஒரு தலைமை வாய்ப்பதற்கு அவர்களின் புரட்சிக்கு
ஏற்ற வெற்றிபெற்ற செயல்திட்டங்களே உதாரணமாய் அமைகின்றது. அந்த வகையில்
ஓர் தலைமை மட்டுமே செயல்திட்டத்தினை தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து
புரட்சியை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸியம், லெனினியத்திற்கு
செழிப்பூட்டும் வகையில் பாட்டாளி வர்க்கத்தின்
மீது அக்கறையோடு செயல்பட்ட கம்யூனிஸ சீன புரட்சியாளர்தான் தோழர் மாவோ
எனும் மாசேதுங் . "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என சோஷியலிஸ வேட்கையினை
கம்யூனிஸப் பாதையை கொண்டு சீனத்தை செதுக்கினார் மாவோ, வெறும் சிற்பங்களாக
அல்லாமல் ஒவ்வொரு சிற்பத்திற்குள்ளும் சமூகம், சகோதரத்துவம், பெண்ணியம்,
சோஷியலிஸம், கம்யூனிஸமென தொழிலாளர் வர்க்கத்தின் அத்துணை உரிமைகளையும்
அவர்களுக்குள் புகுத்தி புரட்சிகர கம்யூனிஸத்தை சீன தேசத்திற்கு
மட்டுமல்லாது மற்ற ஏனைய உலக தேசங்களுக்கெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தத்தின்
ஆகப் பெரும் முன்னுதாரணமாய் எடுத்துச் சென்றவர் மாவோ. ஏனைய கம்யூனிஸ்ட்
தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள்
மார்க்சிய லெனினிசத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும்
விளக்கினார். சீனாவில் ஒருசக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன்
தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு
கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது
எதிரிக்கு எதிராக ஒரு பரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டி
ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகுமுதலாளித்துவத்தையும்
இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பறிய சாதனையாகும்.
ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும்,
தந்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில்
நகரங்களை கைப்பற்றி முழுத்தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை
ஏற்படுத்தியதுமற்றுமொரு சாதனையாகும். அதனடிப்படையிலேயே மாவோயிஸத்தின்
பாதை கிராமங்களை நோக்கியதான பாதை என்பார்கள்.
அரைக்காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத
சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமையின் கீழ்
ஐக்கியப்படுத்தி ஜனநாயகப் புரட்சியை வென்றெடுத்து, அதன் அடுத்தகட்டமான
சோசலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை, விடுதலைக்காக போராடும் அனைத்துலக
மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.
சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோசலிச நாடாக்க நடவடிக்கை
எடுத்தமை, சோவியத் யூனியன் தலமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில்
உருவெடுத்த நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமை
என்பன மூலம் மாக்சிய லெனினியத்தையும், புரட்சிகர
இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு
வழிகாட்டியாக மாவோ விளங்கினார். மாவோ சாதனையாளனல்ல உலக சரித்திரத்தை
புரட்டிப்போட்ட ஒரு சாதாரண கம்யூனிஸ பற்றாளன். அவரின் சாதனைகளை வெறும்
சாதகமாகவே பயன்படுத்துவது என்றுமே அபத்தமாக இருக்கும். புரட்சிகர
சோஷியலிஸ கம்யூனிஸத்திற்கு ஒரு பகுத்தறிவாளனாய், புரட்சியாளனாய் மாவோவை
பின்பற்றுதலே உலகின் ஆகச் சிறந்த பல சாதனை புரட்சிகளுக்கு வழிகாட்டுதலாக
அமையும்.

- 26 December 2011 அன்று எனது பேஸ்புக் (facebook) பதிவிலிருந்து,,,

Friday, July 01, 2016

மிக சமீபத்தில்

மிக சமீபத்தில்தான்
நான் செத்திருக்க
வேண்டும்

ரிங்கார
இறைச்சலோடு
ஈக்கள் கூட்டமொன்று

யாரோ ஒருவன்
தன் கூர்வாளால்
எனதுடலை கிழத்த
இடங்களில்
வழிந்தோடும்
குருதியின்
கதகதப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன

அவைகளை
தொந்தரவு
செய்யாதீர்கள்

விலகியோ
விழுந்தடித்தோ
நகர்ந்து விடுங்கள்

நாளைக்கு அவைகள்
மட்டுமே
என் கல்லறைக்குள்ளும்
அனுதாபங்களை
சுமந்து கொண்டு
உயிரோடு வாழும்
ஆத்ம விசுவாசிகள்

அப்போதவைகள்
ஈக்களில்லை
தன் உருவங்களை
மாற்றிக்கொண்ட
புழுக்களெனும்
பெயரில்,,,

கடவுளாக்கப்பட்டவன்

நானாகி
நிற்கிறேன்
யாருமற்ற
அடர் வனத்தில்

கனத்திருக்கும்
சிலுவையின்
சுமையினை
இறக்கி வைத்து
இயேசுவை போல

என் தேவனே
என் தேவனே
ஏன் என்னை
கைவிட்டீரென

கதறி அழுகிறேன்
கடவுளாக்கப்பட்டவனின்
கடைசி அலறலும்
கதறலும்
காதுகளில் விழாதென
கைகளால்
மூடிக்கொண்டது
அந்த அடர்ந்த வனம்

அதுவும் நல்லதுதான்
கடவுளை மறுப்பதற்கு
போதுமானதாய்
பொதுவானதாய்,,,

Friday, June 17, 2016

பாபா சாகேப் திரைப்படம் தயாகிறது தமிழில்,,,

காமராசர், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புரட்சியாளர்,
இந்திய அரசியலமைப்புத் தந்தை பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு
'பாபா சாகேப்' என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார்
என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.இப்படம் குறித்து அவர் கூறும்போது,
டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையை மையக் கருவாக வைத்து
உருவாகவிருக்கும் திரைப்படம் தான் "பாபா" சாகேப். தமிழ் சினிமாவில்
இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட
திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்க்கையை
அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கக் கூடாது என்ற
எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன். ஹாலிவுட்டில்
அட்டன்பரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக
எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை
வரலாற்றை திரைப்படமாக எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்
இந்த பாபா சாகேப்.அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000
பேருக்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை. இறுதியாக எங்கள்
திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் 'ஆய்வுக்கூடம்' திரைப்படத்தின்
நாயகன் ராஜகணபதியை அறிமுகம் செய்தார், அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல
உள்ளதால் அவரை தேர்வு செய்தோம், மேலும் இத்திரைப்படத்திற்காக
அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும் பாரதியார்,
பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான
தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு தேனிசைத் தென்றல்
தேவா இசையமைக்கிறார். ரன் ஹார்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் அஜய் குமார்
தயாரிக்கிறார்.
- தீக்கதிர்.

ஜிஷாவின் தாயருக்கு கன்னய்யா குமார் ஆறுதல்

இந்துத்துவ பார்ப்பானியத்தின் மனுதர்ம ஆட்சியில் சாதியாதிக்கர்களின் பாசிச போக்கினை, இந்தியம் அனுபவித்துக்கொண்டிரு­க்கிறது. மதவெறி,சாதிவெறி, பெண்ணடிமைத் தனம், தலித் விரோதம், பாலியல் வண்புணர்வு, பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்தலென தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களின் பக்கம் நீதி இருந்ததில்லை என்பது தெளிவுபடுத்தும் விதமாக நடந்ததுதான் கேரளத்தில் சட்டக் கல்லூரி மாணவி தலித் ஜிஷா வண்புணர்வுக்காளாகி கொரூரமாக படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கேரளத்தில் புதிய அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள கம்யூனிஸ்ட் பினராய் விஜயன் அவர்கள் தனது முதல் கையெழுத்தாக தலித் மாணவி ஜிஷாவின் கொலைக்கான துரித விசாரணைக் கமிஷனை அமைத்திட்டார் எனும் ஆறுதலோடு, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கண்ணீரை துடைக்க இன்னொரு ஆறுதல் நிகழ்வும் நமக்கானதாக இருந்திருக்கிறது , டில்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளான கன்னய்யா குமார், மற்றும் ஷெஹ்லா ரஷீத் தோழர்கள் கேரளா சென்று . அங்கு படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிஷாவின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.­ கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஷிசாவின் கொலையை விரைந்து விசாரிக்கும் எனவும் ஜிஷாவின் தயாருக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்­கள் எனும் நல்ல செய்தி உண்மையில் நமக்கானதாய் இருக்கிறது.

Thursday, June 16, 2016

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

"தேசியத்தை" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து
வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக
உத்தேசித்துள்ளார்கள்­? மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு
நிலம் கொடுக்கப் போகிறார்களா? வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்
போகிறார்கள்? இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா? அல்லது
இவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா? விளை
பொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்
திட்டமெதேனும் சிந்தித்திருக்கிறார்­களா? இதை கவனிக்காதவர்களுக்கு
அரசியலில் பொறுப்பு கொடுத்தாலென்ன? கொடுக்காட்டியென்ன? அவர்கள் கதைகளான
பாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்
"தேசியம்" இருந்து பயனென்ன? தேசியம் என்றால் என்ன? தேசத்தாரை நேசித்தில்
என்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்
உணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்
சௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு
மற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்கும் வேளையில்
இருக்கவிட்டு விடுவதற்கா தேசியம் வேண்டும்? வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
வந்தால் தேசியம் பாழாய்ப்போகுமென்று கூச்சலிடும் காங்கிரஸ்காரர்கள்,
இந்து சேனாக்கள், இவர்களை போல பாமர மக்களை போல உண்டு,உடுத்தி , இனிது வாழ
என்ன செய்யப் போவதாகச் சொல்கிறார்கள்? "அரசியல்" தங்களிடம் வந்தால்
போர்ச் செலவை குறைப்பார்களாம்,,நூல­் நூற்று கதராடைச் செய்யச்
சொல்வார்களாம் ,, வெளிநாடுகளுக்குப் போகும் செல்வத்தை தடுத்து
நிறுத்துவார்களாம்,, உத்யோக செலவை குறைப்பார்களாம்,, வரி
குறைப்பார்களாம்,, உப்பு இலவசமாக்குவார்களாம்,­, தேசியத்தை அபிவிருத்திச்
செய்வார்களாம்,, இதையெல்லாம் செய்து தேசியத்தை வளர்ப்பதாகவே
வைத்துக்கொள்வோம், இவைகளை எந்த பிரதேசங்கள் செய்யாதிருக்கிறது?
சுயராஜ்யம் எனும் வல்லாதிக்க அரசுகள் இவைகளை செய்யாதிருக்கின்றனவா­?
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், அமெரிக்கா, முதலிய சுயாட்சி வல்லாதிக்க
தேசங்களில் எவை மேற்குறிய "தேசியத்தை" வளர்க்காதிருக்கின்றன­? எல்லாத்
தேசங்களும் தேசியத்தை தெய்வத்திற்கு மேல் வளர்த்து வருகிறார்கள்.
தேசியத்தை தாண்டி அவர்கள் ஊரில் வாழும் கோடான கோடி உழைக்கும்
தொழிலாளர்களின் நிலமையென்ன? அவர்கள் நித்ய வாழ்வு எவ்விதம் நடந்தேறி
வருகிறது? அவர்கள் உண்ணும் உணவு போதுமா? அவர்களுக்கு உடுத்த ஆடு
இருக்கிறதா? அவர்கள் வசிக்கும் வீடுகள் எந்த மாதிரி? அவர்கள் சந்ததியினர்
நிலை என்ன? பெண்கள்,குழந்தைகள், எந்த அந்தஸ்தில் இருந்து வருகின்றனர்?
அவர்களின் சுகாதாரம் எந்நிலையில் உள்ளது? இவைகளனைத்திற்கும் தீர்வாகாத
செயலற்ற "தேசியம்" எதற்கு? சில வருஷத்திற்கு முந்தி "சால்வேயன் ஆர்மி"
க்கு அதிபதியாகிய பூத் லண்டனில் வாழும் ஏழைகளைப் பற்றி எழுதியுள்ளதையும்
, பீலாட்ச்போர்ட் என்பவர் இங்கிலாந்து தேசத்திலுள்ள தொழிலாளர்கள் நிலமையை
பற்றி எழுதியுள்ள விஷயங்களையும் கவனித்தவர்கள் " இந்த நிலமையிலேயேனும்
தேசியமாவென" ஆச்சர்ப்படத்தக்கதாக இருக்கும். இந்த வகுப்பாரைச் சேர்த்து
நமது காங்கிரஸ் வகுப்பாரும் அதிகாரம் வந்தபோது பாமர ஜனங்களை எப்படி மேலாக
நடத்துவார்கள்? பூரண சுயாட்சி பெற்றுள்ள உலக முழுமையும் முதலாளி
செல்வாக்கில் பாமர ஜனங்களின் கதி அதோகதியாக இருக்க,,, இந்தியாவில்
மாத்திரம் காங்கிரஸ் மற்றும் இந்து சேனாக்கள் நமது பாமர மக்களை
விடுதலைக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதற்கு என்ன சாட்சி? கராச்சியில்
சென்ற வருஷம் காங்கிரசில் செய்துள்ள அரசியல் திட்டத்தை காட்டுவார்கள்.
ஆனால் அந்த திட்டத்தின் ஆபாசத்தை முன்பே விளக்கியுள்ளோம். இது உண்மையான
திட்டமென்று நம்புவதற்கு இடமில்லையென நிர்ச்சனமாக கூறுவோம். இந்த
ஆதாரமொன்றுமில்ல திட்டத்தைக் கொண்டு உலகை ஏமாற்ற முடியாதென அறிக.
ஜாதிப்பற்றையும்,மதப்­பற்றையும் , தேசியத்தையும் நீக்கி நடப்பது
சமுதாயத்தில் கடினமாகத்தானிருக்கும­் ஆனால் அப்பற்றுகளை முழுதாக நீக்கும்
தருவாயில் மட்டுமே சமுதாயம் செழித்தோங்கும். அப்பற்றுகளோடு வாழவே
காங்கிரஸ் விரும்புகிறது. தொழிலாளர் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் இவ்வித பற்று கொண்டு ஒரே
விதமாகவே நடக்கிறார்கள். இவர்கள் கூற்று ஒன்றாகவே இருக்கக் காண்கிறோம்.
நேற்று நடந்த வட்டமேசை மாநாட்டில் தொழிலாளர் தலைவர்கள் தொழில் வகுப்பு
பிரநிதித்துவம் வேண்டியதில்லையென்றும­்,பொருளாளிகளுக்கு உள்ளதே
தங்களுக்கும் போதுமெனத் தலைவர் சிவராவ் கூறியதாக தெரிகிறது. இதுயென்ன
விபரீத புத்தி? தொழிலாளுக்குத் தங்கள் புராதன நேரெதிர் விரோதிகளாகிய
முதலாளிகளை ராஜ சபைகளில் பாதுகாப்புக்கு வைக்கப்பட வேண்டுமாம், இது
எதற்காக? தேசியத்தை பெருக்க வைக்கவாம், தொழிலாளிகளுக்குத் தனி
பிரதிநிதித்துவம் கொடுத்தால் தங்களை காப்பாற்றிக் கொள்ள சக்தி
அற்றவர்களாம், இந்த காரணங்களை கொண்டு தொழிலாளிகளை முதலாளிகளிடத்தில்
அடமானம் வைத்து அவர்கள் காப்பில் இருந்துவர வேண்டுமாம், உலக முழுமையும்
எங்கே முதலாளி ஆட்சி பெருகியுள்ளதோ அங்கே தலைவர் சிவராவின் நியாந்தான்
தலைவிரித்தாடுகிறது. உலக வாழ்வுக்கு வேண்டிய சகல பொருட்களைத் தங்கள்
கைகளால் உண்டாக்கும் தொழிலாளிகள், சட்ட சபைகளில் தங்கள் உரிமைகளை ஏன்
காப்பதற்கு கொள்ள மாட்டார்கள்? அது விந்தையில் விந்தையே,,, "நீந்தக்
கற்றுக் கொள்ள வேண்டுமானால் தண்ணீரில் இறங்க வேண்டுமென்பது" தலைவர்
சிவராவுக்கும் அவர் சகாக்களுக்கும் தெரியாது போலும்,,, சட்டசபை
தொழிலாளர்களை பற்றிய ஆணவ மனப்பான்மையைத்தான் "தேசியம்" பிடித்துத்
தொங்குகிறது என்பதை இப்போதாவது உணர்வீர்களா? தேசியமென்பதெல்லாம் பொய்.
உலகில் தோன்றிய கொடுமைகளில் அதுவுமொன்று. தேசியத்தால் விளைந்த கெடுதிகளை
கூற நாவெழா! ஜெர்மன் தேசியம், பிரென்ச் தேசியத்தோடு போர் முடிந்த விஷயம்
சரித்திர விஷயம். தேசியம் எதார்த்தப் பொருளல்ல அதுவோர் கற்பனை உணர்ச்சி.
இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல் அது,, என் தேசம் , உன்
தேசம், அவன் தேசம், தமிழ்த்தேசம், என்பனவெல்லாம் கற்பித வார்த்தைகள்.
தேசம் ஒருவனுடையதல்ல, ஒரு இனத்தாருடையதுமல்ல, உலகில்
வாழ்கிறவர்க்கெல்லாம்­ தேசம் பொது. சந்திரன், சூரியன், காற்று , மழை,
யாருக்குச் சொந்தம்? அதுபோலவே நாடும்,நகரமும், எனது நாடு, எனது இனம்,
எனதீ ஜாதி, எனது அடையாளம் என்பெதெல்லாம் முதலாளிகள் செய்த பலே சூழ்ச்சி .
தொழிலாளுக்கு எந்த நாடும் தங்களுக்குச் சொந்தமில்லை, அவர்கள் உழைத்து
வாழ்பவர்கள் தேசமுழுமைக்கும் உரிமையானவர்கள்.உலகம்­ வாழ்பவர்களுக்கு வாழ
இடமேயொழிய சொந்தமாக பாவிக்க முடியாது. கோடான கோடி வருஷங்களாக உலகில்
உயிர் தோன்றியது. முதல் உலகம் வாழ இடமாயிருந்ததேயொழிய சொந்தமாக்கிக்
கொண்டு தேசியம் என்று வம்பாடுவதற்காக இல்லை. மனிதன் தோன்றிய பிறகு, முதல்
குகைகளை சொந்தமாக்கிக் கொண்டு பிறகு கிராம, நகரங்கள், நாடென சொந்தமாக்கி
அவைகளுக்கு சண்டையும் போட்டுக் கொண்டிருந்து வருகிறான். பாண்டவர்களுக்கு
5 கிராமமாகினும் கொடேன் என்ற துரியோதன மனப்பான்மையே தற்போது
தேசியத்திற்கும்,,, உன் தேசம் என்ற கற்பனை மனித எண்ணத்திலிருந்து நீங்க
வேண்டும். மனிதர் இந்த நோக்கத்தை அடைய வேண்டுமெனில் தேசியத்தை துரத்தி
அடித்து பொதுவுடைமை கூட்டத்தில் இந்த பாடத்தை படித்தும்,கற்றும் பயனுற
வேண்டும். தற்காலம் செய்து வரும் ஆயுதக் குறைவு,சமாதான முயற்சியாவும்
முதலாளி திட்டத்தில் பயன்படாது. பொதுவுடைமை மட்டுமே நமக்கு ஒரே வழி.
"தேசியத்தை கைவிட முடியாதென்பார்கள்" இதுவும் பொய். தற்போது உலகில் 16
கோடி ஜனங்கள் இந்த தேசியத்தை ஒழித்து அகிலதேச கூட்டுறவையும், அகிலதேச
தேசத்தையும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த பாழும் தேசியத்தாலே
சென்ற உலக சண்டையில் கோடான கோடி மனிதர்கள் உயிர் துறந்தனர்,பல கோடி
மக்கள் காயம்பட்டார்கள். தேசிய கற்பிதத்தால் உண்டான கேடுகளை கண்ணாரப்
பார்த்து வந்தும் இன்னும் அதனை மக்கள் நாடுவதா? கூடிவாழும் ஜந்துக்களில்
உனது,எனது என்ற பாவணை அதிகமில்லை. யானை , மான்,காக்கை, எறும்பு முதலிய
பிராணிகள் ஒன்றுக்கொன்று சண்டை கொள்வது அரிது. தனித்து (தேசியத்தில்)
வாழும் பிராணிகளிடையே ஒன்றுக்கொன்று சண்டை இருக்கும். புலி,கரடி,
சிங்கம், முதலிய கொடூர ஜந்துக்களிடம் போர் அதிகம். ஆனால் மனிதர்கள்
கூடிவாழுங்கலையில் சகலமும் பொதுவெனப் பாவிக்கும் பண்புடையவர்கள். எந்த
காலத்தில் நிலத்தையும்,நீரையும்­ தனதென்றும் உனதென்றும் எண்ண ஆரம்பித்து
தேசியம் பயின்றானோ அப்போதிலிருந்து முதல் சண்டை தொடங்கியிருக்கிறது. இந்த
தேசியமெனும் காட்டுமிராண்டித் தன்மையைத்தான் நமது இந்திய காங்கிரஸ்,இந்து
சேனாக்கள் போற்றி வருகின்றன. இந்த தேசியத்து மனப்பான்மையை சரித்திர
மூலமாக ஆராய்ச்சி செய்தால் இதுவும் புராதன காட்டுமிராண்டி
மனப்பான்மையென்றே காட்டும். ஏன் இந்தக் குறுகிய மனப்பான்மையை
விட்டுவிட்டு எல்லாத் தேசத்தவர்களும் ஓன்றே! அவர்களும் வாழ வேண்டும்,
நாமும் வாழ வேண்டுமென சமதர்ம பொதுவுடைமை வாழ்வை வளர்க்கக் கூடாது?
- குடியரசு 07.02.1932

Wednesday, June 15, 2016

ஏகாதிபத்தியர்களும்,பிற்போக்காளர்களும் - மாவோ (மா சே துங்)



ஏகாதிபத்தியம் எப்போதும் தீயச்செயல்கள் செய்கிறதாகையால் அது
நெடுங்காலமாய் நிலைக்காது . அது எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும்
மக்களுக்கு எதிராகவே நிற்கும் பிற்போக்காளர்களை வளர்ப்பதிலும்,
ஆதரிப்பதிலும் விடாப்பிடியாகவே நிற்கும். அந்த ஏகாதிபத்தியமானது பல
காலனிகளையும், அரைக் காலனிகளையும் , பல ராணுவ தளங்களையும் கெட்டியாகவும்
பலவந்தமாகவும் பிடித்துள்ளது. அது சமாதானத்தை , சமத்துவத்தை விரும்பும்
சோஷியலிஸத்தை கம்யூனிஸத்தை அணு யுத்தத்தால் அச்சுறுத்துகிறது. இவ்வாறாக
ஏகாதிபத்தியத்தினால் நிர்பந்திக்கப்பட்ட உலக மக்கள் அனைவரும் நமது
சோஷியலிஸ சீனாவும், ஏகாதிபத்தியத்திற்கெத­ிராக போராட்டத்தில் எழுச்சி
பெறுகின்றனர் (அ) பெற்றுக்கொண்டிருக்கி­ன்றனர் . ஆயினும்
ஏகாதிபத்தியமானது இன்னும் ஆசிய நாடுகளிலும், மற்ற உலக நாடுகளிலும்
தறிகெட்டு அட்டகாசம் செய்வதை பல நிகழ்வுகள் மூலம் நாமும்
சந்தித்துக்கொண்டுதான­் இருக்கின்றோம். அதன் தலைமை பீட அமெரிக்காவையும்
அது விட்டுவைக்கவில்லை . இந்த நிலைமை மாற வேண்டும். மாற்றத்தை நோக்கி
கம்யூனிஸ பாதையில் நம் நகர்வு இருக்க வேண்டும். ஏகாதிபத்திய முதலாளித்துவ
ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் முடிவு கட்டுவது அனைத்து மனித
சமுதாய மக்களின் ஆகச் சிறந்த பணியாகும். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
அடிமைபடுத்தும் புத்திக்கு எதிராக கிளர்ந்தெழுபவர்களை ஏகாதிபத்தியம் பல
வகையான சதித் திட்டங்கள் கொண்டு அணு குண்டுகளையும்,ஜலவாயு­க்
குண்டுகளையும் , போர்முனை துப்பாக்கிகள் கொண்டும் பிரயோகப்படுத்தினாலும­்
சோஷியலிஸ கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் துவண்டு விழக்கூடாது. துவண்டு
போகும் அளவிற்கும் சோஷியலிஸ கம்யூனிஸம் பலகீனமாதுமில்லை. உலகத் தொழிலாளர்
வர்க்கச் சுரண்டலை மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து பொங்கிப்
பாயும் சீற்றத்தை ஒரு மலை முகட்டிலிருந்து மறைந்து பார்த்துக்
கொண்டிருக்கும் "பிற்போக்காளர்கள்" எனும் காகிதப் புலிகளின் பார்வையால்
புரட்சியின் உண்மைகள் மக்களிடையே தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏகபோக
முதலாளித்துவ கோஷ்டிகள் தங்கள் ஆக்கிரமிப்பு , யுத்தக் கொள்கைகளை
திணிப்பதில் பிடிவாதமாக இருந்ததால் அவர்கள் உலகின் அனைத்து மக்களால்
தூக்கிலப்படும் நாள் வந்தே தீரும். நாமதை நெருங்கியும் விட்டோம் .
அதற்கிடையில் இந்த பிற்போக்காளர்களும் சிக்கிக்கொண்டு சீரழிந்து செத்துப்
போவார்கள். ஏகாதிபத்திய முதலாளித்துவ குணங்களை நல்லதாகவும், அது
பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததெனவும் உலக மக்களை நம்ப வைக்கும் தகவல்
பரப்புரை புரியும் எல்ல பிற்போக்காளர்களும் வெறும் காகிதப் புலிகளாகவே
அடையாளப்படுத்தப்படுவ­ர். அவைகள் சீறிப்பாய்வதில்லை, சினங்கொண்ட சோஷியலிஸ
கம்யூனிஸ புரட்சியை விரும்பியதுமில்லை. அவைகள் (பிற்போக்காளர்கள்)
உண்மையில் சக்தி மிக்கவர்கள் அல்ல, அவைகளுக்கு அவ்வப்போது வீசப்படும் மத
, இன , கறித்துண்டுகளே போதுமானதாய் இருக்கிறது . நீண்டகால வரலாற்றுக்
கண்ணோட்டத்தில் பார்த்தால் ஆகப் பெரும் சக்தி மிக்கவர்களாகவும்
முதலாளித்துவர்களாகவு­ம் செயல்பட்டுக் கொண்டிருந்த பிற்போக்காளர்கள்
மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டு­ள்ளார்கள். இங்கே மக்கள் மட்டும் பெரும்
சக்திகொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த மக்களிடத்தில் சகோதரத்துவம்,
சமத்துவம், சோஷியலிஸ கம்யூனிஸம் மட்டுமே பெரும் விருப்பமாக இருக்கிறது.
தங்கள் விருப்பக் கனவுகளை அவர்கள் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.­
அக்கனவின் ஏக்கங்களை அவர்கள் (மக்கள்) பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள்.­ ஒரு விஷப் பாம்பின் இரட்டை நாக்குகளை போன்று பிற்போக்காளர்கள் செயல்படுவதை மக்களும்
கவனித்துக்கொண்டுதான்­ இருக்கிறார்கள். இந்த இரட்டை இயல்புகளை
பிற்போக்காளர்கள் தங்கள் தொழிலாகவே செய்துக்கொண்டிருக்கி­றார்கள்
முக்கியமாக தொழிற்நுட்ப முறையால் தங்களை செம்மைபடுத்திக் கொண்டு அதன்
மூலமே அவைகள் மக்களிடத்தில் பொய்களை பரப்புகின்றன. ஏகாதிபத்திய
முதலாளித்துவம் அரசு அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு முன்னும் அதன் பின்னும்
, நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள், முதலாளிய வர்க்கம் ஆகியவை
தீவிரமிக்கவையாகவும்,­ புரட்சிகரமானவையாகவும­் முற்போக்கானவையாகவும்­
தங்களை காட்டிக்கொண்டு உண்மைப் புலிகளை போல இருந்தன. ஆனால் கால கதியால்
இவற்றின் எதிரிடைகளான அடிமைத் தொழிலாளர் வர்க்கம் , விவசாய வர்க்கம் ,
தொழிலாளர் வர்க்கம் ஆகியன படிப்படியாக பலம் பெற்று வளர்ந்து அவ்வுண்மை
புலிகளின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் காட்டியதன் விளைவாக காகிதப்
புலிகளாக அவைகள் இருக்க எதற்கு உண்மைப் புலி முகங்களென தெளிவுபடுத்தியது.
இதனால் ஆளும் வர்க்கம் படிப்படியாக நேரெதிர் தன்மையான "பிற்போக்கு" எனும்
அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்ளும் தேவைக்கு தள்ளப்பட்டது.
அவைகள் மக்களால் வீழ்த்தப்பட்டும் விரட்டியடிக்கப்பட்டு­ம் நடந்து
கொண்டிருக்கிறது, இனிமேலும் நடக்கும். அதிதீவிர பிற்போக்காளர்கள்
பெரும்பாலும் சோஷியலிஸ கம்யூனிஸத்திற்கு எதிராக ஆசை வார்த்தைகளையும்,
வெற்று கோட்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டு தங்கள் ஜீவ மரணம் நிகழ்கின்ற
வரையில் சதிவேலைகளையே முகங் கொண்டிருக்கும் . இவ்வாறான பிற்போக்கு
காகிதப் புலிகளின் முற்போக்கு வேஷத்தையும் இரட்டை இயல்பு போக்கையும்
தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் புரட்சி போராட்டங்களை பொசுக்கும் பணியில்
முதலாளித்துவ கைக்கூலியாகவே அடையாளப்படுத்தப்படுக­ிறார்கள். சீனாவில்
ஏகாதியத்தியத்தினதும்­, நிலப்பிரபுத்துவத்தின­தும், அதிகாரத்துவ
முதலாளித்துவத்தினதும­் நின்ற பெரும் கொடுங்கொல் ஆட்சியை அழிப்பதற்கு சீன
மக்களுக்கு 1949 ம் ஆண்டின் வெற்றிக்கு முன் நூற்றாண்டு அடிமை வரலாறு
இருந்ததையும், பல உயிர்களை பறிகொடுத்தோம் என்பதையும் மறுக்க முடியாது.
அதன் காலதாமத , உயிரிழப்புகளுக்கு சதித்திட்டங்களை வகுத்ததில்
பெரும்பங்கு இந்த இரட்டை நாக்கு , காகிதப் புலிகளான
பிற்போக்காளர்களுக்கு­ உண்டென்பது வரலாற்று உண்மை. "கல்லைத் தூக்கி
கடைசியில் தன் கால்களிலேயே போட்டுக் கொள்வது" என்பது பிற்போக்கு
மூடர்களின் செய்கைகளை வர்ணிக்கும் ஒரு சீன முதுமொழி. எல்லா நாடுகளினதும்
பிற்போக்காளர்கள் இந்த வகைகளினான மூடர்களே! என்றுமே இறுதி ஆராய்வில்
அவர்கள் புரட்சிகர மக்களை கொடுமைபடுத்துவது,மக்­களின் புரட்சிகளை
துரிதப்படுத்தவிடாமல்­ தடுப்பது, போன கொடுஞ்செயல்களே மிஞ்சியிருக்கும்.
புரட்சிகர மக்களை ருஷ்ய ஜாரும்,சியாங் கே ஷெக்கும் இந்த வகையிலாற்றிய
பிற்போக்கு முதலாளித்துவ பணி முறைதானே! சர்வதேச நிலைமை இப்போது ஒரு புதிய
திருப்புமுனையை அடைந்துள்ளது என்பது எனது அபிப்ராயம். இன்று உலகில்
கீழைக் காற்றும், மேலைக் காற்றும் உள்ளன. ஒன்றில் கீழைக் காற்று மேலைக்
காற்றை மிஞ்சி வீசும், அல்லது மேலைக் காற்று கீழைக் காற்றை மிஞ்சி
வீசும், என்றொரு சீன பழமொழிக்கேற்ப கீழைக் காற்று மிஞ்சி வீசத்
தொடங்கியிருப்பதை நான் காண்கிறேன். வேறு விதமாக கூறினால் சோஷியலிஸ
சக்திகள் ஏகாதிபத்திய சக்திகளை விடப் பெருமளவு பலத்தால் உயர்ந்து
நிற்கிறது. இனி உயரும்,,, கம்யூனிஸம் தன் தன்பயணத்தை இடைவிடாமல்
தொடர்ந்து மேற்கொள்ளும். என்பதை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
- மாவோ (மா சே துங்)

Monday, June 13, 2016

உயிராபத்துகளை கடந்து புரட்சியை வென்றெடுத்த லெனின்




1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது
செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு
ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு
அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா
என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும்.
எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.
ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள்
குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.

ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான
உடற்கட்டையை உருக்குலைக்க சைபீரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை.
அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத்
திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு
நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.

சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள்
எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும்
புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது
கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற
முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது.
அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை
வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும்
உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி
இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.

1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே
தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா
என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.



லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை
நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக
வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி
தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி
காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன.
கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக
கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.
தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..

1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள்
தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது
என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை
நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க
பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர்.
ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல
உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன.
பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள்
துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின்
புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும்
முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர
வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து
பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.

புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன்
படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை
விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான
வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக
பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர்
காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக மாறியிருந்தது.
கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின்
துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.

அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக
இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால்
மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக்
கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.

அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச்
கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம்
கடந்துவிட்டனர்.

அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த
பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை
உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய
உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை
பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து
தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.
வரலாற்று நாயகன் லெனின்.

Sunday, June 12, 2016

சாலை விபத்துகள் , தமிழகம் முதலிடம் பெருமையா?

தமிழ்ச் சமூக நிலத்தில் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள், தண்ணீர்
பிளாஸ்டிக் உறைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், ஊறுகாய் அல்லது கறி பகோடா
சிதறல்கள், இவைகளே நிரம்பி வழிகின்றன. நீங்கள் எங்கேனும் பயணப்படுகையில்
இவைகளை பார்க்காமல் நகரவே முடியாது. அப்படியான சூழலில் இது உங்களுக்கு
சர்வ சாதாரணமான விஷயமாகத்தான் தெரியும். ஆனால் அதேவேளையில் "மனித உயிர்"
என்பது மதிக்கப்பட வேண்டியது எனும் வாசகத்தை மட்டும் ஏதோவொரு கோணத்தில்
பிடித்துக் கொண்டிருப்பீர்கள் கண்களை மட்டும் மூடிக்கொண்டு,,, இங்கே
மதுவை ஆதரித்துக் கொண்டே மனித உயிர் மதிக்கத்தக்கது என இரட்டை
நாக்குகளோடும் அதையே நாகரீகமென்றும் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிற­து.
அதனாலோ என்னவோ!
குடிபோதை சாலை விபத்துகளை கண்காணாது விட்டுவிடுகிறோம். அதன் விளைவு சாலை
விபத்துகளில் தமிழகத்தை முதலிடத்தில் பிடிக்க வைத்திருக்கிறோம். இனி
பெருமை பட்டுக் கொள்ளுங்கள் மிகவும் இலகுவாக மனித உயிரை பறித்தெடுக்கும்
முதன்மை மாநிலம் எங்கள் தமிழகமென்று,,,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில்
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து குறித்தான அறிக்கை இவ்வாறு
கூறுகிறது : கடந்த ஆண்டில் (2015) தமிழகத்தில் மட்டும் 69059 சாலை
விபத்துகள் நடத்துள்ளது அதில் 400 பேர் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 400 பேர் சாலை விபத்தில்
பலியாகின்றனர். தமிழகத்தில் 69059 விபத்துகள் கடந்த ஆண்டில் நாட்டிலேயே
அதிகபட்சமாக தமிழகத்தில் 69059 சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. இதன் மூலம்
சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது. மேலும் தமிழகத்தை
பொருத்தமட்டில் பெரும்பாலான சாலை விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம்
ஓட்டுவதில் நிகழ்ந்திருக்கிறது. இதில் அதாவது 50% த்திற்கு மேல்
பாதிக்குப் பாதியான விபத்துகள் மதுபோதையால் நிகழ்ந்திருக்கிறது.
"உயிரிழப்பு" என்கிற எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உத்தரபிரதேசம்
முதலிடத்தில் உள்ளது. 201‌5-ம் ஆண்டில், உத்‌தரபிரதேசத்தில் சாலை
விபத்துகளில் 17,666 பேர் உயிரிழந்துள்ளனர். பெருநகரங்களைப் பொறுத்தவரை
மும்பையில் அதிகபட்சமாக 23,46‌8 விபத்துகள் நேரிட்டுள்ளன. டெல்லியில்
அதிகபட்சமாக 1,622 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். என
அறிக்கை தெரிவித்திருக்கிறது.­ மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக
இதில் எந்த மாற்றமும் இல்லை , ஒவ்வொரு ''ஒரு மணி நேரத்திற்கும் 57
விபத்துக்கள் நடைபெறுகிறது. இதில் 17 பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக
54 சதவிதம் பேர் 15 வயது முதல் 34 வயதுடையவர்களாக இருக்கிறார்கள்.
இந்த அளவிற்கு போரினாலோ, தொற்று நோயாலோ, தீவிரவாதிகள் தாக்குதலாலோ மக்கள்
சாகடிக்கப்படுவதில்லை­ என தெரிவித்திருக்கிறார்­ . பிறகென்ன மதுவால்
தமிழ்ச் சமூகம் சாலை விபத்துகளில் சிக்கி முதலிடம் பெற்றிருப்பதற்காக
அந்த மதுவையே டாஸ்மாக் என்கிற பெயரில் அரசே விற்பதற்காக இனி தமிழக மக்கள்
தாராளமாய் விழா எடுக்கலாம். பொதுவாக மிதமான குடியில் வாகனத்தை
செலுத்துவது தவறில்லை எனவும் இதுவே சகஜமான வாழ்க்கை எனவும், கவுரவத்தை
காக்கிறது எனவும் மக்களின் பொதுபுத்தியாகிப் போயிருக்கிறது. குடியிலென்ன
மிதமான குடி? மொடாக்குடி? என தெரியவில்லை, குடிப்பதே உடலுக்கு தீங்கென
இருக்கின்றபோது அதில் நியாயப்படுத்துதல் ஏனோ மனதை உறுத்தவில்லையா? இதில்
நிதானக் குடிகாரர்களை இச்சமூகம் அங்கீகரிக்கிறது என்பது மிகவும் வேதனையான
விஷயமாக இருக்கிறது. 50% த்திற்கு மேலான இந்த குடிகாரர்களை தவிர்த்து
மற்றவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் பெரும்பாலும், ஏதோ மன உளைச்சலில்
வாகனம் செலுத்துபவர்களாகவும்­, சாலை விதிகளை மதிக்காதவர்களாகவும்,­வாகனம்
ஓட்டும் போது வெட்டி பந்தா காட்டுபவர்களாகவும், அதிவேகப் பயணப்
பிரியர்களாகவும், வாகனம் ஓட்ட முறையற்ற பயிற்சியற்றோர்களாகவு­ம்,
தூக்கத்தில் வாகனம் செலுத்துபவர்களாகவும்­ இருக்கிறார்கள் .
(இவைகளனைத்தையும் மதுப் பிரியர்கள் ஒரே மூச்சாய் செயல்படுத்துவார்கள்
என்பது வேறு விஷயம்) ஒரு தாய் தனது வயிற்றில் 10 மாதம் சுமந்து பாலூட்டி,
அக்குழந்தையின் நலனுக்காக தன்னுயிரை துட்சமென தூக்கிப்
போட்டுவிட்டுத்தான் ஒரு மனிதனாக்குகிறாள். அந்த பிள்ளை சாலையில் அடிபட்டு
ரத்த வெள்ளத்தோடு உயிருக்குப் போராடுவதை எந்த தாயாலும் தாங்கிக் கொள்ளவே
முடியாது. உண்மையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களாலும், மேற்கண்ட
மற்ற இதர நிலை கொண்டவர்களாலும் ஒருபாவமும் அறியாத அப்பாவி பொது மக்கள்
பெரிதும் பாதிப்படைகிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். "கவனக்
குறைவு" என்பதிலேயே மேற்கண்ட செயல்பாடுகள் பொருந்திப் போகிறது. இக் கவனக்
குறைவில் போக்குவரத்து துறை அதிகாரிகள் லஞ்சம் , ஊழல் போலி வாகன
உத்திரவாதங்கள் இடம் பெறாது, ஏனெனில் அது கவனக் குறைவு இல்லை திட்டமிட்ட
படுகொலையாக கருதப்படுகிறது. தமிழ்ச் சமுகம் தன் வாழ்கையின் வாழ்வுத்
தன்மையின் உன்னதமறிந்து சாலை விபத்துகளை தவிர்க்கத் தேவையான அத்தனை
முயற்சிகளையும் மேற்கொண்டு சமூக வாழ்வியலில் மனித உயிருக்கான மதிப்பை
பேணிக் காக்க வேண்டும்.

Friday, June 10, 2016

எழுவர் விடுதலைக்கான பேரணியில் சில மாற்றங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எவ்வித தொடர்புமற்று ஆனால் கடந்த 25
ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக தனிமை சிறையில் வாடும் தோழர்
பேரறிவாளன் , சாந்தன் , நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக நாளை (ஜூன்
11) வேலூரிலிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டையை நோக்கி "வாகனப் பேரணி"
நடக்கவிருந்ததில் சில சட்ட சிக்கல் மற்றும் போக்குவரத்து நெரிசலை
கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வேலூரிலிருந்து
தொடங்குவதற்குப் பதிலாக சென்னை எழும்பூரில் இருந்து பேரணியாகச் சென்று
முதல்வரிடம் மனு அளிக்கப்பட இருப்பதாக தோழர் பேரறிவாளனின் தாய்
அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார்­. பேரணியானது பகல் 1 மணிக்கு
ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து துவங்குகிறது. சமூக விடுதலையை நோக்கி
சென்னையை முற்றுகையிடும் நம் தோழர்கள் 12 மணிக்குள் களத்தில் இருப்பது
நல்லது. இப்பேரணியின் மூலம் நீதியை கொன்று அழித்துக் கொண்டிருக்கும்
ஆதிக்க அதிகார வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை நாம் தந்துவிட
வேண்டும். முன்னதாகவே இடதுசாரிய இயக்கங்களிடமும், திராவிட
இயக்கங்களிடமும் எழுவர் விடுதலைக்கான பேரணிக்கு ஆதரவு வந்தவண்ணம்
இருக்கிறது. இது நமக்கு ஆறுதலை அளித்திருக்கிறது. நாளையோடு (ஜூன் 11)
தோழர் பேரறிவாளனின் சிறைவாசமானது 25 ஆண்டுகளை நிறைவடைகிறது. அரசியல்
அதிகாரத்தை கைப்பற்றி பதவி ருசி பார்த்தோர்களின் திட்டமிட்ட ராஜீவ்
காந்தி கொலை சதிக்கு காரணமானோர்கள் சுதந்திரமாக பதிவி சுகத்தோடும், பண
பலத்தோடும், அதிகார பலத்தோடும் நீதியை விலைக்கு வாங்கி சுகபோகமாய்
வாழ்கிறார்கள். ஆனால் எந்த குற்றமும் செய்யாமல் போலியாக சித்தரிக்கப்பட்ட
வழக்கில் நம் ஏழு தமிழர்கள் ஆயுள் தண்டனையை அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பது நீதியின் மீதான அவநம்பிக்கையை தெளிவாக
உணர்த்துகிறது. இந்த விசித்திர நீதித்துறையுலகில் வருமாணத்திற்கு அதிகாக
சொத்து சேர்ப்பது குற்றமில்லை என்பதும் , குமாரசாமிகளின் கணக்குப்
பாடங்களும், இத்தியாதி,,, இத்தியாதி,,, என நீளும் பாசித நீதிகளின்
மத்தியில்தான் நாமும், நம் ஏழு தமிழர்களும் தினந்தினம் செத்துக்
கொண்டிருக்கிறார்கள்.­ அதிகார வர்க்கத்தின் பிடியில் இருக்கும்
பார்ப்பானிய நீதித்துறையை முடிந்தளவிற்கு மீட்டெடுத்தலை இந்த எழுவர்
விடுதலைக்கான பேரணியில் அணிதிரள் மூலம் முட்டி மோதிட வேண்டியது மிக
அவசியமாக இருக்கிறது. ஆகவே தோழமைகள் பெருந்திரளாய் பேரணியில் கலந்து
கொண்டு சென்னையை திணரடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கே பேரணிக்கு அழைப்பு விடுப்போர் ஏன் அதற்கு,,, இதற்கு,,, போராட்டமோ ,
பேரணியோ நடத்தவில்லையென சிலர் விவாதங்களை கிளப்பலாம் , அதனை
பொருட்படுத்தாது நாம் பேரணியை வெற்றியடைய செய்திடல் வேண்டும்.

பேசும் இதயம் 7

நாளையும் அதே
மரத்தடியில்
நம் சந்திப்பு
உதிர்ந்த மலர்கள்
மீண்டும்
கிளைக்கு திரும்பலாம்,,,

__________

பசியில்
கிளி
ஜோசியக்காரனின்
ஒரு நெல்லும்
விலை போனது,,,

__________

என்னில்
செங்கதிராய்
பாய்கிறாய்
சுடர்விட்டு
எரிகிறதென்
காதல்
அணைத்து விடாதே!
அவ்வளவு
சீக்கிரத்தில்
என் மரணம் நிகழ்ந்துவிடாது
என்னவளே!

__________

உன்
பார்வையில்தான்
எத்தனை
விளக்கங்கள்,,,
அகராதியை
மூடிவிட்டு
உன் முகத்தையே
பார்க்கிறேன்
அன்பிற்காக
ஏங்கி ஏங்கி,,,

__________

தூவானம்
தொலைவில்
அவள் முகம்
தேடுகிறேன்
என்னை,,,

__________

விழுந்தும்
வலி பொறுத்து
அடுத்த அடி
எடுத்து வைக்கிறாள்
தலையில்
அவ்வப்போது
செங்கல், சிமெண்ட்,
மணல், ஜல்லி,
என மாறி மாறி
அவள் பெயர்
சிற்றாள் ஆகிறது
அக்கணத்தில்,,,

__________

எல்லாம்
விதியென்றார்கள்
வாழத் தெரியாதவர்கள்
அவரவர் தகுதிக்கு
அர்ச்சனை தட்டு
மட்டும் நிரம்பி
வழிகிறது
வேடிக்கை
கடவுளுக்கென்று,,,

__________

மௌனங்களை
காற்றில்
கரைய விடுகிறது
காதல்
அவ்வப்போது
காகிதங்களில்
சொற்தூறல்,,,

__________***__________

Thursday, June 09, 2016

அற்புத கனவொன்றில்

அற்புத கனவொன்றில்
ஆடித் திரிகின்றேன்
நான் மட்டும்
தனியே

அக்கனாவில்
என்னை
இழுத்துச் செல்லும்
நித்திரைக்கு
பூக்கள் தூவி
தினம் பூஜிக்கும்
வழக்கம் என்னில்
உண்டு

இரவை
வலிய இழுத்து
இமைகளுக்கு
ஓய்வு கொடுத்து
உள்நுழைகிறேன்

அதுவொரு ஏகாந்தவெளி
இடையூறுகள்
ஏதுமின்றி
வானத்துச்சியில்
வா!வா! என
அழைக்கிறாள்
இயற்கையன்னை

சென்றேன்
அங்கே நானும்
அந்த பசுமையின்
வனப்பில்
விளையாடி
மகிழ்கின்றேன்

அந்த நதியின்
முகடுகளில் என்
முகம் பதித்து
முத்தமிடுகின்றேன்

அந்த மலைச்சரிவில்
மரக்கன்றுக்கு
பாலூட்டும்
தாய்மரத்திடம்
நானுமொரு
குழந்தையாய்
பால் குடித்து
பசியாறுகின்றேன்

அனைத்திற்கும் மேலாய்
நிலவுக்கு சோறூட்டி
என்னில் பாதியை
அதனிடத்தில்
கொடுக்கின்றேன்

என் மடியில்
முடித்து வைத்திருந்த
மின்மினிப் பூச்சிகள்
விடுதலை அடைய

என்னையே
சுற்றி சுற்றி
வருகின்றன
நட்சத்திரங்கள்

ஏணிப் படிகளிட்டு
என் தேகமெங்கும்
சுகமாய்
வருடுகின்றன
இலையில் தங்கிய
பனித்துளிகள்

இவைகளனைத்தும்
அந்த அற்புத
கனவொன்றில்
நான் மட்டுமே
தினந்தினம்
அனுபவிப்பவை

ஆகவே விடுக்கிறேன்
வேண்டுகளோ
கட்டளையோ
நீங்களே
நிரப்பிக் கொள்ளுங்கள்

ஆனால்
என் கனாவில்
செயற்கைக்கோளை
மட்டும் அனுப்பி
ஆராயாதீர்கள்

அதன்
விசப்புகையில்
என்
அற்புத கனவோடு
நானும்
இறந்துவிடுவேன்

மரண வலி
தாங்கும் சக்தி
வளிமண்டலம்
கொண்டிருக்கவில்லை
என் அற்புத
கனவும் கூட

என்னை
தூங்க விடுங்கள்
என் கனவை
வாழ விடுங்கள்
என் தனிமையை
திருடாதீர்கள்,,,

Wednesday, June 08, 2016

விஜய் சேதுபதி எழுவர் விடுதலையை பற்றி பேசக்கூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்?

என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது இந்த தமிழ்ச் சமூகம். திரைத் துறையில் ஒருவரின் அணுகுமுறை சமூக நலனை நோக்கி வருகின்றபோது அதனை இலாவகமாக ஏற்று அரசியல்படுத்தி ஊக்குவிக்கத் தெரியாமல் இருக்கும் இதே தமிழ்ச் சமூகம்தான் அப்படியானவர்களை கூத்தாடிகள் என்று வசைபாடியும், கேலிசெய்தும், கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி ஒருபடி மேலேபோய் ஏதோ இவர்கள்தான் சமூகத்தை காக்கும் காவற்குடிகளாகவும் இவர்களாலே சமூக விடுதலை பேசப்படுவதாகவும் புளங்காகிதம் கொண்ட சில போலித் தமிழ்தேசிய அசிங்கங்கள் அவ்வாறு சமூக நலனை பற்றி திரைத்துறையில் ஒருவன் பேசினாலே "நீ மூடிட்டு போடா வந்தேறி நாயக்க மயிறு" நாங்க போராடிக்கறோம் என்று வீர வசனங்களை அவிழ்த்து விடுகிறார்கள். உண்மையில் அம்மாதிரியான தமிழ்த்தேசியர்களின் பேச்சை கேட்டு கேட்டு போரடத்துதான் போகிறது. திரைத்துறை என்றில்லை ஒரு சாதாரண பாமரன் ஒருவனின் கருத்துகள் சமூக விடுதலையை நோக்கி பயணிக்கிறதென்றால் அதனை கேட்டு அக்கருத்தின் சிந்தனைகளை உள்வாங்கி முற்போக்குடன் அரசியல் படுத்துவதே ஆகச்சிறந்ததாக அமையும். 10 இளை(ஞி)ஞர்களில் 1 இளை(ஞி)ஞன் முற்போக்குச் சிந்தனை பெற்றிருந்தாலும் அந்த ஒரு நபரை வைத்து பத்து பேரை அரசியல்படுத்த முடியாமல் போனதால்தான் இன்று சாதிய தீவிரவாதத்தாலும் மத தீவிரவாதத்தாலும் பெருங்குடி மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் . "ஒரு தாய்க்குத்தான் தெரியும் பிள்ளைக்கு எதை தர வேண்டும்" என வசனங்களை பேசி பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டிய பாலின் விலையை உயர்த்தி டாஸ்மாக் எனும் சாராயக் கடைகள் மூலம் சமூகத்தை சீரழித்து ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கும் அதிமுக அரசிற்கு 25 ஆண்டு காலம் தன் மகனை பிரிந்து வாழும் உண்மையான ஒரு தாயின் வலியென்ன தெரிந்துவிடவாப் போகிறது. ஆனாலும் ஆட்சியில் அமரவைத்து அழகு பார்க்கிறோமே உங்களின் புத்திக்கு நம்மை ஆளுவது பார்ப்பானியம் என்பது உறைக்கவில்லையா? நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு கூறியிருக்கிறார் : " பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 'இன்று வரையில் தான் நிரபராதி' என பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், 'பேரறிவாளன் நிரபராதி' என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இதிலென்ன தவறு இருக்கிறது? பொய்யாக ஜோடிக்கப்பட்டு கொலைக்கு உடைந்தையாக பேட்டரிகள் விநியோகம் செய்தாரென ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தனிமை சிறையில் தன் வாழ்நாளை தொலைத்து நிற்கிறார் தோழர் பேரறிவாளன். அவரோடு சேர்த்து குற்றவாளிகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு குரலெழுப்புவது என்பது மனிதாபிமானம் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றபோது அதிலொருவனாய் விஜய் சேதுபதியும் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, விடுதலை கோரிக்கைப் பேரணியில் தானும் கலந்துகொள்வதாய் கூறியிருக்கிறார். திரைத் துறையில் இதற்குமுன் இயக்குநர் பா. இரஞ்சித் தனது ஆதரவை பதிவு செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டுதலுக்கும் உரியது. இவர்களின் ஆதரவினை வைத்தே அரசியலாக்கி எழுவரின் விடுதலைக்கு ஆதரவான அதிர்வலைகளை உறுவாக்கலாம். ஆனால் இந்த போலித் தமிழ்தேசியர்களோ மீண்டும் மீண்டும் நடிகர்களை கூத்தாடிகளாக வசைபாடி ஏதேதோ டி.என்.ஏ சோதனைகளாம் செய்து விஜய் சேதுபதியை வந்தேறி என்றும், நாயக்கச் சாதியனே! என்றும் தமிழ்த்தேச துரோகி என்றும் வசைபாடுகிறார்கள். அதேவேளையில் தனது சுயசாதி ஓட்டில் ஜெ புகழோடு வென்ற கருணாசுக்கு எதிராக எவ்வித விமர்சனமும் அவர்களிடத்தில் எழுந்ததாக தெரியவில்லை, இதனையே நாம் இந்துத்துவ பார்ப்பானிய தமிழ்த்தேசியம் என்கிறோம். எங்கே? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான சு சாமியையும் ,ஜெயாவையும் எதிர்க்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்? அது முடியாது காரணம் தமிழ்த்தேசியத்தை இயக்குவதே பார்ப்பானியமாகத்தான்­ இருக்கிறது. உண்மையில் பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்ட எழுவர் விடுதலையாகி எழுவரும் ஒரே பொது மேடையில் பேசினால் அழியப்போவது போலித் தமிழ்த்தேசியமாகத்தான­் இருக்கும். அதனாலோ என்னவோ அந்த எழுவரின் விடுதலைக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் உடனே பதற்றமாகி பொங்கி எழுந்து டி என் ஏ சோதனை மூலம் பொங்கல் வைக்கிறது போலித் தமிழ்த்தேசியம். இந்த பொங்கலெல்லாம் பார்ப்பானியத்திற்கான­ படையலாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் "விஜய் சேதுபதி" என்று கூகுள் தேடுபொறியில் சுட்டினால் அந்நடிகரின் படம்,படம் சார்ந்த கதாபாத்திரம்,பாடல்கள­் என தேடிக் கொடுக்கும் கூகுள், ஆனால் இப்போது தேடினால் "விஜய் சேதுபதி சாதி,ஜாதி" என்று தொடர்புடையதில் இடம் பெறுகிறது "இதற்குத்தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரர்களே" என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது உங்களின் பித்தாலட்ட தமிழ்த்தேசியம்.

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...