Tuesday, May 24, 2016

இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள், இந்தியாவுக்கு சவால் விடுகின்றன!




29/11/2015 அன்று இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் முதலிடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். RSS இந்த பதிவை எழுதினேன், இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பன
ஆதிக்கத்தின்
செயல்வடிவ வன்முறைகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்
மக்களும் இரண்டாவதாக இசுலாமிய சிறுபான்மையின மக்களும்
பெரும்பாதிப்புக்குள்­ளாகும் சமூகங்களாக இருக்கிறார்கள். இதில் இசுலாமிய
சிறுபான்மையின மக்களை "தீவிரவாதிகள்" என சித்தரிக்கவும் இசுலாமியர்கள்
என்றாலே பயங்கரவாதிகளென அனேக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில்
பார்ப்பன இந்துத்துவ சாதியாதிக்க RSS மற்றும் அதன் வளர்ப்பு பிள்ளையான
BJP க்கு ஏகபோகமாய் பணியாற்றும் ஊடகங்கள் ஏனோ இதே இந்தியத்தில் உண்மையான
சனநாயகத்திற்கு விரோதமாக வெளிப்படையாகவே தீவிரவாத பயிற்சிகளில் ஈடுபடும்
ஆர்எஸ்எஸ் போன்ற பஜ்ரங்தள் அமைப்புகளின் உண்மை முகத்தை தோலுரிக்க
மறுக்கின்றன. ஒருவேளை அந்த தீவிரவாத பயிற்சிகளின் மூலம் ஏதேனும்
இலாபநோக்கங்களை எதிர்பார்க்கின்றனவோ என்னவோ இந்த ஊடகங்கள்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பஜ்ரங்தள் அமைப்பினர் தீவிரவாத
பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வெளி அமைப்பான பஜ்ரங்தள்
அமைப்பினர் தற்காப்பு கலைப்பயிற்சி என்ற பெயரில் தீவிர வாத பயிற்சிகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
ஹஇதற்காக நடத்தப்பட்ட முகாமில் ஏராளமான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திறந்த வெளியில் துப்பாக்கிச் சூடு , எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவது,
தாக்குதலை எதிர்கொள்வது போன்ற ஒத்திகைகளை நடத்தி பயிற்சியில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிகளை ஏந்தி கூடி நின்று முழக்கங்களை எழுப்புதல் உள்ளிட்ட
தீவிரவாத பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.
துப்பாக்கி, வாள், லத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த தங்களது
உ‌றுப்பினர்களுக்கு இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்படுவதாக,
உத்தரப்பிரதேச மாநில பஜ்ரங்தள் அமைப்பாளர் பால்ராஜ் கூறியுள்ளார்.
இந்துமதத்தை அதன் எதிரிகளிடமிருந்து காப்பதற்கு இதுபோன்ற பயிற்சிகள்
தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பயிற்சிகளை
பஜ்ரங்தள் நடத்துவது வழக்கமான ஒன்று என்று அந்த அமைப்பினர்
தெரிவித்துள்ளனர். இந்திய சனநாயகத்தில் சமத்துவம் , சகோதரத்துவம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை
ஒரேயடியாக கொன்று இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ்
பங்ரஜ்தள் ஆகிய சாதியாதிக்க இந்துக்களின் இயக்கங்கள் படிப்படியாக
வெற்றியடைந்துக் கொண்டிருக்கிறது என்றால் இந்தியா தன் சனநாயக மரபையும்,
வாழத் தகுதியான இடமென்கிற தகுதியையும் இழந்துக் கொண்டிருக்கிறது என்றே
சொல்லலாம்.
 பஜ்ரங்தள், ஆர்எஸ்எஸின் இந்த தீவிரவாத பயிற்சி முகாம்கள் ஏதோ அயோத்தியில் மட்டுமே
நடத்தப்படுகிறது என்றெல்லாம் நம்பினால் அது மடத்தனம் . ஆர்எஸ்எஸின்
இம்மாதிரியான தீவிரவாத பயிற்சி முகாம்கள் இந்தியா முழுமைக்கும் அதுவும்
பிரதமர் எனும் போர்வையில் திரியும் ஆர்எஸ்எஸ் மோடியின் பேராதவோடு
சுதந்திரமாக எங்கும் நடத்தப்படுகிறது என்பதே உண்மையாக இருக்கிறது.
அதற்கேற்றார்போல் சென்ற ஆண்டு கேரளத்தில் மிகப்பயங்கர ஆயுதங்களை
ஆர்எஸ்எஸ் பஜ்ரங்தள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்டது
குறிப்பிடத்தக்கது. ஏதோ தாங்கள்தான் இந்நாட்டின் சீர்திருத்தச் செம்மல்கள் எங்களால்தான்
இந்நாட்டில் அமைதி நிலவுகிறது என்றெல்லாம் கங்கனம் கட்டித் திரியும்
ஆர்எஸ்எஸ் பஜ்ரங்தள்,­சிவசேனா, இந்து ராஷ்ட்டியா போன்றவைகள்தான்
உண்மையில் இந்நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும்
கொடூரத்தன்மையானதென இந்த தீவிரவாத பயிற்சி முகாம்களின் மூலம் நாம்
தெரிந்து கொள்ளலாம். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து கிடப்பது ஆடுகளை
பலியிடுவதற்கே அன்றி ஆட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு அல்ல என்பதை
பாஜகவும் இதற்கு துணைநின்று தங்கள் முதலாளித்துவ இந்துத்துவத்தை வெகு
சீக்கிரத்தில் இந்தியாவில் வளர்த்தெடுத்தும் வருகிறது.

Monday, May 23, 2016

தமிழக முதல்வரின் "முதல் கையெழுத்து"

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் தனது முதல்வர் பதியேற்பினை
முடித்துக்கொண்டு நேராக தலைமைச் செயலகம் சென்ற தமிழக முதல்வரும் அதிமுக
பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படியான­
திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
* விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி
*அனைத்து வீடுகளிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்
*தாலிக்கு 8 கிராம் தங்கம்
*படிப்படியான மதுவிலக்கு அடிப்படையில்
1. தொடக்க 500 டாஸ்மாக் கடைகள் மூடல்
2. டாஸ்மாக் கடை நேரக் குறைப்பு பகல் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடல்.
என கோப்புகளில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
அனைத்தும் வரவேற்கத்தக்கதென்றால­ும் காலம் பொறுத்திருந்தே எதையும்
தீர்மானிக்க முடியும். விவசாயப் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் படி
அனைத்து விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் உரிய காலத்தில் கடன்
தள்ளுபடிக்கான திட்டநலன் சென்று சேர வழிவகை செய்யப்பட வேண்டும். எதற்கும்
"கமிஷன்" என்கிற முந்தையகால அதிமுக ஆட்சி அனைவரும் அறிந்ததே! ஏழை விவசாய
பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்தாரத்திற்கு அலைந்து திறிந்து கடனை வாங்கி
பயிர் செய்கையில் நட்டமடைந்து பெற்ற கடனுக்கு வட்டி கட்டமுடியாமல்தான்
தற்கொலை என்கிற விபரீத முடிவை எடுக்கிறார்கள். அவர்களிடமே சென்று
அதிகாரிகளும், ஆளும் அரசின் கட்சி நிர்வாகிகளும் "இவ்வளவு கமிஷன் கொடு!
அம்மா திட்டத்தின் படி உன் கடனை தள்ளுபடி செய்கிறேன்" என மிரட்டும்
பொதுவான போக்கை களைத்து நியாயமாக அனைத்து விவசாயிகளுக்கும் உரிய
நேரத்தில் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.திருமணத்திற்கு தங்கத்தாலி
வழங்குவது வரவேற்புக்குரியது என்றாலும். தாலி மட்டுமே திருமணப்
பந்தமில்லை மாறாக சாதிமறுப்பு திருமணங்களை ஊக்குவித்தும், காதல்
திருமணத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆணவக்கொலைகளை தடுக்கும்
நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபடுமா? என்பது தெரியவில்லை, தங்கத்தால்
பெருமுதலாளிகள் கொழுத்து வளர்வார்களே தவிர இருமணங் கலந்த உண்மைத்
திருமணங்களை சாதியத்தாலும் மதத்தாலும் இங்கே கொலைசெய்யப்படுவதை தடுத்து
நிறுத்திவிட முடியவில்லை.அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம்
இலவசம்? என்பது வாடகை வீடுகளுக்கு பொருந்துமா? ஏனென்றால் தரவேண்டிய
வீட்டுக்குரிய வாடகைத் தொகையை விட மின்சாரக் கட்டணத்தைதான் முதலில்
கேட்கிறார்கள் வீட்டு உரிமையாளர்கள். வீடற்ற வாடகை வீட்டுத்தாரர்களுக்கு­
இந்த இலவச மின்சாரம் எந்த விதத்தில் பயன்படப்போகிறது என்பதையும்
பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் கடைத் திறப்பு நேரம் குறைக்கப்பட்டாலும் இரவு பத்து மணி என்பதே
விபரீத நேரம்தான். இரவு நேர கடைத்திறப்பு நேரத்தை இன்னமும்
குறைத்திருக்கலாம் . போலவே முதல்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
என்பது வரவேற்கத்தக்கதாகவும்­ பாராட்டுதலுக்கும் உரியது . எனினும்
உற்பத்தியை குறைத்தலுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாக மது ஆலைகளை
மூடும்படியான செயல்திட்டத்தை வகுத்து கையெழுத்து இட்டிருக்கலாம்.
அனைத்திற்கும் நாம் பொருத்திருந்து பார்க்கத்தானே வேண்டும்
ஐந்தாண்டுகளில் தொடக்க முதலாண்டுதானே இது,,, பார்ப்போம்,,, முதல்
கையெழுத்து தமிழத்தின் தலையெழுத்தை மாற்றுமா? என்று பொருத்திருந்து
பார்ப்போம்.

ஜெயா 6 வது முறை? ஊடகங்களின் உளவியல்

தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை தொடர்ந்து (6) ஆறாவது முறையாக
கைப்பற்றி பதவியேற்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா! என்று
அனைத்து காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களும் சொல்லிச் சொல்லி
சிலாகிக்கிறார்கள். தங்களின் பார்ப்பன மற்றும் அதிமுகவின் அதீத பாசம்
அவர்களை (ஊடகங்கள்) அவ்வாறு
பேசவைத்திருக்கிறது எனலாம். தேர்தல் முடிந்து தமிழகத்தை ஆளும் தகுதியை
அதிமுக பெற்ற இரண்டாவது நாளிலேயே சட்ட ஒழுங்கு சீர்குலையும் விதமாக
வியாசர்பாடியில் பொதுமக்களை ரவுடிகள் சராமாரியாக அரிவாள் , போன்ற
ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார். அதுவும் பொதுவெளியில் பொதுசனங்களை,,,
இதில் பெண்களும் ஒரு கைக்குழந்தையும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்
வருகின்றது. ஆனாலும் இச்சம்பவம் குறித்து காட்சி மற்றும் எழுத்து
ஊடகங்கள் இதுவரை வாய்திறக்கவில்லை, அதாவது அதிமுகவின் முதுகை
சொரிந்துவிடும் ஊடகங்கள். சரி! அதுபோகட்டும் விஷயத்திற்கு வரலாம்,,,
உண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6 வது முறையாக முதல்வராக
பதவியேற்கிறார் எனில் இடைப்பட்ட காலத்தில் 2 முறை பதவியேற்றிருக்கிறாரே­
ஓ பன்னீர் செல்வம். அதாவது, ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த
தீர்ப்புகளின் அடிப்படையிலும் அதன் எதிரொலியாகவும் இரண்டு முறை
முதலமைச்சர் நாற்காலியில் இருந்து இறங்க (தள்ள) வேண்டிய கட்டாயத்தில்
ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு­
முதலமைச்சராக பதவியேற்கும் முறைமையின் படி மட்டுமே கணக்கில்
எடுத்துக்கொண்டோமானால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக
பதவியேற்பது இது (4)நான்காவது முறையாகும். அடுத்த இரண்டு ஓ பன்னீர்
செல்வத்திற்கு போகும். ஒருவேளை ஓ பன்னீர் செல்வம் அவர்களின் அரசியல்
வரலாற்றுப் பதிவிலிருந்தோ, அல்லது அவரின் அரசியல் அனுபவத்தை வினவுகின்ற
காலத்தில் அவரின் இரண்டுமுறை முதலமைச்சர் பதவியேற்பை
குறிப்பிடாமலிருந்தால்ஜெயா ஆறாவது முறையாக பதவியேற்கிறார் எனலாம்.
தற்போதைய தமிழக நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் முந்தைய முதல்வர்
பதவியேற்பையும் சேர்த்துக்கொண்டு ஊடகங்கள் 6 என்கிற எண்ணை
பிடித்துக்கொண்டு வலம் வருவதன் உளவியல் என்னவாக இருக்குமென்று
யோசிப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை, அவர்களுக்கு கார்ப்பரேட் மையமாக தமிழகம்
மாறவேண்டும், விளம்பரம்,சினிமா என்று சமூகத்தை சீரழிக்க வேண்டும் என்பதே!
விடுபட்ட ஒன்று உள்ளது, அடுத்த தமிழக முதல்வரின் சமூக பொறுப்பு நிலை
குறித்து மக்களின் குரலாக எதிரொலிக்காமல் , எதிர்கட்சிகளின் சமூக
பொறுப்பு நிலை குறித்து அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்கும் உளவியலிலும்
சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை சிறப்பாக செய்கிறார்கள் இன்னமும் ஊடகங்கள்
திமுக மீதான எதிர்ப்பையும், காழ்ப்புணர்ச்சியையும­், நம்புங்களேன் தயவு
செய்து நம்புங்களேன் நமது ஊடகங்கள் உண்மையான நடுநிலையாளர்கள். அதனால்தான்
ஜெயா புகழ்பாடி கடந்த ஐந்தாண்டு அட்டூழியங்களை மக்களிடம் கொண்டுசேர்க்காத
உண்மையான நடுநிலையாளர்கள் நமது ஊடகங்கள்.

Sunday, May 22, 2016

என் காமத்தின் பிறப்பிடம்!

என் கனவில்
தோன்றும் காட்சிகளை
ஓவியமாய்
தீட்டி வைத்துள்ளேன்
மனதிற்குள்

அனைத்திலும்
அழகானவனாய்
அதிசயங்களாய்
பிரளயங்களின்
பிரபுத்துவனாய்
உன்னை
தானாக வரைகிறதென்
தூரிகை

என் வார்த்தைகள்
வண்ணங்களாகியும்
அலங்கரிக்கிறது
உன்னை

அனுதினமும்
உன்னையே நினைத்து
வெடித்துச் சிதரும்
என்
காமத் தீஞ்சுடரை
விளையாடத் தீண்டி
காதலாக

கைகோர்த்தும்
கட்டிப்பிடித்தும்
கண்களிரண்டையும்
முத்தங்களால்
நனைத்தும்
உதடுகளை கடித்தும்
சுவைத்தும்
உச்சி முகர்ந்தும்
என் உயர்ப்பூவை
தட்டியெழுப்பியும்

நானிருந்த தவத்தை
கலைத்திட வேண்டாமா
நீயென

ஏங்கிய
அடுத்த நொடிகளிலே
தீட்டிய
ஓவியத்திலிருந்தும்
நானிருந்த கனவு
உலகத்திலிருந்தும்
வெளியேறி
உயிர்பெற்று
என்முன்னால்
திடீரென
நீ தோன்றுகையில்
தாங்குமா
என் இதயம்

ஓர் அடர்வனத்தில்
வழித்திசை காணாமல்
அலைந்து திரிந்து
திடீரென கண்களுக்கு
விருந்தாய் அகப்படும்
ஒற்றையடி பாதையை
நோக்கி ஓட்டமெடுக்கையில்
உயிர் மூச்சு வாங்குமே
அதுபோலவும்

எத்தனையோ சுமைகளை
தாங்கும் பூமியதன்
நில வெடிப்பிலிருந்து
வானெங்கும் பரவுமே
அனல் காற்று
அதுபோலவும்

என் முன்னே
காதலின் பித்தனாய்
காமத்தின் தலைவனாய்
பூத்திருக்கும்
உன்னைக் கண்டதும்

தீராத
என் நினைவுப் பசியினை
நிஜத்தோடு சேர்த்து
புசித்திட அப்படியே நிர்வாணமாய்
நின்றுனை
கட்டியணைக்கிறேன்
காதலா!

அதீத
உணர்ச்சிவசத்தால்
உனை அழுத்தி
அரவணைக்கையில்
என் கைவிரல்
நகங்கள்
உன் தேகத்தை
பதம்பார்க்கலாம்

வலியால் நீயும்
அவஸ்தை படலாம்
அனுபவி
என் தலைவா

அவ்வலி உனக்காக
நான் சேமித்து
வைத்தவை
அன்பினால் நான்
உனக்குத் தரும்
அதிசய ரசமது

எனக்கு தெரியும்
என் நகம் குத்தும்
அந்த வலியை
அமுதமாய்
நீ பருகுகிறாயென்று

என் உள்மனம்
ஒன்றைச் சொல்ல
விரும்புகிறது

இன்னும் நெருக்கமாய்
இடைவெளிகளற்று
என்னை
இறுக்கி அணை

உன் காதோரம்
உதிக்கிறேன்
வார்த்தைகளை

என் காதலனும்
நீதான்
என் கன்னிக்கு
சொந்தக்காரனும்
நீதான்
என் மொத்த காமத்தின்
பிறப்பிடமே
நீதானென்று மட்டும்,,,

Saturday, May 21, 2016

அக்பர்- ராணாபிரதாப் பெயர் மாற்றம்தான் பாஜகவின் வளர்ச்சித் திட்டமா?





பதிவை வாசிப்பதற்கு முன்னால் ஏற்கனவே 17 நவம்பர் 2015 அன்று எழுதிய
இப்பதிவை   அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலையான,,, "பதிவு" ஒரு கருத்தை மாற்றுமா?         வாசிப்பது நன்று, இந்துத்துவ பார்ப்பானிய ஆர்எஸ்எஸ்
தாய்பிறப்பான பாஜகவின் தொடர் இசுலாமிய சிறுபான்மையின மக்களின்
அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.

இந்திய தேசம் பல பிரச்சனைகளில் சிக்கி திணறிக்கொண்டுள்ளது. தொழில்
மற்றும் விவசாயத்தின் வீழ்ச்சி கவலை தருகிறது. விலைவாசியும் வேலையில்லாத்
திண்டாட்டமும் மக்களை வாட்டி வருகின்றன. 10 மாநிலங்களில் 284 மாவட்டங்கள்
வறட்சியில் சிக்கி தவிக்கின்றன. வரலாறு காணாத வறட்சி மக்களை துன்பத்தின்
எல்லைக்கே துரத்திவிட்டது. வெயில் காரணமாக 400க்கும் அதிகமானோர்
மாண்டுவிட்டனர். இவையெல்லாம் பாஜக அமைச்சர்களுக்கு முக்கிய பிரச்சனைகளாக
தெரியவில்லை.

ஹரியானா பாஜக முதல்வர் திரு.கட்டார் அக்பர் சாலையை உடனடியாக மகாராணா
பிரதாப் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் இது மிக அவசர
பிரச்சனை எனவும் வி.கே.சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

உடனே திரு. சிங் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் திரு. வெங்கையா நாயுடுக்கு
இதே பிரச்சனையை வலியுறுத்தி கடிதம் எழுதுகிறார்.  இவர்களின் திட்டம்
தெளிவானது! தமது கையாலாகத்தனத்தால் துன்பங்களில் துடிக்கும் மக்களின்
கவனத்தை திசைதிருப்புவதே உடனடி நோக்கம்! எனினும் இந்தியாவின் வரலாற்றை
மாற்றி எழுதுவதும் இந்துத்துவா வரலாறுதான் இந்தியாவின் வரலாறு என
நிலைநாட்டுவதும் இவர்களின் நீண்டகால நோக்கம் ஆகும்.

அக்பர்- ராணாபிரதாப் வரலாற்றின் இரு வெளிப்பாடுகள் :-

அக்பர் மற்றும் மகாராணா பிரதாப் இருவருமே இந்திய வரலாற்றின் குறிப்பிட்ட
காலகட்டத்தில் தமது முத்திரையை பதித்த இரு மன்னர்கள். இந்து மதம் உட்பட
அனைத்து மதங்களையும் அரவணைத்த முகலாய மன்னன் அக்பர் என்பது வரலாற்று
உண்மை! இசுலாத்தில் சுஃபி பிரிவை வலுவாக ஆதரித்த மன்னன் அக்பர். சுஃபி
பிரிவு இந்து மதம் உட்பட அனைத்து மதங்களையும் அரவணைக்கும் தன்மை உடையது.
சுஃபி பிரிவு முகலாய மன்னர்கள் காலத்தில் கிட்டத்தட்ட அரச மதமாகவே
இருந்தது என சில வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஐ.எஸ்.,
அல்கொய்தா உட்பட பல இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் சுஃபி பிரிவின் அனைத்து
அடையாளங்களையும் அழிப்பது மட்டுமல்ல சுஃபி பிரிவினரை கொல்கின்றனர்
என்பதும் கவனிக்கத்தக்கது.

அக்பர் தமது படையின் வலிமையாலும் சுஃபி பிரிவின் கருத்து அடிப்படையிலும்
பல இந்து மன்னர்களை குறிப்பாக வீரத்திற்கு பெயர் போன இராஜபுத்திர
மன்னர்களை தனக்கு ஆதரவாளர்களாக மாற்றினான். இதன் அடிப்படை நோக்கம் தனது
சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவது என்பதாகும். அக்பரின் அணுகுமுறைக்கு
இறுதிவரை இடம் தராத மன்னன்மகாராணா பிரதாப் என்பதில் ஐயமில்லை. இருவருக்கு
இடையே பல போர்கள் நடந்தன. சில போர்களில் அக்பர் வென்றான் எனில்
சிலவற்றில் ராணா பிரதாப் வென்றான்.

இப்போர்களின் நோக்கம் என்ன? தனது அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்துவது
என்பது அக்பரின் நோக்கம்! தனது ஆட்சியின் அரசியல் அதிகாரத்தை அக்பரிடம்
இழக்கக்கூடாது என்பது ராணாவின் நோக்கம். அக்பர் இசுலாமியத்தை
நிலைநாட்டவும் ராணா இந்து மதத்தை பாதுகாக்கவும் போரிடவில்லை. ஏனெனில்
ராணாவுக்கு எதிராக போரில் தளபதிகளாக செயல்பட்டது பல இராஜபுத்திர
மன்னர்கள்தான்! இப்போரின் அடிப்படை முரண்பாடு மதம் எனில் இந்து மதத்தைச்
சார்ந்த தளபதிகள் ராணாவுக்கு எதிராக போரிட்டிருக்கமாட்டார்கள்! அரசியல்
அதிகாரம்தொடர்பான முரண்பாடுகள்தான் அடிப்படை பிரச்சனை. எனினும்
அக்பருக்கு இறுதிவரை சிம்மசொப்பனமாக இருந்த ஒரு மன்னன் ராணா பிரதாப்
என்பது வரலாற்று உண்மை! அந்த வகையில் ராணா பிரதாப்பின் உறுதியையும்
வீரத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்திய வரலாற்றின் இரு வெளிப்பாடுகளாக அக்பரும் ராணா பிரதாப்பும்
விளங்குகின்றனர். எனவே மகாராணா பிரதாப்பின் பெயரை முக்கிய சாலைக்கு
வைப்பதில் எவரும் முரண்பட இயலாது! ஆனால் இதற்காக அக்பர் பெயரை
நீக்கிவிட்டு ராணா பிரதாப் பெயரை சூட்டவேண்டுமா என்பதுதான் கேள்வி!
புதியதாக உருவாக்கப்படும் சாலைக்கோ அல்லது நகருக்கோ ராணாபிரதாப் பெயரை
சூட்டுவதில் எவருக்கு ஆட்சேபணை இருக்க முடியும்! இதைவிடுத்து அக்பர்
பெயரை நீக்குவது என்பதில் இந்துத்துவா பின்னணி உள்ளது என்பது மறுக்க
முடியாது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு :-

இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு
தெரிவிக்குமாறும் நீதியரசர் சச்சார் அவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
கடிதம் எழுதியுள்ளார். தில்லி சாலைகளுக்கு பெயர் வைப்பது என்பது
புதுதில்லி முனிசிபல் கவுன்சில் எனும் அமைப்பின் அதிகார வரம்புக்கு
உட்பட்டதாகும். இதன் தலைவர்அரவிந்த் கெஜ்ரிவால். ஏற்கனவே 
அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலை     என
பெயரிடப்பட்டது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு அளித்தார்.
அப்பொழுதும் பலத்த விவாதம் நடைபெற்றது.
எனினும் சில காரணங்களால் எதிர்ப்பு பலமாக உருவாகவில்லை. அவுரங்கசீப் ஒரு
ஆழமான மதவெறியன் எனும் கருத்து பரவலாக உள்ளது. (இதுமுழு உண்மை அல்ல
என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து) அப்துல் கலாம் இறந்த சில நாட்களில்
இப்பெயர் மாற்றம் நடைபெற்றது. இதனை எதிர்ப்பது என்பது பொருத்தமானது அல்ல
எனும் சூழலும் இருந்தது. இக்காரணங்களால் எதிர்ப்பு வலுவாக இல்லை. எனினும்
சங்பரிவாரம் மிகவும் நயவஞ்சகத்துடன் இந்த பெயர் மாற்றத்தை
அமல்படுத்தியது. இந்த வஞ்சகமான நோக்கத்தை அரவிந்த் கெஜ்ரிவால்
உணர்ந்திருந்தால் அப்பொழுதே இதனை தடுத்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாக
இப்பொழுது அக்பரின் பெயரை அழிக்க முயல்கின்றனர்.


ஒரு சாலையை பெயர் மாற்றம் செய்வதால் போக்குவரத்து நெருக்கடி குறைவது
இல்லை. அவுரங்கசீப் சாலை அப்துல்கலாம் சாலை ஆன பிறகும் விபத்துகள் நடந்த
வண்ணம்தான் உள்ளன. தில்லியில் ஒரு முக்கிய பகுதிக்கு கோப்பர் நிகஸ்
மார்க் என பெயர் உள்ளது. கோப்பர்நிகஸ் ஒரு மிகப்பெரிய கணித மற்றும்
வானியியல் மேதை. ஆனால் இந்தியர் அல்ல. நாளை கோப்பர் நிகஸ் மார்க் என்பதை
மாற்ற வேண்டும் என கோரிக்கை உருவானாலும் ஆச்சரியம் அடைய வேண்டியதில்லை!

மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பெரும் தோல்வி கண்ட ஆட்சியாளர்கள்
இத்தகைய திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். திசை திருப்புவது
என்பது உடனடி நோக்கம்தான்! இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது
நீண்டகால நோக்கம். இதற்கு இன்று அக்பரின் பெயரையும் மகாராணா பிரதாப்பின்
பெயரையும் பயன்படுத்துகின்றனர். இதனை அனுமதிப்பது ஆபத்தான ஒன்று! மகாராணா
பிரதாப்பின் பெயரை புதிய சாலைக்கு சூட்டுவதை ஆதரிக்கும் அதே வேளையில்
அக்பரின் பெயரை அகற்றி மகாராணா பிரதாப்பின் பெயரைசூட்டுவது வலுவாக
எதிர்க்கப்பட வேண்டும்.
 பகிர்வு- தீக்கதிர்


Friday, May 20, 2016

2016 இல் மீண்டும் ஜெயலலிதா , காம்ரேட்களின் கவனக்குறைவு,,,

2011 இல் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஜெயா
தலைமையிலான அதிமுக அரசு நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் 2016 மூலம் 134
இடங்களை பெற்று மீண்டும் ஐந்து ஆண்டுகளை தக்கவைத்துக்கொண்டது . இதில்
தனிப்பெரும் எதிர்கட்சியாக திமுக அங்கம் வகிக்கிறது. திமுகவானது 88
இடங்களை பெற்றிருக்கிறது. இதன் மூலம் மாற்று என்பது எனக்கு நானேதான்
என்று காட்டியிருக்கிறது ஜெயா அரசு. அவரின் தேர்தல் பிரச்சாரத்திலேயே
இதனை கூறியிருக்கிறார். அந்த வகையில் வரப்போகிற ஐந்து ஆண்டுகளிலும்
தாங்கள் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம் என்று தங்களின் ஆட்காட்டி
விரலை அடகு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த நன்றிகள்! இங்கே
மக்களின் மனநிலையை புரிந்துணர்வு கொள்ளாமல் அவர்களின் மீதே குறைகூறும்
போக்கு அரசியலுக்கு நல்லதல்ல என்பதை உணர வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
எந்தவிதமான அதிருப்தியையும் ஒரு செயற்கையான திருப்தி மனங்களை
மாற்றக்கூடியதாக இருக்கிறது. இன்னமும் இடதுசாரியமும் இன்னபிற முற்போக்கு
அரசியல் கட்சிகளும் வெகுசன மக்களையும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை
மக்களையும் நெருங்கிச் சென்று அந்த செயற்கையான திருப்தியை உடைக்கும்
சக்தியாக உருபெற்றிடவில்லை என்பதே இத்தேர்தல் எடுத்துரைக்கிறது.
மக்களுக்கும் இடதுசாரியத்திற்கும் இருக்கும் நீண்ட இடைவெளியை
போக்குவதற்கு அவர்களுக்குண்டான ஒரேவழி மக்கள் தொடர்பை வலுப்பெறச்
செய்தலேயாகும். கம்யூனிஸ்ட்டுகள், திராவிட இயக்கங்கள் மற்றும் ,தலித்
இயக்கங்கள் மீது மக்களுக்கு ஒரு அபிப்ராயமும் மரியாதையும் கூடுதலான
நம்பிக்கையும் இருப்பது உண்மை. ஆனால் அது ஏன் தேர்தலின் போது ஓட்டு
வங்கியாக மாறவில்லை என்பதை கண்டறிந்து அதற்கான தேவைகளையும்
பூர்த்திசெய்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக எனும் ஏகாதிபத்திய
முதலாளித்துவ ஜெயா அரசை வீழ்த்த முடியும். பல முற்போக்குச் சிந்தனை
அறிவுசீவிகள் சாதிவாத பாமக, மதவாத பாஜக, இனவாத நாம் தமிழர் போன்ற
கட்சிகள் வீழ்ந்ததற்காக தமிழகத்தில் பெரியார் மண் உயிர்ப்போடு
இருப்பதாகவும், இங்கே அவற்றுக்கு வேலையில்லை என்பதாக இத்தேர்தல்
காட்டுகிறதென பூரித்துப்போகிறார்கள­். அப்படியெனில் ஜெயாவின் அதிமுக
கட்சியானது பகுத்தறிவை புகட்டும் கட்சியா? அதிமுக பார்ப்பானிய
இந்துத்துவத்தில் வராதா?
அதிமுக சாதியவாதத்திற்கு இடம் தரவில்லையா? இனவாதத்திற்கும்
அதிமுகவிற்கும் வெகுதூரமா? அந்த முற்போக்கு அறிவுசீவிகளே பதிலெழுதட்டும்.
ஒட்டுமொத்த பார்ப்பானியத்தின் முகங்களாகவே அதிமுக இருக்கிறது என்பது
உலகறியும். அதற்கான சான்று ஜெயா தொலைக்காட்சியில் ஜோதிட சிகாமணிகள்
இடம்பெற்றதையும், கருணாஸ்,தனியரசு போன்ற சாதிவாதிகள் வெற்றிபெற்றையும்
மிகத்தாராளமாக குறிப்பிடலாம். முதலில் முற்போக்காளர்கள் தங்களை தாங்களே
திருத்திக்கொண்டு மக்களிடம் நேரடித் தொடர்பில் அவர்களோடு நெருங்கிப் பழகி
முற்போக்குச் சிந்தனைகளை விதைக்கவும், கற்பிக்கவும் செய்தலே போதுமானதாக
இருக்கிறது. மேலும் சனநாயகம் வீழ்ந்து இங்கே பணநாயகம் தலைதூக்குவதை 570
கோடிகள் சுமந்த கண்டெய்னர்கள் கண்ணெதிரிலேயே காட்சியாகின்றன. அதிலிருந்து
தமிழகத்தை மீட்டு மீண்டும் சனநாயகம் அமைக்க வேண்டிய பொருப்பும் உள்ளது.
இனிவரும் ஐந்து ஆண்டுகளில் நமது மக்களை ஆளப்போகும் அதிமுக அரசிடமிருந்து
எந்தவித நலத்திடங்களையோ, சமூக முன்னேற்றங்களோ எதிர்பார்க்க முடியாது
என்பது மிகுந்த வேதனைதான் என்றாலும் அதற்குச் சவாலாக ஒரு மாபெரும்
எதிர்கட்சியாக திமுகவை பெற்றிருக்கிறோம் என்பது மகிழ்சியே, திமுகவிற்கு
வாழ்த்துக்கள். சர்வாதிகார ஆட்சியை ஓரளவிற்கு திமுக அடக்கி தன்
கட்டுக்குள் கொண்டுவரும் என எதிர்பார்ப்போடு இருக்கிறோம் அவ்வளவே,,,

Wednesday, May 18, 2016

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னரும் தலித்துகள் நிலைமை பரிதாபகரமாகவே உள்ளன – சீனிவாசராவ்

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னரும், தலித்துகள் நிலைமை
பரிதாபகரமாகவே உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய
செயலக உறுப்பினர் சீனிவாச ராவ் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள தேஷ் பகத் யாத்கார் கூடத்தில் தலித்
ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பாக சிறப்பு மாநாடு நடைபெற்றது.
இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே சீனிவாச ராவ் இவ்வாறு
கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
"நாட்டில் சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளானபின்னரும் தலித்துகள் நிலைமை
மிகவும் பரிதாபகரமானதாகவே உள்ளது மேலும் இப்போது மோடி தலைமையிலான பாஜக
மத்திய அரசாங்கம் தலித்துகள் பெற்றுவந்த சலுகைகளைக்கூட வெட்டிச்
சுருக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. தலித்துகள் மீதான
அட்டூழியங்களும் அதிகரித்திருக்கின்றன. தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்
தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர்
கொல்லப்படுகிறார்கள். தலித் மாணவர்கள் பெற்றுவந்த கல்வி உதவித் தொகை
வெட்டப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
மறுக்கப்படுகிறது. இந்துத்துவா சக்திகள் தீண்டாமையையும் சாதி
அடிப்படையிலான வர்ணாச்ரம தர்மத்தையும் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில்
தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு சீனிவாசராவ் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாப் மாநில செயலாளர் சரண் சிங்
விர்தி உரையாற்றுகையில் தலித் மற்றும் பழங்குடியினர் பிரச்சனைகளை
விவாதித்து, முடிவு கண்டிட நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நடத்தப்பட
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு
அளிக்கப்பட வேண்டும், தலித்/பழங்குடியினர் துணைத் திட்டங்கள் அரசமைப்புச்
சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட வேண்டும். மத்திய/மாநில அரசுகளின்
அலுவலகங்களில் காலியாக உள்ள தலித்/பழங்குடியினர் இடங்கள் நிரப்பப்பட
வேண்டும், தலித் குடும்பங்களுக்கு இடம் அளித்து, வீடுகள் கட்டுவதற்கும்
நிதி அளித்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தும் உரையாற்றினார்.
தீர்மானம் :
சிறப்பு மாநாட்டில் 2016 செப்டம்பர் 2 அன்று மத்திய தொழிற்சங்கங்கள்
அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் முழுமையாகக் கலந்து கொள்வது
என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் 2016 ஜூலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த தலித் ஒடுக்குமுறை விடுதலை
முன்னணித் தொழிலாளர்களுக்காக ஒரு வகுப்பு ஏற்பாடு செய்வது என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
- தீக்கதிர்

Tuesday, May 17, 2016

தென்றல் காற்று

அமைதிப்
பெருவெளியில்
அடங்காமல்
சுற்றிச் சுழலும்
தென்றல் காற்றுக்கு
நான் அடிமை

சீற்றமில்லை
புழுதிகள்
கொஞ்சமுமில்லை
வெண்ணிற ஆடையால்
சலித்தெடுத்து
வடித்தாலும்

உட்புகுந்து
வெளியேறுகையில்
உள்ளத் தூய்மையை
திறந்து காட்டி விட்டு
செல்கிறது எந்தன்
தென்றல் காற்று

மூக்குடைந்து போன
முகங்களுக்கு
வேண்டுமானால்
காற்று வெறும்
நாற்றமாகலாம்

யாருமறியா
சாமத்தில் அடர்த்தியான
அந்த பூவனத்தில்
பூத்துக் குலுங்கும்
மலர்களின் மணத்தை
கவர்ந்து

தன்னை
ரசிகிறவர்களின்
மனங்களை கவரும்
வர்ணஜால
வித்தைகளை தனக்குள்
இருத்தியிருக்கும்
தென்றல் காற்றுடனே
திகட்டாத
வேட்கைதனில்
மூழ்கியிருக்கும்
எவரும்
காதலிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள்
தென்றல் காற்றை
இப்போதுதான்

நானோ
முந்திப் போகிறேன்
அவர்களுக்கு
முன்னரே காதலிக்கவும்
செய்கிறேன்
என் ஆன்மாவின்
அடுத்த வாரிசு
தென்றல் காற்றாக
இருக்க வேண்டுமென்கிற
ஒரு சின்ன
நப்பாசையோடு,,,

வள்ளுவன் குறித்தான விவாதத்தில் அயோத்திதாச பண்டிதர்

1892இல் சென்னையில் மகாஜன
சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி
தலைமையில் நடந்தது. கூட்டத்தில்
அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன
விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த
திருக்குறளைப் பாடினார்; சுக்கில-
சுரோனிதம் கலப்பரியாது என்று
குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக்
கொண்டிருந்த அறிஞர் திரு.க
அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள்
சொல்லியதை நான் ஏற்றுக்
கொள்வதென்றால், நான் சில கேள்விகள்
கேட்க வேண்டும் என்றார்.
அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும்
என்றார்.
நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று
இழிவுபடுத்தப்படும் பறையர்கள்
என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின்
கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப்
பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில்
அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார்
விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று
எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம
சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல்
நின்று கொண்டிருந்தார்.
பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச
பண்டிதர் தொடர்ந்து
பெருங்குற்றங்களைச் செய்து
சிறைச்சாலைகளில்
அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள்
யார் விந்துக்குப்
பிறந்திருப்பார்களென்று நீர்
நினைக்கிறீர் என்று கேட்டார்.
சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில்
கூறாமல் திருதிரு என்று விழித்துக்
கொண்டு நின்றார். அறிஞர்
க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில்
சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று
சினந்து கேட்டுக் கொண்டிருக்கும்
பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில்,
பி.அரங்கைய நாயுடும், எம்.
வீரராகவாச்சாரியாரும் அறிஞர்
க.அயோத்திதாச பண்டிதரை
அமைதிப்படுத்தினார்கள்.
சிவநாம சாஸ்திரியை
கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து
பேசினார்கள். சிவநாம சாஸ்திரி
உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல
கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்
வையம் போற்றும் நூலாம்
திருக்குறளைத் தந்த பேரறிஞர்
வள்ளுவரைப் பற்றி சிவநாம
சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி,
தம் ஆரிய நஞ்சைக் கக்கினார்.
இவ்வாறு நடப்பது இன்றல்ல,
நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய்
நடக்கின்றது. இன்றும் தமிழனை
இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக
தொண்டாகக் கொண்டுள்ளார்கள்
பார்ப்பனர்கள்.

Saturday, May 14, 2016

சாதிகளின் அடிப்படையில் வகுப்பறைகளை பிரிக்கும் அவலம்

சாதியம் பார்க்கும் சமூகத்திற்கு கல்வி ஒரு கேடா! சுயமாய் சிந்திக்கும்
பகுத்தறிவுக்கு முன்னால் "சாதியம்" தையல் அறுந்து பிய்ந்து போன
செருப்பாகவே இருக்கும் அதனை உபயோகிக்க முடியாது, உபயோகித்தாலும் எவ்வித
பிரயோஜனமின்றி அணிந்த கால்களுக்கு தீங்கையே விளைவிக்கும். ஒருவன் மெத்தப்
படித்திருந்தாலும் கல்வியால் அவன் வாழ்வும் அறிவும்
வளர்ச்சியடைந்திருந்த­ாலும் அவன் மனதிற்குள் சாதிய துவேஷ வஞ்சம்
இருக்குமேயானால் அவன் மனித இனத்திலிருந்து விலகி கல்வியறிவற்ற மிருக
இனத்திற்கு ஒப்பாகிவிடுவான். மிருகங்கள் கூட இவ்வுலகில்
வாழத்தகுதியானவைதான் ஆனால் சாதியத்தை உயர்த்தி பிடிப்பவன்
வாழத்தகுதியற்றவனாகிவ­ிடுகிறேன், அவ்வாறான வாழத்தகுதியற்றவனே ஒரு
கல்வியாளனாகவும், அக்கல்வி நிறுவன முதல்வராகவும் இருப்பானெனில் இளைய
தலைமுறைக்கு எவ்வாறு அவனால் பகுத்தறிவை ஊட்டிட முடியும்? அதற்கு மாறாக
சமூகத்தை சீரழிக்கும் சாதிவெறி கொண்ட இளைய தலைமுறை சமூகத்தைதானே அவனால்
வளர்த்தெடுக்க முடியும், அப்படியெனில் இந்தியம் முழுக்க முழுக்க
பிற்போக்குச் சிந்தனையில் கொண்ட சீரழியும் சமூகத்தை நோக்கியே பயணிக்கிறது
என்பது இச்சம்பவம் நமக்கு தெளிவுபடுத்துகிறது, ஐதராபாத் பல்கலையில்
ரோஹித் வெமுலா மீது
கல்வி நிறுவனம் கட்டவிழ்த்து விட்ட சாதிய வண்மமும் அதனால் ஒரு ஆராய்ச்சி
மாணவனை இழந்து தவிக்கும் தாயின் கண்ணீரையும் எப்போது நாம் துடைக்கப்
போகிறோம் , இல்லை கல்வி நிறுவனங்களின் சாதிவெறியாட்டம் தொடர்ந்தேதான்
பயணிக்குமா? உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில் உள்ள சேத் புல்சாந்த்
பாக்லா இன்டர் காலேஜ் முதல்வர், ராதேஷ்யம் வைஷ்ணவ், சாதிகளின்
அடிப்படைகளில் வகுப்பறைகளை பிரித்ததற்காக மாவட்ட நீதிபதி அவினாஷ்
கிருஷ்ணன் சிங் அவரை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவினாஷ் கிருஷ்ணன் கூறுகையில், பொது, ஓபிசி மற்றும்
எஸ்.சி என்று சாதிகளின் அடிப்படையில், 9-ம் வகுப்பு மாணவர்களை வகுப்பு
பிரிவுகளாக செக்ஷன் ஏ, பி, சி என்ற வகையில் பிரித்ததாக சேத் புல்சாந்த்
பாக்லா இன்டர் காலேஜ் முதல்வரின் மீது எங்களுக்கு புகார் வந்தது. அதில்
பொதுப்பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் பாலானோர் பிரிவு ஏ-விலும்,
ஓ.பி.சி பிரிவினைச் சேர்ந்த பெரும் பாலான மாணவர்கள் பிரிவு பி-யிலும்
மற்றும் எஸ்.சி பிரிவினைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் பிரிவு சி-லும்
அமரவைத்துள்ளதாக கூறினார்.
இதனடிப்படையில் அந்த கல்லூரி முதல்வரையும் மற்றும் அந்த வகுப்புகளைச்
சேர்ந்த வகுப்பாசிரியர்களையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகவும்,
மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக
தெரிவித்தார். பின்னர் கல்லூரி நிர்வாகத்திற்கு உடனடியாக மாணவர்களை
"சமமாக" பிரிக்கும்படி தான் உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

Friday, May 13, 2016

மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை நெல்லையில்,,,

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர்
விஸ்வநாதன், இவர் இரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்
தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாதிய ஆதிக்க பிரிவைச் சேர்ந்த சங்கர்
என்பவரின் மகள் காவேரியை காதலித்து வந்துள்ளார். இதற்கு காவேரியின்
வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி விஸ்வநாதனும்
காவேரியும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இந்நிலையில்
காவேரியின் தந்தை விஸ்நாதனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல்
விடுத்துவந்தார். இதுகுறித்து விஸ்வநாதன் குடும்பத்தினர் காவல் துறையில்
புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஆத்திரம் அடங்காத காவேரியின் தந்தை வெள்ளியன்று விஸ்வநாதனின்
சகோதரி கல்பனாவை வெட்டிக்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி
மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடுமைலையில் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்தி
அதிர்ச்சியலைகள் அடங்குவதற்குள் தமிழகத்தில் மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை
அறங்கேறி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தீக்கதிர்

ஊக்க மது கைவிடு ! - மக்கள் அதிகாரம்

என் தோழா! தமிழகம் டாஸ்மாக் எனும் மதுக் கொள்கையால் சீரழிந்து வருவதைக்
கண்டு சீற்றமுடன் நீயெழுந்து போராட்ட களத்தில் நிற்கிறாய்,,, நீயாரென்று
எனக்குத் தெரியாது ஆனாலும் உனது புகைப்படத்தை கண்டு பதற்றமாகிறேன். இந்த
முதலாளித்துவ சர்வாதிகார அரச பயங்கரவாதிகளின் பாதுகாவலனாக விளங்கும்
காவல் துறையினால் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறா­ய்,,, ஆனாலும்
உன் முகத்தில் பயம் இல்லை அதற்கு மாறாக பற்றி எரியும் பெருங் கோபம்
கொந்தளித்தெழுகிறது. "இளங்கன்று பயமறியாது" என்பார்கள் அதற்கு துணையாக
ஏதேனும் எழுச்சி மிகுந்த ஒரு பெரும் சக்தி இருக்க வேண்டும் என்பதை போல
உனது பயமறியா பெரும் புரட்சிக்குப் பின்னால் "மக்கள் அதிகாரம்" எனும்
எழுச்சி மிகுந்த பெரும் சக்தி இருக்கின்ற வரையில் நீ தோற்றுப் போக
மாட்டாய் என உறுதியாகச் சொல்கிறேன். என் தோழா! உனது முகத்தில் வெடித்துக்
கிளம்பும் பெருங் கோபத்தை அணைத்து விடாதே! அதுவே நமக்கான அதிகாரத்தை
மீட்டெடுக்கும் "மக்கள் அதிகாரம் துணையோடு"
நிலைநிறுத்தி வை ! நமக்கு தேர்தலில் இந்த அரசியல் களவாணிகள்
தந்திருக்கும் "பூரண மதுவிலக்கு" எனும் வாக்குறுதியை நிறைவேற்றத்
தவறினால் மீண்டும் புரட்சிப் போராட்டம் வெடிக்கும் என்பதற்கு சாட்சியாக
நிலைநிறுத்தி வை! மூடு டாஸ்மாக்கை! எனும் முழக்கத்தோடு
களமிறங்கியிருக்கும் "மக்கள் அதிகாரம்" இயக்கத்தின் போராட்ட களத்தில்
உன்னோடு பல போராளிகளும் குறிப்பாக பெண்போராளிகளும் ஆளும் அதிமுக அரசின்
அரசப் பயங்கரவாதத்தால் மிகக் கொடூரமான முறையில்
தாக்கப்பட்டிருக்கிறீ­ர்கள். ஆனாலும் போராட்டத்தை தொடரும் தலைநிமிர்ந்த
உங்களின் செயல்பாடுகள் நிச்சயம் இந்த டாஸ்மாக் எனும் மதுக்கடைகள் சூழ்ந்த
தமிழத்திற்கு தேவையாக இருக்கிறது என் தோழா!
மக்கள் அதிகாரம் எனும் இடதுசாரிய இயக்கத்தின் பின்னாலும் , பூரண மது
விலக்கு, மூடு டாஸ்மாக்கை, எனும் புரட்சிப் போராட்டங்களுக்கு பின்னாலும்
மிகப்பெரிய அளவில் வெகுசன மக்கள் அணிதிரண்டிருக்கிறார்­கள் என்பதை
அறிந்ததால்தான் நம் மீது அரசப் பயங்கரவாதம் ஏவி விடப்படுகிறது. மீண்டும்
மீண்டும் உனது தோழனாக முன்வைக்கிறேன் என் தோழா! பட்டுத்தெறிக்கும் உனது
பெருங் கோபத்தை களைத்துவிடாதே! படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவேன்
என வாக்குறுதி கொடுத்திருக்கும் அதிமுக அரசு கடந்து போன ஐந்தாண்டுகளில்
செயல்படுத்த மறுத்துவிட்டது. பூரண மதுவிலக்கே எங்களின் முதல்
நிறைவேற்றமென முழங்கும் திமுக வோ அதன் பிரதான மது ஆலைகளில் முதலாளிய
கம்பெனிகளை நடத்திவருகிறது. எனது முதல் கையெழுத்து "பூரண மதுவிலக்கு" என
காதில் மைக் சொருகி பேசும் பாமகவின் அடித் தொண்டர்கள் வரையில்
கள்ளச்சாராய வியாரிகள் என்பது உலகறிந்த உண்மை, தமிழகத்தில் மதுவிலக்கே
எங்களின் முதன்மை சீர்திருத்தமென சொல்லும் மநகூவிடம் அதற்கான செயல்
திட்டமே இன்னமும் வகுக்கப்படவில்லை, ஆகவே ஆட்சி அதிகாரம் மே 19 ம் தியதி
யாருக்கானதென முடிவாகிவிடும் சூழலில் நமது மக்கள் அதிகாரத்தின் போராட்டம்
முடிவுக்கு வருமா? தொடருமா? என்பது தெரியவில்லை , ஒருவேளை தொடர்ந்தால்
உனது கண்ணத்தில் குருதி வரவழைத்து ருசித்துப் பார்த்த அதே அரச பயங்கரவாத
காவலாளிகள் மீதும் அரசின் மீதும் உனது பெருங் கோபத்தை பிரயோகப்படுத்தி
உனது காலிலும் உன்னைப் போன்றே கோடூரமாக தாக்கப்பட்ட நம் சகோதர,சகோதரிகள்,
தோழர்கள் மற்றும் பெரியார்கள் காலிலும் அந்த அரசப் பயங்கர வாதிகள்
மண்டியிடும் வரையில் நாம் போராட்டம் தொடர வேண்டும். ஆகவேதான் தோழனே! உனது
பெருங்கோபத்தை அப்படியே மனதிற்குள் ஏற்றி எப்போதுமே அதன் மீது செங்கொடியை
பறக்க விடு என் தோழனே!
படம் : மூடு டாஸ்மாக்கை எனும் முழக்கத்தோடு போராட்டம் நடத்திய மக்கள்
அதிகாரம் இயக்கத்தின் மீது காவல் துறையினர் தாக்கியதில் பாதிக்கப்பட்ட
பெயரறியா என் தோழன்.

Thursday, May 12, 2016

பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி - அம்பேத்கர்

ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய
சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில்
பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின்
(சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள்.
இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் .
இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண
மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு
எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு
முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு
தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை
பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .

பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை,
கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு
இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்.

ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில்
மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர்கள் கல்வியைத் தங்களது ஏக
போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள
வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள்.
அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக்
காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை
ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால்
அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் ,
தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று
பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு
ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத
வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள்
மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள்
வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள்
பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை
மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை
குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை
யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு
விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும்
கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன?
அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட
நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொள்கையின் பலனேயாகும்.

பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ
இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது
என்பதுதான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக்
கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள்
தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த
எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக்
கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக்
கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள்
`உடன்கட்டை ஏறுதல்' என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள்.
`உடன்கட்டை ஏறுதல்' என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு
ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்
கப்படவில்லை . இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு
ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம்
செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு
பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம்
அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக்
கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான்.
பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம்
இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம்
இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச்
சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்
பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார்,
தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத
மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும்
என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை
இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள
பார்ப்பனர்கள் செய்தது போல் .

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று
ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு
அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம்
சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி
ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல்
தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி
அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்
காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான்
சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும்,
பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான்
செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும்
அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான்.
இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ,
நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

————— டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட "காந்தியும், காங்கிரசும்
தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?" என்ற நூலிலிருந்து – பக்கம்
215-216

மோசடி படிப்புச் சான்றிதழ் புகழ் மோ(ச)டி

1980களில் படித்த நாங்கள் எல்லாம் கைகளால் மதிப்பெண்கள் நிரப்பப்பட்ட
சான்றிதழ்களைப் பெற்றிருக்கக்கூடிய அதே சமயத்தில் மோடி மட்டும் கணினியால்
தயார் செய்யப்பட்ட சான்றிதழைப் பெற்றிருப்பது எப்படி என்று முகநூல்
பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும் பல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி
இருக்கிறார்கள்.
மோடி தில்லிப் பல்லைக் கழகத்தில் பிஏ படித்தார் என்றும், குஜராத்
பல்கலைக் கழகத்தில் எம்ஏ படித்தார் என்றும் பாஜகவின் தலைவர் அமித் ஷா இரு
நாட்களுக்கு முன்பு தில்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இவர் தெரிவித்த உடனேயே ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஒரு பத்திரிகையாளர்
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அவை இரண்டுமே போலி சான்றிதழ்கள் என்று
கூறினார்கள்.

இந்நிலையில் பட்டம் வழங்கிய தில்லி பல்கலைகழகத்திற்கு சென்ற ஆம் ஆம்மி
கட்சி தலைவர்களை சந்தித்து அமித்ஷா வெளியிட்டிருக்கும் சான்றிதழின் உண்மை
தன்மையை உறுதிபடுத்துமாறு கூறினர். இதையடுத்து பல்கலைகழக பதிவாளர்
செய்தியாளர்களை சந்தித்து சில தவறுகள் கூறித்து கருத்துக் கூற முடியாது.
சில தவறுகள் எதர்த்தமாக நடைபெறுபவை என கூறியதுடன், அந்த சான்றிதழ்
உண்மையானதுதான். அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி
மழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அதுவும் போலியான தகவல் என்பது வலைத்தளங்களில் அம்பலமாகி
வருகிறது. இது தொடர்பாக முகநூல் பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும்
பலர் தங்கள் வியப்புக்குறிய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் தான் 1980இல் தில்லிப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது தனக்கு
மதிப்பெண் சான்றிதழ்கள் கையால் எழுதப்பட்டு வந்தன. ஆனால் மோடிக்கு
மட்டும் எப்படி கணினியில் தயாரிக்கப்பட்ட சான்றிதழ் கிடைத்துள்ளது என்று
ஆச்சர்யப்படுகிறார்.
மற்றொருவர், தன் சான்றிதழ் ஒரு வடிவத்திலும் மதிப்பெண்கள்
நிரப்பப்பட்டிருப்பது ஒரு மாதிரியும் இருக்கும்போது மோடி சான்றிதழ்
மட்டம் வேறு வடிவத்திலும், மதிப்பெண்கள் கணினி மூலம் தட்டச்சு
செய்திருப்பதும் எப்படி என்று கேட்கிறார்.
மற்றொருவர் மோடியின் ஒரு சான்றிதழில் failed என்றும் ஒன்றில் passed
என்றும் இருப்பது எப்படி என்று கேட்கிறார்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல குஜராத் பல்கலைக் கழகத்தில்
மோடிக்குப் பாடம் நடத்திய பேராசிரியர் ஒருவர் மோடி படித்ததாகச்
சொல்லப்படும் பாடங்கள் அப்போது குஜராத் பல்கலைக் கழகத்தில்
சொல்லித்தரப்படவில்லை என்கிறார்.
இவர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களை எல்லாம் அமித் ஷா போக்குவாரா என்று ?
அல்லது மீண்டும் ஒரு கதை ஜோடிக்கப்பட்டு வலம் வருமா? என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-தீக்கதிர்

Tuesday, May 10, 2016

ஜிஷாவின் தாயை சந்தித்தார் ரோஹித் வெமுலாவின் தாய்

ஒரு சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பிலேயே பெரும் ஆதிக்கத் திணிப்பை சக
மனிதர்களிடத்தில் அதையும் தாண்டி குறிப்பாக பெண்களிடத்தில் மிகச்
சாதாரணமாக பிரயோகப்படுத்தும் பிற்போக்குத்தனமான சாதியவாதமும் மதவாதமும்
இருக்கின்ற வரையில் இந்தியம் சமத்துவ பாதையை நோக்கிப் பயணிக்க வாய்ப்பே
இல்லாத போது அந்த சக மனிதர்களான ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்திய
மக்களின் வாழ்வென்பது காலங்காலமாக நசுக்கப்படுவதே வழக்கமாக
குடியமர்த்தப்படுகிறத­ு. ஒரு தலித்திய சமூகத்தில் அநீதிகள்
நிகழ்த்தப்படுகிறபோது­ அதனை எதிர்த்து வெகுண்டெழும் ஆதிக்கர்களை கண்ணால்
பார்ப்பதே கடினம், அப்படியானவர்கள் இல்லையென்றே எடுத்தாளலாம் ஏனெனில்
அவ்வகையானவர்கள் என்றுமே ஆதிக்கத்தின் பிடியில்தானே தன்னை நிலைநிறுத்திக்
கொண்டிருக்கிறார்கள் . ஆகவேதான் இந்த கேடுகெட்ட இந்துத்துவ பார்ப்பானிய
ஆதிக்கச் சாதிவெறியர்களின் மிகக்கொடுமையான அடக்குமுறை கோரச்சம்பவங்கள்
நிகழ்த்தப்படுகின்றபோ­து அதற்கான எதிர்ப்பலைகளையும்,
பாதிக்கப்பட்டோர்களுக்கான ஆறுதல் மொழிகளையும், அன்பு , கருணை
காட்டுவதிலும் அதே ஆதிக்கச் சாதிவெறியர்களால் பாதிப்படைந்த இன்னொரு
தலித்தியம் தோள்கொடுக்கிறது. தம்மைப்போலவே வலியாலும், வேதனையாலும்
துடிக்கும் தாய்க்கு இன்னொரு தாய் ஆறுதல் கூறுகின்றாள். ஆம்!
அண்மையில் ஆணாதிக்க சாதிவெறியர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு மிகக்
கொடூரமாக கொலை செய்யப்பட்ட கேரள சட்டக் கல்லூரி மாணவி (தலித்) ஜிஷாவின்
தாய் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் ஐதராபாத் பல்கலை
சாதிவெறியாட்டத்தாலும்,அரசப் பயங்கரவாத கல்வி நிர்வாகத்தாலும் கொலை
செய்யப்பட்ட (தலித்) ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா.

ஊமைகள் வேட்பாளர்கள் எனில் சட்டசபையிலும் ஊமைகள் தானே!

தமிழகத் தேர்தல் 2016 இன் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துக்
கொண்டிருக்கும் வேளையில் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித்
தலைவர்கள் ,மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள்,­ அக்கட்சிகளின்
பிரச்சார பீரங்கிகளாக களத்தில் இறக்கப்பட்டுள்ள திரைத்துறை நடிகர்
நடிகைகள் கையில் மைக்குடன் பிரச்சார வாகனத்தை அலங்கரிக்கிறார்கள் .
அவர்களின் பக்கத்தில் வெள்ளந்தியாக முகத்தை வைத்துக்கொண்டு எதுவும்
அறியாததுபோல் கைகளை கூப்பிக்கொண்டு பேசாமல் அமைதியாக அந்த தலைவர்கள்
அல்லது நடிகர் நடிகைகளின் பக்கத்தில் தலைவிதியே என
நின்றுக்கொண்டிருக்கி­றார்கள். இதில் அதிகமாய் கவனித்தது ஒன்று அனேக
வெட்பாளர்கள் நிற்கக்கூட முடியாமல் வாகன கம்பிகளில் உடம்பை
முட்டுக்கொடுத்து பரிதாபமாய் சிலையாக நிற்கிறார்கள். இங்கே தான்
வேட்பாளர்கள் மீது
வாக்காளர்களுக்கு சந்தேகக் கேள்விகள் எழுகிறது. அது என்னவெனில்
வேட்பாளருக்கு பேச்சு வருமா வராதா? வேட்பாளர் என்ன ஊமையா? பொதுமக்களை
பார்த்து ஊமையாக கைகூப்பி வணங்கும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின்
சட்டசபையில் என்னத்த பேசி கிழிக்கப்போகிறார்?
கொஞ்ச நேரம் ஒரு வாகனத்தில் நிற்க முடியாத வேட்பாளருக்கு ஒற்றைக் காலில்
தொங்கியபடி மணிக்கணக்காய் ரயில், பேருந்து பயணம் செய்யும் பாமரனின் வலி
தெரியுமா? தெரியாதா?
தன் சொந்த உடல் மொழியாலும் பேச்சு மொழியாலும் தேர்தல் வாக்குறுதிகளை
தரமுடியாத வேட்பாளர் அதை நிறைவேற்றாமல் போனால் தப்பித்துக் கொள்வாரே!
பிறகு யாரிடம் முறையிடுவது? கட்சி மேலிடம் என்பதும் தலைவர்கள் என்பதும்
கைபேசியில் வரும் "தொடர்பு எல்லைக்கு அப்பால்" என்பதாகவே இருக்கையில்
ஏமாற்றப்படுவது வாக்காளராகிய நாமாக்கத்தானே இருக்கிறோம். இப்படியே
வாக்களிக்காமல் இருந்துவிட்டாலும் சனநாயக உரிமை மீறல் என்பார்களே! சரி
49ஓ வுக்கு போனால் அது புன்னியமற்ற அனாமத்து கணக்காகவே இருக்கிறதே!
இறுதியாக என்னதான் செய்வது? இப்படியான சந்தேக கேள்விகளையும், குழம்பிய
மனநிலையையும் வாக்களர்களிடத்தில் வேட்பாளர்கள் உறுவாக்கிவிட்டுச்
செல்கிறார்கள். வேட்பாளர்கள் தரப்பில் "அதான் தேர்தல் அறிக்கை"
கொடுத்திருக்கிறோமே! எழுத்து ஊடகம் , காட்சி ஊடகம் என அனைத்திலும்
பரப்புரை செய்திருக்கிறோமே அதை பார்த்து, படித்து வாக்களியுங்கள்
எங்களுக்கு என்கிறது.
எல்லாம் சரிதான் பொதுமக்களாகிய எங்களை பார்த்து வாய்திறந்து பேசக்கூட
முடியாத வேட்பாளர்களாகிய நீங்கள் தற்போது ஆளும் அதிமுக ஜெவின் பறக்கும்
ஹொலிக்காப்டரை கண்டதுமே தரையில் மண்டியிடும் அடிமையாளர்களின் அதே
செய்கையைத்தானே கொண்டிருக்கிறீர்கள்.­ அடிமையாளர்கள் என்றுமே குரலை
உயர்த்தி பேசுவதை விரும்ப மாட்டார்கள் என்பதை தானே இது உணர்த்துகிறது.
ஒரு வேட்பாளரின் உடல்மொழி , பேச்சுமொழி, பேச்சின் நயம் , குரலோசை
ஆகியவற்றை வாக்காளர்கள் எதிர்பார்ப்பதில் ஏதும் தவறில்லைதானே! சரி இது
காலங்காலமான முறையென்றாலும் அதனை மாற்றிக்கொள்ள தலைவர்களுக்கும்
வேட்பாளர்களுக்கும் சிக்கலேதும் இல்லைதானே! பிறகேன் வேட்பாளர்களை
பேசுவதற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள் தலைவர்களும்,
ஒருங்கிணைப்பாளர்களும­்,,, இதில் பிரச்சாரங்களில் ஈடுபடும் நடிகர்
நடிகைகள் காசுக்காகவும் தனது தொழிலின் ஆதாயத்திற்காகவுமே பேசுகிறார்கள்.
ஒருவேளை அவர்களை விட வேட்பாளர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள் எனில்
நிச்சயமாய் அனேக மக்கள் எதிர்பார்க்கும் திரைத்துறை-அரசியல்தல­ையீடு
தொடர்பற்றதாக மாறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. நான் யாருக்கு
வாக்களிக்க விரும்புகிறேனோ அவரின் உண்மைக் குரலை கேட்டு அவர்தம் வாயால்
தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனும் நம்பிக்கையை நான் பெற
விரும்புகிறேன் இதில் தவறேதும் எனக்குத் தோன்றவில்லை. தேர்தல் பிரச்சார
இறுதி நாட்களுக்குள் இதனை யாரேனும் வேட்பாளர்கள் நிறைவேற்றுவார்களா?
எனும் எதிர்பார்ப்பில் வாக்காளனாகிய நான்.

Sunday, May 08, 2016

சுமக்கும் சிலுவை

நான் சிலுவையை சுமக்கின்றபோது எழும் பூமியதிரும் சிரிப்புகளை உற்று கவனிக்கவும் செவி மடுக்கவும் அப்போதெனக்கு தோன்றவில்லை அது தேவைகள் பூர்த்தியான தெனாவட்டு சிரிப்புகளென சிந்தையில் முன்பே சுருக்கென குத்தி விட இலக்கு ஒன்றேதான் இப்போதெனக்கு ஆறுதல் அதுவே பாதி வழியை கடந்த பின்னர் என்னுள் நானே என் நரம்புகளினூடே எழும்பும் உரத்த முழக்கங்களால் சிலுவையே உடைபடும் நிலைகொள்ள முதல் கேள்வி எழுகிறது என்னுள் எங்கே நான் சிலுவையை இறக்கி வைப்பது? சற்றும் பதிலுக்கு காத்திருக்கவில்லை எனை அடிமையாக நடத்தும் அதே ஆதிக்கத்தின் தோளில்தான் இறக்கிவைக்கிறேன் விழும் அடிகளைத் தாங்கி திருப்பி அடிக்காமல் விடுதலை பிறக்காது என் தோழா!

Saturday, May 07, 2016

ஜிஷாவுக்கு



ஜிஷாவுக்கு

நாங்கள் தேர்தல்
கொண்டாட்டத்தில்
குளித்து அழுக்கோடு
அழுக்காகவே
வெளியேறுகிறோம்
எங்களுக்கது
தூய்மையென
கற்பிக்கப்பட்டுள்ளது­
வேண்டுமெனில்
ஆங்காங்கே மீம்ஸ்
போட்டு
விளையாடுவோம்

உனது வலியையும்
வேதனையையும்
அதனுள் புதைத்து
ஆண்டைகள் பெருமை
பேசுவோம்

படிப்பறிவில்
முதலிடமாம்
பெண்
மக்கட்தொகையில்
முதலிடமாம்
கம்யூனிஸத்தின்
புகலிடமாம்
எழிலோவியம்
இயற்கை அழகு
இமயம் வரை பேசுமாம்
இப்படித்தான்
உன் பிணம் விழுந்த
கேரளம் எங்களுக்கு
அறிமுகம்

எதையும் கடுகளவும்
அசைத்திடாத
கொழுத்த முதலைகளாக
முளைத்திருக்கும்
எங்களுக்கு

உனது முலைகள்
அறுக்கப்பட்டு
வயிறு கிழித்து
குடல்களை வெளியே
வீசப்பட்டு
யோனி
பதம்பார்க்கப்பட்டு
தெருவில் வீசியெறிந்த
உயிருக்கு இரையானது
இந்திய மனிதம்
அது என்னவிலையென
கேட்டு கையேந்துவோம்
அதிகார வர்க்கத்திடம்
அப்படியான மனிதர்கள்
நாங்கள் பிணத்தையும்
பங்கிட்டு உண்போம்
பெண்பிணம்
கிடைத்தால்
இன்னமும் மகிழ்ச்சி
குறியும் சேர்ந்து
புசிக்கும் பிணத்தை

ஜிஷா
கொரூமாய்
இறந்து கிடப்பது
நீமட்டுமல்ல
நீ பயின்ற
சட்டமும் கூட

வாழ்தலில்
நாதியற்று கிடக்கிறது
தேசமெங்கும்
ஆணாதிக்கம்
நதியென ஓடுகையில்
வாழ்தல் பகல்கனவே

பெரு சமுத்திரத்தில்
விழுந்து காணாமல்
போகும் அந்த ஒருதுளி
கண்ணீரை போல
கயர்லான்ஜியுடனும்
நிர்பயாவுடனும்
சிவகாசி சிறுமியுடனும்
இன்னும் விடியலை
பார்த்திராத
கோடான கோடி
வன்புணர்வுகளுடனும்
நீயும் காணாமல்
போவாய் ஜிஷா

கயவர்கள் நெஞ்சமும்
கருணையாளர்கள்
நெஞ்சமும் ஒன்றேதான்
அது கல்லேதான்
ஜிஷா

சாதிக்கும் மதத்துக்கும்
யோனிகள் என்றால்
அவ்வளவு பிரியமாம்
அடிக்கடி பிரியோகிக்கும்
ஆணுறுப்புகள்
இந்திய தேசத்திடம்
இளக்காரம் பேசி
விந்தணுவில் விபூதிகள்
பூசிக்கொள்ளும்
நெற்றியில்

இறுதியாக எனது
வலியின்பால்
கேட்கிறேன்

எதற்கு நீ பெண்ணாக
பிறந்தாய்

எதற்கு நீ சட்டம் பயின்றாய்

எதற்கு நீ தலித்தாக
வாழ்ந்தாய்

எதற்கு நீ
இந்தியாவில்
பூர்வக்குடியானாய்

எதற்கு நீ எதற்கு நீ
அடுக்குகள் விரிந்தாலும்
பதில் பேசுகிறது
உனது பிணம் ஜிஷா

அட
பைத்தியக்காரா
புலம்புவதை நிறுத்து
பலியாகி கிடக்கிறேன்
ஆணாதிக்க
வெறியினால்
என்னை புரட்சிக்கு
வித்திடு என்று,,,

ஜிஷா அதற்கும்
வேண்டுமாம்
யோனிகள்
அதுவும் குறிப்பாய்
தலித் யோனிகள்
புரட்சியும் கூட
இங்கே யோனி
சுவைத்த பின்புதான்
பேசுமாம்,,,
பார்த்தாயா உன்
இந்திய தேசத்தின்
உண்மை முகத்தை
ஜிஷா!

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...