Saturday, July 29, 2017

சாட்டை


தென்றலில் இசை மீள
ஒரு மூங்கிலை
துளையிட்டபோது
துடித்து திமிறி காற்றிடைவெளியில்
சிதறிவந்தது சீர்குலைந்த
இராகமாய் புல்லாங்குழலில்
இருந்து இடறிய சப்தங்கள்,

மாற்றொலித்த
வடுக்களினூடே
நாவின் நுனியில்
திரிந்த வார்த்தைகளில்
ஒளிந்துகொண்ட
வன்மமாய் தீண்டிச்சென்ற வெப்பமாய்
சொற்களின் கொடுமைகள்,

சில நேரங்களில் வீழ்ந்தும்
சில நேரங்களில் எழுந்தும் அழிச்சாட்டிய உணர்வுகளைத் தாண்டி இம்மண்ணில்
உயிர்த்தெழும் மிதமிஞ்சிய அதிகாரத்தில்
மீளமுடியாத துயரத்தில்
தென்பட்ட சிறு துவாரத்தில்
பிரகாசித்துப்போன ஒளியினூடே
திரும்பிய பொழுதில்
அறைந்துவிட்டுப்போனது இசைத்திட மறுத்த காற்று
தன் பலத்தோடு,

மீண்டும் மீண்டும்
திமிரி எழ
எத்தனித்தபோது
மீண்டும் அமிழ்த்திப்போனது
சர்வாதிகார நாற்காளிகள்,

திருப்பி அடிப்பேன்
என்கிற பலத்தோடு இம்முறை
சாட்டையின் துணைகொண்டு துளையிடுகிறேன்
அதே மூங்கிலில்,,,

வீழ்ந்தேன்


மழை காணாது
மனமேங்குதே
சிலையே
பொற்சிலையே
என் காண்கிறேன்
மரமே ஓ மரமே
அசைந்தாடாய்
தழலே எரிதழலே
என் சேர்வேன்
உனை நானே
பிழையே என் பிழையே
விலைபோனேன் வீழ்ந்தேன்
சிறையே ஓ சிறையே
சிதைப்பாய் என் சதையே
இனி வேண்டாம்
வலியே, என் வலியே,,,

இப்படிக்கு நினைவுகள்



ஒற்றை நினைவுகளல்லாமல்
வாழ்நாள் நினைவுகளை
நீ தந்துவிட்டு போன
அந்த தருணத்திலே
என்னுயிர் ஏக்கங்களை
சுமக்க தயாராகி விட்டது
எங்கோ ஒரு மூலையில்
நீயும் என்னை
நினைத்திருப்பாய்
எனும் நம்பிக்கை
மட்டுமே என்னுள்
தினம் வாழ வைக்கிறது
இப்பிரபஞ்சத்தில்
அன்பே,,,

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...