Sunday, February 17, 2019

காஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...





உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்.!

ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி சொல்வார் "இந்திய பிரதமரே குறுக்கே வந்தாலும் கான்வாய் நிற்காது". கான்வாய் தலைவராக நியமிக்கப்படும் அதிகாரிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. கான்வாயை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அனைத்து வீரர்களுக்கும் AK 47 கட்டாயம் உண்டு. உரி செக்டாரில் புறப்பட்டால் அடுத்த ட்ரான்சிஷன் கேம்பில் தான் கான்வாய் நிற்கும். கான்வாய் வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் அடித்து தூக்கி விட முடியாது. காரணம் கான்வாய் வாகனங்கள் அனைத்துமே ரஷியாவின்(செக்) Tatra ட்ரக்குகள். சாதாரண பாம்க்கு மயிராக்கூட மதிக்காது அந்த வாகனம். ராணுவம் வேற மாதிரி அப்படிப்பட்ட கான்வாயை தீவிரவாதிகள் தூக்கிய வரலாறு உண்டு.

அப்படியிருக்கையில் சம்பவம் நடந்த புல்வாமா உரி - ஸ்ரீநகர் கான்வாய் பாதையில் சிஆர்பிஎப் வீரர்களை ஒரு சாதாரண பேருந்தில் எப்படி கொண்டு சென்றார்கள் என்று இரண்டு நாளாக மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ராணுவ நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு நண்பன் சொன்னான், "என்னமோ பண்றாய்ங்க மாப்ள"
அந்த வார்த்தைகள் என்னமோ செய்கின்றன என்னை.

அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிழும் எழுந்து தெய்வங்களை வேண்டுகிறேன். பாவப்பட்ட அந்த ஜென்மங்களுக்கு எந்த கெடுதலும் நடந்து விடக்கூடாது. ராணுவத்தில் இருக்கும் காலத்தில் தான் அவர்களுக்கு குடும்பம் புள்ளக்குட்டின்னு சந்தோஷமான வாழ்க்கை இல்லை, ரிட்டயர்டாகியாச்சும் புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருக்கட்டும். மனைவிமார்கள் தங்கள் கணவனை இழந்து, குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்து தாய் தனது மகனை இழந்து வாடும் வலியை யாரும் அனுபவிக்க வேண்டாம். ராணுவ வீரர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவன் வெறும் சரக்கு பாட்டில் வாங்கிவரும் சாராய வியாபாரி அல்ல!
-ஜான்
(வாழ்வின் பொன்னான ஐந்தாண்டுகளை ராணுவத்தில் கழித்தவன்)

-John Gladson

விரட்டுகிறார்கள் ...




பெரும் பசியில் தன் பிச்சை பாத்திரத்தை துழாவி துழாவி தேடுகையில் ஒரு ரொட்டித்துண்டு விழுந்தது  கார்ப்பரேட் , ஆளும் அரசு
கரங்களிலிருந்து ...

வீழ்ந்து கிடந்த ராத்திரியில் 
அழுகி கிடக்கும் மரத்திடம்
தேடி அலையும் தன் வீடு  அழித்த பகைவனை தோண்டி அமிழ்த்தி பிடித்து
நீதி கேட்க எத்தனிக்கும் பொழுது
வெளியேறும் கார்ப்பரேட் மூளையை பசிக்க தின்று
பழி தீர்க்க துடித்திடும் வேளையில் மீண்டும் மீண்டும் வந்து சத்தம்போடுகிறது என் வீடு இடிக்க துடிக்கும் இயந்திர நகங்கள்
இன்னமும் ...

நகரங்களில் வாழ விடாது துரத்திக்கொண்டே கல்லறையை தோண்டி எடுத்தும் கார்ப்பரேட் கட்டிடங்கள் வந்து முளைக்கிறது
கால் தோய்ந்த பூர்வ நிலங்களை
அரசும் அழிச்சாட்டியம் செய்கிறது
காற்று கூட சுவாசித்தலை குறுக்கிட்டு தலித்துகள் இவர்களென விரட்டும் போல ...

     

(சென்னை புளியந்தோப்பு , கோவை உக்கடம் தலித்துகள் குடிசைகள் இடிக்கும் அரசை குறித்து )

Friday, February 08, 2019

பேரன்புக்காரன் அவன்




கூர்வாள் வீசும் அவன்
பார்வைகளில் பட்டுத் தெறிக்கும்
என் பெண்மையின் விழுதுகளை சுருட்டி
இழுத்துக் கட்டி
ஊஞ்சலாடுகிறேன்
காதலெனும் ஆல மரத்தினில் ...

என் கன்னத்தில் பூசிக்கொண்ட சிவப்பை எடுத்து அவனும் பூசிக்கொள்கிறான் ...

எவ்வளவு இடைவெளிகள் இருந்த பின்னாலும் பேரன்போடு எனக்காகவே ஏங்கித் தவிக்கும் வதைப்புகளினூடே
உட்புகுந்து அவன் மனதோடு பேசும் வித்தைகள் கற்றுத் தந்தவனும் அவன்தான் ...

அதீத ஆர்வம் கொள்கிறேன்
அவன் என் கண்களை கவர்ந்திழுக்கும் பொழுதுகளில் எல்லாம்
அக்கணமே அவன் நெஞ்சில் சாய்ந்திட வேண்டுமென்று ...

எனக்குள் இருந்து
நான் மட்டுமே காணும்
காதலெனும் பெருங்கடலில்
நீந்திப் பழகுகிறேன்
அவனுக்குள்  அலையென வீசி
அனுதினமும் ...

ஒருநாள் அந்த ஒருநாள்
என் மூச்சு ஊசலாடி
கண் மூடுமந்த
கடைசி நிமிடங்களில் கூட
அவன் கண்களில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை தாண்டி
என்னை அவன் கண்களுக்குள் காண்பேன் அத்துணை
பேரன்புக்காரன் அவன் ...

Thursday, February 07, 2019

வாழத் தகுதியற்றவள் ...




விரிந்து கிடக்கும் மணற் போர்வைகள் வழியே ...
விளங்க முடியாத கையறு நிலையில்
நீட்சிகள் பெறும் சாபக்கேடுகளில்
ஒன்றை எடுத்து
தன் பாத இடுக்குகளில் நுழைத்து

நடக்க ஏதுவாக இன்னொரு
வரட்சியை  இறுக்கக் கட்டி
காலணி என உடுத்தி

எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியிலும்தான்
எத்துணை எத்துணை துரோகங்கள் ...

பித்து பிடித்தவளின் பிதற்றல் வார்த்தைகளில் யாதொரு குறியீடுகளுமின்றி
ஏமாற்றம் ஒன்றே பிரபஞ்சத்தின் வாழ்வியல் விதியென ஏக்கங்களை சுமந்து  மணற் போர்வைக்குள்ளிருந்து
சற்றே கடலலை அழைத்திடும்
தூரத்தில்  அவளும் போனாள் காட்சிகளுக்கு துணையாய் அல்ல ...

இந்நிலத்தில் எனக்கு ஏன்
வாழத் தகுதியற்றவளாக மாற்றி வைத்தீரென
கேள்வி கேட்க ...

Monday, February 04, 2019

சின்னத் தம்பி யானை - வனம் எங்கள் வாழ்விடம்




சுனாமியானாலும் தற்போதைய கஜா புயலானாலும் அதன் கோரத்தாண்டவத்தை இயற்கை சீற்றத்தை ஆதரிக்கின்ற மனநிலையை சின்னதம்பிகளை விரட்டிவிடும் மனுசப் பயல்களின் போக்கிலிருந்து மனம் சுயத்தின் அடிப்படையில் திரும்பிவிடுகிறது ,, யாரை நாம் "வந்தேறிகள் " என்று வாய்க்கூசாமல் சொல்கிறோமோ அவர்கள் யாவரும் இந்த மண்ணின் பூர்வக்குடிகளே , என்று சின்னத் தம்பிகள் உணர்த்துகிறது , சின்னத் தம்பி வெறும் யானை அல்ல , அது நில உரிமைக்கான போராடும் ஒரு உயிரென்று எப்போது உணரப்போகிறீர்கள் ... எப்பொழுதும் ஒன்று சொல்வதுண்டு " யானைகள் அத்துமீறி விளைநிலங்களில் நுழைகின்றன என்று தயவுசெய்து சொல்லாதீர்கள் ,, மனுசப் பயல்களாகிய நாம்தான்தான் அவைகளின் வனப்பகுதிகளை அழித்து அத்துமீறி வந்தேறிகளாக குடிபுகுகின்றோம் ....



ஒரு நாட்டில் குறைந்தபட்சமாக 33% என்கிற அளவிலாவது காடுகளின் பரப்பு இருக்க வேண்டும். இந்த அளவு என்பது இறுதிகட்ட அபாய அளவு. ஆனால் இன்றைக்கு இந்த அபாய அளவையும் தாண்டி கீழிறக்கி இப்போது சுமாராக 15% அளவிற்கு  போனால் போகிறது என்கிற அளவில் மட்டுமே மலைச் சரிவுகளில் காடுகளை இடையிடையே விட்டு வைத்திருக்கிறோம்...

நமது நாட்டை பொறுத்தவரை மலை முகடுகளையும் சமவெளிகளையும் நமக்கே நமக்கானதாக ஆக்கிரமித்துக் கொண்டோம். இடையே விட்டுவைத்திருக்கிற அந்த மலைச்சரிவுகளே ஒட்டுமொத்த வனவிலங்குகளுக்கானது என வரையறுத்து வைத்திருக்கிறோம்.  இதற்குமேலும் இந்த நில அளவு சரியாமல் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் இப்போது இருக்கின்ற அந்த குறைந்த பட்ச அளவையாவது இதோடு விட்டுவைத்து இதற்கு மேலும்  கீழே இறங்கி விடாமலிருக்கும்படி, அதிகார வர்க்கத்தின் மீதும் கார்ப்பரேட் சாமியார்கள் மீதும் நமது எதிர்ப்பு கிளம்ப வேண்டும் ... காடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த மனிதர்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ ... ஒரு நாட்டின் வனத்தை அழித்து முற்றிலுமாக அங்கே காவி மயத்தை நிறுவி மக்களை மூடர்களாக வைத்திருக்கும் ஜக்கி வாசுதேவ் போன்ற கஞ்சா சுடுக்கிகளிடம் காட்டாத வீரத்தை இந்த அரசு ஒரு யானையிடம் பிரயோகிக்கிறது என்பது வெட்கக்கேடு இல்லையா ? முதலில் இதுபோன்ற போலிச்சாமியார்களிடமிருந்து காடுகளை மீட்டும் போலவே மற்ற மனுசப் பயல்களிடமிருந்தும் காடுகளை மீட்டு வன மிருகங்கள் வாழ ஏதுவாக காடுகளை பாதுகாத்தால் போது அவைகள் ஊருக்குள் நுழைவதை தன்னாலே நிறுத்திக்கொள்ளும் , இதில் அதிமுக்கியமாக peta பீட்டா  அமைப்புகள் இப்போது வரையில் சின்னத் தம்பி யானைக்காக எவ்வித அறிக்கையும் விடவில்லை என்பதை கவனித்தீர்கள் எனில் அவ்வகையான அமைப்புகள் விலங்குகள் பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு மேற்குறிப்பிட்ட போலிச் சாமியார்களின் சுகபோக வாழ்வுக்கு மட்டுமே துணைபோகும் என்பதை நன்கு அறியலாம் ... #savechinnathambi சின்னத் தம்பியை பாதுகாப்பதில் தான் மனித நேரம் நிரம்பியிருக்கிறது ...


Friday, February 01, 2019

நமக்கான கைபேசி உரையாடலில் ...




மௌனங்களை திறந்து
நானும் நீயும் கைபேசியில்
உரையாடலை தொடங்க ...

மூச்சுக்குழல் வழியே
பெரும் முனகல்கள் எழுப்பி "ம்ம்ம்" என்கிற
அடையாள மொழியில்
இன்னும் பேசு என்கிறாய் ...

உனக்கும் எனக்குமான
நீள உரையாடலை
முடித்து வைக்க ஏதுவாய் தோன்றிடும் இயல்பின் யாதொரு குறுக்கு நிழல்களுக்கும்
வழிவிடாது தொடரும்
பெரும் சமிக்ஞை கடத்துகை தானோ இந்த பேரன்பில் கசியும் காதல் ...

கொஞ்சி பேசுதல் குறைவே என்றாலும்
குழந்தை மொழியாகிறது உன் குரல் எனக்கு ...

தொட்டு விடும் தூரம் இல்லையென்றாலும்
தொடுதலோடு தொடங்கி இம்சையில் சினுங்குகிறது நம் கைபேசி ...

ஏதேதோ ... எண்ணங்கள்
தோன்றி வளர்ந்து வளர்ந்து விடைபெறும் பொழுதுகளில்
அழைப்பு துண்டித்த போதிலும்
உன் குரல் இன்னும் ஒலித்துக்கொண்டேதானிருக்கிறது

ராட்சஷி ...

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...