Sunday, August 24, 2014

பைசாவில் பணமுதலைகள்

பைசாவில் பணம் பறிக்கும் பணமுதலைகள்:
பொதுவாக நம்முடைய அத்யாவசிய
நுகர்விலிருந்து ஆடம்பர பொருட்கள்
வரையிலும் வாங்கப்படும் பொருட்களின்
விலை நிர்ணய பட்டயலை பார்த்தோமானால்
வரி நீங்களாக மற்றும் உள்வரியுடன்
நிர்ணயிக்கப்படும்
தொகுப்பு விலையானது பைசாவில்
முடியும் வகையில் நிர்ணயிக்கப்பட்டிருக­
்கும் சிறு உதாரணமாக நாம்
காலணி வாங்கச்சென்றால்
அக்காலணி விலைப்பட்டியலை பார்த்தோமானால்
Rs.99.99 என்று இருக்கும் நாம் நூறு ரூபாய்
கொடுத்து வாங்கினால்
1பைசா சில்லரையை வாங்கமுடியாது அல்லது கொடுக்க
முடியாது இது காலணியில
ஆரம்பித்து தலைக்கு இடும் எண்ணெய்
வரையில் இன்று பரவியிருப்பதை நம்மால்
மறுக்கமுடியாது இதில் தான் நம்
பணமுதலைகளின் சூழ்ச்சமம்
அடங்கியிருக்கின்றது உதாரணத்திற்கு திரும்பவும்
காலணியையே எடுத்துக்கொள்ளலாம்
சராசரியாக ஒரு காலணிசந்தையில்
ஒரு நாளைக்கு 1000 காலணிகள்
விற்கப்படுவதாக வைத்துக்கொண்டால் 100
காசுகள் 1ரூபாய் என்ற கணக்கில்
நமக்கு தெரிந்தே அவன் 10 ரூபாய்
பார்த்துவிடுகிறான் இது உதாரணம்
மட்டுமே உண்மைநிலையில்லை ஏனெனில்
1பைசா கணக்கில்
இப்போது நிர்ணயிக்கப்படுவதில்லை காலம்
மாறியது போல் அதுவும்
விலையேறி 1பைசா என்று பட்டியிலிட்டு 99பைசாவாக
நுகர்வோரிடம்
பிடுங்கப்படுகிறது பணமுதலாளிகளின்
இந்த சூழ்ச்சமத்தால் சராசரியாக
ஒரு குறிப்பிட்ட தொகையினை அவர்கள்
இலாப கணக்கில்லா தனி கணக்காக
கொள்ளையடிக்கின்றார்கள் இதில்
ஒரு வேடிக்கை என்னவென்றால் Rs.99.01
என்ற விலையிருந்து நாம் சரியாக ரூ99 ஐ
செலுத்தினால் அந்த 1பைசாதான்
தனக்கு இலாபமென
சொல்லி 1ரூபாயை இலாவகமாக
பிடுங்குவான் பாருங்கள் அதில் தான்
அவன் தொழில் யுக்தி அதீதமாக
வெளிப்படுகிறது ஆக நுகர்வொர் என்பவன்
எப்போதும் எங்கு பார்த்தாலும்
ஏமாந்து கொண்டே தான் இருக்கின்றான்
என்பது வெளிப்படையாக
தெரிகிறது பைசாவினை நீங்கள்
மதிப்பதில்லை ஆனால்
பணமுதலைகளுக்க் அந்த பைசாக்கள் தான்
மூலதனம் வெளிப்படையாக கைபேசிக் கட்ணங்களின் சூழ்ச்சமமும் இதுவாகத்தான்
இருக்கின்றது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...