Thursday, October 30, 2014

பனிச்சாரல் கடற்கரைக் காதல்!

பனிச்சாரல் கடற்கரைக் காதல்!


இமைகளை மூடாமல்
வியர்வைத்துளி
உப்போடு!
செய்து வைத்த மணல்வீட்டருகில்!
மனிதனை விழுங்கி
அவனே! "தலைவன்"
என்றழைத்த
மீன்வாடை படாத
அந்த வீட்டாரின்
மனையின் மீதோர்
கண்!
மணற்குவியலருகே அந்த
ஜல்லிக்குவியல் தான்
அனைவரின்
மனதையும் கவர்ந்தது அவளும் அதிலொருவள்!
ஓ!!! அடுத்த ஆட்டம் ஆரம்பமாயிற்றோ!
அதோ! அடியாள்
அதட்டுவானெனும்
பயத்திலே!
அழகழகான கல்லங்காயை
அடுத்தடுத்து பறிக்கிறது
அக்கைகள்!
அவளைக் கவர!
அடுத்த
கலையை அவிழ்த்து
விடுவதுதானே முறை!
கடற்கரை மணலைச்
சீண்டி!
ஓட்டை ஒடிச்சலில்லா ஒழுங்கான அச்சின்னஞ்சிறு சங்கினை எடுத்து! மணலையும்
துடைத்து!
ஐவிரல் மடக்கி மோதிரவிரலும் நடுவிரலும்
தாங்கிபிடிக்க!
அருகே என்னுதடு முத்தமிட!
அம்சமாய் எழுந்த அவ்வொலியில்! கூடியிருந்தோர் கும்மியடிக்க!
கண்கள் மட்டும் மனையடி நோக்கியே இருந்தது!
எனக்கு மட்டும்
அகிலம்
அமைதியானது!
அவளின் பார்வை தான் அதற்கு காரணமோ!
ஒன்றை மட்டும் உணர்ந்தேன்!
கண்ணன் இக்கடற்கரை வந்தால்! புல்லாங்குழலை புறக்கணித்துவிட்டு
அச்சின்னஞ்சிறு சங்கினை
தேர்ந்தெடுத்திருப்பான்!
இப்படியே சென்றது
எங்கள்
கடற்கரைக்காதல்!
கரையோர
அலைகளை கூட
கானாத கஞ்சங்களாய்!
ஆங்காங்கே முளைத்திருக்கும் வெந்நீர்க் காதலர்களே!
கேட்டீர்களா?
எங்கள் பனிச்சாரல் காதலை!
இனியுமா உங்களுக்கு முகமூடி தேவை! களையுங்கள்
கடற்கரை களங்கம் படாமலிருக்கட்டும்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...