Thursday, October 09, 2014

நெசந்தானா!!!

நெசந்தானா! இது
நெசந்தானா!
ஏம்புள்ள
எழுத படிக்குது
நெசந்தானா!
ஏணிமேல
ஏறி!
எட்டடுக்கு
மாளிகனாலும்
எழவெடுத்த
உசுருமேல
எப்பவும்
கவலபடாம!
அந்தரத்துல
தொங்கிகிட்டு
அழகழகா
சுண்ணாம்படிக்க!
அடிச்ச
சுண்ணாம்போ! அலர்ஜியாக ஆஸ்துமாவும்
அழுத்தி புடிக்க!
அஞ்சாறு
காசு சேர்த்து!
அங்கங்க
கடன் கேட்டு!
அதோடு நோயுஞ்
சேர்த்து!
அமிச்சி வச்சேன் பள்ளிகொடத்துக்கு! அடுக்கடுக்கா
புஸ்தகம் படிக்க
ஆன செலவோ!
அஞ்சு சைபரு!
அழுது பொலம்ப நேரமில்ல! அழுது
பொரண்டாலோ
அதபார்த்து
அந்தபுள்ள!
நைனா!
படிப்பேதும் வேணா
அந்த!
கந்த பனியன குடு போட்டுகிட்டு நானுங் உங்கூட வரேன்னு அடம்புடிக்க
ஆரம்பிச்சிடுமோனு! பயந்தே!
பாதி கண்ணு
மங்களாச்சி!
மீதி கண்ணு
மீண்டுடிச்சி! புள்ளையாண்டான் புள்ளிமானு போல!
துள்ளி ஓடியாந்து
ஒரு
புஸ்தகத்த நீட்ட!
அதவாங்கி
நானும் பாக்க!
எம்பேரு! அவபேரு!
ஆயாபேரு!
தாத்தம்பேரு!
புள்ளபேருனு!
படிக்க தெரிலனாலும்! எழுத்து தெரிஞ்சிச்சு!
அத வாசிச்ச எம்புள்ள குரலும் கேட்டுச்சு! நோயெல்லாம் பஞ்சா பறந்தும்
போய்டுச்சு! நெசந்தானா!
இது
நெசந்தானா!
எம்புள்ள
எழுத படிக்குது
நெசந்தானா!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...