Wednesday, October 15, 2014

கருப்புடல் குமரியே!

கருப்புடலில்
கவர்ந்திழுக்கும்
காவியமே
கேளடி
கிளியோபாட்ரா
காலத்தின்
கண்ணாடியல்லவா
கண்டதும்
காதலுனை
கவர்ந்ததே
காரணம்
கேளடி
கருவிழியும்
கருப்புதானே
கட்டுடல்
கருப்பென
கர்வம்
கொள்ளடி
கடவுள்
கருவரையில்
காட்சியும்
கருப்புதானே
காதலில்
கருப்புடல்
கானமில்லை
கரம் கோர்த்தபின்
கார்மேகமே
நம் கைப்பிள்ளை
கருப்பொன்றும்
கேலிசொல்லில்லை
காதலுக்கு
கருப்பெழுதும்
கதையெல்லாம்
காட்சிப்பிழையில்லை
காதலோடு
குடையொன்றில்
குடியிருப்போம்
கருப்புடல்
குமரியே!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...