Sunday, November 30, 2014

"நிலவும் நிழலும்"

வானத்து
முழு நிலவின்
உடல் முழுதும்
வழியும் சீழுடனே
கலந்த குருதி வாடை!
பாவம் படுத்திருக்கிறாள் கடைசி காலத்தை எண்ணியபடியே!
இதயம் எழுப்பிய
அதிர்வுகளைத்
தாங்கிக்கொண்டே
அருகே சென்றேன்!
அழுகையும்,அலறலும்
ஒருசேர!
படுக்கையில்
கிடந்த நிலவின்
வலிமுனுகலை கேட்க
இருகாதுகள் போதவில்லை!
அவசரமாதலால்
அவசியமான
மருந்தை எடுத்துத்
தடவ எத்தணிக்க!
அருகிலேயே அதட்டியது அக்குரல்!
அடேய்!! நிறுத்து அவளைத்தொடாதே
என்றொரு குரல்!
குரலே காட்டிவிட்டது
அதன் திமிறை!
திரும்பி பார்க்கையில்!
தீராத பணப்பசியுடனே!
பாதாள பூதம்போலே!
ஒருவன்
நிழலாடுகிறான்
அவனொரு நிழலாதலால்!
கவனம் திரும்பாது கண்ணில் ஒளியேற்றி
மீண்டும் மருந்தை எடுத்தேன்
மீளாத்துயருக்கு சிறிதேனும் ஆறுதலுக்காய்!
நிறுத்து!
உன் செயலை!
நிரந்தரமாய் நீயும்போய்
சேருவாய்! நரிகளுக்கு
இரையாவாயென்று
எச்சரித்து சிரித்தது
அதே குரல்!
குரலின் வீரியத்தை
குரங்கும் அறிந்திருக்கும் போலும்!
அலறியடித்தபடி கீச்சிடுகின்றன அவைகள்!
மருந்திடத்தான் போகிறேன்!
தடைச் செய்ய நீயாரென்று கேட்டுவிட்டு! அவசியமான மருந்தை
அனுவனுவாக கைகளில்
ஏந்தினேன்!
அசுர சக்தியுடனே!
அகிலம் அதிரும்
குரலில் அவனது
சிரிப்பு மீண்டும் தொடர்ந்தில் பச்சிகளே மிரண்டது!
சற்று சிரிப்பினை ஒதுக்கிவிட்டு ஓய்வுகூட தராமல் நான்யாரென்றா கேட்டாய்!
இதோ! இந்நிலவை
கிணற்றுத் தவளையாக்கி
முதியோரில்லத்தில்
முடங்கி கிடக்க வைத்த
முதல்வனாவேன்!
நானே இந்நிலவின் மூத்தப் புதல்வனாவேன்!
முடியட்டும் இந்நிலவின்
கதை!
மருந்திடாதே!
மரணம் உனைத் தழுவ
மார்பினில் எட்டுதைப்பேன்! சொல்லிட்டு சோர்விலாமால்
மீண்டும் சிரித்தது
அக்குரல்!
இனி பொறுமையே இழிவாகுமென்று!
வெகுண்டெழுந்த
என் குரலில் அவனுக்கோர் எச்சரிக்கை
விடுக்கப்பட்டது!
அடபாதகனே!
பாசத்தை அறிவாயா நீ!
பாலும் , தேனும் உனக்கூட்டி! பசியை தான்பெற்று!
படிக்கவைத்த பாமாலையை! பாவியெனச் சொல்லும்
உனையடைக்கி!
இந்நிலவுக்கு அபிஷேகம் அளிப்பேனென,,,,,
அடுத்த வார்த்தை வருமுன்னே! அழுத்திபிடித்தது அக்கைகள்!
அங்கம் அதிர்ந்துபோனேன்! அதிகாரம் இதுதானோ!
பகைவன் பிடிக்கும்
பாசப் பிடிக்கும்
பக்குவம் அறிந்ததால் அக்கை நடுக்கத்தை நானறிவேன்!
யாரது! யாரது! என்கைப்பிடித்தது யாரது!
அம்முழுநிலவு தானோ!
காற்றோடும், மழையோடும்,
கானக்குயிலோடும்,
பாசத்தை பற்றவைத்த
அம்முழுநிலவே தான்!
விம்மி அழுதபடியே!
கண்ணீரும் வற்றியபடியே! பாதிசொல் விழுங்கி மீதமிருந்த சொல்லை என்
செவிகளில் தெளிக்கிறாள்!
யாரெனத் தெரியாதவனே! என் வயிற்றில் பிறவா
என் மகனே! அவனும் என்மகன்! சபிக்காதே!!!
பத்து மாதம் சுமந்த வயிறு பதைபதைக்கிறது!
என்காலம் இறுதிகாலம்!
அவன் காலம் வாழுங்காலம்!
வலிகளையும் வசைச்சொல்லையும் அவன் தாங்கமாட்டான்!
அவனை பெற்ற இவ்வுடலுக்கும் அதைத்தாங்கும் சக்தியில்லை!
வளர்த்த மடியும்
சுமந்த இடுப்பும்
சுருக்கெனக் குத்துகிறது!
சபிக்காதே!!!
அவன் நிழலையாவது நிம்மதியாக பார்க்கவிடு!
கடைசி வார்த்தைகளில்
குரலொலி குழந்தையாகி
கெஞ்சியது!
கண்ணீரில் நனைந்தபடி! இருகரங்களை பற்றிக்கொண்டு! கரைபடிந்த சீழுடலின்
மீதே நானிருந்து!
திரும்பிப் பார்க்கையில்
திட்டிய நிழலைக்
கானவில்லை!
நிம்மதி இன்னமும் வரவில்லை!
அடுத்த பார்வை மருந்தின் மீது விழ! அவைகளும் கானவில்லை! அதிராதீர்கள்!!!
அன்பெனும் ஆன்மா
உயிரோடுதான் உள்ளது!
நிழலின்று நிஜமாகி
கரி பூசியிருந்த அப்பிள்ளையின் கரங்களில் தான் அம்மருந்துள்ளது!
பாசத்தின் பக்குவத்தை பார்த்தீரோ!
பாருக்குள் பாசங்கூட பாவமன்னிப்பளிக்கும்!
பணப்பேராசையினரே!
பெற்றவளை போற்றுங்கள்! பெற்றவளை
பேணுங்கள்!
இன்றைய மகன்
நாளைய தகப்பன்
நீயும் போகவேண்டுமா முதியோரில்லத்திற்கு! இது தொடரும் பூமியா! மூடுங்கள்
முதியோரில்லத்தை!
முழுமனிதம் இன்னும்
மரணித்துப் போகவில்லை!
முழு நிலவும் மரணத்தை எட்டிவிடவில்லை! பாசத்தால்,பக்குவத்தால், அன்பால்,
அரவணைப்பால்!
வாழும்,வாழவிடும்,
வாழவைக்கும்,
நம் மனிதம்! இதுவே இவ்வுலகின் புனிதம்!

பணப்பேயா பறத்தை!

எத்தனை மொழிகள்
அத்தனையும்
நானறிவேன்!
என் மொழி
போலிச் சினுகல்
மட்டுமே!
நவநாகரீக
டாட்டூக்களை
கண்டதும்
கோபமெனுக்கு!
எவனோ! எப்போதோ!
வைத்த சிகரெட்
சூடுகளை விடவா
அழகானது அவையென்று!
வீசிவிட்ட பணம்
தெருவீதிக்கு
வந்துவிட்டாலும்!
தேவாங்கு பார்வையுடனே
பார்ப்பார்கள்!
இது தாசியின்
பணமென
கல்லாப்பெட்டியும்
கண்ணடிக்கும்!
ஆடைகள் வாங்கவே
ஆடைகளை
களைந்தேன்!
அவசர அவசரமாய்
இறங்கிய அவனுறுப்பு
அனுபவித்ததில்
அத்துணை மனைவியரின்
வலைகளையும்
நானறிவேன்!
பணப்பேயா
பறத்தை!
பட்டிமன்றம்
வையுங்கள்
அவைத்தலைவனும்
அவ்வப்போது
விருந்துண்ண வந்ததுண்டு!
கடைசியாக
செவிசாயுங்கள்!
பசிதீர்க்க
உங்கள் முன்னே பறத்தையாக
நானிருக்க பள்ளிச் சிறுமிகளை பாழாக்காதீர்கள்!
பாவம் அவர்கள்
வளரும் விழுதுகள்!

சில கல்லறைகள்

வெட்கத்தில்
பனிதுளிகள்
பூக்களின்
அரும்பிதழ்
-முத்தம்

___

கல்லறைக்கு
வர்ணம்
பெயருக்கு
பின்னால்
-பிணங்கள்

___

ஒரே
அலங்கோல
காட்சி
அழுகையில்
அரசு
-மருத்துவமனை

___

கருவிழிதனை
காதலுக்கு
கொடுத்தாயோ
இப்படி
சிவந்துள்ளது
-முகம்

___

எத்தனை
வசைச்சொற்கள்
பிறந்தது
குற்றமா?
-பெண்

___

அடுப்படியில்
பூனை
துள்ளி குதித்தது
-டாஸ்மாக்

___

வாடாத
முகம்
வட்டமிடும்
கழுகுகள்
நிரந்தர இடம்
ஊரெல்லையில்
-கல்லறை

___

காதலும்
அறிவியலே
வாழ்க்கையில்
எத்தனை
-கண்டுபிடிப்பு

___

ஒரு
குறையுமில்லை
பிறந்தது
தன்னம்பிக்கை
மறந்தும் , மடிந்தும் போனது
-ஊனம்

___

வாசலில்
கோலம்
வீதியெங்கும்
திறந்த
-ஜன்னல்

___

Friday, November 28, 2014

ஹைக்கூ "பாலைவன நிலவு"

இறுதி முடிவு
முதல் சந்தித்த
இடத்திலே
தொடங்கிற்று!
இனி சுமப்பது
நினைவுகளைத்தானோ!

_____

தாகம்
தணிக்காத
இரவுகள்
நிலவின் மீதான
-கோபம்

_____

கைகளை
கழுவிய
உறவுகள்
பறவைகளை
நம்பியே
-தனிமரம்

_____

வெட்கத்தில் செங்காந்தள்
அழகை
ரசித்தது
கார்த்திகை
மாதம்

_____

அஞ்சலி செலுத்தும்
தேனீக்கள்
வரிசையாக
வாகனம் மோதிய
வண்ணத்துப்பூச்சிகள்

_____

என் மீதான
இரக்கத்தை
கைவிடு
கைநழுவியபின்
காதலை
நினைத்தே
வாழ்கிறேன்!

_____

உள்ளம்
உறங்கவில்லை
ஊரெல்லையில்
ஓலம்
நாய்கள் ஜாக்கிரதை

_____

அதோபார்
யோக்கியன்
ஆட்காட்டியது
விரல்
மறந்து போன
ஓரெழுத்து
"அ"

_____

ஹைக்கூ "மூன்று கோடுகள்"

"மூன்று கோடுகள்"


நடிக்க
தெரியாத
நாணல்
வலைந்து
கொடுக்கும்
-வாழ்வு
_____

புழுதியுடனே!
பறந்த
மண்
தேடியும்
கிட்டாத
விளைநிலம்
_____

பனிதுளிகளே
இரவோடு
ஆடுங்கள்
கண்திறந்தான்
கதிரவன்
_____

விடிந்ததும்
கானவில்லை
கணவன் ,
மனைவியரை
மூன்றாம்
கோட்டில் தனியே
-குழந்தை
_____

எல்லாம்
கண்துடைப்பு
நாடகமோ!
சாலையோர
-சந்திப்புகள்
______

வீதியெங்கும்
ஊமையான
மொழி
இனி எட்டாக்கனியா
நம்தமிழ்

_____

அதோ!
கடைசிக்
கல்லறையில்
காதல்
பிழைத்துக்
கொண்டது
-சாதிமதம்
_____

Thursday, November 27, 2014

ஹைக்கூ "நேற்றைய காற்று"

"நேற்றைய காற்று"


விடியும்
பூமி
எழமுடியாத
அதிகாலை
-உறக்கம்

_______


வீதியெங்கும்
அகல்விளக்கு
காலியான
கூடை
தீராத வறுமை

_______


தென்றலில்
தலைகோதும்
காற்று
காதல் இனி
வசப்பட்டுவிடும்

_______


நிராசைகளை
நீரில்
கழுவியது
நிலா
இனி எல்லா
இரவுகளுக்கும்
பரிசாகும்
வெள்ளி

______


பனிகளை
பாருங்கள்
படரும்
கொடிகள்
ஒட்டியானமாகும்

______


அவளின்
வருகையை
உணரவைத்த
காற்றிற்கு
நன்றி!

_______


மேடை முழுதும்
அலங்கார
விளக்குகள்
காற்றிற்கு
வேலையில்லை
ஏமாந்து போன
முகம்

_______



நாட்டிற்கும்
வீட்டிற்கும்
இயற்கை விட்ட வேண்டுகோள்
காற்றை
காதலியுங்கள்

______


நேற்று பார்த்த
விதை
இன்று முளைத்தது
உயிருக்கு
ஊன்றுகோலானது
நேற்றைய காற்று

______

Thursday, November 20, 2014

ஈழத்தலைவரின் படைச்சிறப்பு

ஈழத்தின் இணையில்லாச் சொந்தம் மேதகு தலைவர் பிரபாகரனின் 26 Nov
பிறந்தநாளை தமிழகம் இதுவரைக் கண்டிராத முறையில் கொண்டாடப்பட வேண்டும்.
அதன் மூலம் ஈழத்துரோகிகளை இணங்கான வேண்டும். இதோ! மேதகு தலைவர் அவர்களின்
மரபுவழிப் படைப்பிரிவுகளைத் தான் இங்கே நான் சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
விடுதலைப்புலிகளின்
மரபுவழி இராணுவக் கட்டமைப்புக்கள்

"தரைப்படைகள்"
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி

"கடற்படைகள்".
* நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை.

Monday, November 17, 2014

தண்ணீர் சிற்பங்கள்!

தண்ணீர் சிற்பங்கள்

நெடுஞ்சாலைக் கழுவி நெடுந்தூரப் பயணம்
ஏதோ! தடுக்கிறதே!
ஓ! அணைக்கட்டா!
குழந்தை வயிற்றில் உதைக்கும் உணர்வினை போல் நானுனை
உணர்ந்தேன்!
எங்கே?
நம் விளைநிலச் சொந்தங்கள்
ஒளித்து வைத்து விளையாடாதேயடி
கள்ளி!
திறந்து காட்டு
தீரட்டும் விவசாயப்பசி
அடடே!
கண்ணத்தில் முத்தமிடும் முகம் யாருடையது?
ஓ? மீன்குஞ்சுகளா!
பாசத்தில்
பாசாங்கில்லா
பாசப்பிறவிகள் நீங்கள்தானே!
துள்ளி குதிப்பதன் காரணமென்னவோ!
வானம்பாடி வாசலை நோக்கி வருவதைக் கண்டீரோ!
எங்கே?
நம் மீனவச் சொந்தங்கள் மடியில்
மறைக்காதேயடி கள்ளி! மாசற்ற நம்
உபசரிப்பில் உலகம் போற்றட்டும்! உழைப்பாளி உள்ளம்
குளிரட்டும்!
ஆகா!
இதுயென்ன?
எனை முழுதாய்
மூர்ச்சையடையச்
செய்யும் முழுயின்ப
உணர்வு!
யாரிவர்கள்?
ஓ!
காற்றும் அதனோடு கலந்தாடும் கடலுமா!
எனையே தனதாக்கிக் கொள்ள
வந்தீர்களோ!
இல்லை எனைக் குளிர்விக்க வந்தீர்களோ!
எங்கே?
நம் பூர்வக்குடி மக்களை
கூப்பிடுங்கள்! குதூகலத்தோடே தொடங்கட்டும்!
திருவிழாக் கொண்டாட்டங்கள்! நம்மிசைத் தாயினை அழையுங்கள்
தென்றலில் தேனொழுவட்டும்! தோல்விகள் யாவும் தூளாகட்டும்!
முழு நிலவு என்தோள்மீது
பவனி வருவதைக்
காணுங்கள்! கானக்குயில்களின் கரவோசையினால்
இவ்வுலகம்
கொஞ்சம் இமைதிறக்கட்டும்! இதிகாசங்களை புரட்டியெடுப்போம்!
பூலோக தேவதைகள்
நாம்தானே!
என்னநான் சொல்வது
சரிதானே !

Wednesday, November 05, 2014

ஹைக்கூ "இருகயிறு"

*தூரத்தில்
நிலவொளி
மங்கிற்று
திட்டியபடியே
மேகத்தை கடக்கிறது காதலிரவுகள்!*

__________

*பயத்தில் பதுங்கிய கிராமம்
எச்சரிக்கையா? ஊரெல்லையில்
-நாய்கள் ஓலம்*

__________

*பசி வயிற்றுக்கு
ஏது நிம்மதி!
பானையை திறந்தால் நீருக்கு பதிலாக கண்ணீரே
நிரம்புகிறது!*

__________

*வீசும் புயலுக்கு இரையான குடிசைகள் ஆங்காங்கே காத்திருக்கும்
ஆறடி நிலங்கள்*

__________

*விரக்தியில்
ஏழை
தற்கொலைக்கு தயாராகிறது
-பசும்பால்*

__________

*வெற்றிடத்து
சமையல்
காற்றும் காசானது உறையில்
-நொருக்குத்தீனி*

__________

*விசித்திர
ஆசை
விளம்பர அடிமை பலியான
பெண்கள்,
குழந்தைகள்*

__________

*மாட்டிற்கு
இருகயிறு
கழுத்தில்
தொங்கிய
-தாலி*

__________

Monday, November 03, 2014

சிறுமிகளைச் சீரழிக்காதீர்கள்!

சமீப காலங்களில் இந்திய தேசியத்தில்
அதிகப்படியான
வண்முறைகளுக்கு உட்படுத்தப்படும்
சிறுவர்சிறுமிகளை இச்சமூகம்
கண்டுகொள்ளவே இல்லை ஆங்காங்கே ஆசிரியர்களின்
அத்துமீறல் "குடி"மகன்களின்
வெறியாட்டமென சிறுவர்சிறுமிகள்
அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்
அடிக்கடி இச்சமூகம்
அழிவை நோக்கியே பயணிக்கிறது என்பதை இதன்
மூலம் தெரிந்துகொள்ளப்படுகிறது
நம் பண்பாட்டு நெறியடிப்படையில்
"மாதா,பிதா,குரு,தெய்வம்"
எனச்சொல்வதுண்டு
அம்மை அப்பனுக்கு அடுத்தப்படியாக ஆசானும்
அதன் பிறகே தெய்வம் என
போதிக்கப்படுகிறது அந்த அளவிற்கு ஆசான்கள்
போற்றப்படுகிறார்கள் அவ்வாறு போற்றப்படும்
ஆசான்கள் இன்றையச்சூழலில் எவ்விதமான
குற்றநடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என
நம்கண் முன்னே நடக்கும் பல
சீர்கேட்டு நடவடிக்கைகளை பார்க்கின்றபோது பெற்றோர்கள்
சிறுவர்
சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சப்படுகிறார்கள்
எங்கே தம்பிள்ளைகள்
சீரழிந்து விடுவார்களோ அல்லது அர்த்தமற்ற
அறிவை பெற்று அழிந்து போவார்களோ என்று தினந்தினம்
வயிற்றில்
நெருப்புகட்டிக்கொண்டு மனதிற்குள்ளே அழுகிறார்கள்
முழுக்க முழுக்க இதில் சீரழிந்து போகும் சிறுமிகளின்
வாழ்க்கை இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது அதற்கான
தீர்வுகள் என்ன எம்மாதிரியான
நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் அரசின்
பங்கு என்ன போன்ற எத்தீர்வுகளையும்
அலசி ஆராய முடியாத
அடித்தட்டு நிலையைதான் நாம் பெறுகிறோம்
இதுபற்றி பேசகூட
கூச்சப்பட்டு நாவிழந்து மவுனித்து நிற்கிறோம்.
தன் பிள்ளைகளின்
சீரழிவிற்கு காரணமானவர்களை எதிர்க்க
முடியாத நிலமையும் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட
அக்கொடுமைகளுக்கு எவ்வாறு ஆறுதல்
கூறுவதென்று கூட தெரியாமல்
விழிப்பிதுங்கி கண்ணீரோடு பல பெற்றோர்கள்
இங்கு வாழ்வினை தொலைத்து நிற்கிறார்கள்
சில சம்பவங்கள் ஊடகபார்வைக்கு வந்தாலும்
பல சம்பவங்கள்
வெளிச்சத்திற்கு வராமல்
பள்ளி நிர்வாகத்தாலும் அரசின்
ஆளுமையாலும் பணபலத்தாலும் மூடிமறைத்துக்
கொண்டிருக்கிறது ஆங்காங்கே நடக்கும்
சிறுமிகள் மீதான பாலியல்
வண்புணர்வு கொடுமைகள் அதனால்
பாதிக்கப்பட்ட சிறுமிகளின்
வாழ்வுகளுக்கு முக்கிய காரணம் இச்சமூகமும்
இச்சமூகம் சார்ந்த சூழலே காரணமாக
அமைகின்றது.
பொதுவாகவே இங்கே தகுதியான
ஆசிரியர்களை தனியார் மற்றும்
அரசு கல்வி நிறுவனங்கள்
நியமிக்கின்றனவா என்ற ஐயம்
ஏற்படுகிறது ஏனெனில்
ஆசிரியர்களை உறுவாக்கும்
கல்வி நிறுவனங்களே பணத்திற்கா இயங்கிகொண்டிருக்கிறது இங்கே அவ்வாறு அதிகாரத்தின்
பேராலும் பணத்தின் பேராலும் உறுவாகிய
ஆசிரியர்கள்
வருங்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும்
சிறுவர்களிடம் இப்படிக் கீழ்த்தரமான
செயல்களை கட்டவிழ்த்து விடுகிறது
இந்திய தேசியத்தில் மாதத்திற்கு 1020
மாணவிகள் 860 மாணவர்கள் பாலியல்
கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்
என்ற ஆய்வறிக்கை நம்மை கதிகலங்கச்
செய்கிறது இது வெளிச்சத்திற்கு வரும்
கொடுமைகள் மட்டுமே இன்னும்
மறைந்திருக்கும் கொடுமைகள்
எண்ணிலங்கா நிகழ்ந்துகொண்டுத்தான்
இருக்கிறது . சமீபத்தில் சேலத்தில் நடந்த
பள்ளிச்சிறுமி பாலியல் குற்றத்தில் பிடிபட்ட
ஆசிரியனின் வாக்குமூலம்
அதிரவைக்கிறது "வீட்டு அக்கம்பக்கத்துலேயும்
நெறைய பேரை இப்படி செஞ்சிருக்கேன்"
என்று வாக்குமூலம் அளிக்கிறான் அந்த
கயவன் . ஏற்கனவே இங்கே கல்வியில்
பின்தங்கியுள்ள இச்சூழலில் இம்மாதிரியான
குற்றங்கள் சமூகத்தை நரகத்தில் தள்ளும் வேலையில்
ஈடுபடுகிறது
கல்வி நிர்வாகங்களின் கவனத்திற்கு:
பணத்தாசையாலும் படையை திரட்டவேண்டியும்
எத்தகுதியுமில்லாத
ஆசிரியர்களை நியமிப்பதை அரசும் தனியார்
கல்வி நிறுவனங்களும்
நிறுத்திக்கொள்வது நல்லது
நியமிக்கப்படும் ஆசிரியர்கள்
மீது இரு நிர்வாகமும் அவர்கள் மீது ஏதேனும்
குற்றவழக்குகள் இருக்கின்றனவா அவர்களின்
நடவடிக்கைகள் என்ன அவர்கள் ஏதேனும் குற்ற
நடவடிக்கைகளில்
ஈடுபடுகிறார்களா நன்னடத்தை குறித்து அவர்களின்
பகுதிமக்கள் மனநிலையென்ன நிரந்தர
குடியிருப்பா அல்லது தற்காலிக
குடியிருப்பா முகவரின் தெளிவு என்ன
போன்ற விவரங்களை சேகரிப்பது நல்லது
ஒவ்வொரு பள்ளிச் சிறுவர் சிறுமிகளிடம்
அவ்வாசிரியர்களின் நன்னடத்தை குறித்து வினவ
வேண்டும் தினந்தினம் நிர்வாகம்
ஆசிரியர்களை கண்கானித்து அதற்கான ஓர்
அறிக்கையினும் தயாரித்தல் நல்லது .
மாதம் இருமுறை மாணர்கள்களிடமும்
ஆசிரியர்களிடமும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட
வேண்டும்
மாணவிகளுக்கு குட்டைப்பாவாடை,
வெள்ளைச்சீருடை அணிவிப்பதை முற்றிலுமாக
தவிர்கப்பட நடவடிக்கை எடுப்பது நல்லது
மற்றவர்களின் சிபாரிசுகள் மூலம்
ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதை விட
தனக்கேயான உரிமையின் பால் நிர்வாகம்
நேர்கானல் மூலம் ஆசிரியர்களை நியமித்தல்
நல்லது
இதை விட முக்கியமானது என்னவெனில்
தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள்
ஆங்காங்கே கூலிப்படைகள் மற்றும்
குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களிடம்
தொடர்பு கொண்டுள்ளதென
வெட்டவெளிச்சமாக
தெரிகின்றது இதற்கு காரணம்
தெரிந்தோ தெரியாமல் தன்னுடைய
கல்வி நிறுவனத்தில் நடந்தேறிய பாலியல்
குற்றத்திற்காக ஆசிரியரை காப்பாற்றும்
நோக்கிலும் கல்வி நிறுவனத்தின் பெயர்
மற்றும் மதிப்பு பாதிக்கப்படும் என்ற
சுயநலத்தினாலும்
அக்குற்றச்செயலை தொடக்கத்திலே மூடி மறைக்கவும்
வெளிவந்துவிட்ட பிறகு பாதிக்கப்பட்ட
பெற்றோர்களை மிரட்டி அடிபணிய வைக்கவும்
மேற்சென்ன
அடியாட்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது இது முற்றிலுமாக
தவிர்க்கப்பட வேண்டியது மற்றும்
கண்டிக்கத்தக்கது இச்செயலில்
நிர்வாகம் அதன் செயல்திறணை காட்ட
கடமைபட்டுள்ளது . மாணவிகள் யார்
மீதோ புகார் தெரிவித்தாலோ அல்லது குற்றம்
சுமத்தினாலோ அதனை கல்விநிர்வாகம்
விசாரணைசெய்து தக்க நடவடிக்கை எடுத்தல்
வேண்டும் (மாணவிகள் மீதான பாலியல்
சீண்டல்கள் பெரும்பாலும்
பள்ளி வகுப்பறையில் தான் நிகழ்கிறது )
தினந்தினம் ஒவ்வொரு வகுப்பாகச்
சென்று ஆசிரியர்களின் நடவடிக்கைகள்
மற்றும் கல்வி போதிக்கும் முறையை நிர்வாகம்
கண்கானிப்பது நல்லது
பெற்றோர்களின் கவனத்திற்கு:
முதலில் மாணவமாணவிகள்
மீது பெற்றோர்கள் முழுநம்பிக்கை வைத்திட
வேண்டும்
மாணவமாணவிகளின் நடவடிக்கைகள்
அவர்களின் செயல்கள் இதற்கு முன்
நடந்து கொண்டவிதம்
தற்போது நடந்துகொள்ளும் விதம்
ஆகியவற்றை உண்ணிப்பாக
கவனிப்பது பெற்றோர்களின் கடமை
பெற்றோர்கள் அதிகப்படியான
சுமைகளை பிள்ளைகளிடம் திணிக்க
முற்படாமலிருப்பது நல்லது
அவ்வப்போது கல்விநிர்வாகத்துடன்
தொடர்பு கொண்டிருப்பது பெற்றோர்கள்
கடமை
மாணவமாணவிகளின் உடல் ரீதியான
பருவமாற்றத்தினை அறிந்து அதற்கேற்றார் போல்
மாணவிகளுக்குத் தேவையான
கட்டமைப்பினை செய்திடல் வேண்டும்
ஏனெனின் மேற்சொன்ன
குட்டைப்பாவாடை வெள்ளைச்சீருடையின்
தவிர்ப்பிக்கான
காரணங்களை பெற்றோர்கள் அறிந்திடல்
வேண்டும் சென்ற காலங்களில்
ஒரு பெண் பருவம் எய்திடுவதற்கான
வயது அதிகப்படியாக இருந்தது அதன்
காரணம் அன்றைய உணவுப்பொருள்
உட்கொள்ளும் முறை மற்றும் அதற்கேற்ற
காலங்கள் அமைந்தன ஆனால்
இன்று ஒரு பெண் பருவம்
எய்திடுவதற்கான
வயது மிகக்குறைந்துள்ளது தற்போது 10,11,வயதியலேயே பெண்
பருவமடைந்துவிடுகிறாள் இதற்கு இன்றைய
உணவுமுறையும் காலச்சூழலும் காரணமாக
அமைகின்றது நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்வுமுறை மாறி ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்வுமுறையாக மாறிவிட்ட சூழலின்
காரணமாக உணவினையும் நாம்
கவனிக்காமல் விட்டதன் அதிர்ச்சிக்கான
விளைவுதான் இது ஆகவே பெற்றோர்கள்
பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் கவனமாக
செயல்பட வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறார்கள்.
நிர்வாகத்தின் செயல்திறண்
ஆசிரியர்களின் குணநலன்
ஆகியவற்றை அவ்வப்போது பெற்றோர்கள்
விசாரித்து தெரிந்துகொள்ள
வேண்டும்.
குற்றம் நடப்பதற்கான
அறிகுறிகளோ அல்லது குற்றம்
நடந்துவிட்டாலோ பெற்றோர்கள் உடனடியாக
கல்வி நிருவனத்திடமும் காவல்துறையிடமும்
தமது புகாரை பதிவு செய்திட வேண்டும் .
அரசு மற்றும் சமூகத்தின் கவனத்திற்கு :
அரசானது ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும்
ஆராயவும் அறிக்கை சமர்பிக்கவும்
நியமிக்கப்பட்டுள்ள அக்கல்வித்துறைக்கான
அமைச்சகம் முதல் கல்வித்துறை அலுவலகம்
வரையில் தன்பணியினை துரிதமாக முடுக்கிவிட
வேண்டும் சமூகத்தினரிடம்
அரசு தனிமைபட்டிருப்பதை தவிர்த்துக்
கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு தக்க
உதவிகளை செய்திட வேண்டும் அதே போல்
ஆசிரியர்களை தண்டிக்கும் கடுமையான
சட்டங்களையும் இயற்றுதல் வேண்டும்
ஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளை துரிதமாக
முடித்து நீதியை நிலைநாட்டும்
கடமையினை அரசானது செய்திடல் வேண்டும்.
சமூகத்தினர் மக்களிடையே விழிப்புணர்வுச்
செய்திடல் வேண்டும்
ஆங்காங்கே மறைக்கப்பட்டுள்ள பாலியல்
குற்றங்களை வெளிக்கொணரும்
நடவடிக்கைகளை செய்திடல் வேண்டும் .
ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும்
(அரசுக்கல்வி உட்பட)
அரசானது வாரமொருமுறை ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்ட
வேண்டும் .அந்நிறுவனங்களில்
குற்றச்செயல் நிறுபிக்கப்பட்டால்
நிறுவனத்தின் மீது கடுமையான
நடவடிக்கை எடுத்தல் வேண்டும் .
அங்கீகாரமில்லாமல் அல்லது பணத்தால்
ஆங்கீகாரம் பெற்ற
கல்விநிறுவனங்களையும் ,ஆசிரியர்களை உறுவாக்கும்
அவ்வாறான கல்விநிறுவனங்களையும்
கண்டறிந்து கடுமையான தண்டனைகளை பிறப்பிக்க
வேண்டும்
சமூகமும் இதற்கான நடவடிக்கைகளில் அரசுடன்
இணைந்து செயல்படவேண்டும். பாலியல்
ரீதியான குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின்
பட்டங்கள் பறிக்கப்பட வேண்டும் மேலும் அவர்கள்
வேறெந்த கல்விநிறுவனத்திலும்
பணியாற்றா வண்ணம் தடைசெய்யப்பட
வேண்டும். இன்னும் பாலியல்
குற்றங்களுக்கெதிரான
அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசும்
சமூகமும் மேற்கொள்ள வேண்டும்.
இந்நாட்டின் அடுத்த தூண்களாக விளங்கும்
சிறுமிகள் படும் கஷ்டநஷ்டங்களில் நமக்கும்
பங்குண்டு எதன் அடிப்படையில் நாம் கல்வியில்
பின்தங்கியுள்ளோமோ
அச்சூழலுக்கெதிரான நடவடிக்கைகளை நாம்
செயல்படுத்தியே ஆக வேண்டும்
ஒவ்வொரு விதைகளும் விருச்சங்களாகும்
என்பது போது இச்சமூகத்திற்காக நாம் விடும்
வியர்வை தான் நம்வருங்கால
வாழ்வியலை படைக்கத் தேவைப்படுகிறது. பாலியல்
வண்கொடுமைகளை தகர்த்தெறிவது நம்
தேவையாக இருக்கிறது . இனியும்
இறைவனுக்கு நிகராக மதித்து போற்றப்படும்
ஆசிரியர்கள் செவிசாய்த்து கேளுங்கள்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு உங்கள்
வாழ்வினையும் தொலைத்து சிறுமிகளின்
வாழ்வையும் சீரழித்து அவர்களின்
பெற்றோர்களையும் அழவைத்துப்
பார்க்காதீர்கள்.உலகம் போற்றும் உயர்ந்த
இடத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்
இப்படி கீழ்த்தரமானச் செயலில்
ஈடுபட்டு உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்க­­
ள்.

Sunday, November 02, 2014

ஆற்று மணலின் வேண்டுகோள்!

நதிகளைத் தேடி
கடல் அலையும்
காலமிது
கானாமல் போனதேன்?
"விளைநிலங்கள்"
செய்நன்றி சேற்றுப்புழுதியிலே
சிக்கித் தவிப்பதுவோ!
புதையுண்டு கிடக்கிறது
நம் சீவ ரகசியம்!
பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிரியாமல் கைகோர்க்கும்
கயவர்கள் இவர்கள் தானோ!
உயரத்திலேற்றி
ஊஞ்சலாடிய
மணலோ!
உருகுலைந்து
கண்ணீரை அத்தார்ச்சாலையில்
தெளித்தபடியே!
ஒப்பாரி வைக்கிறது ஆற்றுமணல்!
காதும் செவிடா?
கண்ணும் குருடா?
கடைசியாக
கையெடுத்து வேண்டுகோள் வைக்கிறது மணல்! கொஞ்சம் திரும்பியாவது
பாருங்கள்!
திருத்தங்கள்
நடைபெறட்டும்!
நம் ஆற்றுமணலின் வேண்டுகோள்
இதுவே!
கடத்தாதீர்கள்
பயிர்வளம் அழுகிறது!
அள்ளி ஏற்றாதீர்கள் அழகியச் சோலை
அவமானப்படுகிறது!
விற்காதீர்கள்
விவசாயி விம்மியழுகிறான்!
சலிக்காதீர்கள்
சவக்குழி எலும்புகள் எழுகிறது!
எங்களை ஆற்றோடே சேமியுங்கள்! கரையுடையும்போது
கரம்கொடுக்கின்றோம்!
வண்டலாகிய நான்
வாடலாமா!
விட்டுவிடுங்கள்! மனசாட்சியுடனே
மன்னனையும்
மதிப்போம் நாங்கள்
விட்டுவிடுங்கள்!
கையெடுத்து வணங்க கரமில்லை எங்களுக்கு!
ஆனால்!
கவிழாமல் சேர்ந்தணைக்கும்
(அக்)கரையுண்டு!
விட்டுவிடுங்கள்!
எங்களை
விட்டுவிடுங்கள்!

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...