Friday, November 28, 2014

ஹைக்கூ "பாலைவன நிலவு"

இறுதி முடிவு
முதல் சந்தித்த
இடத்திலே
தொடங்கிற்று!
இனி சுமப்பது
நினைவுகளைத்தானோ!

_____

தாகம்
தணிக்காத
இரவுகள்
நிலவின் மீதான
-கோபம்

_____

கைகளை
கழுவிய
உறவுகள்
பறவைகளை
நம்பியே
-தனிமரம்

_____

வெட்கத்தில் செங்காந்தள்
அழகை
ரசித்தது
கார்த்திகை
மாதம்

_____

அஞ்சலி செலுத்தும்
தேனீக்கள்
வரிசையாக
வாகனம் மோதிய
வண்ணத்துப்பூச்சிகள்

_____

என் மீதான
இரக்கத்தை
கைவிடு
கைநழுவியபின்
காதலை
நினைத்தே
வாழ்கிறேன்!

_____

உள்ளம்
உறங்கவில்லை
ஊரெல்லையில்
ஓலம்
நாய்கள் ஜாக்கிரதை

_____

அதோபார்
யோக்கியன்
ஆட்காட்டியது
விரல்
மறந்து போன
ஓரெழுத்து
"அ"

_____

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...