Sunday, November 30, 2014

சில கல்லறைகள்

வெட்கத்தில்
பனிதுளிகள்
பூக்களின்
அரும்பிதழ்
-முத்தம்

___

கல்லறைக்கு
வர்ணம்
பெயருக்கு
பின்னால்
-பிணங்கள்

___

ஒரே
அலங்கோல
காட்சி
அழுகையில்
அரசு
-மருத்துவமனை

___

கருவிழிதனை
காதலுக்கு
கொடுத்தாயோ
இப்படி
சிவந்துள்ளது
-முகம்

___

எத்தனை
வசைச்சொற்கள்
பிறந்தது
குற்றமா?
-பெண்

___

அடுப்படியில்
பூனை
துள்ளி குதித்தது
-டாஸ்மாக்

___

வாடாத
முகம்
வட்டமிடும்
கழுகுகள்
நிரந்தர இடம்
ஊரெல்லையில்
-கல்லறை

___

காதலும்
அறிவியலே
வாழ்க்கையில்
எத்தனை
-கண்டுபிடிப்பு

___

ஒரு
குறையுமில்லை
பிறந்தது
தன்னம்பிக்கை
மறந்தும் , மடிந்தும் போனது
-ஊனம்

___

வாசலில்
கோலம்
வீதியெங்கும்
திறந்த
-ஜன்னல்

___

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...