Friday, December 12, 2014

மின்கட்டண உயர்வு 15%

தமிழகம் ஏற்கனேவே பல இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கிறது எந்த
ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் மக்களின் நலனில் அக்கரை
செலுத்துவது போல் நாடகமாடுகிறார்களே தவிர முழுபங்களிப்பினை தருகிறார்களா?
என்று கேட்டால் முற்றிலுமாக இல்லையென்றே பதில் வரும் அனைத்து தென்னிந்திய
மாநிலங்களுக்கும் நம் மாநிலத்திலிருந்தெ மின்சாரம் அளிக்கப்படுகிறது .
காற்றாலையாகட்டும் நெய்வேலி கல்பாக்கமாகட்டும் சென்னை யாகட்டும் இவை
அனைத்துமே நம் தேவைகளுக்காக இயக்கப்படுகின்றதா? என்ற கேள்வி நம்மிடையே
எழுகிறது கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இரு ஆட்சியாளர்களையும் கண்ட தமிழகம்
ஏன் மின்சாரத்தின் மீதான பொதுவிநியோகத்தில் தாமதமும் கட்டணத்திணிப்பும்
மக்கள் மீது சுமத்துகிறது என்பதை சிந்திக்க மக்களும் முன்வரவேண்டும்.
ஏற்கனவே மின்துறையை தனியாருக்கு விற்க ஆலோசனைகளும் மும்முயற்சியும்
நடைபெறுகிறது. இது போதாதென்று ஆளும் அரசு படிப்படியாக கட்டண உயர்வையும்
மக்கள் மீது திணிக்கிறது இன்றையச் சூழலில் மின்இணைப்பு இல்லையெனில்
மக்களின் வாழ்வென்பதே கேள்விக்குறியாகும் சூழலை நாம் பெற்றுள்ளோம். இதனை
பயன்படுத்தி மின்சாரத்துறை நட்டத்தில் இயங்குகிறதென காரணம் காட்டி ஆளும்
அரசு மின்வினியோகத்தை தடை செய்தும் மின்கட்டணத்தை உயர்த்தியும்
தனியாருக்கு மின்துறை செல்வது நல்லது என்ற அபிப்ராயத்தை மக்கள் மீது
உண்டாக்குகிறது.இதை விட இது நல்லதென்ன யுக்தி இது. தற்போது 15%
மின்கட்டண உயர்வு அறிவிப்பென்பது மிகவும் அபாயகரமானது ஏற்கனவே
தமிழகத்தில் தொழிற்துறை நலிவடைந்த சூழலும் அனைத்து அடிப்படை தேவைகளும்
அளவுக்கு மீறியதான விலையேற்றத்தாலும் தன் வருமானத்தில் சேமிப்பு என்பதே
இல்லாத சூழலில் தான் மக்கள் வாழ்கின்றனர். இவ்வாரிருக்க திடீரென்று 15%
மின் கட்டண உயர்வெனும் அறிவிப்பு மக்களை பாதிக்கும் என்பதை ஆளும் அரசு
கவனத்தில் கொள்வில்லை இது இவ்வரசின் அக்கரையின்மையையே
காட்டுகிறது. மேலும் பொதுவானதாக ஆளும் அரசு தன் மின்கட்டண உயர்வினை
நியாயப்படுத்த மற்ற மாநிலங்களை ஒப்படுகிறது அவ்வாறு ஒப்பிடும் ஆளும் அரசு
அம்மாநில வளர்ச்சி திட்டங்களுக்கும் தன்னாட்சி திட்டங்களுடன் ஒப்பிட ஏன்
தயங்குகிறது . ஏற்கனவே பல்வேறு சூழலில் கஷ்டப்படும் மக்கள் நிச்சயம்
இம்மின்கட்டண உயர்வில் மிகுந்த பரிதாபத்திற்குள்ளாகு­ம் நிலையில்
தள்ளப்படுவார்கள். ஆளும் அரசு இதனை கவணத்தில் கொண்டு மின்கட்டண உயர்வை
திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் ஆளும் அரசிற்கு எதிராக அவை
போராட்டமாக வெடிக்கும் சூழலை சந்திக்க நேரிடும். தமிழக ஆளும் அரசு
முனைப்புடன் இம்மின்கட்டண உயர்வுக்கு தக்க தீர்வினை தேடுவதை தவிர வேறு
வழியில்லை.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...