Friday, December 05, 2014

கார்த்திகை தீபத்திருநாள்

இனியவள்
பௌர்ணமி
நிலவு அவள்!
நிதர்சனமாய்
பூமிதனை
எட்டிப்பார்த்தாள்!
என்ன வியப்பு!!!
இரவு பகலானதா?
தடம்மாறி, தடுமாறி வந்தோமோ தத்தளிக்கிறதே மனது!
ஜோதியில் சோகத்தை
புதைக்கிறதே
இப்பூமி!
ஆழ்ந்து சிந்தித்தாள்!
திங்களவனை
கூப்பிட்டாள்! சிரித்தபடியே
சிந்தனையினை
சிதறடித்தான்
திங்களவன்!
அடியே!!!
என்னுள்
எழிலாகி
சுடரொளி பாதி
சுமப்பவளே!
இன்று,
தீபமடி
திருவிளக்கு
திகட்டாதடி
கார்த்திகை தீபமடி!
கானக்குயில் கனவுகளின்
காட்சிதனை
கானுதடி!
கண்கொண்டு
பாராயோ
தீபத்தினழகை!
பிம்பத்தை
உடைத்து
வா!
பூமித்தாய்
நமையழைக்கிறாள்!
சுடர்விடும்
இல்லங்களில்
இறங்கிவிடு!
தீபத்தாய் வயிற்றில்
கலந்துவிடு!
நீயும் , நானும்
ஒன்றினைவோம்!
தீபவொளியில்
துயில் கொள்வோம்!
தீச்சுடரேந்தி
தீமைகளை
விரட்டிடும்
பொன்மகள்
அதோ!!!
பூமிக்கு விருந்து படைக்கிறாள்!
அவள்!!!
கார்த்திகை மலரை
காதலுக்கு பரிசளிக்கிறாள்!
தீபத்திருநாளில்
நாமினைவது தானே
முறை!
கோலங்களில்
குளித்தாடுவது தானே முறை!
வா!! நிலவே வா!!
நாமும்
தீபங்களில்
திருவிளையாடலாம்!
வா!! நிலவே வா!!
நாமும்
தீபங்களில் திருவிளையாடலாம்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...