Sunday, December 07, 2014

மறந்து விடு!

கனவுகளில்
நீயிருந்தால்!
என் காட்சிகளும்
பிழையாகும்!
கண்மணியே
கலைந்துவிடு!
இக்காதலனை
மறந்து விடு!
தீவிழுந்த பூமிதனில்
புழுவாகி துடிக்கிறதென்
மனது!
கண்மணியே கலைந்துவிடு!
இக்காதலனை
மறந்துவிடு!
கானும் வனமெல்லாம்
கால்பதிந்தோம்
என்றுமே சுமையானதில்லை
சுற்றுலா பறவைபோலே
சுதந்திர காற்றின் சுகத்தினையும் நாமடைந்தோம்! கடற்கரை மணல்
நம்மை சுட்டதில்லை!
கடலலை காதலை போற்றிற்று!
அதன் காதல் கதையையும் நாம் கேட்டதில்லை!
வசந்த காலத்தில் அளவிட முடியா அக்காதலின் எல்லையில்
அவ்வப்போது பெருக்கெடுத்த அருவியை போலவே
நம் சின்னஞ்சிறு
கோபம்
வினாடிகளில்
வீண்போன
என்னிளமைக்
கோலம்!
இனிமையும் ,
இம்சையும்
சேர்ந்தே அணைக்கும்
சேராமல் விட்டது
நம் அவசரக்காலம்!
விடுதலை
கேட்டாயோ
என் விரல்நகம்
நசுங்குதடி!
அடுத்தக்கட்ட
வாழ்வுனை
அழைக்கிறது அவனிடமும் அவசரப்படாதே! அழகியல்
அமைதியினை
என்றுமே இழந்து விடாதே! அவன்
கைதொடும் போது கனவிலும் எனை
நினைக்காதே! இனியுனக்கு
கணவனும் அவனே! அழகுக் காதலனும் அவனே!
கண்மணியே கலைந்துவிடு!
இக்காதலனை
மறந்துவிடு!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...