Monday, December 08, 2014

தற்கொலை தீர்வாகுமா?

அச்சத்தில் அகிலமே இருளாகி!
அணையா கோபத்தில்
விழிப்பிதுங்கி!
நீ எடுத்த முடிவாலே உன்கூடு சவக் குழியில்!
வீதியிலே நின்ற பிள்ளை
விதி அறியுமா!
விளையும் போதே அப்பிஞ்சு முகம்
புதைகுழியின் பூட்டறியுமா!
கண்ணீரில் கரைந்தோடும்
இளம்பிஞ்சின் எதிர்காலம் என்னவாகுமோ!
ஐயகோ!!!
குடும்பபெயர்
இனி இல்லை
இச்சமூகம்
கூப்பிடுமே
அப்பிள்ளை
அனாதையென்று!
பிச்சைக்கு
கையேந்திப் போனாலும் கைபிடித்து
இழுக்குமே!
பசியுடலில்
கீரலுடனே பல சீண்டலும் இங்கே
நடக்குமே!
நீ வரைந்த ஓவியும்
கிழிந்து கிடக்கும் விதியிலே!
அரளி விதை
அரைத்த
அம்மி கூட
அடிவாங்கி தான் அவ்வடிவம்
பெற்றதென!
உளிபட்ட
பாறை கூட
உனை பார்த்து நகைக்குதடா!
தற்கொலைக்கு
நீ! எடுக்கும் ஆயுதமெல்லாம்
ஆயிரம் வலிகளை பொறுத்துதான்
பூமியில் முளைக்குடா!
எடுக்காதே
எவ்முடிவும்
விபரீதமாகுடா!
உன்னுயிரை கொல்ல! உனக்கு உரிமை இல்லையடா!
வாழ்வுக்கு தற்கொலை தான்
தீர்வாகுமா? வந்துபார்
இங்கனைவரும்
வலிகளை கடந்தவர்கள்
இனி
வாழ்ந்து விடடா!
மனிதா,,,
இனி
வாழ்ந்து விடடா!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...