Wednesday, December 03, 2014

"காதலில் கண்கள்"

நீண்ட!!! பொழுதுகளில்
தனிமையில் தத்தளிக்க!
வலுக்கிறது அச்சந்தேகம்!
அரிச்சந்திரன்
அவனது அழகான மனைவியை
கண்டதும்!
காதல் ரசத்தை பொழிவானே! கவிதையை கட்டவிழ்த்து விடுவானே!
இங்கே!
முளைக்கிறதென்
முதன்மைச்
சந்தேகம்!
காதல் காவியத்தில்
காட்டாத
அவன்காதலால்! கண்ணயர்ந்து தூங்கினாலும் கனவிலெழும் அச்சந்தேகம்!
எதுவென்றா கேட்கிறீர்கள்?
எடுத்துச்
சொல்கிறேன்
குறிப்பெடுங்கள்
காதலர்களே!
பொய்யுரைக்க மாட்டானாம் அரிச்சந்திரன்!
அப்படியிருக்க,,,,,
அழகான
மனைவியை
அள்ளியெடுத்து
அரவணைக்க!
அவசியமான
காதலை
கவிதையாய் அவன்புனைய!
அடுத்த நொடியே மலர்ந்திடுமே
அழகான
அப்பொய்கள்!!
'கவிதை என்பதே பொய்ப்
புனைவென்பது'
கவிஞர்கள் கூற்றாயிற்றே!
என் சந்தேகம்
தீர வழி தேடியே!
அமைதியாய் அமர்ந்திருந்து ஆழ்கடலை பார்ந்திருந்தேன்! அருகினில்
அவள் வந்தமர்ந்து!
சிமிட்டாத கண்களுக்கு
சிகரம் போலே சிந்தனையோ! காரணமிதுவென கண்ணா
நீயுரைப்பாயோ?
என்றாள்,,,
கொஞ்சும் தமிழ்
குயிலுக்கும் பொறாமையன்றோ!
கண்சிமிட்டாமல் கண்மணியவளை
காதல் நயத்துடனே பார்த்தேன்!
கண்ணுள்
விளையாடும் கருவிழியில்
நான் தெரிய!
அதனுள் பாய்ந்து அவளிதயத்தை அடைந்தேன்!
அடடா!!!
அடுத்த நொடி
விடை கண்டேனே!
'கண்'
தானா காரணமென்று! காதலியவள் காட்டினாளே!
ஆம்!!! ஆம்!!!
உண்மைதனை உணர்ந்தேன்!
அரிச்சந்திரன் பொய்புனைய
எங்கேயும் வழியில்லை! கருவிழிதான் அதனெல்லை!
காதல் மனைவியை கண்டதும் கண்ணினை கண்டிருப்பான்! கருவிழிக்குள் அவனிருந்திருப்பான்!
அவன் கண்ணில்
அவள் தெரிய!
அவள் கண்ணில்
அவன் தெரிய!
இரு மெய்யுடலும் ஒன்றிணைய!
ஒவ்வாத
பொய்யெப்படி
அவன் கவியில் ஒழுகியிருக்கும்!
உண்மைக் காதலில் உணர்ந்த பொருள் இதுதானோ!
காதல் உலக மொழியென்பதும் மெய்தானோ!
காதலர்களே!!! கேளுங்கள்!
இரு மனதும்
இணைந்து விட்டால் ஈருடலும்
மெய்யாகும்! மெய்க்காதல் அறிய கண்களை
நோக்குங்கள்!
கருவிழிகளில்
காதல்
வாழட்டும்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...