Monday, December 15, 2014

தேவை அதுதானோ!

நடனமாடும்
இளம்பொழுதில்
நாவிசைப்
பார்வை விதைத்தவள்
நீயோ!
நதியாடும் நாணலிங்கே
நகைப்பது ஏனோ!
வெள்ளித் தாரகை
விளக்கேந்தி
விழுந்து கிடக்கிறது
இங்கே!
உன் பாதம் தழுவ
அதற்கோர் தயவு
தந்திடுவாயோ!
தொகை விரித்தாடும்
தோழமைத் தேடிநாடும்
வண்ண மயில்தனை
வாழ்த்திட வழிவிடுவாயோ!
வான் விடியலுக்கு
வாழ்வுதனை
சேர்த்திடுவாயோ!
எங்கே அழகென்று?
ஏக்கமாய் எட்டிபார்க்கும்
மலரை மடியில்
சுமந்தாயோ!
மலர்மேயும் வண்டானேன்
தேனை சுவைத்திட,
தேரில் அமர்ந்திட
தேவியே அனுமதி
தாராயோ!
இந்த தேவன் உனை
மணக்க தேவையே
அதுதானோ!
சொல்லொன்றும்
புதிதல்ல!
சுமைதானே
சுவையாகும்!
மாலைக்கு அனுமதி
தாயேன்டி!
அதை
அந்திமாலைக்குள்
வாய்திறந்து சொல்லேண்டி!
என் தேவதையே
வாய்திறந்து
சொல்லேண்டி!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...