Wednesday, December 17, 2014

வேண்டாம் தீவிரவாதம்

சிறகுகளை பதம்பார்த்த
தோட்டாக்களே
தோழமையின் பலமறிவீர்களோ!
எவனோ எங்கிருந்தோ
தூண்டிவிட
தூசிபடிந்த மதநூலுக்கு
துள்ளி திரிந்த
குழந்தைகளை பலிகொண்டீரே!
பாவத்தை புனிதமென்கிறதோ
உங்கள் மதம்
பள்ளி வாசலென்ன
பாசிசத்தை பூசியதா
பாவிகளே!!
பள்ளிக்கூடம் நுழைந்த
தாலிபான்களே!
நீங்கள்
பள்ளி வாசல்
நுழையாத
காட்டுமிராண்டிகள்!
கிழித்து எறியப்பட்ட
நூற்று அருபத்து நாலுயிர்களும்
திருக்குரானின் தீரா வலிகொண்ட
பக்கங்கள்
பல கனவுகளை கண்டிருக்குமே
அப்பள்ளிக் குழந்தைகள்
பட்டங்களா ,விருதுகளா,
படிப்பறிவா, பார்முழுதும்
புகழா! பார்த்து விடுவோம் ஒருகை
பறக்கத்தான் சிறகுகள்
பிறந்தவனவே விடிவெள்ளியும் விடியலை சுமந்திடுமே!
-இப்படி
கனவுகளை
சுமந்த கானக்குயில்
குழந்தைகளை
கவனம் திருப்பத்தான்
காட்சிக்கு கொன்றோமென, கடவுளை காரணம் காட்டி கண்கட்டி
வித்தை நடத்தினீரோ!
ஏ!!! தாலிபனே!
தண்ணீர் தேசத்தை கண்ணீர் தேசமாக்கி!
குருதியாறை இம்மண்ணில் ஓடவிட்ட குள்ளநரிகளே
குறித்துக் கொள்ளுங்கள்!
வஞ்சநெஞ்சில் விரைவில் நஞ்சு புகும்! நாதியற்ற உடற்குவியல்
எங்கள் மழலைகளின்
காலடியில் காணிக்கையாகும்! தாலிபனே குறித்துக் கொள்ளுங்கள் !

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...