Friday, December 19, 2014

ஹைக்கூ "எங்கும் ஓலக்குரல்"

கையில் ஏந்திய
துப்பாக்கி
மூடியே கிடந்த
கண்கள்
இனி தொடரும்
மனிதமெனும்
வீழ்ச்சி

___

தவித்த
வாய்க்கெட்டா
தண்ணீர்
பக்கத்திலேயே
வெடிக்கிறது
எவனோ வீசிய
-அணுகுண்டு

___

பற்றி
எரிகிறது
வயிறு
தீராத வலிதானோ!
-தீவிரவாதம்

___

அழுகிறது
மரம்
செதுக்காதீர்கள்
சிறிய சமாதி
பெட்டிகளை
கொலையில்
வீழ்ந்த
-குழந்தைகள்

___

"தீ"
ஓரெழுத்து
உனை
கொல்லும்
விடு
"தீ"விரவாதத்தை!

___

பெஷாவர் நகருக்கு பேரறிக்கை
"மை" இல்லா
பேனாவில்
எழுதிய
-உலக நாடுகள்

___

கொடுத்த அறிவு
இப்படி
பயன்படுகிறதே
துயருற்றாள்
பூமித்தாய்
இறந்த
-குழந்தைகள்

___

சுயநலம்
உனக்கா எனக்கா வாதமிடும்
முன்னரே
தலை குனிந்தது
-பூமி

___

இரவெது
பகலெது
தெரியவில்லை
ஓயாமல்
கேட்டது
ஓலச்சத்தங்கள்
தொடர்ந்து துரத்தியது
-தீவிரவாதம்

___

உதவி செய்தே
சிவந்த கரங்கள் செஞ்சிலுவை
சொந்தங்கள் குற்றவுணர்வில்
குமுறாதோ
-வன்முறை

___

மழைபோல்
அழுகிறது
மனம்
மலைபோல்
குவிந்த
சின்னஞ்சிறு
-சவபெட்டிகள்

__*__

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...