Wednesday, December 24, 2014

சிறுகதை -"சிறைச்சிறகுகள்"

தனித்து விடப்பட்ட ஒரு பறவையின் ஒடிந்த
சிறகினைப் போலத்தான்
ராமுவின் வாழ்க்கை ஒரு வித்தியாசம் கூடு இருந்தும் கூடிவாழும்
போக்கில்லாமல் வீட்டில் அனாதையாகப்பட்ட ஒரு பதின்ம வயதுச் சிறுவன்
விடிவது தெரிந்ததும் கானாமல் போகும் முதல் நபராய் தந்தை தனுசு இருந்தார்.
பதற்றச்சூழலில் பட்சிகளுக்குப் பதிலாக
வாகன அலறல் சத்தங்கள் அவசர அவசரமாக வேலைக்காரி தயார் செய்து வைத்திருந்த
காலை சிற்றுண்டியை பையில் திணித்த படியே தன்னை தயார் செய்தாள்
.அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்த நேரத்தில் மேசையில்
அமர்ந்திருந்தவனிடம்
ராமூ மம்மி ஆபிஸுக்கு கெளம்பிட்டேன் சமத்தா சாப்டுட்டு டீவி பாரு வெளில
எங்கும் போகாதே ! என்று அதட்டக்குரலோடு அதிகார தோனியும் கலந்தே கத்தினாள்
, ராமு பதிலேதும் பேசவில்லை மவுனமாகவே அம்மாவின் முகத்தைப் பார்த்து
தலையசைத்தான். சிறிது நேரத்தில் பரபரப்பு அடங்கி மயான அமைதி பூண்டது அந்த
வீடு . வேலைக்காரிக்கு முழுநேர பணியானாலும் இருவரும் இல்லையென உறுதி
செய்து அவ்வப்போது பக்கத்து வீட்டு குடும்பஸ்த்ரீயிடம்
ஊர்க்கதை பேசப் போய்விடுவாள் இது வாடிக்கையாகவே இருந்தது அவளுக்கு ,
மதியவேளை உச்சி வெயிலின் ஆக்ரோஷம் பூமியை பதம் பார்த்துக்கொண்டிருந்­­த
நேரம் ராமு தனியாக டிவி பார்த்துக்கொண்டிருந்­­தான் சனிக்கிழமையாதலால்
அவரவர் தன் கடமைக்கு நிகழ்சிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்கள் .
ஏற்கனவே தேய்ந்து போன டிவி ரிமோட் இன்னும் தேய்ந்து கொண்டிருந்தது
ராமுவின் கையில் சேனலை மாற்றிக்கொண்டே வருகையில் ஓரிடத்தில் நின்றான்
கவனமாக உற்றுபார்க்க தயாரானான் ஒலியை மென்மையாக்கினான் இரு காதுகளையும்
கூர்மையாக்கினான் அந்தச் சேனலில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது
அந்நிகழ்ச்சி ஒரு ஆணும் பெண்ணும் கடற்கரை மணலில் அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கிறா­­ர்கள் கடலுக்கு மிக அருகில் இரு குழந்தைகளும்
வயதான இரு பெரியவர்களும் மிக எச்சரிக்கையாய் அவ்வெச்சரிக்கையை
வெளிகாட்டாமல் அக்குழந்தைகளோடு இணைந்து விளையாடிக்கொண்டிருந்­­தார்கள் .
இந்நிகழ்ச்சியை வைத்தகண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்­­த ராமு
திடீரென டிவியை நிறுத்தி விட்டு எழுந்தான் சற்றும் முற்றும் பார்த்தான்
யாருமில்லையென்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது வேலைக்கார பெண்மணி
பக்கத்து வீட்டில் தான் இருப்பாள் கவலையில்லை நெஞ்சம் படபடத்தவாறே
மாடிப்படியேறி அப்பாவின் அறைக்குச் சென்று அலமாரியைத் துறந்து சில
காசுகளை எடுத்துக்கொண்டு அதே வேகத்தோடு வீட்டு வாசலுக்கு வந்தான்
திரும்பவும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சாலை மரங்களுக்கு நடுவே
நடக்கலானான். மாலை மணி ஐந்தென காட்டியது கடிகாரத்துடன் கைசேர்ந்தே
பயணிக்கும் இளமை குன்றாத அந்த இளஞ்சூரியன் . ஒருவழியாக ஒருநாள் அசதியை
அசைப்போட்டுக் கொண்டு ராமுவின் அம்மாவும் அப்பாவும் வீட்டை நோக்கி வருவதை
அறிந்த வேலைக்காரி இப்போது பவ்யமாய் ஹாலுக்குள் நுழைந்து ராமுவை
அழைத்தாள். பதிலேதும் வரவில்லை குரலை உயர்த்திக்கொண்டே தேடலானாள் ராமு
எங்கேயும் இல்லை என்பது உறுதியாய் தெரிந்து விட்டது அதற்குள் தனுசும்
தனுசோடு சேர்ந்து அவர் மனைவி இருவரும் வந்துவிட்டார்கள். வேலைக்காரி
என்னசெய்வதென்றே தெரியாமல் அழுதுக்கொண்டே!
ஐயா, அம்மா! ராமுவ எங்கேயும் கானல ,இப்பதான் இங்க டிவில கேம்
வெளையாடிட்டு இருந்தான் சரி வெளையாடுரானேனு நானும் சமையகட்டுக்கு
போய்ட்டேன் , திரும்ப வந்து பார்த்தா புள்ளைய கானோம்மா ! என்று
அழுதுக்கொண்டே சில பொய்களையும் வீசினாள் . வந்தவர்களும் ராமு!! ராமுவென
அழைத்தவரே நாலாபுறமும் தேடினார்கள் எங்கேயும் இல்லை என்பதை உறுதி செய்து
வேலைக்காரியை திட்டிவிட்டு தணியாத பதற்றத்தோடே அக்கம் பக்கத்தாரிடம்
விசாரிக்க கிளம்பினார்கள் . யாருக்கும் தெரியவில்லை இறுதியாக காவல்துறை
அணுக முடிவு செய்து கிளம்பத் தயாரான சமயத்தில் தனுசின் செல்போனுக்கு
அழைப்பு ஒன்று வந்தது எடுத்து பேசினான், எதிர்முனையிலிருந்து ஹலோ!!! சார்
நாங்க அடைக்கல இல்லத்திலிருந்து பேசரோம் மதியத்திலிருந்து உங்க
போனுக்கும் மேடம் போனுக்கும் பேச முயற்சித்தோம் செல்போன் அணைத்தே
இருந்தது வீட்டிற்கு போன் செஞ்சோம் யாரும் எடுக்கல மதியம் உங்க பிள்ள
ராமு வந்தான் சார் தாத்தா பாட்டிய பார்க்கனும்னு சொன்னான் சரி
பார்க்கலாம் தனியாவா வந்தேன்னு கேட்டேன் ஆமா அம்மா அப்பாக்கு தெரிஞ்சா
அடிப்பாங்கனு சொன்னான் ஏன்? சார் பையன தனியாவா அனுப்பர்ரது கூட நீங்களோ
இல்ல உங்க மனைவியையோ அனுப்பியிருக்கலாமே ! ஒன்றும் கவலபடாதிங்க சார்
பையனும் பையனோட தாத்தா பாட்டியும் பக்கத்துல இருக்குர ஃபீச்சுக்கு போரதா
சொன்னாங்க உங்களிடமும் சொல்ல சொன்னாங்க இனிமேலாவது பிள்ளைய தனியா
அனுப்பாதீங்க சார்! நான் வைச்சுடுரேன்,, என்று சொல்லிவிட்டு செல்போன்
அணைக்கப்பட்டது.
இருவருக்கும் ஒருவித நிம்மதி கிடைத்தது . வேலைக்காரி வீட்டிலில்லை
என்பதும் அவள் வீட்டில் இருப்பதில்லை என்பதையும் உறுதி செய்து அவளை
கண்டித்துவிட்டு வாகனத்தை கடற்கரை நோக்கி செலுத்தினார்கள்
சிறிது நேரத்தில் கடற்கரை வந்த அவர்கள் தன் பேரனோடு விளையாடுவதை பார்த்து
கண்ணீர் விட்டபடியே அருகே சென்று தலை குனிந்தவாரே " எங்கள
மன்னிச்சுடுங்கப்பா தப்பு செஞ்சிட்டோம் இனிமே அந்த அரோக்கிய இல்லம்
வேனாம் எங்க கூடவே வந்துடுங்க நாங்க தப்ப உணர்ந்துட்டோம் எங்களுக்காக
இல்லாட்டியும் உங்க பேரனுக்காக வீட்டுக்கு வாங்கப்பா ,,,, தனுசும்
தனுசோடு மனைவியும் தழுதழுத்த குரலிலேயே பேச அனைவரின் கண்களிலும் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது. இரவு மூடி காலை திறந்தது இப்போது அந்த வீடு சமூக
கூட்டுப் பறவைகளின் கூடாரமாக பிரகாசமாய் ஒளிர்ந்தது.

1 comment:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...