Thursday, December 04, 2014

இயற்கையின் பிள்ளைகள்

உள்ளம்
ஊசிமுனையில்
ஊசலாட!
உடலெப்படி
ஓய்வை
விரும்பும்!
அருகிலேயே இரு!
"ஆன்மா" மேலெழும்ப
எத்தனிக்கிறது
என்றாயே!
கைகளை பற்றிக்கொண்டு
கண்ணீரில்
நான் மிதக்க!
கடைசி காலத்தை
நீயெப்படி
தாங்குவாய்!
நானெப்படி
நடிக்கப்
போகிறேன்!
ஏ!!!
நட்சத்திரங்களே!
நடைபழக துணையொன்று
தேடினீர்களோ!
தூரமாய் எனை
துயரத்தால்
துரத்தினீர்களோ!
துக்கம் தாளாமல்,,
புத்தனுக்கு
புதுக்கடிதம்
எழுதினேன்!
இழவில்லா
வீட்டில்
இனிப்பை
படையலிடு
என்றான்!
படையலுக்கு
எங்கும்
பாதையில்லை
என்றுணர்ந்தேன்!
பார்முழுதும்
பாரத்தை
தாங்கியே! பாற்கடல் பூமியை கடைந்துக் கொண்டிருந்தது!
நியதி,, இதுதானோ!
நிழலுலகம்
மெய்தானோ!
கண்களின் கடைசி
முத்தையும்
கார்முகில்
பறித்துக்கொண்டது!
சென்றுவா!
நண்பா,,
சென்றுவா!
எப்போதும்,
எங்கேயும்
நாமனைவரும்
இயற்கையின்
பிள்ளைகளே!
சென்றுவா!
நண்பா,,
சென்றுவா!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...