Tuesday, December 02, 2014

சிறுகதை "தயாளனுக்கு விஷக்காய்ச்சல்"

காலனியின் கடைசித் தெருவில் தேவாலையம் ஒன்றின் ஒலிப்பெருக்கியில் பைபளின்
வாசனங்கள் வாசிக்கப்பட்டன. விடிந்தது காலை கடிகாரமில்லாமலே அவ்வசனங்கள்
ஐந்து மணியென்று உணர்த்திற்று.வசனங்களை கேட்டவாரே சோம்பலை முறித்தபடி
எழுந்தாள் சரளாம்மாள். வீட்டுவேளைகளை நினைவுகூர்ந்தபடியே வாசற்கதவினை
திறந்தாள் காலை முழிப்புடன் பெட்டைக் கோழிகள் ரேஷன் அரசிக்கு வரிசையில்
நின்று கொக்கறித்தன. இதுகளுக்கு எப்படித்தான் விடிஞ்சது தெரிஞ்சதோ என்று
முனுமுனுத்தபடி அரசியை எடுத்து வந்து போட்டுவிட்டு தன் பிள்ளை தயாளனுக்கு
சுடுகஞ்சி செய்ய அடுப்பங்கரைக்குப் போனாள். இருக்கின்ற வேலைகளில்
மணியானதே தெரியவில்லை அவளுக்கு. எப்போதும் விடிந்ததும் எழுந்திருப்பானே
தயாளன் இன்று ஏன் தாமதிக்கிறான் என்ற நினைப்பு அப்போது தான் வந்தது. அவசர
அவசரமாக பிள்ளையை எழுப்புவதற்கு ஓடினாள் உடல் வெப்பத்தால் கொதிகொதிக்க
சுருண்டு படுத்திருந்தான் தாயாளன். உடலை தொட்டதும் பதட்டமான சரளாம்மாள்
மகன் ஜூரத்தில் புலம்புவதை கேட்டாள் " அம்மா இனிமே ஸ்கூல் வேண்டாம்மா "
என்று தொடர்ந்து புலம்பியது தயாளன் குரல். லேசாக தட்டியெழுப்பி
தன்மடியில் தயாளனின் தலையை புதைத்து தலைகோதி விட்டபடியே எண்ணா கண்ணு
இப்படி ஜூரமடிக்குது ஹாஸ்பித்திருக்கு போலாம் எழுந்திரு என்றாள்
சரளாம்மாள். லேசாக கண்விழித்துப் பார்த்த தயாளன் திரும்பவும் தூக்கத்தில்
புலம்பியதையே தாயிடம் சொன்னான்.
ஏண்டா கண்ணு ஸ்கூல் பிடிக்கலையா! நீ படிச்சி பெரியாளா ஆனாதானே
அம்மாவுக்கும் சந்தோஷம் நம்ம சமூவத்துக்கும் பெரும! அப்பா உன்ன
படிக்கவைனு சொல்லிபுட்டு பாதியிலே போய் சேர்ந்துட்டார் அப்பா கனவ
நெறவேத்தனுமா இல்லையா! ஏண்டா கண்ணு ஸ்கூல் வேணாங்குரே! என்று கொஞ்சிய
குரலிலேயே தலைமுடியை தடவிக்கொடுத்தவாரே அன்பாய் கேட்டாள் சரளாம்மாள்.
ஜூரத்தில் நடுங்கியபடியே வாய் உதறலில் தயாளன் கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தான்.
அம்மா!! போன வாரம் ஸ்கூலுக்கு போனேனா வாத்தியாரு உள்ளே நுழைஞ்சதும்,
இந்தா! இங்க காலனிலேருந்து வர்ரவங்கள்லாம் எழுந்து நில்லுங்கன்னு
சொன்னாரு. நானும் எங்கூட எட்டு பேரும் எழுந்திருச்சாங்க வாத்தியாரு எங்கள
முன்னாடி கூப்டாரா நாங்களும் போனும் ஒடனே வாத்தியாரு இந்தா இனிமே ஸ்கூல்
கக்கூச நீங்க தான் கழுவனும். போங்க நீங்க அந்த வேலைய செஞ்சிட்டுதான்
படிக்க வரணும்னு சொல்லிட்டாரு. நாங்களும் போய் சுத்தம் செஞ்சிட்டு
வந்தோம். வந்ததும் எங்கள மட்டும் ஓரமா ஒக்கார வச்சிட்டாரு. எப்போ கோபம்
வருதோ அப்பல்லாம் அடிக்கராரும்மா தெனமும் நாங்கதான் கக்கூஸ் கழுவுரோம்
படிக்கவே முடிலம்மா ஒடம்பெல்லாம் வலிக்குது. இனிமே நான் ஸ்கூலுக்கு போக
மாட்டேன்மா என்று சொல்லி முடித்தான் தயாளன். சரளாம்மா சொல்ல முடியா
அழுகையால் மடியில் படித்திருந்த தயாளன் தலையை கண்ணீரில் நனைத்தாள்.
சரி இந்த விஷயத்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதல் வேலையா பிள்ளையை
ஆஸ்பித்திரிக்கு அழைச்சிட்டு போகனும் என்று முடிவெடுத்து, தயாளனனை
கிழிசல் போர்வையால் மூடி இடுப்பில் தூக்கிக்கொண்டு வீதியில் நடக்கத்
தொடங்கினாள்.
சிறிது தூரம் சென்றதும் அரசு ஆஸ்பித்திரி கண்ணுக்குத் தெரிய வேகம்
கூட்டியபடியே உள்ளே நுழைந்தாள். அம்மா! டாக்டரு இருக்காராம்மா புள்ளைக்கு
உடம்பு அனலா கொதிக்குது எதிரில் வந்தவளிடம் கேட்டாள். ஓ! இருக்காரு
இப்டியே போய் சோத்தாங்கை பக்கம் திரும்பு மொத ரூம்ல டாக்டரு இருப்பாரு
என்றாள் எதிரில் வந்தவள். சிறு பதட்டத்தோடே டாக்டரை பார்க்கனும் என்றாள்.
உள்ளே போ என்றான் காப்பாளன்.
டாக்டரிடம் தம்பிள்ளையை காட்டி டாக்டர்!! புள்ளைக்கு உடம்பெல்லாம் அனலா
கொதிக்குது என்றாள்.
தயாளனை முழுதாய் பரிசோதித்த டாக்டர் விஷக்காய்ச்சல்மா! புள்ள எங்கையாவது
எதையாவது வாங்கி சாப்டிச்சா சாப்டதுல பாதிப்பாயிடுச்சு. மருந்து எழுதி
தரேன் வேலாவேளைக்கு போடு ஒரு வாரத்துல சரியாகிடும் என்றார் டாக்டர் .
மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து தயாளனை
படுக்கவைத்து விட்டு சுடுகஞ்சி செய்து மருந்துண்ணபின் ஊட்டிவிட்டு படுக்க
வைத்துவிட்டு, கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடுமாடுகளுடனே அவளும்
அமர்ந்து தனியே அழுதுக் கொண்டிருந்தாள். அவளுக்கு தெரிந்து விட்டது.
பிள்ளை எதையும் சாப்பிட வில்லை, கக்கூசை கழுவும் போது சிதறிய மலங்கள்
முகத்திலும் வாயிலும் சென்றுள்ளதால் தான் ஜூரம் வந்துள்ளதென்று அவளுக்கு
தெரிந்திருந்தது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...