Tuesday, December 16, 2014

பறவைகளே வாருங்கள்!

புது
விடியலைத் தேடி
பறவைகளே வாருங்கள்!
கலங்கரை விளக்கில்
காதலை ஏற்றியதொரு
கப்பல் தெரிகிறது!
வானமகள் கைகொடுக்க
தேவதைகளாய்
பனிதுளிகள்
மண்ணில் பாதம்
பதிக்கிறது!
பறவைகளே வாருங்கள்!
சிவந்த முகத்தோடு
சினங்கொண்டு
சினுங்கும்
விதைகளிங்கே
விருட்சக் கனவோடு
சிதறிக் கிடக்கிறது!
யாரும் சீண்டாமல்
விதைகளோ
செல்லரிக்கிறது!
சொல்லொன்றை
சுமந்து வாருங்கள்
சுகப்பயணம்
விதைக்கு தாருங்கள்!
இறக்கைகள் ஆட
பனிதுளி தேவதைகள் நமக்கோர் பாதை வகுத்திடுமே!
அன்பும்,கருணையும்
அதனிடத்திலும்
சேர்ந்திடுமே! பனைமரத்தில் ஆழமாய் வேரிட்ட ஆலமரம் அழகின் பாசப் பிணைப்பல்லவா!
பூவரசம் பூவில்
புன்னகை தெளித்திடும் புது மல்லிப்பூவின்
புகு விழாக் கோலமல்லவா!
இமைகளை மூடும்
முன்னே இவ்வுலகை இம்சிக்கலாம்!
இனி தனிமையில் விதைகள்
தவிக்கலாமா! தோழமையை தோளில் சுமந்து
பல தோப்புகளை இப்பூமியில்
பரப்பலாம்!
புது
விடியலைத் தேடி
பறவைகளே
வாருங்கள்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...