Thursday, December 18, 2014

கால்தடம் தேடி!

மண்வாசம்
மதிமயங்க
மங்கையவள்
உனைத்தேடி
ஒற்றைக் காலுடனே காதலன் நானும்
தவம் புரிகிறேன்!
எங்கேயென?
உன்னுதடு வினவுவதை விதைநெல்லும்
அறிந்து வந்து விடைதேட துடிக்கிறது
நீ முதல் பார்வை
விதைத்தாயே
அதேயிடத்தில் கானல்நீரோடு
என் கண்ணீரும் சேர்ந்தணைத்து
காற்று வெளியில் கரைந்தோடி
காலம் கைகூடாத
கல்மரமாகி காத்துக்கிடக்கிறேன் விடையறந்த விதைநெல்லும் வீடுநோக்கி
வருகிறது காது கொடுத்து கேட்பாயா என்னிதய மறுதுடிப்பே!
இன்னமும் மண்தொட மறுக்கிறதென்
மறுகால்!
காதலின் காசநோயால் நானும்
உனைத்தேடி ஒற்றைக் காலுடனே
தவம் புரிகிறேன்!
காதல் வலிதான்
எனக்கு கடைசிவரை
மிஞ்சுமோ கடற்கரை கால்தடம் தேடி இதயமும் போகுமோ! கல்லறைதான் எனதெல்லை
என்னவளே
எட்டியேனும் பார்த்துவிடு இவ்வொற்றை
தாமரை
இனி உலகினை துறக்கட்டும்,,,!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...