Tuesday, December 02, 2014

ஹைக்கூ "சஞ்சலங்கள்"

வழியெங்கும்
லஞ்சம்
மிஞ்சியிருந்த
சில்லரை
-முதியோர்பணம்

___

ஏணிகளே
வலி தாங்குங்கள்
உயரத்தில்
ஒருவன்
உதைக்கப்போகிறான்!

___

மடைதிறவா
மண்வெட்டி
நீதிமன்றத்தில்
-நிலத்தகராறு

___

பவ்யமாய்
பதுங்கும்
பாவையவள்
வீசிச் சென்றது
புயலாய்
அவளது
பார்வை!

___

சுவற்றில் விழுந்த
நிழல்
நிமிர்ந்து நின்றது
-நிலா

___

மீசை நறைத்ததும்
மீண்டும் எழுந்தேன்!
புதியதொரு உலகம்
பூக்களை தூவி
வரவேற்றது!
முதுமையை முழுதாய்
ஏற்றதன் விளைவிதுவோ!

___

பின்னலாடை
பிறவிபலனை
அடைந்ததோ!
ஏதோ!! திருமண
வரவேற்பில்
வசந்தங்களை
தெளிக்கிறாள்
என்னவள்!

___

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...