Monday, December 08, 2014

சிறுகதை" ஆழ்துளைக் கிணறு"


  • சிறுகதை" ஆழ்துளைக் கிணறு" காலை விடிவதற்கு ஒரு நாழிகை இருந்தது அதற்குள்ளாக அந்த வீட்டின் முற்றத்தில் கிணற்றுத் தண்ணீர் அலும்பல் சத்தம் கேட்டது. விடியும் முன்பே குளிக்கத் தொடங்கினார் முத்தையன் குளியலை முடித்துக்கொண்டு பூசையறையில் இருந்த தன் மனைவியிடம் பூசாரி! சொன்ன பூச சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டியாடி நமக்கு முன்னே பூசாரி காத்துகினு இருக்காராம் கேளம்பு நல்ல நேரம் முடியர்துக்குள்ள பூச போட்டாகனும், புள்ளைகள எழுப்பாதே நாம ரெண்டு பேரும் மட்டும் போய்ட்டு வந்துடலாம், என்று சொல்லியவாரே வேட்டி சட்டை போட்டுக்கொண்டுடார். இருவரும் கிளம்ப எத்தனித்த நேரத்தில் இருடி! வாசலாண்டே யாராவது வர்ராங்களானு பாரு அபச குணமாகிட போவுது என்றார். மனைவியும் வாசலில் எட்டிப்பார்த்து யாரும் வரவில்லையென்று உறுதியாக தெரிந்த பின் இருவரும் வீட்டை விட்டு பக்கத்திலிருந்த கழனிக்கு கிளம்பினார்கள் . வளமில்லா இடம் எங்கும் அமைதி சூழ்ந்திருந்தது கழனியில், சென்ற பருவத்தில் செய்து அருவடைத் தழும்புகள் அப்படியே இருந்தது செதுக்கிய வரப்பின் எல்லையில் ஒரு மூலையோரம் பாசணக்கிணறு தண்ணீர் வற்றிப்போயிருந்தது. அந்த எழுபது அடி கிணறு பம்பு செட்டில் மட்டும் ஒரு உருவம் நின்றுக்கொண்டிருந்தத­ு பூசாரிதான் அதுவென்று கிணற்றை நோக்கி வந்துக்கொண்டிருந்த தம்பதிகளுக்கு தெரிந்திருந்தது நடையை அவசரப்படுத்தினார்கள்.­ விரைவில் பூசாரியை நெருங்கியும் விட்டார்கள், பூசாரி சிரித்த படியே வணக்கம் தெரிவித்து விட்டு நல்ல நேரம் முடிய இன்னும் அர நாழிக இருக்கு பூசயை ஆரம்பிச்சுட்டுங்களா என்று கேட்க முத்தையன் பூசாரியய்யா நீங்க ஆரம்பிங்க உங்களுக்கு தெரியாததா என்று சொல்லிவிட்டு பய பக்தியுடன் நின்றிருந்தார். ஆழ்துளைக் கிணறுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ஊற்றிடத்தில் தொடங்கியது அந்த விவசாய விடியலுக்கான பூசை மூவரும் பயபக்தியுடன் பூசையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பினார்கள். காலை ஒன்பது மணியானது முத்தையன் பிள்ளை குமுதன் வேலை செய்யும் கம்பெனிக்கு கிளம்பினான். கம்பெனிக்கு போகும் வழியில் தான் அவர்களின் கழனியும் இருந்தது வேலைக்கு கிளம்பும் முன் அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு அப்பாவின் அருகில் வந்தான் . என்னய்யா கம்பெனிக்கு கிளம்பிட்டியா சாந்திரம் சீக்கிரம் வந்துடு நம்ம கழனில போர்வேல் போட்ர வேல இருக்கு என்றார் . அப்பா யாரு மோட்டர் வாங்க போரது நம்ம மெக்கானிக் சுந்தரமா ? ஆமாபா அவரு தான் இவ்ளோ ஆகும்னு சொன்னாரு, காச முன்னவே கொடுத்துட்டேன் பத்தலனா அந்த காசுக்குள்ளேயே பொருள வாங்க சொல்லிட்டேன். போவும் போது !அவரையும் ஒரு எட்டு பார்த்துட்டு போ . சரிப்பா என்று சொல்லிவிட்டு கிளம்பினான் குமுதன் . ஊராட்சி பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு வரை படித்திருந்ததால் ஒரளவிற்கு உலக நடப்பு தெரிந்திருந்தது அவனுக்கு கழனியில் பூசை போட்டிருப்பதை பார்த்துக்கொண்டே சுந்தரம் வீட்டருகில் வந்தான் குமுதன். அவரும் மோட்டருக்கு தேவையானதை பட்டியலிட்டுக்கொண்டு­ கடைக்கு கிளம்ப தயாராகிருந்தார் . வணக்கமய்யா அப்பா பார்த்துட்டு வர சொன்னாரு !சாந்திரம் போர்வேல் வேல ஆரம்பிக்குதாம் நீங்க தான் கிட்டநின்னு எல்லாத்தையும் பார்த்துகிடனும் கடைக்கு தானே போறீங்க வாங்க அந்த வழியாதான் நான் போறேன் உங்களையும் விட்டுட்டு போரேன் என்று முச்சு விடாமல் சொல்லி முடித்தான் குமுதன் .,நல்லாதாப்போச்சி எப்படி போவர்துனு முழுச்சிட்டுருந்தேன்­ நீ வந்துட்ட தம்பி அப்பா கிட்ட சொல்லு எல்லாம் நல்லபடியா நடக்கும்னு என்று சொல்லியவாரே குமுதனின் வண்டியில் அமர்ந்தார் சுந்தரம். வண்டி கிளம்பி கடைத்தெரு நோக்கி போய்க்கொண்டிருந்தது வழியில் ஏதேதோ பேசிக்கொண்டு வண்டி ஓட்டினான் குமுதன். கடைத்தெரு வந்ததும் இந்த கட தாம்பா வண்டிய நிறுத்து என்றார் சுந்தரம் . சுந்தரம் சென்ற கடையை நன்றாக பார்த்துவிட்டு கம்பெனிக்கு சென்றான் குமுதன் . மதியம் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு காலையில் சுந்தரம் சென்ற அதே கடைக்கு குமுதன் சென்றான் கடைக்காரரிடம் விசாரித்தான் . சுந்தரம் வாங்கிப்போனதெல்லாம் தரமான பொருள்தான் தம்பி! காலகாலமா உழைக்கும் ,ஆனா!! போர் பழுப்போடு மூடாப்பு வாங்கிட்டு போல தம்பி காசு பத்தலையாம் அப்பாக்கு போன் போட்டு கேட்டாப்ல இப்போதைக்கு காசு இல்ல அப்புரம் வாங்கிகலாம்னு சொல்லிட்டாரு மூடாப்பு போட்டேயாகனும் தம்பி, கடைக்காரர் சொல்லி முடித்தார் .சிறிது நேரம் யோசித்துவிட்டு எவ்ளோ ஆகும் என்று குமுதன் கேட்டேன் . இரண்டாயிரத்து ஐநூரூவா தம்பி என்றார் கடைக்காரர். சரி கொடுங்க நல்ல பொருளா கொடுங்க அப்படியே பில்லும் போட்டு கொடுங்க என்றான் குமுதன். மூடியை வாங்கிக்கொண்டு நேரே கழனியை நோக்கி வண்டியை செலுத்தினான். அத்தனை ஆட்களையும் விழுங்கும் அளவிற்கு அந்த ஆழ்துளைக் கிணறிடும் இயந்திரம் கழனியில் பன்னிரண்டு அங்குல பள்ளத்தில் தண்ணீர் தேடி தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்­தது. அதனருகில் தன் வண்டியை நிறுத்தி விட்டு அனைவரையும் உற்று நோக்கினான் குமுதம். அத்தனை உடல்களும் தண்ணீர் வரவிற்காக காத்திருந்தது. ஒரு வழியாக இருநூறு அடி ஆழத்தை அவ்வியந்திரம் தொட்டதும் கொதித்தெழும் எரிமலை போல் இயந்திரத்தின் மீது வெகுண்டெழுந்தது தண்ணீர். அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஒருவரையொருவர் புன்னகையினால் அம்மகிழ்சியை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். குமுதன் மட்டும் இயந்திர செயல்பாட்டாளர் அருகில் சென்று நன்றி! தெரிவித்து விட்டு மெல்ல நகர்ந்து மோட்டர் பொருத்த காத்திருந்த சுந்தரத்தை அனுகினான். எதுவும் பேசவில்லை,

  • சிறிது நேரத்தில் தண்ணீரை பூமிக்களித்த அந்த இயந்திரமும் கிளம்பிற்று . இப்போது சுந்தரத்தின் வேலை ஆரம்பமாதலால் அதற்கு முன்பே பேசத் தொடங்கினான் குமுதன் . என்னன்னே! முக்கிய மான பாதுகாப்பான மூடியை வாங்காம வந்துட்டுங்களே! இதனால எவ்ளோ பெரிய பாதிப்பு வரும்னு தெரிஞ்சிருந்தும் வாங்காம வந்துட்டுங்களே! என்றான் . தலைசொரிந்த படியே மன்னிச்சிடுங்க தம்பி அப்பா தான் இப்ப வேணாம் காசில்ல அப்புரம் வாங்கிலாம்னு சொல்லிட்டாரு !, அப்பா சொன்னாலும் எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்ணே எவ்ளோ பெரிய தவற செஞ்சிட்டுங்க இந்தாங்கண்ணே நான் மூடிய வாங்கிட்டு வந்துட்டேன் மொறப்படி பொருத்துங்கண்னே! சரிங்க தம்பி! எந்த பாதிப்பும் இல்லாம எல்லாம் சரியா செஞ்சிடுரேன் தம்பி! இப்படியாக உரையாடல் முடிந்தது , ஆழ்துளைக்கிணற்றில் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு பார்வையிட முத்தையன் வந்தார் , இப்போது தன் அண்ணனின் பேரம் பேத்திகளுடன் கழனிக்கு வந்தார் , அனைத்தையும் பார்வையிட்டு விட்டு குமுதனிடமும் சுந்தரத்திடமும் உரையாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்ப்பாராமல், ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்­த பேரக்குழந்தைகளில் ஒரு குழந்தை கல் தடுக்கி ஆழ்துளைக் கிணற்றின் வாய்மூடியில் தலைமோதி கீழே மண்தரையில் குப்புற விழுந்தது. இந்த திடீர் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்­த மூவரும் பதறிப் போய் ஆழ்துளைக் கிணற்றருகே ஓடினார்கள் . முதலில் ஓடிய குமுதன் குழந்தையை வாரியணைத்து மடியில் கிடத்திக் கொண்டான் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பதட்டம் நீங்காத குரலிலே என்னச்சி புள்ளைக்கு என்னாச்சி புள்ளைக்கு என்று நடுங்கிக் கொண்டே கேட்டார்கள் ,குழந்தையை தாங்கி பற்றிக்கொண்டிருந்த குமுதன் ஆபத்தொன்றும் இல்லை என்பதை உணர்ந்து ஒன்னுமில்லப்பா நெத்தியில மூடி பட்டதால வீங்கியிருக்கு பயப்பட்ர மாதிரி ஒன்னுமில்ல ஆழ்துளைக்கு மூடி போட்டதால குழந்த தப்பிச்சிடுச்சு இல்லனா,,,,, என்று இழுத்தான் தன் தவறை உணர்ந்த முத்தையனும் சுந்தரமும் இப்போது குழந்தையை சேர்த்து குமுதனையும் வாரியணைத்தார்கள் ,இனி எந்த காரியம் செஞ்சாலும் ஒன்ன கேட்காம செய்யமாட்டேன் குமுதா என்று கண்ணீரில் நனைந்த படியே உச்சி முகர்ந்து முத்தமிட்டார் முத்தையன்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...