Sunday, December 21, 2014

ஹைக்கூ "இம்சை வரங்கள்"

இளைப்பு
இருமல்
இடுப்புவலி
இதயநோய்
இறங்கிய இமைகள்
இல்லத்தாயின்
இம்சை வரங்கள்

___

உறைந்து போன
மானிடம்
உரக்க சொன்னது
உறங்க மறந்த
-எறும்புகள்

___

வேர் நரம்பில்
வியர்வைத்
துளிகள்
வானம் பார்த்த
மரம்

___

மேடு பள்ளத்
தண்ணீர்
தேசம்
அழுவது யாருக்கும்
தெரியவில்லை
தரையில்
மீன்

___

மலர்களாடும்
மார்கழியில்
வாசலில்
மயிலாடும்
-கோலங்கள்

___

நீண்ட
வரிசையில்
நட்சத்திரங்கள்
யாருக்கு மாலையிட?
மலரிடம் கேட்டது
மார்கழி
பனித்துளிகள்

___

குடிசை தோறும்
குவிந்த
காக்கைகள்
கைகளில் பகிர்ந்த
உணவு

___

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...