Wednesday, January 21, 2015

"மௌனம்"

நெடுங்காலமாய்
மௌனமே
கசிந்த
மொழியாய்
விழிகளை
தேடியே
தொடர்கிறது
நம் காதல்
முடிவுதான்
என்ன?
நம் முன்னே
எப்போது
உடைபடும்
உறவினரின்
கண்காணிப்பு
கேமராக்கள்
விடுதலை
வேண்டியே
காத்திருப்பதில்
காதலும்
கசியும் மௌனம்
தானோ!
சுதந்திர
பறவைகளுக்கு
வேடனிட்ட
வலையொரு
உரிமைத்
தடையல்வா
அதுபோலவே
துப்பட்டாவில்
துடிக்கும்
முகத்தினில்
தெரிகிறது
அமாவாசை
முழுநிலவிற்கு
முகமூடியிட்ட
மூடர்களை
தேடியே
முழுநேரமும்
வீணானது
இதில் காதலும்
கரைந்தோடியது
ஏ! கழுகுகளே
பார்வையை
திருப்புங்கள்
எங்கள் காதல்
நிஜங்களின்
உயிர்வலி
என்றேனும்
ஒருநாள்
உயிர்த்தெழும்,,
உங்களின்
பார்வையில்
காதலொரு
கறைபடாத
காவியமாகும்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...