Saturday, January 17, 2015

கதிரவனே காதலை விரும்பு

இமைகளை மூடினேன்
இரவுகளை கனவுகளால்
பூட்டினாய்!
இளங்காலை இம்சையாகிறது!
பூட்டிய கனவுகளோ
பூவின் சுமையாகி
சுமைதாங்கா சூழ்ச்சி
நிழலாகி
நீயும் தொடர்கிறாய்!
கோபம் நிழல்மீது
விழ!
நீயோ என்மீது விழ!
இது கனவா,,
இல்லை நனவா,, கண்ணத்தை கிள்ளிப்பார்க்கும் சோதனையும்
நீயே செய்தாய்!
நனைந்த
உடலை சிலிர்த்து சிங்காரிக்கும் பறவையாக நானானேன்!
காதலியே
நீ மெய்தானோ!
காதல் நம் கையில்
கனிதானோ!
செங்கீற்றில் சிலை வடித்த
கதிரவனே!
கேள்!!!
காதல் புரிதலின் தருவாயில்
பிறைநிலா மூழ்கிடாது
பிறவியை மறைத்திடாது
மண்ணுலகு மகிழ்ந்திடும்
மழலை போலே
காதல்
கொஞ்சி குலாவிடும்!
குமரிக் காதலும்
குமரிவரை விரிந்துடும்
கொஞ்சமேனும்
கரையொதுங்கு!
கனவுகளை நனவாக்கும்
காதலையும்
நீ விரும்பு!
கதிரவனே
காதலையும்
நீ விரும்பு!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...