Wednesday, January 21, 2015

ஹைக்கூ " ஈரிதல்சிட்டு "

ஆங்காங்கே
மணல் திட்டு
கானா தேசத்து
பறவைகள்

___

ஆண்பெண்
அதுவாகி
நின்ற
இயற்கை
வரம்
-ஈரிதல்சிட்டு

___

காந்திக்கு
கரைவேட்டி
முழுதாய்
நணைந்த
"குடி"மகன்கள்

___

தாலிக்கு
எத்தனை
அலங்காரம்
வரதட்சனை
வேண்டி
-விபச்சாரன்

___

வேரில்
பூத்த
மங்கை
விலகியது
-பனி

___

கைதியின்
கைகளில்
பொற்காப்பு
வெளியில்
தீக்கிரையான
-மனிதம்

___

நிலவின்
தோழிகள்
இரவில்
-மின்மினிப்பூச்சி

___

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...