Monday, February 23, 2015

பாசத்திற்குரிய பாட்டி

ஒரு
செல்லச் சினுங்களை சிறகடிக்க
விடுகிறாள்
தாய்மனம்
தனதுயிரை
துட்சமென
தூரேயும் எரிகிறாள்

சுமந்த வயிற்றிலேயே சுரண்டவளும் படுத்துறங்குகிறாள் பாசாங்கில்லா
மழலையவள்

சின்னச் சின்ன
சண்டைகளில்
சிதைந்து விடாத சிலைவடிக்கும்
சிற்பியின்
கைகளுக்கு
தங்க காப்பிடுகிறாள் தமையனவனிடம்
செல்லமாய்
சினுங்கி
விளையாடுகிறாள்

ஆர்ப்பரிக்கும்
ஆரவார கூச்சலிட்டு
அடுத்த யுகங்களை
அவளும் கடக்கிறாள் நண்பனவனிடம்
நஞ்சினை விதைக்காத அப்பாவி முகத்திலவள் அகிலத்தை
ஆள்கிறாள்

கைதொடும் இன்பம்
கலவியில் கரைபடிந்ததில்லை கடைசிவரையில்
கணவனவனிடம்
காலத்தை
செதுக்குகிறாள்

கானும் இடமெங்கிலும் கானக்குயிலாகி வாழ்வியலின்
வசந்தங்களை
பாடித்திரிகிறாள்

அவளே மீண்டும்
தாயாகிறாள்
வாழ்க்கையின் சுழற்சிதனில்
சுழன்றும் வருகிறாள்

பெற்றெடுத்த
பிள்ளைகளை
செல்லமாக திட்டியும் புதுவரவாம்
பிள்ளைகளின்
மனைவிகளை
அன்போடு
கண்டித்தும்
அவளும் பெண்ணென
அறிந்தே அவர்களுக்கே ஆதரவாகவும்
நிற்கிறாள்

உள்ளங்கால்
முதல்
உச்சந்தலை
வரையில்
பேரக்குழந்தைகளை பேணிக்
காத்திடுகிறாள் பேரக்குழந்தைகளின்
பேரன்ப
தூக்கத்திற்காக
கதை கதையாய் பேசியவள்

மீண்டுமவள்
மழலையாகும்
முதுமையினை
தொட்டு
முத்தமிடும் போது

மாறியதனைத்தும்
தலைகீழாக

தற்போதவள்
பேசும் பேச்சுகள் அனைத்தும் தனிமை அளித்த தண்டனையாகவே தெரிகிறது
அவளுக்கு

அந்தளவிற்கு
அனைத்தையும் இழந்திருந்தால்
அணைத்து ஆருதல் மொழி வீசக்கூட அவளருகே
ஆளேயில்லை

முதியோரில்லத்தில் புலம்பித் தவிக்கிறாள் புழுவாய் துடிக்கிறாள்
பாசத்திற்கேங்கும் பாட்டி!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...