Saturday, February 28, 2015

ஏங்கும் புல்வெளிகள்

இரவுகளை
கடந்து
இன்பத்தினை
பகிர்ந்து
துயில்
கொள்ளும்
தீராத வேட்கையில் வீண்மீன்கள்
பவ்யமாய்
விளக்கேற்ற,,,

வந்தனைக்கும்
தீபவொளியாய்
திகட்டாத
தேனமுதாய்
சிந்திவிடும்
நிலவொளியை,,,

சுமந்தவாரே
சுவைக்கிறது
நம்
படுக்கையறை,,,

காலை முகத்தை
கவ்விய
முழுமதியாய்
முதலில்
கண்விழித்தாய்
நீ!

மூர்ச்சையாகி போனது புல்வெளிகள்தான்
என்பதை
நானறிவேன்,,,

உனக்கு முன்பே
உலகை ரசிக்க
வழியில்லா
புல்வெளிகள்
கதிரவன்
கண்விழிக்க
மாட்டானா
என்று
புலம்புவதை
செவிகொடுத்து
கேளடி
என்னவளே,,,

இரவு நிலவின் இன்பக்காதலில்
புல்வெளிகள்
உறங்க
இழுத்துப் போர்த்திய
பனிப்போர்வை
காலை
விடியலில்
விலக
வேண்டுமெனில்
கதிரவன்தான்
காலை முகம்
பார்க்க வேண்டும்
என்னவளே,,,

புலம்பும்
புல்வெளிகளை
உன்
புன்னகையில்
ஆருதல்
மொழியை
அவிழ்த்து விடு
என்னவளே,,,

பாவம் அவைகளை
பார்க்கும் பொழுது
மனம் தானே
உடைகிறது,,,

கால் சலங்கை
தேவையில்லை
என்னவளே
கதிரவனாய்
நீயுமாகி,,,

கால்தடம்
பதிந்துவிடு
புல்வெளிகள்
புதுவரவை
எதிர்நோக்கட்டும்
புது வசந்தங்களாய்
அவை
மலரட்டும்,,,

எழுதி விடுவோம் இவ்வரலாற்றில்
ஏட்டுக்கு போட்டியாக
என்றும்
எழுந்து விடவில்லை
நாம் செதுக்கிய
காதல் சிற்பங்கள்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...