Thursday, March 12, 2015

நீலக் கரையோரம்

நீலக் கரையோரம்

அப்பாவியாய்
முகபாவனையில்
ஜொலிக்கிறது
அந்தி வானம்

அதன் வெண்ணிற வேர்கொடியினை
கொள்ளையடித்த
கள்வனாய்
மலர்கிறது
நீலக் கரையோரம்

கடலோரக்
கவிதைகளாய்
நீலக் கடற்கரை
மணலெங்கும்
வந்துபோன
பாதச் சுவடுகள்

யாரும்
பார்த்திடவில்லை கண்ணழகால்
கவர்ச்சி வீசும்
காந்தச்
சொரூபத்தின்
காவயத்
தலைவனை
ரசிக்கும் போக்கோடு ராஜ்ஜியத்தை மீட்டெடுக்கும்
மீன்களின் துள்ளல்களோடு
அவற்றின்
கண்களில்
மிண்ணுகிறது
அந்நீல
வண்ணம்

சுகவாசம்
பறிபோகாமல் சுறுசுறுப்பாய்
அந்நீல வண்ண
கரைகளைத்
தொட
துடிக்கும்
மீன்களுக்கு
பரிசு ஏதும் கொடுக்காதீர்கள்

பிரியம்
காட்ட
வேண்டுமெனில்
போடாதீர்கள்
மீன் வலையை

வயிற்று
பிழைப்புக்கெனில்
நீல வண்ணம்
பாய் விரிக்கும்

பொழுது போக்குக்கெனில்
நீல வண்ணம்
நிஜத்தில்
துடிக்கும்

பல
முகங்கொண்டு முகங்காட்டும்
நீலக் கரையோரம்
நீளமாய்
பயணிக்கிறது
வாழ்வியலின்
வழித் தேடல்கள்

தொலையாது
இனியும்
தூரத்து
வழித் தடங்கள்,,,

2 comments:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...