Monday, March 23, 2015

திக அறிவித்த தாலியறுப்பு மாட்டிறைச்சி போராட்ட அறிவிப்பு காது கொடுப்பார்களா கருத்துக்களுக்கு

வருகின்ற ஏப்ரல் 14 அண்ணல்
அம்பேத்கர் பிறந்தநாளன்று
மாட்டிறைச்சி மற்றும் தாலியறுப்பு
போராட்டத்தை நடத்தப்போவதாக திக
தலைவர் தோழர் பேரா. வீரமணி
அவர்கள் அறிவித்திருக்கி றார் .
அதன்பொருட்டு திக வின் அனைத்துத்
தோழர்களுக்கும் மற்றும்
முற்போக்காளர்கள ுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டு போராட்ட களத்தில்
ஒன்றினைந்து செயல்பட புறப்பட
தயாராகிறார்கள். இங்கு தமிழகத்தில்
இப்போராட்டத்தின ் அவசியக்
காரணங்கள் நாம் அனைவரும்
அறிந்ததே,,மகாரா ஷ்ட்ர மாநில
மாட்டிறைச்சி தடையினை
நீக்கக்கோரியும் , அத்தடையினை
உடனே தமிழகத்தில் செயல்படுத்த
துடிக்கும் இந்துத்துவ
பாசிஸ்ட்டுகளை எதிர்த்தும்,மார ்ச் 8
ம் தேதி உலக மகளீர் தினத்தன்று
மகளீர் "தாலி"குறித்தான புதிய
தலைமுறை தொலைகாட்சி விவாத
நிகழ்சிக்கெதிரா க ஊடகவியளாளர்
தாக்குதலும், அதனைத் தொடர்ந்து
அத்தொலைக்காட்சி அலுவலக டிபன்
பாக்ஸ் வெடிகுண்டுச் சம்பவத்தை
நிகழ்த்திய இந்துத்துவ ஆர்எஸ்எஸின்
பாசிசப்போக்கினை கண்டித்தும்
இப்போராட்டம் அறிவிக்கப்பட்டத
ு."தாலியறுப்பு"
திகவின் தாலியறுப்பு போராட்டத்தை
ஆதரிப்பதற்கு முன் அதன் மீதான
விமர்சனங்களை கருத்தியல் மூலமாக
வைப்பதையும் திராவிடம் கவனத்தில்
எடுத்துக்கொள்ளு ம் என்பதே பெரியார்
மேடைகளில் வழங்கப்பட்ட
கருத்துச்சுதந்த ிரம் சான்றாக
அமைகிறது அதனடிப்படையில்,
,,"தாலியறுப்பு" எனும் பதத்திலேயே
ஓர் வன்முறை இருப்பதாக
தோன்றுகிறது. காரணம் கணவனை
இழந்த கடைசிகாலத்தை எண்ணி
கண்ணீர் விடும் பெண்களுக்கு
அடிமைச் சடங்காக இந்துத்துவம்
வடிவமைத்த "தாலியறுப்பு"சட
ங்கினை கண்டு கலங்காதவர்கள்
இம்மண்ணில் மனிதர்களாக இருக்க
முடியாது அப்படியானதொரு கொடூரச்
சடங்கினை வடிவமைத்த
இந்துத்துத்தின் விஷமங்களை
காலங்காலமாக நாமும்
பார்த்துக்கொண்ட ும் செயல்படுத்திக்க
ொண்டுதான் இருக்கிறோம் இதிலிருந்தே
இந்துத்துவ ம் அதன் தன்மையில்
பெண்ணடிமையை போற்றிப் புகழ்பாடி
வளர்த்தெடுக்கிற து என்பதை யாரும்
அறிந்துவிடவில்ல ை அதேவேளையில்
அதே தாலியறுப்பெனும் சொல்பதத்தில்
திராவிடம் முற்போக்குச் சிந்தனையில்
செயல்படுத்துவதா க சொன்னாலும்
அதிலும் பெண்ணடிமை
பொருந்துவதாகவே தோன்றுகிறது.சுய
மரியாதை திருமணமெனும்
மதச்சடங்குகள், புரோகிதர்கள்,
இல்லாமல் மூத்தப் பெரியோர்கள்
முன்னிலையில் செய்து கொள்ளும்
இருமன கலப்புச் சீர்திருத்த
திருமணமாகும்.சு யமரியாதை
திருமணத்தை செல்லுபடி
ஆக்குவதற்காக இந்து திருமணசட்டம்
7ஏல் திருத்தம் செய்யப்பட்டு, 1967ல்
பெரியாரின் போர்வாளான அண்ணாவால்
கொண்டுவரப்பட்டத ு இச்சட்டத்திற்கா
ன சில வரைவுகளை அறிஞர் அண்ணா
தந்தை பெரியாரிடம் கேட்டதற்கு "தாலி
குறித்தான வரைவுகளை தளர்த்தியே
எழுதினார் பெரியார் "தாலி
கட்டாயமில்லை மேலும் கட்டாயத்
தாலியும் திணிக்கக்கூடாது
விருப்பத்தின் பேரிலேயே தாலி எனும்
பதம் இருக்கட்டும் " என பெரியார்
வரைவு செய்ய அண்ணா
செயல்படுத்தினார ்.
இங்கே தாலி குறித்தான முழுச்
சுதந்திரத்தையும ் பெண்ணினத்திடமே
விட்டுவிடுகிறார ் பெரியார்.பெரியா
ரின் பெண்ணடிமைச் சிந்தனையும்
ஆணாதிக்கத்திற்க ெதிராக அவர் விடும்
சவாலையும் இதிலிருந்தே
கற்பிக்கப்படுகி றது "எதையும் தன்
சுயச் சிந்தனைக்கு எடுத்துச்சென்று
விடு நான் கூறினாலும் முழுதாய்
ஏற்காதே" என்கிறார் பெரியார். அவர்
செய்த சுயமாரியாதை திருமண
புரட்சிக்கு தாலி குறித்தான தளர்வில்
பெண்னினம் அவர்களாகவே சிந்தித்து
இந்துத்துவ பார்ப்பானியம் கட்டமைத்த
தாலியறுப்பெனும் பெரும்
கொடுமையிலிருந்த ு அவர்களாகவே
விடுவித்துக் கொண்டால் மட்டுமே
இந்துத்துவ பார்ப்பானிய வீழ்ச்சி
தொடங்கும் . என்பதை
தெளிவுபடுத்துகி றார் பெரியார் .இதன்
மூலம் இந்துத்துவம் செய்யும் அதே
பெண்ணடிமைத்தனத் திற்கு எதிராக
பெண்களுக்கு சுய கற்பித்தலை
புகுத்தாமலும் மதப்பூசலில் இருந்து
பெண்ணினத்தை விடுவிக்காமலும்
இந்துத்துவம் செய்வது போலொரு
தாலியறுப்பு நிகழ்வினை திராவிடச்
சிந்தனை செய்கிறது என்றே
தோன்றுகிறது.
பெரியார் குறிப்பிட்டது போல தாலி
அணிவது அவரவர் விருப்பம் அதை
விடுவித்துக் கொள்வதெனில்
பெண்ணினத்தில் முதலில் பகுத்தறிவு
புகுத்தப்பட வேண்டும் .ஏற்கனவே
தாலி கட்டாமல் திருமணம்
செய்தவர்கள் என்ன மாதிரியான
சுதந்திரத்தை இந்தச் சமூகத்தில்
அனுபவித்துத் விட்டார்கள்? கொஞ்சம்
சமூகத்தின் பார்வையில் சிந்தனையை
செலுத்திவிட்டுப ் பார்த்தால்
"தாலியணியும்" பெண்களை விட
தாலியணியாமல் வாழ்க்கையை
கடந்துக் கொண்டிருக்கும் பெண்களின்
நிலை மிகமோசமாக பார்க்கப்படுகிற து.
ஆணாதிக்கப்பார்வ ையில் அவள்
இன்னும் திருமணமாகதவளாகவ
ே கணக்கெடுப்படுகி றது . இதற்குச்
சவாலியை தாலியை பொதுவாக்கி
விடுவதில் தயக்கத்தை காட்டுகிறது
இந்தச்சமூகம் .இதுவும்
ஆணாதிகத்தில் ஒன்றே மேலும்
பல்வேறு விதமான வசைச்சொற்களும்
,வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதும
்,திருமணமாகியு ம் அவளொரு
"முண்டச்சி" என்கிற கேவலமான
சொல்லாடலையும், திருமணமாகியும்
தாலியணியாவிட்டா ல் அவளொரு
விபச்சாரி எனும் கண்ணோடத்தையும்
இன்னமும் நாம் ஒழித்து விடவில்லை
அதற்கெதிரான எவ்வித
நடவடிக்கைகளையும ் முற்போக்குச்
சிந்தனையாளராக நாம்
கையாளவில்லை என்பதே நிதர்சன
உண்மை, அப்படி இருக்கையில்
வெறும் தாலியறுப்பு போராட்ட
நிகழ்வு மட்டுமே சமூக மாற்றத்தை
ஏற்படுத்திவிடும ் என்பதில் நம்பிக்கை
தளர்ந்தே இருக்கிறது. நாம் பகுத்தறிவு
கருத்தியலையும் கடவுள் மறுப்பு
கொள்கையையும் ஏற்றிருக்கிறோம்
என்பதற்காக "கற்பிக்காமல்" தங்களின்
பெண்ணின மற்றும் அடுத்த
பெண்களின் தாலியை அறுத்துவிட
முடியாது அவ்வாறு அறுத்தலும்
அவமானத்தின் குறியீடே"
அண்ணல் அம்பேத்கரின்
பிறந்தநாளன்று (ஏப்ரல் 14)
இப்போராட்டம் நடத்தப்போவதாக
அறிவிக்கப்பட்டு ள்ளது நன்று!
பெண்ணடிமைக்கெதி ராக ஒன்றாக
பயணித்தவர்கள் தான் அண்ணலும்
பெரியாரும், ஆனால் அவர்களின்
கொள்கை கோட்பாடுகளை
புறக்கணித்துவிட ்டு இங்கே எவ்விதப்
புரட்சியையும் வென்றுவிடவும்
முடியாது செயல்படுத்திடவு ம்
முடியாது.முற்போ க்குச் சிந்தனையில்
நமை
செலுத்திய அண்ணலின் அதே
விதையெனும் வரிகளை எப்போதும்
நினைவுபடுத்துவத ில் சோர்வென்பதை
ஏற்படாது நமக்கு "கற்பி! ஒன்றுசேர்!
புரட்சிசெய்!" இக்கோட்பாட்டுக்
கருத்தியலில் அண்ணல் முதலில்
முன்மொழிவது "கற்பித்தல்"ஆகு ம்.
கற்பித்தலை புகுத்தாமல் சமத்துவம்
,சகோதரத்துவம் ,விடுதலை புரட்சி
அமைந்து விடாது என்பதை
அண்ணலும் பெரியாரும் ஒருசேர
வலியுறுத்துகிறா ர்கள் . என்னும்
மனதில் பதிந்து
பெண்ணடிமைக்கெதி கார போர்க்களம்
கண்ட அண்ணலையும் பெரியாரையும்
முன்னிறுத்தி "கற்பித்தல்" மூலமாக
மட்டுமே இந்துத்துவத்தின ்
கொடுங்கோலாட்சிய ான
பெண்ணடிமையை வீழ்த்திவிட
முடியும் என்பதை போராட்டம்
அறிவித்த திராவிடத் தோழர்கள் ஏற்று
செயல்வீரர்களாக தங்களை
மெருகேற்றி கொள்ள
கடமைபட்டவர்களாக ிறார்கள்.இது
திராவிடத்திற்கெ திரான பதிவென்று
திராவிடர்கள் கோபங்கொண்டாலோ
இந்துத்துவர்கள் மகிழ்ச்சி கொண்டாலோ
இரண்டுமே நீடித்திருக்காத ு
என்பதையும் தெரியபடுத்த வேண்டிய
கடமை எமக்குண்டு.
மேலும் மாட்டிறிச்சை குறித்தான
கருத்தும் இந்துத்துவ ஊடக தாக்குதல்
குறித்தான பதிவும் ஏற்கனவே
பதிவிட்டபடியால் அதுபற்றி மீண்டும்
பதிவிடவில்லை. பார்க்க!

1 comment:

  1. http://arumbithazh.blogspot.in/2015/03/blog-post_27.html

    http://arumbithazh.blogspot.in/2015/03/blog-post_22.html

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...