Thursday, April 30, 2015

24 மணிநேரமும்

கல்லெறிந்த
நதியில் கானக்குயிலோசை
காதல்
நினைவுகளாக

___

செடி
நட்டயிடம் தெரியவில்லை
இங்கே
வாருங்களேன் பறவைகளே!

___

பட்டத்து யானை வீதியில் பிச்சையெடுக்கும் நாடோடிகளாய்!

___

இலை சேர துடிக்கிறது புதுவரவு தளிர்களுக்கு தாயாக இன்னும் வாழ்ந்திட
வேண்டும் மரங்கள்,,,

___

ஆடையில்லா குடிசையில் கசிந்த குருதி கருணை மறந்து விதி விளையாடியதாம் ஏழையினடத்தில்

____

காய்ச்சலோடு
விடிந்த காலை
மருந்துண்ண
பணமில்லை
இருபத்து நான்கு
மணிநேர
சேவை வேண்டும்
அடகு கடைகளுக்கு

___

உருட்டும்
பூனை
நிம்மதி உறக்கும்
மிச்ச சாம்பலை
பூசிக்கொள்கிறது
பசி

____

குடி மூழ்கி
கடலில்
சங்கமிக்கிறது
என்றோ
கரையொதிங்கிய
படகொன்று
ஈரத் துணியில்
மீனவன்

___

கங்கையில்
புனித நீராடல்
பாவ மன்னிப்பு
கோரும்
மனுக்கள்
அழுக்குகளாய்
அப்படியே
கழிவு நீராக

_____+_____

அவனுக்கு தாயான இயற்கையன்னை

அமைதியின்
அணிவகுப்பாய்
தெருக்களெங்கும்
தேங்கி கிடக்கும்
நிசப்த அலைகளில்
அவன் மெதுவாய்
அண்ணநடை
போடுகிறான்

அழைப்பிதழ்
யாருக்கும்
தரவில்லை
அவன்

இருந்தும் அவனது
இன்ப மயமான
வரவேற்பிற்கு
வந்து சேரும்
இளங்காற்றிற்கு
முகமலர்ந்து
விருந்தோம்பல்
புரிகிறான்

புரியாத புதிர்கள்
ஒவ்வொன்றாய்
புலப்படுகையில்
பூமித் தாயின்
மடியில்
உறங்கி விட
துடிக்கிறான்
அவன்

அனைத்தும்
அவனுக்கு
முன்னால்
அணிவகுத்து
நிற்க

புதியதொரு
பறவையின்
சிறகாய்
பறக்க துடிக்கிறான்
பாவங்கள்
எதுவும் செய்துவிட
தோன்றவில்லை
அவனுக்கு

அவனுக்கொரு
உலகம் அமைத்தான்
அவனும் அதிலொரு
குழந்தையாய்
தாலாட்டும் இயற்கையின்
மடியில்
தவழ்கிறான்

இப்போதே
தூங்கிவிட
தோன்றிய மனதின்மேல்
கோபம்
அவனுக்கு

அது பொய்க்கோபமென
தெரிந்தே
தேவதையாகிறான்
அவன்

அவனொரு ஆண்தேவதேதான்
இயற்கைத்
தாய்க்கு
இனியும் எதுவும்
தேவையில்லை

அவனொருவனே
போதுமென
போதிக்கும்
அடிமனதிற்கு
அடிமையாகித்தான்
போனதந்த
இயற்கை அன்னை,,

பூகம்ப புல்வெளிகள்

அடிவிழுதுகளில்
அடிவிழுகிறது
எதுவும் நிரந்தரமில்லை
சொல்லிவிட்டுச்
செல்லும்
நேபாள பூகம்பம் புரியவைக்கும்
இயற்கை சீற்றத்திற்கு நடுவே சிக்கிய உயிர்களுக்கு
ஒருதுளி கண்ணீர் போதாதுதான்
ஓ!!! வென
அழுதுவிடுகிறேன்
அன்றே அழிக்காதே
இயற்கையை
என்றேன்
அதன் வழிதனில் குறுக்கிட்ட குறுக்குப்புத்தி கொண்டவர்கள்
நாமல்லவா
அதிரும் பூமியில் அழுதொன்றும்
பயனில்லை
இப்போதெனும்
இயற்கையை
நேசித்துவிடு
நமதுள்ளங்களில் துள்ளியெழும்
துர்நாற்ற
எண்ணங்களை
தூரே எறிந்துவிட்டு துன்பம்
பகிர்ந்து கொள்வோம்
பலிவாங்கி பசிதீர்த்தாலும் பாய்விரிக்கும்
இயற்கையை
நம்பியே
நமது வாழ்வும்
வளமும்
உள்ளதென
உணர்ந்து
ஊர்க்காவல்
புரிவோம்
உலக சீற்றத்தை
நாமும்
குறைப்போம்
நேபாள பூகம்பத்து புழுதியில்
மாண்ட எம்மின உயிர்களுக்கு
ஆழ்ந்த இரங்கல்
அனுதாப
அலைகளாக
அவரவர்
ஆத்மாவில்
உயிர்தெழட்டும்

Sunday, April 26, 2015

அப்படி பார்க்காதே நரியே!

போராடத் துணிவின்றி
போர்வைக்குள்
சிறை
கொண்டிருக்கிறேன்
பிறந்த மண்ணின்
மீது பற்றில்லை
எனக்கு

என் சிந்தனைகளை
நாளும் தொலைத்துவிட்டு
நானுமிங்கே
நடுவீதிக்கு வந்துவிட்டேன்

என் நாட்களையும்
நரிதின்று
போட்டிருக்கிறது
எலும்புத் துண்டுகளாய்

எதுவும் மிச்சம்
வைக்காமல் தின்ற
நரிக்கு என்நன்றிகள்

எனை தின்றுப்
பெருத்ததில்
தவறேதும்
உங்களிடமில்லை

புரட்சி மறந்தேன்
பூமியை தொலைத்தேன்

உழைப்பை மறந்தேன்
உணவையும்
உடையையும்
உறங்குமிடத்தையும்
தொலைத்தேன்

உலகத்து அன்பை
மறந்தேன்
உறவுகளை
தொலைத்தேன்

உடல்முழுக்க
ஊறிப்போனதொரு
சாதியத்தை என்னால்
மறந்தும் இருந்துவிட
முடியவில்லை
மறுத்துப் பேசாத
பிந்தையகால
பிணந்தின்னியானேன்

பேசாமலே ஓடிப்போனதிங்கே
மனிதம்

போதும் அதனால்தான்
சொல்கிறேன்
நரியே
உங்களின் மீது
தவறில்லையென்று

நான் மனிதபிறவியா?
மிருக பிறவியா?
சந்தேகக் கண்விரித்து
அப்படி பார்க்காதே
நரியே
நிச்சயமாகச்
சொல்கிறேன்
நானும் உன்னினம்
தானென்று,,,

அந்திமாலை

மோகத்திரை கொண்டு
கைகளால் முகத்தை
மறைக்கத் தெரியாமல்
திணறிக் கொண்டிருக்கிறேன்,,,

திரண்டு வந்து
என்மடியில்
குழந்தையாகிவிடும்
அந்திமாலை
வானத்தை,,,

அனுவனுவாக
கொஞ்சி முத்தமிடுகிறேன்,,,

மோகமின்னும்
தீர்ந்தபாடில்லை
மேகமின்னலை
எடுத்து வாருங்கள்
ஊஞ்சலாய்
கட்டிவிட்டு
உறங்க ஒரு
தாலாட்டும் நான்
பாடிட வேண்டும்
அந்திமாலை
குழந்தைக்காக,,,

அதோ!!!
கண்களை திறந்து சமீபத்துச் சாம்பலெடுத்து
முகத்தினில் பூசிக்
கொள்கிறேன்,,,

எனைக் கொன்றுத்
திண்றிட சுதந்திரமும்
தந்து விட்டேன்
அந்தி மாலைக்கு,,,

எட்டா தூரத்தில்
நீயிருந்தும்
காலுக்கு கொலுசாகிவிடும்
கடலலைபோல
அந்திமாலையே
நீயழகாக
தெரிவது
எனக்கு மட்டுந்தானா?

நீ வேண்டும்
நீ வேண்டுமென்கிறது
உனதன்பைச்
சுமக்கும்
என்மனது,,,

அந்திமாலையே
அதற்குள் மறைந்துவிடாதே
எனதருகில்
அமர்ந்துவிடு
உனக்கு நான்
தினந்தினம்
தாயாகிடுவேன்,,,

Friday, April 24, 2015

யாரிந்த "லீலாவதி" சிந்தனைககளும், நினைவனுசரிப்பும்

தோழர் "லீலாவதி" இந்தப்பெயரை இடதுசாரிகளே இன்று மறந்துபோனது மிக
வருத்தமானதொன்றாகும்.­ தன் சீறிய மார்க்ஸிய சிந்தனையால் மதுரை மாநகரை
அச்சப்பட வைத்ததுமின்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கும் எடுத்துக்காட்டாக
விளங்கும் தமிழின மார்க்ஸிய சிந்தனைவாதிதான் தோழர் லீலாவதி .
தன்னோடல்லாமல் தான் பெற்ற மார்க்ஸிய சிந்தனையை தமிழ்ச்சமூகத்திற்கு
அற்பனித்த சிந்தனைவாதி, பெண்ணடிமையின் ஒரு பகுதியான "பெண்ணானவள்
வீட்டிற்குள் முடங்கியிருக்க வேண்டும்" என்கிற பொதுபுத்தி பிற்போக்குச்
சிந்தனையிலிருந்து இளவயதிலேயே தம்மை விடுவிடுத்துக்கொண்டு
சமூகத்து வெளியே தானுமொரு கம்யூனிசப் போராளிதான். எனக்கும்
மானுடப்பற்றுண்டென்று­ மெய்பித்துக் காட்டியவர் தோழர்
லீலாவதி.கம்யூனிஸத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மதுரை மாநகர 59வது
மதுரை மாமன்ற 59வது வட்ட உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்
லீலாவதி தொடர்ந்து சமூகத்திற்கான தனது பங்களிப்பை சீறியச் சிந்தனையோடு
நிறைவேற்றி வந்தவர்.தலித் ஒற்றுமை, சாதிமத எதிர்ப்பு, அடிப்படைத் தேவைகளை
பூர்த்தி செய்தல் என முற்போக்குச் சிந்தனையில் மக்களின் நல்வாழ்வினை
வென்றெடுத்தவர். மதுரை மாமன்ற வில்லாபுரம் பகுதியில் பொதுமக்கள்
விநியோகத்திற்கான குடிநீர்க் குழாயில் செயற்கையான தடுப்பை சட்டவிரோதமாக
தடுத்துநிறுத்தி அதே குடிநீரை விலைக்கு விற்ற ஆதிக்கச் சாதியர்களின்
முதலாளித்துவ வர்க்கச் சுரண்டலை எதிர்த்து சட்டமன்றம் வரையில் போராடி
குடிநீருக்கான விடுதலையை மதுரைத் தமிழ்சொந்தங்களுக்கு வழங்கினார் . ஒரு
பெண் சமூகத்தின்பால் அக்கரை கொண்டு மார்க்ஸிய லெனினியத்தை ஏற்று இந்த
மக்களுக்கும், பெண்னினத்திற்கும் ஒரு சிந்தனையாளராகவும் மக்கள்
போராளியாகவும் வலம் வருவதை எந்த ஆதிக்கச் சாதிவெறியர்கள் தான்
பொறுத்துக்கொள்வார்கள­் . ஒழித்தல் அல்லது அழித்தலென்பது அவர்களுக்கு
கைவந்த கலையாயிற்றே திட்டம் தீட்டுவதிலும், திருடுவதை தடுப்போரை
தீர்த்துக் கட்டுவதிலுமே
ஆதிக்க வெறித்தனைத்தை காட்டினார்கள் இந்தத் தமிழ்ச் சமூக
விரோதிகள்.காட்சியினை கண்முன்னே நிறுத்திப் பாருங்கள் தமிழ்ச் சமூகமே,,,
ஒரு கம்யூனிஸப்போராளி மக்கள் மனதில் சாதியத்தை அழித்த ஒரு பெண்
அதிகாலையில் அதே வில்லாபுரம் பகுதியில் ஆதிக்ச் சாதியத்து சமூக
விரோதிகளான ஆறுபேர் கொண்ட கும்பல் நடுத்தெருவில் சின்னாபின்னமாக வெட்டி
ரத்தவெள்ளத்தை தமிழ்காத்த மதுரை மண்ணில் ஓடவிட்டிருக்கிறார் .
கேட்பாரற்று கேட்கும் துணிவிழந்து வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள­்
மக்கள். குற்றம் மக்களின் மீதில்லை காரணம் இயல்பான நடுக்கத்தை மக்கள்
வெளிபடுத்தியிருக்கிற­ார்கள் வேறென்னச் செய்ய முடியும் மக்களால்,
வீரத்திற்கு பேர்போனது மதுரை மண்ணென்று பழையகதையைத்தானே மீண்டும்
பாடியிருக்க வழியுண்டு அங்கே , எது வீரம், எதுபுரட்சி, எது கம்யூனஸம்,
எதுவிடுதலை, எதுமார்க்ஸியம், எது லெனினியம், எது முற்போக்குச் சிந்தனை,
எது வழிகாட்டி , இப்படியான இன்னும் பலவான தீர்வுச் சிந்தனைகளை தேடாமல்
விட்டதாலோ என்னவோ இழந்தோம் நாமொரு கம்யூனஸப் போராளியை, பெண்ணினத்திற்கு
எதிராகவும், தமிழ்ச் சமூகத்திற்கு எதிராவும் எழுப்பப்படும் அல்லது
வளர்த்தெடுக்கப்படும்­ ஆதிக்கத்தினை நாம் அழிக்க வேண்டுமெனில் நமக்கு
வேண்டும் முற்போக்குச் சிந்தனை, உண்மைக் கம்யூனிஸத்தை இந்தச் தமிழ்ச்
சமூகம் வளர்த்தெடுப்பதில்தான­் நமக்கான விடுதலைகள் நமக்கிங்கே
கிடைக்கும்.


"தோழர் லீலாவதியை படுகொலைச் செய்தி, 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் நாள்"


ஆம் இன்று அவரின் நினைவுநாள் கம்யூனிஸ வீரவணக்கம் எம்மின தோழருக்கு


வேண்டும் இங்கே விடுதலை.

BJP நாராயணா வாந்திகள் பெண்ணடிமை பேசுகிறது

இந்தியாவில் வளர்ந்து விட்ட இயக்கமான ஆர் எஸ் எஸும் அதனை வளர்த்தெடுக்க
துடிக்கும் பிஜெபி இந்துத்துவமும்(ஆம் இரண்டுமே வளர்ச்சியை நோக்கி
எப்போதோ முன்னேறிக்கொண்டிருக்­கிறது) தொடர்ந்து பெண்ணினம் மீதான
காழ்ப்புணர்ச்சியினை கக்கிக்கொண்டிருக்கிற­து. ஏற்கனவே சங்கராச்சாரியார்
எனும் இந்துத்துவ மதவெறியரின்

http://arumbithazh.blogspot.in/2015/03/blog-post_65.html

கருத்துக்களை போலவே அதே பாணியில் கொஞ்சமும் பிசகாமல் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி கட்சியின் மூத்த பொருப்பாளர் நாராயணன் அவர்கள்
இவ்வாறு பேசியுள்ளார்.

"மேக்கப்போடும் பெண்கள் விபச்சாரிகள்"

இதற்கான எதிர்வினையாற்ற கூட சக்தியில்லாமல் முழுதாய் பெண்ணினம்
இந்துத்துவத்திற்கு அடிமையாகிப்போனதுதான்­ வேதனை, இவற்றையெல்லாம் தாண்டி
மத்தியல் பல பெண்களும் தமிழகத்தில் தமிழிசையும் வானதி சீனிவாசன்
அவர்களும் இதே கட்சியில் அங்கம் வகிக்கும் பெண்ணினத் தலைவர்கள் என்பது
வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஒருகால் அவர்களும் நாராயணனின் கருத்திற்கு
உடன்பட்டுவிட்டார்கள்­ போலும்,
இன்றைய காலச் சூழலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் "அழகு"க்கு
முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது,, ஏனிந்த காழ்ப்புணர்வு
கருத்துக்களை இந்த இந்துத்துவ வெறியர்கள் திணிக்கிறார்கள் என்று
பார்த்தோமானால் , பிற்போக்குத் தனங்களிலிருந்தும் , பெண்ணடிமைத்
தனத்திலிருந்தும், இந்துத்துவ பார்ப்பானிய மூட நம்பிக்கையிலிருந்தும­்
இன்றைய பெண்கள் தங்களை விடுவித்துக்கொண்டு பெண்ணுரிமையின்பால் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டு சமூகத்தில் தங்களின் தலைநிமிர்வை மெய்பித்த வண்ணம்
தங்களை முற்போக்குச் சிந்தனைகளால் முழுமையாய்
ஈடுபடுத்திக்கொண்டிரு­க்கிறார்கள் என்பதே இந்துத்துவ வெறியர்களுக்கு
அதிர்ச்சியான செய்தியாக அமைந்து விடுகிறது . காரணம் பெண்ணடிமைத்
தனத்திலிருந்துதான் தங்களின் இந்துமதத்தினையும்,
பார்ப்பனத்தன்மையினைய­ும் வளர்த்தெடுக்க முடியுமென்பது ஆர் எஸ்
எஸுக்கும், பிஜெபிக்கும் நன்றாகவே தெரியும். இதன் காரணமாகத்தான் மீண்டும்
மீண்டும் பெண்ணடிமைத் தனத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதற்காக
பெண்ணுரிமையில் இந்துத்துவர்கள் கைவைக்கிறார்கள். அதுவும் குறித்தான
கருத்துக்களையே அவர்கள் முன்வைப்பதன் காரணம் மீண்டும் தேவதாசி முறையை
இத்தமிழ்மண்ணில் பரப்பும் ஈனச்செயலில் இந்துத்துவர்கள் ஈடுபடுகிறார்கள்.
எதற்கும் எல்லாவற்றிற்கும் சவால் விடுமளவுக்கு இன்றைய பெண்களின் நிலை
(குறைந்தபட்சம்தான்) உயர்ந்திருக்கிறது அப்படியிருக்க அலுவலகப்
பெண்களும், வீட்டுப்பெண்களும் மேக்கப் போட்டுக்கொள்வதில் இவர்களுக்கு
என்ன பொறாமை வேண்டுமானால் ஆணாதிக்கர்களான இந்துத்துவர்கள் மேக்கப்
போடாமல் வலம் வாருங்களேன். ஒரு சாதாரண விவாத நிகழ்சிகளுக்கே தன்னை
அழகுபடுத்திக்கொண்டு முகமுழுக்க முகப்பூச்சுனை அப்பிக்கொண்டு அழகான
பேண்ட் ,சட்டையில் தன்னை ஜொலிப்பு மிகுந்தவனாகவும், இந்துத்தவ
பற்றாளராகவும் பல்லிளித்துக்கொண்டு பேட்டிமளிக்கும் நாராயணன் எவ்வித
அனுசரிப்பில்லாமல் ஊடகத்தில் வலம் வரத் தயாரா என்றால் ? அதுயெப்படி நான்
ஆண்பிள்ளையாயிற்றே! என்கிற ஆணாதிக்க புத்திதான் பதிலாக வரும்.
இவற்றுக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு தங்களை பலியிடும் ஆடாக
மனதிலேற்றிக்கொண்டு இந்துத்துவர்களின் அடிமையாக தங்களை உருமாற்றிக்கொண்டு
தந்தைபெரியாரின் புகைப்படத்தினை செருப்பாலடிப்பதும், மேற்குறிய மேக்கப்
சர்ச்சையினை நியாயப்படுத்திக்கொண்­டும் சில பெண்ணினம் வலம் வரத்தான்
செய்கிறார்கள் . இப்போதேனும் அவர்கள் தங்களை அடிமைபடுத்துவது யார்?
தங்களுக்கு தேவதாசியெனும் முத்திறை குத்துவதுயார்? தங்களுக்கு கல்வி
மறுத்தவர்கள் யாரென்பதை அடையாளங்கொண்டு இந்துத்துவ பார்ப்பானிய
பிற்போக்குச் சிந்தனையிலிருந்து விடுவித்துக்கொண்டு முற்போக்குச்
சிந்தனையில் தமிழினத்தை வளம்பெறச் செய்திட முன்வர வேண்டுமென்பதே அனேக
முற்போக்குச் சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

Thursday, April 23, 2015

மௌனம் எழுதிய கவிதை

மௌனம் எழுதிய
கவிதை :

யாரும் சொல்லாதொன்றை
எழுத துடிக்கிறது
மௌனம்

ஏனென்ற கேள்விக்கு
விடையளித்த
வினாத்தாளில்
வெறும் மூன்றெழுத்துள்ளது
கவிதையாக
அதுவும்
முளைக்கிறது

மௌனம்
கவிசொல்ல
வெட்கத்தில்
முகத்தை மூடும்
கண்ணாடி பாதரசத்திலோ

பதிந்து போன
பீனிக்ஸ் பறவையின்
கால்தடம் தெரியும்

பார்க்க
பார்வையுண்டு
எழுத கையுண்டு
எழுத்தை கோர்க்கும்
எண்ணமும் உண்டு

உதவிக்கு வராத
ஊமைமொழியினை
இப்போதேனும்
கலைத்துவிட
வேண்டுமென்று
துடிக்கிறது
ஆழ்மனது

தூரிகைச் சிதறலை
சேகரிக்க
மலர்தூவலாய்
மௌனத்தின் மீது
விழுந்தன
செந்தூவல்கள்

செஞ்சோலைகள்
சிரித்து மகிழ்ந்தாடும்
வேளையில்
உடைபட துடிக்கிறது
கவிதையின்
மௌனம்

இறுதி மூச்சிற்கு
இன்னும் சில நாழிகை
இருக்க
இப்போதேனும்
படித்து விடுங்களேன்

மௌனமெழுதிய
"காதல்" எனும்
மூவெழுத்துக்
கவிதையை,,,

கொசு வத்திச் சுருளை எப்படி பிரித்தெடுப்பது?

அனேகமாக என்ன மேற்படிப்பு படிக்கலாம், மேற்படி என்ன பாடத்தை
பத்தாம்வகுப்பு முடித்தவர்கள் எடுக்கலாம் இதற்கிடையே ஐ ஏ எஸ், டி என்
பிஎஸ்ஸி , கேட், வாட்டு, நோட்டு என நீண்ட பட்டியியலில் "கொசுவத்திச்
சுருளை உடைக்காமல் பிரித்தெடுப்பது எப்படி?"யென்று கோடை சிறப்பு பயிற்சி
வகுப்புகளை ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் அந்தளவிற்கு மனுஷனை
பாடாபடுத்துகிறது இந்த "கொசு" என்னாமா கடிக்கிறது, வலிதாங்க முடியாமல்
கத்திய கதறல் சத்தங்கூட கேட்காமல் பக்கத்தில் வேறு மனைவி தானே
புலம்புகிளாள் "என்னங்க நாளைக்கு கல்யாண் ஜுல்லரி புதுஸா தெறக்கலாங்களால்
கண்டிப்பா போறோம்" ன்னு அவளை புலம்ப வைத்து தூக்கம் தொலைய வைத்த கொசுவை
என்னதான் செய்வது! "நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா
மருந்தடிச்சி கொல்லுங்கடா" என்பது போல இந்த கல்யாண் ஜூல்லரி
விளம்பரத்தையும் தலைவிதியேன்னு பார்க்கவும் வைத்துவிடுகிறார்கள்
கொசுப்பாவிகள்.இவற்றுக்கெல்லாம் இடையில் வீட்டில்வேறு ராமாயணம் ஓடுகிறது
,பாட்டி இல்லாத குறையை பையன் போக்குகிறான் , காதல்தூதாம் காலை விடிவதுகூட
தெரியாத காதல் கைபேசி கிசுகிசு, தெளிவா கேட்டது ஒன்று படத்திற்கு
போகிறார்களாகளாம் படத்த்தலைப்பு "ஓடிப்போவது எப்படி" இதற்கு ஏன் இப்படி
விடிய விடிய பேசுகிறார்களென்று தெரியவில்லை,அவர்களுக­்கு முன்பே
"தடுப்பது எப்படி" (காதலையும் சேர்த்து பிரிப்பதையும் கலந்து) எனும்
படத்தை எனக்கு காட்டிவிட்டான் காதல் பட நாயகன் என்பதை எப்படி
புரியவைப்பதென்று மண்டையில் ஒரே ஜிந்தனை ஓட்டம்.சரி மின்விசிரியை போட்டு
கொஞ்ச கொசுவையும் விரட்டிவிடலாமென்று பார்த்தால் அந்த மின்விசிரியிடமே
மோகலீலையில் கொஞ்சிகொஞ்சி பேசுகிறது கொசு, காரணம் கரண்ட் இல்லை என்பதே
,,,
இந்த அரசும் அரசியல்வாதிகளும் அடுத்தவர் ரத்தத்தை உறுஞ்சுவதெப்படி என்று
நமக்கு முன்னரே கோடை சிறப்பு பயிற்சி வகுப்பில் பாடம் பெற்றார்கள்
போலும், சரி கொசுமருந்தாவது அடித்தார்களா என்று பார்த்தால் அதிலும்
வெறும் புகை மட்டுமே, கொசுமருந்தை ஊழலுக்கு விற்று
விட்டார்களே,,எல்லாவற­்றையும் விட்டுத்தள்ளி விளம்பரத்தில் வரும்
தொழில்நுட்ப கொசுவிரட்டிகளை வாங்கி உபயோகித்தால் "கரடியே காறி துப்பியது"
போல தொழில்நுட்பத்தை காறி துப்பிவிட்டு சந்தோஷமாய் திரிகிறது கொசு, அட
போங்கடா நீங்களும் உங்க தொழில்நுட்பமும் என்று புலம்பி புதிய உலகை
தேடிப்போகிறேனென்று தெருமுக்கு டாஸ்மாக்கில் சாராயத்தை வாங்கி குடித்து
கடிக்கும் கொசு வலியில் நிவாரணம் தேடினால் அடிச்சது போலிசரக்காக
இருக்கிறது போனது பணம் வந்தது உடலுக்கு நோய். குடல் வெந்து குப்புர
படுத்தாலும் காதை குடைந்து எழுப்புகிறது கொசு. என்னதான் வழியென்று
வீதியையும்,வீட்டையும­்,விதியையும் நோட்டமிட்டத்தில் விடாது கருப்பு போல்
ஆங்காங்கே குப்பைகள்,தேங்கிய கழிவுநீர்நிலைகள். இனி
கொசுத்தொல்லையிலிருந்­து விடுதலை அனைத்தையும் அப்புறப்படுத்தியதில்­,,,
ஒருவழியாக கொசுத்தொல்லையிலிருந்­து மீண்டுவந்து படுத்தால் குரட்டைச்
சத்தத்துடனே மீண்டும் புலம்புகிறாள் மனைவி, "என்னங்க பக்கத்துவீட்டு மாமி
பட்டுப்புடவ போல எப்பங்க வாங்கித்தருவீங்க" போச்சுடா "எனக்கு
நடிக்கத்தெரியாது" என்கிற உணர்ச்சியோடு "என்கிட்ட புடவ வாங்க
பணமில்லடி"என்று எப்படி புரியவைப்பேன், இதற்காக சிம்புவிடமோ இல்லை
பப்லுவிடமோதான் கோடை பயிற்சிக்கு போக வேண்டும். எல்லாம் முடிந்து
காலையில் எழுந்து தொலைகாட்சி பட்டனை தட்டினால் ஓடுகிறது விளம்பரம் ,
எர்வாமேட்டின்,டேபிள்­மேட், அமேஸான் காடு,அது இதுவென்று தாங்கமுடியாத
தலைவலிக்கு மத்தியில் வந்துபோகிறது அந்த மகத்தான வாக்கு "ஐயோ!!! ராமா
என்ன ஏன் இந்த கழிசட கூடல்லாம் கூட்டுசேர வைக்கிற"
கொசுமுதல்,கொள்ளையடித­்தல் வரையிலான அனைத்திற்கும் ஒரே நிவாரணி
காமெடியும்,கவுண்டமணி­யும், சிரிப்பும்தான் என்றுச் சொன்னால் அது
மிகையாகாது.

Wednesday, April 22, 2015

ஆமாம்!!எங்களுக்கு வைரமுத்துவையும் தெரியாது ஜெயகாந்தனையும் தெரியாது

இன்னும் என்னென்ன சர்ச்சைகளுக்குள் மாட்டி சீரழியப்போகிறதோ இந்த
தமிழ்ச்சமூகம் என பயப்படும் அளவிற்கு ஊடகங்கங்களும் அவ்வூடகங்களுக்கு
தீனிபோட்டுக் கொண்டிருக்கும் இலக்கிய ஜாம்பவான்களும் சமூகத்திற்கு
என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது புலப்படவேயில்லை. குமுதம்
வெளியிட்டிருக்கின்ற வைரமுத்து அவர்களின் தற்பெருமைக்கு ஜெயகாந்தன்
அவர்களின் மகள் கொடுக்கும் பதிலடி இலக்கிய மோதலாகவே உறுமாறியிருக்கிறது.
இலக்கியம் தாண்டி வைரமுத்து அவர்களும் ஜெயகாந்தன் அவர்களும் மேற்கொண்ட
சமூகப் பாதைகளை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
பொதுவாகவே இலக்கியத்தில் புலமைபெற்றவர்கள் எழுப்பும் அதே இலக்கிய மோதலான
சர்ச்சைகள்தான் தற்போது கிளம்பியிருக்கும் சர்ச்சைகள் என
எடுத்துக்கொள்ளலாம்.
கவிப்பேரரசு என வர்ணிக்கப்படும் கள்ளிக்காட்டு புதல்வனான வைரமுத்து
அவர்கள் தான் என்னதான் திராவிடத்தில் பங்கு பெற்றாலும் தன்சாதிப்பெருமையை
உயர்த்திப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பவர் . குறியீடுகளை ஆங்காங்கே
விதைத்த வைரமுத்து அவர்களின் சாதியப்பற்றினால் புகழின் உச்சிக்கு
புகழ்ந்தும் தள்ளிவிடுகிறார்கள் இந்துத்துவ பற்றாளர்கள்.

சென்ற ஆண்டில்(2014) கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்ட "
பத்மபூஷன்" எனும் உயர்விருதிற்கான பட்டியலில் "வைரமுத்து ராமசாமி தேவர்"
என தனது பெயருக்குப் பின்னால் சாதியத்தை பூசிக்கொண்டதென்பது அவரின்
சம்மதத்தின் பேரில் தானே நிகழ்ந்தது. பெயர்பட்டியலில் இன்ன பெயர்தான்
இடம்பெற வேண்டுமென்பது அவரின் ஆதிக்கச்சாதியத்தை அளவிடுகிறதே,

அம்மாவுக்கொரு கடிதம்" என்கிற தலைப்பில் " அவிழ்த்துவிடப்பட்ட அந்த
கவிதையில் "பொன்னையா தேவனுக்கு,,," என்றெழுதி தன் தாயின் தகப்பனாவன்
ஆதிக்க "தேவர்" சாதியில் பிறந்தவள் அதனால் தானொரு "தேவர்" சாதிக்காரனென
ஆதிக்கச் சாதியத்தை சுட்டிக்காட்டி ஆண்டச்சாதியென குறிப்பிடுவதென்பது
திராவிடத்திற்கெதிரான­தென உறுத்தவில்லையா கவிப்பேரரசிற்கு,,,

https://­m.youtube.com /­watch?v=IHHpa2in-
_g&i­tct=CBEQpDAYBiITCNDj­z- uOisUCFUI8vgod1ycA­FzIHcmVsY
XRlZEjG3bOo­k7OZsn8%3D& gl=IN&hl=­en-GB&client=mv- goog­le

(லிங்க் வேலை செய்யவில்லையெனில் Vairamuthu kavithai என்றும் ஆயிரம் தான்
கவி சொன்னேன் என்றும் youtube தேடுபொறியில் பதிவிடவும்)

போலவே சிறுகதை ஜாம்பவான் என்று தமிழ்ச்சமூகம் போற்றிப் புகழ்ந்து
கொண்டாடும் ஜெயகாந்தன் அவர்கள் ஆரம்பகால கட்டங்களில் திராவிடத்தில்
அங்கம் வகித்து அதன்பின்னான சூழலில் திராவிடம் தமிழை புறந்தள்ளுகிறதெனும்
பொய்யுரையால் இந்துத்துவ பார்ப்பானியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது
மீண்டும் பிற்போக்குத் தனங்களுக்கு தன்னை அற்பணித்துக் கொண்டோமென்கிற
உறுத்தல் உறுவாகவில்லையே ஜெயகாந்தனுக்கு,,,
அகிம்ஸையை கடைபிடித்து இழந்தோம் ஈழத்து திலீபனை என்பதனால் ஆயுதமேந்துவதே
ஈழத்திற்கான விடுதலை என்று சூருளுத்து ஈழத்து விடுதலைக்காகவும் ஈழ
மண்ணிற்காகவும் இத்தமிழ்மண்ணில் வீரத்தை ஊட்டிய எங்களின் ஈழப்போராளி
"மேதகு பிரபாகரன்" அவர்களின் சீரியச் சிந்தனையால் முளைத்த "விடுதலைப்
புலிகள் " எனும் உலகமதிறும் படையை பற்றி கொஞ்சமும் நாக்கூசாமல் "தீவிரவாத
இயக்கும்" என்றும் விடுதலைப்புலிகளால் தான் ஈழமக்கள் அழிந்தார்கள்
என்றும் சொல்லத்துணிந்த ஜெயகாந்தனுக்கு காந்திய அகிம்ஸை சிங்களவனால்
என்றோ அழிக்கப்பட்டுவிட்டெத­ும் உண்மை நிச்சயமாக தெரிந்திருக்கும்.
அப்படியிருந்தும் அப்பொய்யுரையை எப்படி இவரால் பரப்ப முடிந்தது.
தமிழிலக்கியம் எந்தளவிற்கு எங்களுக்கு முக்கியமோ அதே அளவிற்கு ஈழ
இலக்கியம் எங்களின் இருகண்களாக முக்கியப்படுத்துகின்­றோம். ஒவ்வொரு ஈழ
இலக்கியத்திலும் வாழ்கிறார்கள் எங்களின் ஈழப்புரட்சியாளர்கள்.

01.09.1990 அன்று சென்னையில் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் செயலாளர் க. பத்மநாபா அவர்களின் நினைவு அஞ்சலிக்
கூட்டத்தில் எங்களின் உயிரினும் மேலான விடுதலைப் புலிகளின் மீது எப்படி
உங்களால் குற்றம் சுமத்த முடிந்தது.

https://­m.youtube.com /­watch?v=-dWp_VhOGww&
i­tct=CDMQpDAYAyITCMqf­t9OMis UCFUWQvgod- lgA­mVISamF5YWthbnRoYW4g­c
3BlZWNo&client=mv-g­oogle& hl=en-GB&gl=IN

(லிங்க் வேலை செய்யவில்லையெனில் Commomeration Meeting for EPRLF Leader
K Pathmanabha என்றும் Jeyakanthan speech என்றும் Youtube தேடுபொறியில்
பதிவிடவும்)

இவைகளனைத்தையும் புறந்தள்ளிவிட்டு இலக்கிய உலகின் பேரரசர்களாக
பாவித்துக்கொள்கிறோம்­ என்றால் தமிழின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும்
நாங்கள் வைத்திருக்கின்ற அளவுகடந்த அன்பினால் மட்டுமே,,,
கவிப்பேரரசராகட்டும் இன்னும் பல கவிச்சொந்தங்களாகட்டு­ம் தமிழுக்காக
உண்மையிருந்து "தற்பெறுமையிலிருந்து­ம்,ஊடகமோகத்திலிருந்த­ும்,
போலிப்புகழினை வலிய பெறுவதிலிருந்து வெளிவர வேண்டுமென்பதே இந்த சமாணிய
இலக்கிய காதலர்களின் வேண்டுகோள். கவனிப்பார்கள் எம்மின இலக்கியப்
பேரரசர்கள்.

கருப்புச் ச(சா)ட்டையடி வேண்டுமா எச் ராஜாக்களே

கருப்புச் ச(சா)ட்டை

ஆண்டுகள் முழுதாய்
குடியில் மூழ்கிகிடந்து
முளைக்கும் ஒருநாள்
போலிமுக்திக்கு

மண்டியிடும்
ஆடுகளின்
கூட்டங்களை போல
அவனும்
கடவுளானான்

அவனைஅவனே
சாமியென்றான்
அவனுடுத்தும்
அதீத அய்யப்ப பக்தியின்பால்
அணிந்திருக்கும்
கருப்புச்சட்டைக்கு

ஒத்தூதி ஓமம்
வளர்க்கும் ஆரியத்தை
அழிக்க வந்த
கருப்புச் சட்டையொன்றும்
சட்டையல்ல
மூடர்களை
விரட்டவந்த
சாட்டையது

அடிவாங்க முடியாமல்
சாதியத்தை அவிழ்த்துவிடும்
ஆரிய பார்ப்பானியமே
வருகிறதுபார்
உங்களுக்கான
எச்சரிக்கை

ஆரிய இந்துத்துவம்
எறியும்
எலும்புத் துண்டுகளை
பவ்யமாக கவ்விக்கொண்டு
வாலாட்டும் உங்களின்
வாலை வெட்டத்துணியும்
போர்வாள்தான்
நாங்களணியும்
கருப்புச்சட்டை

சாதியத்தை
மதவெறி மூர்க்கத்தை
முழுமூச்சாய்
எதிர்க்கவந்த
ஏகாந்த உடையணிய
எங்களுக்கேதும்
தடையிருந்தால்

தன்னுயிரை
துட்சமென எண்ணி
காத்திடுவோம்
கருப்புச்
ச(சா)ட்டையை

எத்தனை
எச் ராஜாக்கள்
வந்தாலும்
எங்களின் கருப்புச் சட்டையை
கைபற்றிட முடியாது,,,

Tuesday, April 21, 2015

-கெட்டவார்த்தைகள்-

கெட்ட வார்த்தைகள்

முதலில் இப்பதிவிற்காக 18+
போடவேண்டுமா எனச் சந்தேகம்
எழுகின்ற பொழுது அதற்கான
தேவை ஏற்படவில்லை என்றே
தோன்றியது இருந்தாலும் மனிதச்
சிந்தனையானது ஒன்றோடொன்று
வேறுபட்டிருப்பதனால்
வேண்டுமானால் அவரவர் 18+ என
தீர்மானிக்க முழுச்சுதந்திரத்தை
இப்பதிவு வழங்குகிறது.
தமிழ்ச் சமூகத்தில் ஓரு
இனத்தையோ அல்லது தனக்கு
ஆகாத நடவடிக்கைகளில்
ஈடுபடுபவர்களையோ,
எதிராளியென அடையாளம்
கண்டவர்களையோ ,ஏதேனும்
வாக்குவாதம் செய்யப்படும்போதை,
பிடிக்காதவர்களை
அவமானப்படுத்தப்படும் போதோ
நமது வாய்ச்சொல்லில்
அனாவசியமாகவும் இயல்பாகவும்
வந்து விழுகின்றன
கெட்டவார்த்தைகள்.பெரும்பாலும்
பெண்ணின இழிவினை
மையப்படுத்தியே உறுவான இந்த
கெட்டவார்த்தைகளானது
பிற்போக்குச்
சிந்தனையாளர்களானாலும் சரி,
முற்போக்குச்
சிந்தனையாளர்களானாலும் சரி ,
சக மனிதர்களானாலும் சரி
அப்போதப்போதைக்கு
அவர்களுக்கான சிந்தனைகளை
மறந்து தொடர் பெண்ணிழிவு
கெட்டவார்த்தைகளை உபயோகித்த
வண்ணம் உள்ளனர் .
இக்கெட்டவார்த்தைகள் இணையம்
வரையில் தொடர்ந்திருக்கிறதென்­­
பதுதான் காலத்தின்
கொடுமையாக இருக்கிறது.
ஆணாதிக்கம் எங்கும் பரவி
கிடக்கிறது என்பதற்கும் இதுவே
ஒரு சான்றாகவும்
அமைகிறது.அதே போல
பிஞ்சுள்ளம் கொண்ட
குழந்தைகளின் மழலைச்
சொல்லிலும் கெட்டவார்த்தைகள்
கலந்திருப்பதும் அதனை
அகமகிழ்ந்து பெற்றோர்களும்
உறவுகளும் வரவேற்று
பூரிப்படைகிரார்கள்
எனச்சொன்னால் பின்னுக்குத்
தள்ளப்படுகிறதா இந்தச்
சமூகமென்கிற கேள்வி எழத்தானே
செய்யும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள்
வரையில் வாயில் சகஜமாக
புழங்கும் கெட்டவார்த்தைகளின்
அர்த்தங்களை அவர்களும் அறிந்தே
வைத்திருக்கிறார்கள் ஆனால்
தன்தாய் சகோதரி என பார்க்கும்
மனநிலையிலிருந்து அவர்களும்
விலகியே இருக்கிறார்கள். இந்த
இடத்தில்தான் பெண்ணடிமைத்தனம்
வளர்த்தெடுக்கப்படுகிறது
எனலாம்."தெவிடியாப் பையன்"
இக்கெட்டவார்த்தையின்
அர்த்தமானது வெளிப்படையாகவே
தெரியும் காரணம் தேவரடியாள்
என்கிற தேவதாசியிலிருந்து
திரிபான வார்த்தை இது. கண்ட
ஆண்களிடம் உடலுறவு
வைத்திருக்கும் தாய்க்கு பிறந்த
மகனென்பது இதற்கான
வெளிப்படையான விளக்கம்.
இவ்வார்த்தை உபயோகிப்பவர் இது
பெண்ணடிமையை
உயர்த்திப்பிடிக்கிறது மனித
இனத்தின் உயர்வான தாய்மையை
இவ்வார்த்தை
கொச்சைப்படுத்துகிறது எனும்
சிந்தனையானது நமக்கேன்
இன்னும்
வரவில்லை.

அதைப்போலவே
தாயையும் தாய்மையையும்
கொச்சைப்படுத்தும் "ங்கோத்தா"
எனும் கெட்டவார்த்தை சகஜமாகவே
இங்கே அனைவருக்குள்ளும்
புழங்குகிறது .
சினிமாத்துறையானாலும்,சகமனிதனானாலும்,ஊடக­
மானாலும் இவ்வார்த்தைக்கான
அர்த்தமும் வெளிப்படையாகவே
தெரிந்தும் ஏதோ ஒரு பொய்யான
ஆளுமையினை மெய்ப்பிப்பதற்காக
"ங்கோத்தா" எனும்
கெட்டவார்த்தையினை ஆதரித்த
வண்ணமுள்ளனர். இப்போதைய
சினிமாக்களில் "ங்கோத்தா" என்பது
நாகரீகச் சொல்லாவே
பாவிக்கப்படுவதென்பது
பெண்ணடிமைத்தனத்தில் சேராதா ?
பெண்ணிழிவில் இவர்களும்
தன்பங்களிப்பை
செய்கிறவர்கள்தானே,
ஆங­
்கிலம்,இந்தி, வடமொழி,இன்னும் பிற
மாற்றுமொழிகள் தமிழ்மண்ணில்
வேறூண்றும்போதெல்லாம் எழும்
"தமிழ் இனி மெல்லச்சாகும்" என்கிற
ஆதங்க உணர்வு ஏன் தமிழ்க்
கெட்டவார்த்தைகளுக்கும்
பொருந்திப் பார்க்கப்படுவதில்லை,
கெட்டவார்த்தைகளென்ன அவ்வளவு
புனிதத் தன்மையினை தமிழில்
பெற்றிருக்கிறதா என்ன, அவ்வாறு
புனிதத் தன்மையினை
பூசியவர்கள் அனைவருமே
பெண்ணடிமையினை
ஆதரிப்பவர்களாகவே
பார்க்கப்படுவார்கள். வட்டாரத்
தமிழ்மொழி
கெட்டவார்த்தைகளிலும் புகுந்து
விளையாடுகிறதே இதனை ஏன்
தமிழுக்கும்,தாய்மைக்­­
கும்,பெண்ணினத்திற்கும்
விரோதமானதான பார்வை இங்கே
எழவில்லை. வடமாவட்ட தமிழ் புகும்
வார்த்தை "பாடு" என்பது
,விரோதத்தின் உச்சத்தில்
மனிதர்களை அழைக்கின்ற போது
"டேய் பாடு" எனச்
சர்வச்சாதாரணமாய்
உபயோகிக்கிறார்கள் .
தென்மாவட்டத்தில் இச்சொல்லாடல்
மாறுபட்டு "தாயோளி" என
மருவியிருக்கிறது.சொற்களில்
மட்டுமே வேறுபாடு
கொண்டிருந்தாலும் "பெற்றதாயை
அடுத்தவனுக்கு
கூட்டிக்கொடுக்கும் மகன்(ள்)"
என்பதே இரண்டு
சொற்களுக்குமான கெட்டவார்த்தை
அர்த்தமாகும் . இங்கேயும் மனித
இனத்தின் உயர்நிலை
"தாய்மையானது"
கொச்சப்படுத்தப்படுகிறதே எனும்
உருத்தல் ஏன்
எழவில்லை,பெண்ணடிக்கு
துணைபோன காரணத்தில்தானா
கெட்டவார்த்தை உபயோகிப்பவர்
மனதில் உருத்தல் எழவில்லை.

அதைப்போலவே "புண்டை , சிதி ,
கூதி , எனும் கெட்டவார்த்தைகள்
அனைத்தீம் "பெண்ணுறுப்பு"
பதமாக இருக்கிறது .
பெண்ணித்தின் உச்சந்தலை
தொடங்கி உள்ளங்கால் வரையிலான
வர்ணனைகளின் புகலிடமாக
கெட்டவார்த்தைகள் மேலோங்கி
இருக்கிறது . இதைவிடக்
கொடுமை தாய்மையின்
தன்மையான பெண்ணின
"முலைக்காம்பையும் "
இக்கெட்டவார்த்தைகள்
விட்டுவைக்கவில்லை .
இவைகளனைத்தும்
பெண்ணினத்திற்கான
தாக்குதலாகவும் , பெண்ணடிமை
போகச் சொல்லாடலெனவும்
தெரிந்தேதான் பயன்படுத்துகிறது
இந்த கேடுகெட்ட தமிழ்ச் சமூகம் .
கட்டுரை கட்டுரையாக
பெண்ணடிமை குறித்து
எழுதிவிட்டோ ,பேசிவிட்டோ
எங்களுக்கும் "கெட்டவார்த்தைகள்"
தெரியும் நாங்களும் அதனை
உபயோகப்படுத்துவோம் எனும்
தலைகணம் கொண்டவர்களுக்கு
மத்தியில் தான் இந்த பெண்ணினம்
அடிமை பட்டிருக்கிறது. அடுத்தவர்
உணர்ச்சிகளை
தூண்டுவிடுவதற்காக
கெட்டவார்த்தைகளை பயன்படுத்தி
தங்களின் தாய்,சகோதரிகளையே
கேவலப்படுத்துகிறார்கள் இவர்கள்.
இதுபோன்று இன்னும்
எத்தனையோ கெட்டவார்த்தைகள்
வட்டாரச்
சொல்லாடலாகவும்,பொதுச்
சொல்லாடலாகவும் தமிழ்ச்
சமூகத்தில் வலம் வருகிறது .
ஒட்டுமொத்த "கெட்டவார்த்தை"
சொல்லாடல்களுமே ஒன்றைத்தான்
ஆணித்தரமாக உணர்த்துகிறது ,
அது பெண்ணடிமையை போற்றி
வளர்த்தெடுக்கிறது. இதுபோன்ற
ஒட்டுமொத்த பெண்ணினத்தையே
இழிவுபடுத்தும் மற்றும்
அடிமைபடுத்தும்
கெட்டவார்த்தைகளை நம் தாய்தமிழ்
மொழிக்கெதிரான சமூகச்
சீர்கேடாக மனதில் ஏற்று
குறைந்தபட்சம்
"கெட்டவார்த்தைகளை" நாம்
தவிர்ப்பதென்பதுதான் நம்
பெண்ணினத்திற்கும் நல்லது நம்
தாய்த் தமிழுக்கும் நல்லது.
தயவுகூர்ந்து
"கெட்டவார்த்தைகளை"
நியாயப்படுத்தாதீர்கள் ,நாமனைவரும்
பெண்ணின தாய்மையின் வயிற்றில்
பிறந்தவர்கள் ,தாய்ப்பாலோடு
சேர்த்து தமிழ்ப்பாலை உறிஞ்சி
சுவைத்த நாமே
பெண்ணினத்திற்கு என்றும்
எதிரிகளாக உருபெறக்கூடாது.

Monday, April 20, 2015

ஏன் மறந்து போனோம்

ஒவ்வொரு அடியாக
நம் பாதம் தொடும்
பாதைகளின் அச்சு
மண்ணளவை
அளந்தவர்கள் இங்கே
ஏராளம்

ஏன் மறந்து போனோம்
ஒத்தையடி
பாதையில்
ஒத்துப்போகிறதா
நம் காலடி தடமென

தேடிப்பிடித்து
தெனாவட்டாய்
நடைபோடும்
சின்னஞ்சிறுசுகளின்
இதயத்தில்
வாழ விடுங்களேன்
அழியாத
நினைவுகளாய்

ஏன் மறந்து போனோம்
ஏர்பிடித்து உழுதோரின்
உள்ளங்கை பிடியில்
நழுவி
சேற்றுப்புழுதி யிலோடும்
மிச்சத் தண்ணீரின்
நடுவே பாலங்கட்டி
பயணப்பட்டோம்

ஏன் மறந்து போனோம்
பள்ளிக்கூட புத்தகப்பையானது
உச்சந் தலையில்
புதையுண்டு பெருச்சாலை
புதியதடம்
பதித்ததே

ஏன் மறந்துபோனோம்
எதுவும் மாறிடவில்லை
மனிதனைத் தவிர

கடந்து வந்த
பாதைகளை
நாமாகவே மறந்துபோனோம்
நினைவுகளில்
நிலைக்க மறுக்கிறதே
நிலையான
பாதையினை
நமக்களித்த
முன்னோரை

ஏன் மறந்து போனோம்!

நாம் தமிழர் கட்சி அறிவிப்பும் கொஞ்சம் வரவேற்பும்

சில தினங்களாக இணையத்திலும்,பொதுவில­ும் தந்தை பெரியாரை மிகவும்
கீழ்த்தரமாக அவமானப்படுத்தும் செயலில் நாம் தமிழர் கட்சியின்
பொருப்பாளர்களும்,தொண­்டர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.­ இந்நிகழ்வுகள்
ஒன்றும் புதிதானதல்ல ஏற்கனவே திராவிடத்தை எதிர்க்கிறோம் பேர்வழிகளென்று
பெரியாரை வடுகனென்றும்,வந்தேறி­யென்றும்,கன்னடவெறியன­ென்றும்,சாதிநாயக்கரெ­ன்றும்
தொடர்ந்து பரப்புரை செய்தவர்களிடம் வேறெதுவும் எதிர்பார்க்கமுடியாது­தான்
இருந்தாலும் தற்போது வெளியாகிருக்கின்ற தலைமை அறிக்கையானது இதிலிருந்து
சற்று மாறுபட்டிருக்கிறது. இதனால் நாம்தமிழர் கட்சியின் செயல்பாடுகளில்
சிறிதளவே வரவெற்கத்தக்கதாக அமைகிறது. காரணம் இன்னும் அவர்கள் பார்ப்பன
பிடியிலிருந்து வெளியேறவில்லை. அவர்களின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தே
இருக்கும்.
வெளியான அறிக்கை இதுதான்:

ஒரு முக்கிய அறிவிப்பு.
--------------------------------------------------------------
தலைமை அலுவலகம்,
நாம் தமிழர் கட்சி. 19-04-2015
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
சீரிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தமிழ்ச்சமூகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு,சாதி மத எதிர்ப்பு, பெண்ணடிமை
தகர்ப்பு,போன்ற பல்வேறு தளங்களில் தந்தை பெரியார் ஆற்றியுள்ள
பங்களிப்பினை என்றும் மிகவும் நன்றியுடன் நினைவு கூர்கின்ற நாம் தமிழர்
கட்சி, அவரை தனது பெருமைமிக்க வழிகாட்டிகளில் ஒருவராக வைத்து
போற்றுகிறது...
சமீப காலமாக இணைய வெளிகளில் பெரியார் தொடர்பான
கண்டிக்கத்தக்க,அருவருக்கத்தக்க, அவதூறு மிக்க பதிவுகள் உலவி வருவதை நாம்
கவனிக்கிறோம். மேற்கண்ட பதிவுகளில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலரின்
பங்களிப்பினையும் நாம் கண்காணித்து வருகிறோம். இந்துத்துவா-காவி அபாயம்
சூழ்ந்துள்ள இக்காலத்தில் தந்தை பெரியாரை இழிவுப்படுத்துகிற எச்செயலும்
இந்துத்துவா-காவி கும்பலுக்கு வலு சேர்க்கிற செயல்களாகவே அமைந்துவிடும்
என்பது உறுதி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்
தமிழ்த்தேசிய இன விடுதலைப்பாதையில் மாபெரும் வழிகாட்டியாக தந்தை பெரியார்
விளங்குகிறார் என்று நேற்று நடந்த அண்ணல் அம்பேத்கார் வீரவணக்க
பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களிலும் புகழாரம்
சூட்டி வருகிறார். கட்சியின் பொது கருத்தியல் இவ்வாறு இருக்க, தந்தை
பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிடும் எவரும் நாம் தமிழர்
கட்சிக்கு தேவை இல்லை எனவும், அவர்கள் கட்சியில் இருந்து விலகிக்
கொள்ளலாம் எனவும்,இந்த அறிவிப்பினையும்மீறி தந்தை பெரியார் குறித்த
அவதூறு செய்திகளை வெளியிடும்,பரப்பும், கீழமை வார்த்தைகளால்
விமர்சிக்கும் எவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கிட நாம் தமிழர்
இணையத்தள பாசறை பரிந்துரைக்கும்எனவும் இதன் மூலம் கண்டிப்பாக
அறிவிக்கப்படுகிறது.
கட்சியின் கட்டுப்பாட்டிற்கு, கட்சியின் பொதுநோக்க கருத்தியலுக்கு
விரோதமாக செயல்படுவோரை கண்காணிக்க இணையத்தள பாசறையின் நிர்வாகிகள்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள், அனைத்துப்பாசறை
பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள், ஆதரவாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த
அறிவிப்பு பொருந்தும்.
-மணி செந்தில்,சே.பாக்கியராசன்
இணையத்தளப்பாசறைதலைமைப் பொறுப்பாளர்கள்
நாம் தமிழர் கட்சி.

குறிப்பு : இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ள -மணி செந்தில்,சே.பாக்கியர­ாசன்
இணையத்தளப்பாசறைதலைமை­ப் பொறுப்பாளர்களிடம் பல வருடங்களாக
முகபுத்தகத்தில் விவாவதம் செய்திருக்கிறேன் இன்று வரையில் தோழர்
மணிசெந்தில்(வழக்குறை­ஞர்) மட்டுமே என்னுடன் நட்பில் நீடித்திருந்து
விவாத உண்மைகளை ஏற்று அரசியல் புரிகின்றார் .தோழர் பாக்யராசன் சே அவர்கள்
விவாதக் கேள்விகளுக்கும் அதற்கான பதிலுரைகளுக்கும் தக்கதான அரசியல்
முன்னெடுப்பில் பின்தங்கி கடந்த 2012ல் என்னை தடைசெய்துவிட்டுச் சென்றவர்
என்பது குறிப்பிடதக்கது.

இளைஞர்களை குறி வைக்கும் நில கையகச் சட்டம்

மத்தியில் ஆளும் இந்துத்துவ
பார்ப்பானிய மோடி அரசின் பல்வேறு
பொய்ப்பிரச்சாரங்களில­்
இதுவும் ஒன்று . என்னவென்றால் "நிலம்
கையகப்படுத்துதல் சட்டமானது அமலுக்கு
வந்தால் இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்"
நாக்கூசாமல் எப்படி இவர்களால் பொய்யை
பரப்ப முடிகிறது என ஆச்சர்ப்பட
தேவையில்லை ஏனெனில் பொய்யை
உண்மையெனச் சொல்லியே ஆட்சி
பிடித்தவர்கள்தானே ஆளும்
ஆர்எஸ்எஸ்ஸான பிஜெபி. உண்மையில்
நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின்
மூலமாக பயனடைவது முதலாளித்தவ
கார்ப்பரேட் கம்பெனிகளும் அதுபோடும்
எலும்புத்துண்டுகளை கவ்வும் அடிமை
அரசுகளேயாகும் . இந்நில கையக
சட்டத்தினை பற்றி அனுபவத்தின்
வாயிலாக எழுதிவிட வேண்டுமென்று
எண்ணம் தோன்றும் போதெல்லாம் எனக்கு
நானே தடையாக இருந்தேன் காரணம்
இப்பதிவும் எப்படியும் கவனிக்கப்படாத
சமூகப் பதிவாகவே கடந்து செல்லுமென
தெரிந்து போனதால் ,,, ஆனால் என்றேனும்
ஒருநாள் இவ்வனுபவம் பேசுமென்கிற
நம்பிக்கையில் எழுதும் தருணத்தை
கட்டாயப்படுத்தி எனக்குள்ளே
ஏற்படுத்துக்கொண்டேன்.நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தின்
முதற்செயல்பாடு மக்களின் அத்யாவசிய
தேவைகளுக்காக அரசோ அல்லது அரசும்
தனியாரும் இணைந்த பொதுத்துறை
நிறுவனங்களோ நலத்திட்ட பணிகளுக்காக
மக்களிடம் நிலம் கோரப்பட்டு அந்நிலத்தை
பயன்படுத்தும் முழு அதிகாரத்தை அரசோ
அல்லது பொதுத்துறை நிறுவனங்களோ
பெரும் நிலவுரிமையாகும் . உதாரணமாக
சாலைகள் அமைத்தல் தொழிற்சாலைகள்
அமைத்தல்,போன்ற இன்னபிற
பணிகளுக்காக அரசே நிலம்கோரும்
உரிமையை எடுத்துரைக்கும் சட்டம் நிலம்
கையகச் சட்டம்.
மேற்பார்வைக்கு நல்லதொரு சட்டமாக
திரிபுநிலை பெற்றிருக்கும்
இச்சட்டத்தில் மக்களின் மீதான ஆதிக்க
ஒடுக்குமுறைகள் எண்ணிலடங்காதவாற
ு எழுதப்பட்டும் திருத்தப்பட்டும்
திணிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட
துபோல இச்சட்டத்தினை செயல்படுத்த
முதலாளித்துவ ஏகாதிபத்திய
கார்ப்பரேட்டுகள் ஏன் துடிக்கிறார்கள்
என்பதற்கான காரணத்தை
அலசத்தேவையில்லை உற்று
கவனித்தாலே அவ்வுண்மை
புலப்படும்.அனுபவம் இனி மெல்லப்
பேசும் :
மக்கள் விரோத போக்கிற்கு இரு தேசிய
கட்சிகளுமே ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லை என்பதை நாமறிவோம்
அதைப்போலவே அன்றைய வாஜ்பாய்
அரசின் பெருந்திட்டக் கனவான "தங்க
நாற்காலி திட்டம்" காஷ்மீர் முதல்
கன்னியாக்குமரி வரையிலான அகல
நான்கு வழிப்பாதை அமைப்பதான திட்டம்
அடிகல் போடப்பட்டு பின் வந்த
காங்ரஸானது அதனை செயல்படுத்தியது
என்பதனை நாமறிவோம் . மக்களின்
பயணச்சுமையினை குறைக்கும்
நற்திட்டமாக இத்திட்டத்தினை
எடுத்துக்கொள்ளலாம்.ஆனால்
உறிஞ்சப்பட்ட மக்களைப் பற்றி எப்போதும்
நாம் சிந்திக்கவில்லை என்பதே
கவலையளிக்கிறது . ஒரு சாலையை
மிதிக்கப்படும் போது அச்சாலையை
உறுவாக்க முதலாளித்துவ
ஏகாதிபத்தியர்கள் எண்ணிலடங்கா
ஏழைகளின் வயிற்றில் மிதித்து குருதி
குடித்தார்கள் . இதுபற்றி நமக்கேதும்
கவலைகள் ஏற்படவில்லையே என
ஆதங்கப்படுகிறது மனம்.இதன்
காரணமாகத்தான் இச்சட்டத்தின்
நியாயப்படுத்துதலை பலர்
முன்னெடுக்கிறார்கள்.
தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை-
திருச்சி வரையிலான தங்க நாற்காலி
திட்டம் அமலாக்கப்படுத்தப்பட்ட நேரமது ,
இரண்டு தேசியநெடுஞ்சாலைகள்
(NH45,NH66) ஒன்றாக இணையும்
திண்டிவனத்தில் எங்களின் பகுதியாக
அச்சாலையமைக்கும் பணியானது
செயல்படுத்த முடிவானது. முதலில்
பணச் செல்வந்தர்கள் அங்கம் வகிக்கும்
நிலத்தினை கையகப்படுத்தப் போவதாக
உரியவர்களுக்கு தக்க அறிவிப்பு
கொடுக்கப்பட்டது ஆனால் பயனில்லை
முதலாளித்துவர்கள் தங்களின் ஆதிக்க
பணபலத்தால் எதிர்த்து அவரவர்
நிலங்களை தக்கவைத்துக்கொண்டார்கள்.
பிறகு பெரும்பான்மையான
வறுமைகோட்டிற்கு கீழே வாழும் எங்கள்
பகுதியின் மீது ஏகாதிபத்தியர்களின்
பார்வை விழுந்தமையால் நிலம்
கையகப்படுத்தப்போவதாக எவ்வித
முன்னறிப்புமின்றி திடீரென்று செய்தி
வெளியாகி அதற்கான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டது. அரசில் தொடங்கி
நீதித்துறை வரையிலான முதலாளித்துவ
ஆதிகத்தை எதிர்த்து ஒன்றும்
செய்யமுடியாத கையறு நிலையிலேயே
வறுமையின் பிடியிலுள்ள மக்கள்
இருந்தார்கள். ஒருவழியாக அன்றைய காங்ரஸ் ஏழை
எளியோரின் நிலத்தை கையகப்படுத்துவத
ில் வெற்றியும் பெற்றது. 90களில்
பிஜெபியால் கொண்டுவந்த தங்க
நாற்காலித் திட்ட நிலபறிப்புக்கு
நிலத்திற்கான மதிப்பினை 2007ல்
காங்ரஸ் செயல்படுத்தியது கிட்டத்தட்ட
பதினேழு ஆண்டுகளுக்கான
நிலமதிப்பை இழந்தே ஏழை எளியோர்கள்
இழப்பீட்டுத் தொகையினை பெற்றார்கள் .
அதனையும் முழுமையாக அரசானது
வழங்கிடவில்லை பல்வேறு
இடைத்தரகர்கள் லஞ்சத்தில் ஊறியவர்கள்
போக சொற்பமான தொகையையே அம்மக்கள்
பெற்றார்கள் அதுவும் தவணை
முறையில்,அதற்கும் சில போராட்டங்களை
எடுத்துச்செல்லும் சூழலுக்குத்
தள்ளப்பட்டார்கள். இறுதில் வரிசையாக
நிலமிழந்தவர்கள் அப்போதைகான
இருப்பிடங்களைத் தேடி அலைவதிலேயே
இன்றளவும் காலத்தை
செலவிடுகிறார்கள் என்பதை யாரும்
கவனிக்கப்போவதில்லைதான்.
விளைநிலங்களையும்,குடி
சைமனைகளையும் நிலம் கையக
சட்டத்தால் பிடுங்கிய முதலாளித்துவ
அரசானது எவ்வித முன்னறிப்புமின்றி
அவ்வேழை எளியோர்கள் உரிய மாற்று
இருப்பிடம் தேடியலையும் முன்னரே
நிலத்திலுள்ள குடிசை வீடுகளை அகற்ற
ஒரு விடியற்காலையை தேர்ந்தெடுத்து
யாருக்கும் தெரியாமல் நிலச்சீர்
வண்டியினை(JCB எனப்படும் ஃபுல்டௌசர்)
வரிசையில் நிறுத்தி உடனடியாக
நிலத்தை விட்டு வெளியேறுமாறு
அறிவுறுத்தி கட்டளை பிறப்பித்தது. 56
குடும்பங்களின் சார்பாக 19 வயதில் நான்
தலமையெற்ற முதல் போராட்டம் அதுதான்.
உயிரை பணயம் வைத்து அணிவகுத்து
நின்றிருந்த நீலச்சீர் வண்டியின் கீழே
படுத்து "எங்களை ஏற்றிவிட்டு பிறகு
நிலங்களை எடுத்துக்கொள்"என்று
முழக்கமிட்ட தருணத்தை இன்றும்
எங்களால் மறக்கமுடியாது. போராட்ட
வெற்றியின் காரணமாக
அணிவகுத்திருந்த வண்டிகள்
பின்தள்ளப்பட்டது. பிரச்சனைகள்
மெம்மேலும் புதுப்புது வடிவங்களாக
உருபெற்றது.கொலைமிரட்டலில் தொடங்கி
பணபேரத்தில் வந்துநின்ற
பிரச்சனைகளுக்கு மத்தியில்
சமூகநீதியே வென்றது. அதன்பிறகு 15
நாட்கள் அவகாசம் கொடுப்பதாக நிலத்தை
பிடுங்கியவர்கள் தெரிவித்தார்கள்.
போதாதென்று மீண்டும் தொடங்கியது
போராட்டம். இறுதியாக எங்களின்
மூன்றுமாத கால அவகாச
கோரிக்கையினை முதலாளீத்துவ
ஏகாதிபத்தியர்கள் ஏற்றார்கள்.நிலத
்திற்கான உரிய மதிப்பினையும் இழந்து
நிலத்தின் மீதான உரிமையையும்
இழந்து, விவசாய விளைநிலங்களையும்
இழந்து வீதியில் நிற்கும் ஏழை
எளியோர்களின் உரிமைகளை
தக்கவைத்துக்கொள்ளவே பல்வேறு
போராட்டங்களை முன்னெடுக்க
வைக்கிறது முதலாளித்துவ கார்ப்பரேட்
அரசு. இதுபற்றி எவ்வித கவலையோ
வறுத்தமோ இல்லாத முந்தைய
போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலுவும்
சாலையை திறப்பதற்கு மட்டும்
வந்துவிட்டு கடமை முடிந்ததெனவும்
கிளம்பிவிட்டார். எத்தகைய ஊழல்
நடந்திருக்கிறதென்பது நாட்டிற்கே
வெளிச்சம். அவ்வாறு இருக்கையில்
தற்போது ஆட்சியிலிருக்கும் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி அரசானது, நில
கையக சட்டத்தின் மூலம்
இளைஞர்களுக்கு வேலைவாய்பானது
அதிகரிக்கும் என்று குற்ற உணர்வு
கொஞ்சம் கூட இல்லாமல் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி பிரச்சாரம் செய்வது
மிகவும் கண்டிக்கத்தக்கது. நிலமிழந்த
எங்களின் 56 குடும்பங்களில் சுமார்
இருபது இளைஞர்களின் (என் வயதொத்த)
வாழ்வினை கேள்விக்குறியாக்கியதே
அன்றைய காங்ரஸூம் பிஜெபியும்தானே,
இந்த நில கையக சட்டத்தின் மூலம்
பெரிதும் பயண்பெறும்
பணமுதலைகளான முதலாளித்துவ
கார்ப்பரேட் அரசுகள் என்றேனும்
ஒருதடவையாவது மக்களைப் பற்றி
சிந்திக்கிறார்களா? என்றால் நிச்சயமாக
இல்லையென்றேச் சொல்லலாம் . பிரதமராக
வலம் வரும் இந்துத்துவ பார்ப்பானிய
மோடியே இவர்களுக்கான பெரும் அரணாய்
விளங்குகிறார். குற்றவாளிகளை
ஆளச்செய்திடும் குடியரசு மக்களல்லவா
நாம். சிந்திக்க மறந்து இன்றும்
சீரழிந்துக்கொண்டிருக்கிறோம்.இந்த
மண்ணை நேசிப்பவர்களாக நாம் எப்போது
உருமாறப்போகிறோம் சமூகத்து
அவலங்களை இப்போதேனும் வாய்திறந்து
பேசி வேண்டாம் நில கையகச் சட்டமென
போராட்டத்தினை முன்னெடுக்கும்
காலச்சூழலை நாம் பெற்றிருக்கிறோம்
என்பதனை மறந்துவிடக்
கூடாது.இறுதியாக சமூகத்திற்கு
தேவையான தேவைகளை நாம்
பூர்த்திசெய்து அதனை புகழ்ந்து
வரவேற்பதில் எத்தவறுமில்லை ஆனால்
அத்தேவைகளால் இழந்த இழப்பீட்டு
மக்களையும் நாம் நினைவுக்கூறுதல்
வேண்டும்.இழந்த குடிசைகள்,விவசாய
நிலங்கள்,ஏரிகள்,குளங்கள்,இன்னும்
எத்தனையோ உரிமைச் சொத்துக்களின்
மீதுதான் நீங்கள் பயணப்படும் சாலைகள்
அமையப்பெற்றன. இழப்பினை என்றுமே
நினைவிலேற்றி அதற்காகவும் கொஞ்சம்
வருத்தப்படுங்கள் என்பதே என்
தாழ்மையான வேண்டுகோளாக
இருக்கிறது.வேண்டாம் எங்களுக்கு நிலம்
கையகப்படுத்தும் சட்டம்.

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...