Thursday, April 30, 2015

24 மணிநேரமும்

கல்லெறிந்த
நதியில் கானக்குயிலோசை
காதல்
நினைவுகளாக

___

செடி
நட்டயிடம் தெரியவில்லை
இங்கே
வாருங்களேன் பறவைகளே!

___

பட்டத்து யானை வீதியில் பிச்சையெடுக்கும் நாடோடிகளாய்!

___

இலை சேர துடிக்கிறது புதுவரவு தளிர்களுக்கு தாயாக இன்னும் வாழ்ந்திட
வேண்டும் மரங்கள்,,,

___

ஆடையில்லா குடிசையில் கசிந்த குருதி கருணை மறந்து விதி விளையாடியதாம் ஏழையினடத்தில்

____

காய்ச்சலோடு
விடிந்த காலை
மருந்துண்ண
பணமில்லை
இருபத்து நான்கு
மணிநேர
சேவை வேண்டும்
அடகு கடைகளுக்கு

___

உருட்டும்
பூனை
நிம்மதி உறக்கும்
மிச்ச சாம்பலை
பூசிக்கொள்கிறது
பசி

____

குடி மூழ்கி
கடலில்
சங்கமிக்கிறது
என்றோ
கரையொதிங்கிய
படகொன்று
ஈரத் துணியில்
மீனவன்

___

கங்கையில்
புனித நீராடல்
பாவ மன்னிப்பு
கோரும்
மனுக்கள்
அழுக்குகளாய்
அப்படியே
கழிவு நீராக

_____+_____

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...