Monday, April 20, 2015

ஏன் மறந்து போனோம்

ஒவ்வொரு அடியாக
நம் பாதம் தொடும்
பாதைகளின் அச்சு
மண்ணளவை
அளந்தவர்கள் இங்கே
ஏராளம்

ஏன் மறந்து போனோம்
ஒத்தையடி
பாதையில்
ஒத்துப்போகிறதா
நம் காலடி தடமென

தேடிப்பிடித்து
தெனாவட்டாய்
நடைபோடும்
சின்னஞ்சிறுசுகளின்
இதயத்தில்
வாழ விடுங்களேன்
அழியாத
நினைவுகளாய்

ஏன் மறந்து போனோம்
ஏர்பிடித்து உழுதோரின்
உள்ளங்கை பிடியில்
நழுவி
சேற்றுப்புழுதி யிலோடும்
மிச்சத் தண்ணீரின்
நடுவே பாலங்கட்டி
பயணப்பட்டோம்

ஏன் மறந்து போனோம்
பள்ளிக்கூட புத்தகப்பையானது
உச்சந் தலையில்
புதையுண்டு பெருச்சாலை
புதியதடம்
பதித்ததே

ஏன் மறந்துபோனோம்
எதுவும் மாறிடவில்லை
மனிதனைத் தவிர

கடந்து வந்த
பாதைகளை
நாமாகவே மறந்துபோனோம்
நினைவுகளில்
நிலைக்க மறுக்கிறதே
நிலையான
பாதையினை
நமக்களித்த
முன்னோரை

ஏன் மறந்து போனோம்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...