Wednesday, April 22, 2015

ஆமாம்!!எங்களுக்கு வைரமுத்துவையும் தெரியாது ஜெயகாந்தனையும் தெரியாது

இன்னும் என்னென்ன சர்ச்சைகளுக்குள் மாட்டி சீரழியப்போகிறதோ இந்த
தமிழ்ச்சமூகம் என பயப்படும் அளவிற்கு ஊடகங்கங்களும் அவ்வூடகங்களுக்கு
தீனிபோட்டுக் கொண்டிருக்கும் இலக்கிய ஜாம்பவான்களும் சமூகத்திற்கு
என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது புலப்படவேயில்லை. குமுதம்
வெளியிட்டிருக்கின்ற வைரமுத்து அவர்களின் தற்பெருமைக்கு ஜெயகாந்தன்
அவர்களின் மகள் கொடுக்கும் பதிலடி இலக்கிய மோதலாகவே உறுமாறியிருக்கிறது.
இலக்கியம் தாண்டி வைரமுத்து அவர்களும் ஜெயகாந்தன் அவர்களும் மேற்கொண்ட
சமூகப் பாதைகளை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
பொதுவாகவே இலக்கியத்தில் புலமைபெற்றவர்கள் எழுப்பும் அதே இலக்கிய மோதலான
சர்ச்சைகள்தான் தற்போது கிளம்பியிருக்கும் சர்ச்சைகள் என
எடுத்துக்கொள்ளலாம்.
கவிப்பேரரசு என வர்ணிக்கப்படும் கள்ளிக்காட்டு புதல்வனான வைரமுத்து
அவர்கள் தான் என்னதான் திராவிடத்தில் பங்கு பெற்றாலும் தன்சாதிப்பெருமையை
உயர்த்திப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பவர் . குறியீடுகளை ஆங்காங்கே
விதைத்த வைரமுத்து அவர்களின் சாதியப்பற்றினால் புகழின் உச்சிக்கு
புகழ்ந்தும் தள்ளிவிடுகிறார்கள் இந்துத்துவ பற்றாளர்கள்.

சென்ற ஆண்டில்(2014) கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்ட "
பத்மபூஷன்" எனும் உயர்விருதிற்கான பட்டியலில் "வைரமுத்து ராமசாமி தேவர்"
என தனது பெயருக்குப் பின்னால் சாதியத்தை பூசிக்கொண்டதென்பது அவரின்
சம்மதத்தின் பேரில் தானே நிகழ்ந்தது. பெயர்பட்டியலில் இன்ன பெயர்தான்
இடம்பெற வேண்டுமென்பது அவரின் ஆதிக்கச்சாதியத்தை அளவிடுகிறதே,

அம்மாவுக்கொரு கடிதம்" என்கிற தலைப்பில் " அவிழ்த்துவிடப்பட்ட அந்த
கவிதையில் "பொன்னையா தேவனுக்கு,,," என்றெழுதி தன் தாயின் தகப்பனாவன்
ஆதிக்க "தேவர்" சாதியில் பிறந்தவள் அதனால் தானொரு "தேவர்" சாதிக்காரனென
ஆதிக்கச் சாதியத்தை சுட்டிக்காட்டி ஆண்டச்சாதியென குறிப்பிடுவதென்பது
திராவிடத்திற்கெதிரான­தென உறுத்தவில்லையா கவிப்பேரரசிற்கு,,,

https://­m.youtube.com /­watch?v=IHHpa2in-
_g&i­tct=CBEQpDAYBiITCNDj­z- uOisUCFUI8vgod1ycA­FzIHcmVsY
XRlZEjG3bOo­k7OZsn8%3D& gl=IN&hl=­en-GB&client=mv- goog­le

(லிங்க் வேலை செய்யவில்லையெனில் Vairamuthu kavithai என்றும் ஆயிரம் தான்
கவி சொன்னேன் என்றும் youtube தேடுபொறியில் பதிவிடவும்)

போலவே சிறுகதை ஜாம்பவான் என்று தமிழ்ச்சமூகம் போற்றிப் புகழ்ந்து
கொண்டாடும் ஜெயகாந்தன் அவர்கள் ஆரம்பகால கட்டங்களில் திராவிடத்தில்
அங்கம் வகித்து அதன்பின்னான சூழலில் திராவிடம் தமிழை புறந்தள்ளுகிறதெனும்
பொய்யுரையால் இந்துத்துவ பார்ப்பானியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது
மீண்டும் பிற்போக்குத் தனங்களுக்கு தன்னை அற்பணித்துக் கொண்டோமென்கிற
உறுத்தல் உறுவாகவில்லையே ஜெயகாந்தனுக்கு,,,
அகிம்ஸையை கடைபிடித்து இழந்தோம் ஈழத்து திலீபனை என்பதனால் ஆயுதமேந்துவதே
ஈழத்திற்கான விடுதலை என்று சூருளுத்து ஈழத்து விடுதலைக்காகவும் ஈழ
மண்ணிற்காகவும் இத்தமிழ்மண்ணில் வீரத்தை ஊட்டிய எங்களின் ஈழப்போராளி
"மேதகு பிரபாகரன்" அவர்களின் சீரியச் சிந்தனையால் முளைத்த "விடுதலைப்
புலிகள் " எனும் உலகமதிறும் படையை பற்றி கொஞ்சமும் நாக்கூசாமல் "தீவிரவாத
இயக்கும்" என்றும் விடுதலைப்புலிகளால் தான் ஈழமக்கள் அழிந்தார்கள்
என்றும் சொல்லத்துணிந்த ஜெயகாந்தனுக்கு காந்திய அகிம்ஸை சிங்களவனால்
என்றோ அழிக்கப்பட்டுவிட்டெத­ும் உண்மை நிச்சயமாக தெரிந்திருக்கும்.
அப்படியிருந்தும் அப்பொய்யுரையை எப்படி இவரால் பரப்ப முடிந்தது.
தமிழிலக்கியம் எந்தளவிற்கு எங்களுக்கு முக்கியமோ அதே அளவிற்கு ஈழ
இலக்கியம் எங்களின் இருகண்களாக முக்கியப்படுத்துகின்­றோம். ஒவ்வொரு ஈழ
இலக்கியத்திலும் வாழ்கிறார்கள் எங்களின் ஈழப்புரட்சியாளர்கள்.

01.09.1990 அன்று சென்னையில் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் செயலாளர் க. பத்மநாபா அவர்களின் நினைவு அஞ்சலிக்
கூட்டத்தில் எங்களின் உயிரினும் மேலான விடுதலைப் புலிகளின் மீது எப்படி
உங்களால் குற்றம் சுமத்த முடிந்தது.

https://­m.youtube.com /­watch?v=-dWp_VhOGww&
i­tct=CDMQpDAYAyITCMqf­t9OMis UCFUWQvgod- lgA­mVISamF5YWthbnRoYW4g­c
3BlZWNo&client=mv-g­oogle& hl=en-GB&gl=IN

(லிங்க் வேலை செய்யவில்லையெனில் Commomeration Meeting for EPRLF Leader
K Pathmanabha என்றும் Jeyakanthan speech என்றும் Youtube தேடுபொறியில்
பதிவிடவும்)

இவைகளனைத்தையும் புறந்தள்ளிவிட்டு இலக்கிய உலகின் பேரரசர்களாக
பாவித்துக்கொள்கிறோம்­ என்றால் தமிழின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும்
நாங்கள் வைத்திருக்கின்ற அளவுகடந்த அன்பினால் மட்டுமே,,,
கவிப்பேரரசராகட்டும் இன்னும் பல கவிச்சொந்தங்களாகட்டு­ம் தமிழுக்காக
உண்மையிருந்து "தற்பெறுமையிலிருந்து­ம்,ஊடகமோகத்திலிருந்த­ும்,
போலிப்புகழினை வலிய பெறுவதிலிருந்து வெளிவர வேண்டுமென்பதே இந்த சமாணிய
இலக்கிய காதலர்களின் வேண்டுகோள். கவனிப்பார்கள் எம்மின இலக்கியப்
பேரரசர்கள்.

3 comments:

  1. Link 1 Vairamuthu

    https://m.youtube.com/watch?v=IHHpa2in-_g&itct=CBEQpDAYBiITCNDjz-uOisUCFUI8vgod1ycAFzIHcmVsYXRlZEjG3bOok7OZsn8%3D&gl=IN&hl=en-GB&client=mv-google

    ReplyDelete
  2. Link 2 Jeyakanthan

    https://m.youtube.com/watch?v=-dWp_VhOGww&itct=CDMQpDAYAyITCMqft9OMisUCFUWQvgod-lgAmVISamF5YWthbnRoYW4gc3BlZWNo&client=mv-google&hl=en-GB&gl=IN

    ReplyDelete
  3. correctly pointed about their originality.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...