மனதினை இலகுவாக்கினேன்
அவளைக்
கண்டநாள் முதலாய்
என் மனத்தோட்டத்தில்
புதுவரவாகிப் போன
பூக்களுக்கினி
விருந்துதான்
பட்டாம்பூச்சிகள்
உடலெங்கும்
ஊஞ்சலாடுகிறது
இறுகிய மனம்
இளகிய மனமானதில்
மாலையிட
மாட்டாயோ
மயில்தோகை
விரிய
மழையினை
தூதிற்கு
அழைக்க மாட்டாயோ
காதல் மயக்கத்தில்
கண்டதையெல்லாம்
கனவினில்
உளறுகிறேனாம்
மழை வருமுன்னே
கார்மேகம்
திரள்வதுதானே
முறை
தெரியாதவர்க்கு
தெரியப்படுத்த
போயிருக்கும்
என்னிரவுக்
கனவினை
நீயும் நுகர்ந்துவிடேன்
நுழைவு வாசலை
திறந்தே வைத்திருக்கிறேன்
திகட்டாத
காதலுக்குள்
நீயும் நுழைந்துவிடேன்
மகரந்தம் சுமந்து
வரும் வண்டுகளை
சுமையாக
எண்ணினாயோ
மலர்கள் சுடுகிறதே
சுட்டாலும்
சுகமெனக்கு
மரங்களை விதைக்கும்
மகரந்தத்திலேதான்
என் காதலும்
கலந்திருப்பதை
என்றுதான்
அறிவாயோ
எத்தனைநாள்
நானும்
ஏமாற்றத்தை
ஏந்தியிருப்பேனோ
யுகங்கள்
கடந்து போனாலும்
காதலை தொலைக்கவில்லை
நானும்
தொலைதூரத்தில்
நீயிருந்தாலும்
தொடுதூரத்தில்
இருப்பதாகவே
இன்னமும்
எனதுள்ளம்
ஏகாந்தம் பேசுகிறது
என்றேனும் என்காதல்
உன் காலடிதேடி
வரும்
நீயுமென் காதலை
மிதிக்காமல்
மீட்டெடுப்பாயெனும்
நம்பிக்கையில்
நகரமுடியாமல்
நானும்
நகரவீதியில்
காத்திருக்கிறேன்
ஒருநாள்
இனிப்புச் செய்தியாக
சம்மதம் வருமென்று
சாரலில் பூத்த
புதுமலராய்
நானுமின்னும்
காத்திருக்கிறேன்
அவளைக்
கண்டநாள் முதலாய்
என் மனத்தோட்டத்தில்
புதுவரவாகிப் போன
பூக்களுக்கினி
விருந்துதான்
பட்டாம்பூச்சிகள்
உடலெங்கும்
ஊஞ்சலாடுகிறது
இறுகிய மனம்
இளகிய மனமானதில்
மாலையிட
மாட்டாயோ
மயில்தோகை
விரிய
மழையினை
தூதிற்கு
அழைக்க மாட்டாயோ
காதல் மயக்கத்தில்
கண்டதையெல்லாம்
கனவினில்
உளறுகிறேனாம்
மழை வருமுன்னே
கார்மேகம்
திரள்வதுதானே
முறை
தெரியாதவர்க்கு
தெரியப்படுத்த
போயிருக்கும்
என்னிரவுக்
கனவினை
நீயும் நுகர்ந்துவிடேன்
நுழைவு வாசலை
திறந்தே வைத்திருக்கிறேன்
திகட்டாத
காதலுக்குள்
நீயும் நுழைந்துவிடேன்
மகரந்தம் சுமந்து
வரும் வண்டுகளை
சுமையாக
எண்ணினாயோ
மலர்கள் சுடுகிறதே
சுட்டாலும்
சுகமெனக்கு
மரங்களை விதைக்கும்
மகரந்தத்திலேதான்
என் காதலும்
கலந்திருப்பதை
என்றுதான்
அறிவாயோ
எத்தனைநாள்
நானும்
ஏமாற்றத்தை
ஏந்தியிருப்பேனோ
யுகங்கள்
கடந்து போனாலும்
காதலை தொலைக்கவில்லை
நானும்
தொலைதூரத்தில்
நீயிருந்தாலும்
தொடுதூரத்தில்
இருப்பதாகவே
இன்னமும்
எனதுள்ளம்
ஏகாந்தம் பேசுகிறது
என்றேனும் என்காதல்
உன் காலடிதேடி
வரும்
நீயுமென் காதலை
மிதிக்காமல்
மீட்டெடுப்பாயெனும்
நம்பிக்கையில்
நகரமுடியாமல்
நானும்
நகரவீதியில்
காத்திருக்கிறேன்
ஒருநாள்
இனிப்புச் செய்தியாக
சம்மதம் வருமென்று
சாரலில் பூத்த
புதுமலராய்
நானுமின்னும்
காத்திருக்கிறேன்
0 comments:
Post a Comment