Thursday, April 30, 2015

அவனுக்கு தாயான இயற்கையன்னை

அமைதியின்
அணிவகுப்பாய்
தெருக்களெங்கும்
தேங்கி கிடக்கும்
நிசப்த அலைகளில்
அவன் மெதுவாய்
அண்ணநடை
போடுகிறான்

அழைப்பிதழ்
யாருக்கும்
தரவில்லை
அவன்

இருந்தும் அவனது
இன்ப மயமான
வரவேற்பிற்கு
வந்து சேரும்
இளங்காற்றிற்கு
முகமலர்ந்து
விருந்தோம்பல்
புரிகிறான்

புரியாத புதிர்கள்
ஒவ்வொன்றாய்
புலப்படுகையில்
பூமித் தாயின்
மடியில்
உறங்கி விட
துடிக்கிறான்
அவன்

அனைத்தும்
அவனுக்கு
முன்னால்
அணிவகுத்து
நிற்க

புதியதொரு
பறவையின்
சிறகாய்
பறக்க துடிக்கிறான்
பாவங்கள்
எதுவும் செய்துவிட
தோன்றவில்லை
அவனுக்கு

அவனுக்கொரு
உலகம் அமைத்தான்
அவனும் அதிலொரு
குழந்தையாய்
தாலாட்டும் இயற்கையின்
மடியில்
தவழ்கிறான்

இப்போதே
தூங்கிவிட
தோன்றிய மனதின்மேல்
கோபம்
அவனுக்கு

அது பொய்க்கோபமென
தெரிந்தே
தேவதையாகிறான்
அவன்

அவனொரு ஆண்தேவதேதான்
இயற்கைத்
தாய்க்கு
இனியும் எதுவும்
தேவையில்லை

அவனொருவனே
போதுமென
போதிக்கும்
அடிமனதிற்கு
அடிமையாகித்தான்
போனதந்த
இயற்கை அன்னை,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...