ஒரு போலியான போராட்ட நிகழ்வுகளுக்கு உலகை உலுக்கிய போராட்டமென சப்பைகட்டு கட்டும்
ஊடகங்களுக்கு தீணி போடும் அதேபானியிலான இந்துத்துவ பார்ப்பானியத்தின் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் சமூகம்தான்
நம்முடையது."சென்னை ஐஐடி" இந்தப்பெயரை கேட்டாலே அவலங்கள் நிறைந்த அதுவொரு தனிவுலகமான பார்வையை அவர்களாகவே
உறுவாக்கி வைத்துள்ளார்கள் என்பது நிதர்சன உண்மை, இந்துத்துவ பார்ப்பானியத்தின் பிடியில் என்றோ சிக்கிக்கொண்ட சென்னை
ஐஐடியை பிறகெந்த கண்ணோட்டத்தில் பார்க்கவியலும்.அதெல்லாம் ஒன்றுமில்லை அவர்களும் சமூகநல்லிணக்கத்திற்காக முத்த போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்களே என்று
வக்காளத்து வாங்கும் பிற்போக்காளர்களுக்கு ஐஐடியில் பெரும்பான்மையாக
பார்ப்பனர்களும்,பெரும் முதலாளித்துவர்களும்
மட்டுமே படிக்கும் மத்திய அரசின் பெயரிலான கார்ப்பரேட் நிறுவனமென்பதை உணர்த்தியாக வேண்டியிருக்கிறது.சென்ற ஆண்டு (2014) நவம்பரில் நிகழ்த்தப்பட்ட கலாச்சார கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும்
செயற்பாடுகளை கண்டிக்கும் விதமாக இந்தியா முழுதும் நடைபெற்ற முத்த போராட்ட நிகழ்வினை தமிழகத்தில் தொடங்கிவைத்திருந்தது சென்னை
ஐஐடி நிறுவனம் .இந்துத்துவ பார்ப்பானிய பெருமுதலாளித்துவ மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட இப்போராட்டத்திற்கு அவர்களை
போன்றே ஆதிக்கத்தில் இடம்பெற்றிருந்த பல்வேறு
தரப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க உடனே இதுவொரு மிகப்பெரும் புரட்சிப்போராட்டென ஊடகங்களும் சப்பை கட்டு கட்டியிருந்தது.
இதில் வேடிக்கை என்னவெனில் கலாச்சார கண்காணிப்பும் இவர்களே நிகழ்த்துவார்களாம் அதற்கெதிரான போராட்டத்தையும் இவர்களே
முன்னெடுப்பார்களாம் (அதாவது இந்துத்துவ பார்ப்பானியம்,மற்றும் பெருமுதலாளித்துவம்) இது புதிதான செயல்பாடில்லை ஆண்டாண்டு காலத்தில் அவர்களின் ஆதிக்க யுக்தி அதுவாகத்தான் இருக்கிறது.தற்போது எழுந்துள்ள ஓர் உரிமை மீறல் அல்லது உரிமையை பறித்தலுக்காக மேற்கண்ட ஒரு போலி புரட்சிக்காக வக்காளத்து வாங்கிய அவ்வெகுசன
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தயாரா? என்றால் உடனே தமக்கே உரித்தான
பின்வாங்குதலையையே பயன்படுத்துகிறார்களே ஏன்? அச்சமா? தம்மாலே வழிநடத்தப்படும் காலாச்சார கண்காணிப்பில் தடை
ஏற்பட்டுவிடப்போகிறது ! என்கிற அச்சத்தினால் மட்டுமே அவர்கள் பின்வாங்குகிறார்கள் என்பது
தெளிவு."அம்பேத்கர் பெரியார் வாசிப்பு மாணவர் வட்டம்" என்ற ஐஐடி மாணவரமைப்பை தடைசெய்து
அவ்வமைப்பு மாணவர்கள் மீது பல்வேறு போலிகுற்றச்சாட்டுகளையும்,கல்விபறித்தலையும் ஐஐடி நிர்வாகம் செய்துள்ளது. இந்நிகழ்வு உரிமை மீறலென்றும், சமூகநீதி
அத்துமீறலென்றும் மேற்கண்ட இந்துத்துவ
பார்ப்பானிய பெருமுதலாத்துவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருந்தாலும் மவுனத்தோடும், ஆதிக்கத்தை நிலைநிறுத்த அதுவொரு சரியான
நடவடிக்கையென்றும் வாதிடுவதுதான் அவர்களின் பணியாக இருக்கும். காரணம் அவர்களின் ஆதிக்கத்தை உடைத்தெரிந்த
பெருந்தலைவர்களாயிற்றே அம்பேத்கரும், பெரியாரும்,,,இன்று நேற்றல்ல அதற்கு முந்திய
காலத்திருந்தே இந்துத்துவ பார்ப்பானிய பெருமுதலாளித்துவ மயமாகி கிடந்த ஐஐடியின் முகமூடி வெட்டவெளிச்சத்திற்கு
வந்துள்ளதென்றே "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பை" தடைசெய்தன் மூலம் நமக்கு உணர்த்துகிறது. மாணவர் அமைப்புத் தடைக்காக இவர்கள் ஜோடித்த நாடகத்தையும்
தெரியபடுத்திவிட வேண்டும்.மாட்டிறைச்சி உண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு மாணவர்
அமைப்பு" மாணவர்கள் விமர்சித்து பேசியும்,துண்டறிக்கைகளை கொடுத்தும்
அச்சட்டத்திற்கு எதிராக பரப்புரை செய்கிறார்களென்று அனாமத்தானவர்கள் கடிதம் எழுதி நிர்வாகத்திற்கு அனுப்பினார்களாம்
அதனை குற்றமென கருத்தில் கொண்டு ஐஐடி நிர்வாகம் மாணவர் அமைப்பை
தடைசெய்திருக்கிறது.குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்கள். இந்துத்துவ பார்ப்பானிய ஆர் எஸ் எஸ்ஸை அப்படியே
உள்வாங்கிக்கொண்டிருக்கிறது ஐஐடி, இதில் எதிர்ப்பார்ப்புகள் ஏதுமில்லை,முற்றிலும் காவி மயமானவர்களுக்கு நிச்சயம் அண்ணலையும்
ஐயா பெரியாரையும் அறவே பிடிக்காதென்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஏற்கனவே காவிகளோடு கைகோர்த்துக்கொண்டு
அரசமைப்பிற்கு எதிரான பல்வேறு செயல்பாட்டு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது சென்னை ஐஐடி, உயர்கல்வி நிறுவனங்களில் எப்போதுமே பிற்போக்குச் சிந்தனைகள் மலிந்திருக்கும் என்பது அறிந்த ஒன்றே,,, இன்றுவரையில் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தாத உயர் கல்வி நிறுவனமாக இந்த இந்துத்துவ பார்ப்பானிய பெருமுதலாளித்துவ ஐஐடி நிறுவனங்கள்
செயல்படுகிறது.மேலும் தலித்தின விரோத போக்கு , சிறுபான்மையின மக்கள் விரோத போக்கென்று செயல்படுகிறது.முற்றிலும் காவிகளின்
கைகளில் நமது கல்விநிறுவனங்கள் சிக்கிக்கொண்டிருப்பதால்தான் இன்றைக்கு இவர்கள் தைரியாக அண்ணலுக்கும்,பெரியாருக்கும் மாணவச்சமூகத்துக்கும் தடைபோடுகிறார்கள். பெரியாரின் பெரும் உழைப்பும் அண்ணலின் பெரும் சிந்தனையால் விளைந்த அரசியலைப்புச் சட்டமும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஐஐடி நிறுவனங்கள்தான்
உலகளவில் கால்பதிந்திருக்க முடியுமா? அவ்வாறிருக்க இன்றைக்கு வளர்ந்து
விட்டோமென்கிற பாசிசத்தின் படியிலான அசட்டுத் தைரியத்தால் சென்னை ஐஐடி அண்ணலையும் பெரியாரையும் புறக்கணிக்கிறதென்றால் அத்தைரியத்தை அவர்களுக்கு ஊட்டியது காவிகளல்லாமல்
வேறுயாரால் நிகழ்த்தியிருக்க முடியும். பெரியாரின் பகுத்தறிவுக்கும் அண்ணலின் பகுத்தறிவுக்கும் முன்னால் இவர்களின் தடை ஒன்றுமே செய்துவிட முடியாதென்று அண்ணலையும் பெரியாரையும் ஏற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களாகிய நமக்கு
அதுவொரு உரிமை மீட்பாகவே களமிறங்க வேண்டும். சென்னை ஐஐடி யை பொறுத்தமட்டில் உயர்நிலை தலைமை நிர்வாகத்தில் தொடங்கி அந்நிறுவனத்தில் பாடம் பயிலும் மாணவர்கள்
வரையில் பெரும்பாலும் இந்துத்துவ பார்ப்பானர்களாகவே இருக்கிறார்கள்.சொற்ப எண்ணிக்கையிலான பார்ப்பனரல்லாத
முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்கள் , அவர்களை எதிர்த்துநின்று
அண்ணலையும்,பெரியாரையும் ஏற்று பார்ப்பன
ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு அண்ணல் மற்றும் பெரியாரின் முற்போக்கு கருத்துக்களை இத்தமிழ்
மண்ணில் துளிர்க்கச் செய்து தங்களின் கல்வியறவு மேம்பாட்டினை மீட்டெடுக்கிறார்கள் . அதனொரு நடவடிக்கையாக "அம்பேத்கர் பெரியார்
வாசிப்பு மாணவர் அமைப்பு" என்றவொன்றை
கட்டமைத்து இத்தமிழ் மண்ணை சாதியற்ற
சமூகமாக மாற்றப் போராடும் மாணவச் சமூகமாக
தங்களை உறுவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நடவடிக்கையானது "அடிமைச் சமூகத்தின் எழுச்சி" என்றே குறிப்பிடலாம். மாணவர் அமைப்பு மீது வைக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி
தடை குறித்தான குற்றச்சாட்டிலேயே வெளிப்படையகத் தெரிகிறது காவிமய சென்னை ஐஐடியின் கோரமுகம். ஏன் மாட்டிறைச்சித் தடைச்
சட்டத்தை விமர்ச்சிக்க கூடாது? இந்தியாவில் மட்டுந்தானே உணவில் கூட சாதியம் முளைக்கிறது,அதனை எதிர்த்துக் களமாடுவது
அண்ணலையும்,பெரியாரையும் ஏற்ற
மாணவச்சமூகத்திற்கு கடமையாக அல்லவா இருக்கிறது. பிளவுபட்டிருக்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களாகிய நாம் ஒன்றுபட்டு சென்னை ஐஐடியின் இந்துத்துவ பார்ப்பானிய பெருமுதலாளித்துவத்திற்கெதிரான
வர்க்கப்போராட்டத்தினை முன்னெடுச்சென்று நம்
சமூகத்து உயர்நிலை கல்வியையும்,அக்கல்வி பயிலும் மாணவச் சமூகத்தையும் , அண்ணலையும்,பெரியாரையும் மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி நமக்கொரு வாய்ப்பாக வாய்திருக்கிறது. "இந்துத்துவத்தை வேரறுப்போம் சமத்துவத்தை வென்றெடுப்போம்" அதிவிரைவில் வர்க்கப்போராட்டத்தை நாமும் இம்மண்ணில் நிகழ்த்திவிடுவோம் . நமக்கான சமூகக் கடமைகள் இன்னும் நிறைய இருக்கிறது இனியும் தாமதிக்காமல் "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு மாணவ அமைப்பிற்கு ஆதரவாய் நின்று பார்ப்பானிய சென்னை ஐஐடியை மீட்டெடுப்போம்.
கல்வி நமக்கான உரிமை அதனை யாராலாலும் சுரண்டிவிட முடியாதென்று சூளுரைப்போம்.