Friday, July 31, 2015

சசி பெருமாள் அவர்களின் மரணம் சாட்சி மது விலக்கிற்கு,,,

மது விலக்கு அமல்படுத்தக்கோரி "தற்கொலை செய்து கொண்டார் சசி பெருமாள்" என
எழுதத் தோன்றவில்லை காரணம் காணெளி காட்சி அவ்வாறாக அமைந்திருக்கவில்லை

ஊடகங்களால் "காந்தியவாதி" ஆக்கப்பட்ட சசி பெருமாள் தொடர்ந்து
மதுவிலக்கிற்காக பல உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியவர். அதன்படியே
மார்த்தாண்டம் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்காக்கொண்டிருந்த மதுக்கடையை
அகற்றக்கோரி இன்று தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.­
ஏற்கனவே சம்மந்தப்பட்ட மதுக்கடையை அகற்றுமாறு மதுரைக்கிளை உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்திருக்கிறது­ , அதையும் பொருட்படுத்தாமையால் இந்த
தீக்குளிப்பு போராட்டத்தை சசிபெருமாள் கையில் எடுத்திருக்கிறார்.

சம்பவ நிகழ்வின் போது சசி பெருமாளும் அப்பகுதி பேரூராட்சித் தலைவரும்
அருகில் இருக்கும் செல்போன் டவரில் கையில் பெட்ரோல் கேனுடன்
ஏறியிருக்கிறார்கள்.
எப்போதும் போல பதற்றம் முற்றிய பிறகு வந்த காவல்துறையும்,தீயணைப­்புத்
துறையும் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் கீழே இறங்கச்
சொல்லியிருக்கிறார்கள். மேலேயிருந்த இருவரும் கீழே இறங்கி வர
மறுத்தமையால் தீயணைப்புத்துறையினர்­ பாதுகாப்பு கயிற்றுடன் செல்போன்
டவரில் ஏறியிருக்கிறார்கள்.இங்கே தான் "தற்கொலை செய்து கொண்டார் சசி
பெருமாள்" என்பது சாத்தியமில்லையெனத் தோன்றுகிறது. மேலே ஏறிய
தீயணைப்புத்துறையினர்­ சசி பெருமாள் மற்றும் பேரூராட்சித் தலைவரை
மீட்கப்போவதாகக் கூறி சசி பெருமாள் உடம்பில் கயிற்றைக் கட்டி
உச்சியிலிருந்து கீழே இறக்குகையில் குறுகிய கம்பிகளால் ஆன ஏணிப்படியில்
கயிற்றோடு கட்டப்பட்ட நிலையில் அங்கேயே அவருக்கு மூச்சுத் திணறல்
ஏற்பட்டிருக்கக் கூடும் அதற்கான முக்கிய காரணமாக காப்பாற்றுவதற்காக
கட்டப்பட்ட கயிறு இருந்திருக்கக் கூடும். தொலைக்காட்சியில் அதனை
பார்க்கையில் சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன.

இன்றைய விவாத காட்சிபொருளாக ஒரு மரணம் ஊடகங்களுக்கு கிடைத்திருக்கிறது
இதைவிட வெறென்ன வேலை அவ்வூடகங்களுக்கு,,,‪ மறக்காமல் ‬கொண்டுவாருங்கள்
ஜெவின் அடிமைகளான செகுவையும்,நாஞ்சில் சம்பத்தையும்,

வருங்கால சமூகத்தை சிந்திக்க விடாமல் செய்யும் டாஸ்மாக் எனும் அரசு
மதுபானக்கடைகளை மூடுவதோடு மட்டுமல்லாம் ,சசி பெருமாள் மரணத்தில்
ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டிய கடமை ஆளும் அதிமுக
முதலாளித்துவ அரசிற்கு இருக்கிறது. மேலும் தொடர்ந்து மக்கள் விரோதப்
போக்கினை கடைபிடிக்கும் அரசுக்கெதிரான போராட்டங்கள் திட்டமிட்டே ஆளும்
அரசானது நசுக்கப்படுவதையும், அதிலும் அரசியல் ஆதாயம் தேடுவதையும் அரசு
உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கலாம் இழப்பாக
இருக்கட்டும் சசிபெருமாள் இழப்பாக இருக்கட்டும் அவர்களுக்கான
கடன்பட்டவர்களாக தமிழ்ச்சமூக மக்கள் உணர்வார்களேயானால் முக்கியமாக
டாஸ்மாக எனும் அரசு மதுக்கடைகளுக்கெதிரான­ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை
மேற்கொண்டேயாக வேண்டிய கட்டாயமும் கடமையும் இருக்கிறது.
குறைந்தபட்சம் நம் வருங்கால சந்ததிகளையாவது மதுவில் இருந்து விடுவிக்க
நாம் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம்.

நான் தமிழனென்று,,,

போபாலில் பலியானார்கள்
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று

குஜராத்தில் கலவரம்
நிகழ்ந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று,,,

மும்பை முழுக்க
எரிந்துக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று

பஞ்சாபில் படுகொலைகள்
பிணங்களின் குவியல்கள்
அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,,

தெலுங்கானா தத்தளித்துக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,,

ஒடிசா
ஒழித்துக் கட்டிக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று

ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்துத்துவம் அடிமைபடுத்த அப்போதும் அமைதியாய்
இருந்தேன்
நான் தமிழனென்று,,,

என்னோடு சேர்த்து ஈழத்தை
அடிக்கவும் அழிக்கவும் வருகிறார்கள்
அலறுகிறேன்
நான்

என்னருகில் யாருமில்லை தமிழெனும் அடையாளமும் என்னிடமில்லை,,,,

யாகூப் மேமன் தூக்கு ஒரு அரசக்கொலை



இந்திய நீதித்துறையானது தனது நீதியை நிலைநாட்டும் நோக்கில் நிகழ்த்தப்பட வேண்டிய ஓர் உடனடித் தேவைக்கான அவசரமா? இல்லை இந்துத்துவத்தை வளர்தெடுக்கும் நோக்கம் கொண்ட உடனடிக் கொலையா? எனும் கேள்வி எழுகையில் முதற்கேள்வியை மண்ணில் புதைத்து விட்டு இரண்டாவது கேள்விக்கான பதிலை அரசக்கொலையாக தந்திருக்கிறது. இந்துத்துவத்தின் சூழ்ச்சமம் யாகூப் மேனனின் தூக்கில் அடக்கிவிட்டு சமநீதியை கயிற்றில் தொங்கவிட்டிருப்பது காலத்தின் கொடுமையெனச் சொன்னால் அது மிகையாகாது . டைகர் மேமனுக்குத் தம்பியாக பிறந்தது அவரின் குற்றமெனக் கருதும் நீதித்துறை நம்மை வியப்படையச் செய்வதோடல்லாமல் அதிர்ச்சியடையவும் வைக்கிறது.



யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு விட்டார். நேற்று – 30.07.2015 – காலை 7 மணிக்குள் மேமனைத் தூக்கிலிடாவிட்டால், நீதி செத்துவிடும் என்று பதறிய உச்ச நீதிமன்றம் இரவோடு இரவாக 6.40.மணிதுளிகளில் அவரை தூக்கிலிட்டிருக்கிறார்கள். நிற்க, அன்று யாகூப் மேமனின் பிறந்தநாள் மற்றும் தூக்கு தண்டனை கூடாதென்று புறக்கணித்த முன்னால் குடியரசுத் தலைவர் உயர்திரு அப்துல்கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு நாள்.




மும்பை குண்டுவெடிப்புக் குற்றவாளி ஒருவருக்கு தூக்குதண்டனை வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது, யாகூப் மேமனை தூக்கிலிடாமல் காலம் தாழ்த்துவதனால் மற்ற குற்றவாளிகளுக்கு அது சாதகமாகி விடுகிறதென்பது அனேகரின் வாதமாக இருக்கின்ற வேளையில் அவர்களுக்கான புரிதலை ஏற்படுத்துதல் தூக்கு தண்டனை எதிர்ப்புக்கான தகுந்த கடமையாக இருக்கின்றது . முற்றிலுமான தூக்கு தண்டனை எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாதென்றாலும்
ஏற்றத்தாழ்வை கட்டிக்காக்கும் இந்துத்துவ பாசிஸத்தின் பிடியிலிருக்கும் நீதித்துறையின் ஒரு தலைபட்ச மனப்போக்கு நமக்கான சமநீதியை ஒருபோதும் நமக்களிக்காது நீத்துறையும் நமக்கானதில்லை அவ்வாறு இருக்கையில்
தூக்கு தண்டனை தீர்ப்பு விதிக்க மட்டுமல்ல,,, நீதி பரிபாலனை செய்ய இந்த இந்துத்துவ பார்ப்பானிய அரசுக்கும் அதன் சொல்படி கேட்கும் நீதித்துறைக்கும் எவ்வித உரிமையும் இல்லை என்கிற அடிப்படையில் மட்டுமே தூக்கு தண்டனை உத்தரவுகளை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது ஆகவே அதை நோக்கிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையை இந்த அரசும் நீதித்துறையும் ஏற்படுத்த காரணமாக இருக்கின்ற வேளையில் தூக்கு தண்டனையை எதிர்த்தே ஆகவேண்டியிருக்கிறது.





யாகூப் மேமனின் தூக்கு தண்டனை குறைப்புக்கான முதல் கருணை மனு நிராகரிக்கப்பட அன்றிரவே இரண்டாவது கருணை மனு சமர்பிக்கப்பட்டு அதன் மீதான விசாரணை அதிகாலை 2.30 மணியளவில் நடைபெற்றது (சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல்களின் வாதம் வெளிச்சம் என்பது போல் உச்சநீதிமன்ற அடர்ந்த இருட்டில் வழக்குறைஞர்களின் வாதம் அங்கே நள்ளிரவில் விசாரணை இது இந்திய சரித்திரத்திலே முதன்முறையான நள்ளிரவு உச்சநீதிமன்ற விசாரணை நடவடிக்கை)

இவ்விடத்தில் தூக்கு தண்டனைக்கான ஆதரவும் அதற்காக வக்காளத்து வாங்குவோரின் போராட்டங்களை எதிர்பார்த்தால் அதில் இசுலாமியனோ,கிருஸ்துவ­­னோ,வெகுசன இந்துக்களோ யாரையும் காணவில்லை,அதற்கு முரணாக அந்த வெகுசன இந்துக்களை வழிநடத்தும் மிகக்கொடிய ஆர்எஸ்எஸ் சங்பரிவங்கள் நள்ளிரவில் கூடிய நீதிமன்றத்திற்கு முன்னால் அவர்களும் கூடிநின்று "யாகூப் மேமனை தூக்கிலிடு" என்கிற முழக்கத்தோடு அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கிறார்கள்.­­ போலவே அதிகாலையில் யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு குறிப்பிடுகிறார். "மனு நெறிகளுக்குட்பட்டே தூக்கு தண்டனை யாகூப் மேனனுக்கு தீர்ப்பாக வழங்கினோம்" இந்தியாவின் முதன்மை சட்டம் "மனு" என்று நீதித்துறை எதனடிப்படையில் எடுத்தாள்கிறதென்று பார்த்தால் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நிச்சயம் சந்தேகப்பட வைக்கத்தான் செய்யும், காரணம் குற்றங்களின் மீதான சட்டநடைமுறைகளில் நீதிமன்றம் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்,இந்திய சாட்சிய சட்டம்,இந்திய தண்டனைச் சட்டம்,இவற்றுக்கெல்ல­­ாம் செல்லுதன்மையளிக்கும்­­ முதன்மை இந்திய அரசியலமைப்புச் சட்டம் என எச்சட்டத்திலும் எழுதப்படாத அல்லது இல்லவே இல்லாத "மனு" நெறி நீதிமான்களால் முதன்மைச்சட்டமாக்கப்­­பட்டதுதான் வியப்பின் சரித்திரக் குறியீடு.
நிற்க,,அனைத்துக்கும்­­ முதன்மையான இந்திய அரசியலைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்கள் இந்துத்துவ பார்ப்பானியத்தை கடுமையாகச் சாடியவர் தனது சட்ட இயக்கத்தில் மனு தர்மத்தை எப்படி அவரால் புகுத்தி விட முடியும். இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் இந்திய நீதித்துறையில் இந்துத்துவ பார்ப்பானியத்தின் ஆளுமை பரந்து விரிந்திருப்பது வெளிப்படையாகவே தெளிவுபடுத்துகிறது.





சரி அதையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கித்தள்ளிவிட்டு­­ மேலும் ஏதேனும் நியாயத்தன்மைகள் இந்திய நீதித்துறையிடம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டால­­் அதிலும் ஏமாற்றமே மிச்சமாகிறது என்னவெனில் இந்தியாவில் சிறைதண்டனை அனுபவிக்கும் பெரும்பான்மையினர் தலித்துகளும்,சிறுபான­­்மை இசுலாமியர்களும் இருக்கின்றனர் என்று மத்திய குற்றப் புலனாய்வு ஆய்வறிக்கை தெரித்துள்ளது. ஒருமுறை நடிகவேள் எம் ஆர் ராதா அவர்கள் சிறையிலிருக்கும் போது திருட்டு வழக்கில் கைதானவரை "ஐயரே! என்று கத்திக் கூப்பிடுவாராம் அதற்கு காரணம் ஐயர் என்றால் யோக்கியன் என்று புரிந்துகொண்டவர்களுக­­்கு புத்திவரட்டும் எனும் நோக்கத்தின் படி அவ்வாறு செய்ததாக இருக்கிறது. இன்றளவும் தன்னை யோக்கியன் என்று காட்டிக்கொண்டு தலித்துகளையும்,சிறுப­­ான்மை இசுலாமியர்களையும் பலியிட்டுக்கொண்டிருக­­்கிறது பார்ப்பானியம் என்பது நம் கண்முன்னே வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது.

இந்துத்தவ பார்ப்பானிய ஆர்எஸ்எஸ் இன் துணையோடு ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி அவர்கள் தன் இந்துத்துவத்தை இந்தியாவில் பரப்பி இந்தியா மதசார்பற்ற நாடு மற்றும் சனநாயக நாடு என்பதை உடைக்கும் பொருட்டு முதலில் கைப்பற்றியது இந்திய நீதித்துறையைத்தான், அதன் மூலம் தான் சார்ந்த இந்துத்துவ மத வெறியர்களை தத்தம் குற்றங்களிலிருந்து விடுவித்து நீதியை பொய்யாக்கி சுதந்திரமாய் அவர்களை விடுதலை செய்ய வைத்ததில் இருக்கிறது பார்ப்பானிய சூழ்ச்சமம் இதன் நம்பகத்தன்மையை மெய்பிக்கும் சாட்சியாக 97 இசுலாமியர்களை கொன்றொழித்த. 2002ம் ஆண்டு, நரோடா பாட்டியா வழக்கில் மோடி முதல்வராக இருந்த பொழுது தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மாயா கோட்னானிக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து அதன் பின்னர் தற்போது பிரதமராக இருக்கையில் யாகூப் மேனன் தூக்கிலடப்பட்ட அதே நாளில் மாயா கோட்னானிக்கு "பிணை"
வாங்கிக் கொடுத்திருக்கிறார் . இது ஒருதலைபட்ச நீதி பரிபாலனை என்பது தூக்கு தண்டனை ஆதரவாளர்களுக்கு நிச்சயம் உறுத்தியிருக்கும். அதே வேளையில் அதே நாளில் இந்துத்துவ பார்ப்பானிய மோடி அரசு தமிழகத்தில் உயர் நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலைவழக்கு (அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது உலகறிந்த உண்மை) தொடர்புடைய முருகன்,சாந்தன்,பேரற­ிவாளன் ஆகிய எழுவர் விடுதலையை எதிர்த்து இரண்டாவது மேல்முறையீட்டை செய்திருக்கிறது. அதில் ஏழுபேர் ஏற்கனவே தூக்கு தண்டனையிலிருந்து சலுகை பெற்று ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆகவே விடுதலை எனும் இரண்டாவது சலுகை அவர்களுக்கு அளிக்கக் கூடாதென்று வலியுறுத்தி மனுதாக்கல் செய்திருக்கிறது. இதுவும் நிச்சயம் தூக்குதண்டனை ஆதரவாளர்களை உறுத்தியிருக்கும். அதோடல்லாமல் ஒரு ஊழலுக்கான ஆவணமே 20டன் எடையிருக்கும் மிகப்பெரிய "வியாபம்" ஊழல் குற்றம் புரிந்தோர் இன்றளவும் சுதந்திரமாக ஆட்சியதிகாரம் பெற்று முதலாளியாக இருக்கிறார்கள் அது பற்றி வாய்திறக்கக் கூட மறுக்கும் இந்துத்துவ பார்ப்பானிய மோடியிடமும் , மோடி இயக்கும் நீதித்துறையிடமும் சம நீதி கேட்கும் பாமரன் உண்மையில் பாவப்பட்டவனாகத் இருக்கிறான்.
லிபரான் கமிசனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தில்,,,
கிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்,,,
குஜராத் கலவரத்தின் முக்கிய குற்றவாளிகள் நாட்டின் உயர் பதவிகளிலும், பிரதமராகவும்,,,
இதையெல்லாம் வைத்துக்கொண்டு "நம்புங்கள் இந்தியா மதசார்பற்ற நாடு"
"நம்புங்கள் இந்திய சனநாயக நாடு" என்றால் இதைவிட ஒரு கேவலமான பரப்புரை வெறெதுவும் இல்லை.

தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்களுக்காக­ கடைசியாக ஒரு நினைவு கூறுதல் அவசியப்படுகிறது
"ஒவ்வொரு தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படும் போதும் மனித உரிமை எனும் "கொடி" அரைக்கம்பத்தில் பறக்கிறது" இக்கூற்று மிகச்சரியானதாகவும் உண்மையை உணர்த்துவதாகவும் உலகுக்கு உரக்கச் சொல்கிறது. சொன்னவர் வேறுயாருமில்லை -நீதியரசர் கிருஷ்ணய்யர் சொன்னது.

Wednesday, July 29, 2015

Dr.APJ.அப்துல்கலாம் மரணத்தின் போதெழும் விமர்சனம்

Dr.APJ.அப்துல் கலாம்
உலகம் முழுக்க இந்தப் பெயரை உச்சரிக்கிறார்கள் ஓர் சாதனையாளனை பறிகொடுத்த
சோகத்தோடு,,, குறிப்பாக இளைய சமூகமும்,மாணவச் செல்வங்களும் தங்கள்
கண்ணீரால் அஞ்சலி செலுத்துவதென்பது அவர்களின் ஆழச்சிந்தனையில் கலாம்
அவர்களின் எதிர்காலம் பற்றிய வல்லரசு கனவு இன்னமும் உயிரோடிருப்பதை
நமக்கு எடுத்துரைக்கிறது. அவ்வளவு சாதாரணமாக அவரின் மறைவை எவராலும்
கடந்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சிறுபான்மை சமூகத்தில்
பிறந்த ஒருவர் வானத்தில் பறந்து விஞ்ஞானி ஆகிறார் அதோடு இல்லாமல்
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகிறார் என்றால் அதன் பின்னணியில்
இருப்பது கல்வியின் மீதான அதீத காதலும் அறிவியலின் மீதான நம்பிக்கையும்,
சாதிமதம் கடந்த நன்னடத்தையுமே இயங்கியிருக்கிறது அவரின் உடம்பில்,,,

அதே வேளையில் கலாம் அவர்களின் மீதான விமர்சனம் எழுந்திருக்கிறது அதுவும்
மிகத்தீவிரமான விமர்சனங்களாக அவை இருக்கின்றன.
இரண்டு நாட்களாக முகபுத்தகத்தை மிக நோக்கமாக பார்வையிட்டதில் தெளிவாக
தெரிந்த விஷயங்கள் கலாம் அவர்களை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள­்
நம்மவர்கள் அவர்களின் எழுத்துக்களால்,,,

உலகில் எவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை அனைவருமே
விமர்சனத்துக்குள்ளாக­்கப்பட வேண்டியவர்கள் எனும் சித்தாந்தம்
அறிந்தவர்கள் எவருக்கும் அதன் மீதான நெகிழ்வுத் தன்மையை அறிந்தவர்களாக
இருக்கவில்லை என்பது கலாம் அவர்களின் மரணம் மூலம்
நமக்குணர்த்தப்படுகிற­து.

"விமர்சனம் யார் மீது வேண்டுமானாலும் வைக்கலாம் என்பதில் விமர்சனம்
எப்போது வேண்டுமானாலும் வைக்கலாம் எனும் தன்மை இருந்ததில்லை"

ஒருவரின் மீதான விமர்சனம் எழுதப்படும் பொழுதோ, பேசப்படும் பொழுதோ இடம்
பொருள் ஏவல் உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் இந்நேரத்தில் இம்மாதிரியான
விமர்சனம் அவசியம் தானா? அதன் தேவை நமக்கான தீர்வுகளைத் தருமா? என்று
எண்ணி விமர்சனமானது வைக்கப்பட வேண்டும் என்கிற தன்மை "எவர் மீது
வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம்" என்கிற தன்மையில் இணைப்பாக
இருக்கின்றது. முற்போக்காளர்களே இத்தன்மையை அறியாமல் தங்களின்
விமர்சனங்களை முன்னெடுக்கத்தான் செய்கிறார்கள்.

நம்மவர்களுக்கு ஒரு நெடுங்கால வழக்கமுண்டு என்னவென்றால் யாரேனும்
இறந்துவிட்டால் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்ட அதே கணத்தில்
பின்னாலிருந்து அந்த மனிதர் இறந்தமைக்காக சந்தோஷப்பட்டு சலசலப்பை
ஏற்படுத்துவார்கள் . அந்நேரத்தில் மட்டுமே இறந்த மனிதரின் பாதகங்களை
அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக எழும் சர்ச்சைகளோ,சண்டைகளோ
பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு வந்த வேலை நன்றாக
முடிந்துவிட்டது இனி அடிதடி நடந்தாலோ , அதனால் பெரும் கலவரம் வெடித்தாலோ
அவர்களுக்கு கவலையில்லை.

இதே நிலைப்பாட்டோடுதான் இன்னமும் நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதை கலாம்
அவர்களின் இறப்பை பயன்படுத்தி நம்மவர்கள் கடுமையான விமர்சனங்களை
முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

மேலும் மோடி இறந்தாலோ, ராஜபக்ஷே இறந்தாலோ வெறும் அஞ்சலிமட்டும்தான்
செலுத்த வேண்டுமா? அவர்களை விமர்சிக்கக் கூடாதா? என்று கலாம் அவர்களை
விமர்சனம் செய்யும் அனேகரின் முகபுத்தக பதிவாக காண நேரிட்டது.

என்னமாதிரியான ஒப்பீடு இது, மோடி,ராஜபக்ஷே பட்டியலில் கலாமை நிறுத்துவது
முற்போக்குச் சிந்தனை என இவர்களுக்கு கற்பிதம் அளித்தவர்கள் யார்?
அவ்வளவு பெரிய நாச காரியங்களை கலாம் முன்னெடுத்தாரா? இவை எவற்றுக்கும்
இப்போது தீர்வாக மாணவர்களின் கண்ணீரே சாட்சியாக அமைகின்றது.

ஒருவேளை மோடியோ ராஜபக்ஷேவோ இறந்தால் அந்த சமயத்தில் அவர்களின் மீதான
விமர்சனத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு
அமைதியாக கடந்து விடுதலே நல்லது. இந்த அமைதி "அஞ்சலி செலுத்துதல்" எனும்
பகுப்பினில் அடங்காது, காரணம் அனைத்து மௌனங்களும்,கண்ணீரும்­ "துக்க
அனுசரிப்பு" அல்லது "கண்ணீரஞ்சலி" ஆகிவிடாது. அது அவரவர் தக்கவைத்துள்ள
இருப்பைச் சார்ந்தே அமையும்.

போலவே கலாம் அவர்களை சாதனையாளர் என்கிற எல்லையைத் தாண்டி அளவுக்கதிகமான
உணர்ச்சியின் பால் தமிழகராதியில் இல்லாத சொற்களையெல்லாம்
உபயோகப்படுத்தும் துக்க அனுசரிப்பாளர்களின் உணர்ச்சி வசம் தவிர்க்கப்பட
வேண்டும். இதன் மூலம் எந்தவொரு இனவுணர்வோ,மொழியுணர்வ­ோ ஏற்பட்டு விடப்
போவதில்லை அதற்கு மாறாக கலாம் அவர்கள் மாணவர்களையும்,ஆசிரிய­ர்களையும்
எந்தளவுக்கு நேசித்து அவர்களுக்கான வழிகாட்டுதலை புரிந்தாரோ அதைவிட மேலாக
மாணவர்களையும்,ஆசிரிய­ர்களையும் நேசிக்கப் பழகுதலே அவருக்கான உண்மையான
அஞ்சலியாக அமையும், இன்றையச் சூழலில் மாணவ-ஆசிரியர்,
மாணவ-பெற்றோர்,பெற்றோ­ர்-ஆசிரியர் போன்ற நட்புறவு நிலைகள் எந்தளவுக்கு
மோசமாயிருக்கிறது என்பதை தினசரி செய்திகள் நமக்கு உணர்த்திவிட்டுத்தான்­
போயிருக்கிறது.

பல்வேறு நிகழ்வுகளில் கலாம் அவர்களின் செயல்பாட்டில் எனக்கும்
மாற்றுக்கருத்துண்டு , விமர்சனங்களை முன்வைத்தும் எழுதியிருக்கிறேன்
ஆனால் அவர் மரணத்தின் போது அதைச் செய்து நானும் ஒரு முற்போக்குவாதி என்று
காட்டிக்கொள்வதை விட மவுனமாய் கடந்துவிட்டு நான் மனிதன் என
காட்டிக்கொள்வதையே விரும்புகிறேன். ஒரு வேளை பிறகான சூழலில் அவரை வைத்து
அரசியல் அரங்கேருமானால் அப்போதெழும் சர்ச்சைகளுக்கு இந்நிலைப்பாடு
நிலைத்திருக்காது என்பதற்காகவே விமர்சன நெகிழ்வுத் தன்மை தேவைப்படுகிறது.

இறந்த உடலை அடக்கம் செய்ய மட்டுமே நமக்கு உரிமையுண்டு விமர்சனம் என்கிற
பெயரில் இறந்த உடலையே கிழித்து கூறுபோடுவதற்கு நமக்கு உரிமையில்லை .

இதைவிட வேறெதுவும் தோன்றவில்லை
விமர்சனங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு­ மௌனமாக கடந்து போகிறேன். அவ்வளவே,,,

Monday, July 27, 2015

புல்வெளிக் கதவுகள்

புல்வெளியில்
என் பாதம் தொட்டு
முத்தமிடுகையில்
முனகிய சப்தங்கள்
சங்கீதமாகின்றன

முற்கள் சீண்டக்கூடாது
இவனையென்று
என் பாதச்சுவடுகளை பச்சைநிறம் பத்திரப்படுத்த
பாதுகாப்பரணாய்
புற்கள்

புற்களிடம்
பேசுகிறேன் பூத்த புன்னகையோடும்
புல்லரித்த
உடம்போடும்

கொஞ்சம் அசட்டுத்தனாய்
ஏதுமறியாத
அழகியலாய்
கேட்கிறது
புற்கள்
என்னிடத்தில்
கேள்விகளை

உனக்கேன் எனை பிடித்திருக்கிறது
எனை ஏன் நீ நேசிக்கிறாய்
முனுமுனுக்கும்
புற்களிடத்தில்

என் பதிலாய்
வாய்திறந்தேன்
வாய்த்திருக்கும்
வாய்ப்புகள் அதுவென
தெரிந்தமையால்


பசுமைக்கு இலக்கணமாய்
உன்
பச்சை நிறமிருக்க
என் தேகத்துயர்
முழுக்க எங்கோ ஒளிந்துகொண்டது
புதியவனாய்
தோற்றமளிக்கிறேன்
நான் உன்னாலே

பாரமில்லை இப்போது
என் மனதில்
எல்லாம் உன்னிடத்தில்
தந்துவிட்டேன்
பல கதைகளாக

புல்வெளிக்கு
பூச்சூடப் போகிறேன்
பூமியே
மேளதாளத்தோடு
நீ முழங்கி வந்து
நானமைத்த மேடையில்
நடனமாடிட இனியும்
ஒருநிமிடம் கூட
தாமதிக்காதே

கூட்டம் கூடி புல்வெளியில் அமர்ந்துகொண்டு
என்னைப்போல்
பல கதைகள்
பேசியோர் பலருண்டு

அக்கதைகளில்
காதலோ
காமமோ இன்பமோ
துன்பமோ
அனுபவித்த சுவையான
வாழ்வோ
இனியும் எதிர்பார்க்கும் எதிர்காலச் சிந்தனைகளோ
எல்லாம் அடங்கியிருக்கும்
நான் நேசிக்கும்
புல்வெளியிடம்

நேரமொதிக்கி
உரையாட
வாருங்கள் எப்போதும்
திறந்தேயிருக்கும்
புல்வெளிக் கதவுகள்

தேர்ந்தெடுத்து
எழுதிடவும்
வாசித்திடவும்
பல வண்ணக்கதை காவியங்கள் கிடைக்கலாம்
நம்
அருமை தமிழ் படைப்பாளிகளுக்கு,,,

அவனுக்காக,,,

மிகுதியாய்
சேர்ந்துவிட்ட
அவனின் நினைவுகளை
அப்படியே தக்கவைத்துக்
கொள்கிறேன்

எல்லா
பூக்களின் ஆருதல்
மொழிகளும் போதுமானதாய்
இருக்கிறது

இருந்தும்
புறக்கணித்து விடுகிறேன்
மணமயக்கும்
மல்லிகையை

அவனில்லாத
நேரத்தில்
என் கூந்தலுக்கேன்
மல்லிகையும் அதன்
மணமும்

எங்கோ நெடுந்தூரம்
சென்று விட்டான்
எதுவும் சொல்லாமலே

வாக்குறுதி வாயுவினிடத்தில்
கடைசியாய்
கரைந்தது
என் காதல் சுமந்த
கடலோரத்தில்

வருவாயா என்று
வழிபார்த்து
காத்து கிடந்த
காலத்தில் தொலைத்தேன்
எனதிளமையை

முதுமையை அவன்
விரும்பாதவனில்லை
என் மனதை மட்டுமே
நேசிப்பவனவன்

எனதிதயத்தில்
அவனுக்கொரு
இடமுண்டென்று
நன்குணர்ந்தவனவன்
எனதுடலை
மட்டுமே காதலாக
காட்சியாக்கியதில்லை

விரைந்து வருவான்
விரைவில்
எனை தழுவிக்
கொள்வான் எனும்
எதிர்பார்ப்பில்
எனக்கு நானாகவே
தேற்றிக் கொள்கிறேன்

தேடும் விழிகளில்
வழிந்தோடும்
கண்ணீருக்கு சாட்சியாக
அவன் நின்றெனை
யாசிக்கிறான்

எதுவும் மறந்துபோகலாம்
எனும் விதிக்கு
விலக்காகும்
என் காதலின்
காத்திருப்பு
அவனுக்காக,,,

Sunday, July 26, 2015

உண்மை

உண்மையாய் நேசிக்கத்
தொடங்கிய
பொழுதுகளில்
ஒருவரும் இல்லை
உலகில்

வெற்றிடம் நிரப்ப
உண்மையை நேசிக்கத் தொடங்கினேன்

விளங்காதவன்
இவனென்று
ஊரார் தூற்ற
தோற்றத்தை நானிழக்கவில்லை

துன்பம் எனை
சூழ்ந்த போதும்
உண்மையது
சுமைதூக்கும்

வாரும் ஐயனே மார்க்ஸிய தந்தையே வாழ்க்கை இதுவென
நல்லுலகம் காண
வழி நடத்துவீர்
எனை நீயே

வந்தேன் சரணடைந்தேன்
உண்மையே
சர்வமும் என
நித்தமும் படித்துணர்ந்தேன்

யாரிடம்
எனக்கென்ன
பகை
இருந்தும் பகையாளி
நானானேன்
அவர்களிடத்தில்

மதில் மீதெழுந்து
தாண்டவமாடும்
அடங்கா
அலைகடலதுவென அறிந்தபின்னாலே

உண்மை மூழ்குமென மூடர்களின்
கூற்றில்
புழுதி பறப்பதை
கண்டேன்
கண் தெளிவுற்று
நானும் எழுந்தேன்

செல்வமும்,செழிப்பும்­ என்னிடமில்லை உண்மையும்,உழைப்பும் அவர்களிடத்தில்
இல்லை

இதுதான் முறையோ வாழ்க்கைக்கிது
முரணோ

வேண்டி தவமிருக்கும் வேடமிட்ட சுவாமிகளும்
சுகமாய் வாழ்ந்திட
காணிக்கைக்கு கையேந்தும்
சுழலும் காலத்தில்
பணம் மாத்திரம்
இயங்குதல் முறையா

நித்தம் நித்தம் இறந்தாலும்
இன்னமும் வாழ்ந்துவிடுகிறேன் நான்

உண்மைதான்
எனை இயக்குவது
"உண்மை" தான்

Tuesday, July 21, 2015

மழையின் மடியில்,,,

விசால தோற்றத்தில்
ஒருதுளி மழைத்துளி
எனை தீண்டிவிட்டுச்
செல்ல

திணறும்
மூச்சுக்காற்றை
திசையெங்கும்
எடுத்துச் செல்கிறது எனக்காகவே
பெய்யும் மழை

அடர் இருட்டை கிழிக்கும் மின்னல்
என் மகிழ்சி வெள்ள
முகப் பொலிவை
புகைப்படமெடுக்க


நான் வைக்கும்
தேநீர் விருந்துக்கு தேடித்தேடி
கொடுத்தேன் அழைப்பிதழை
அழகான மழைக்கும்,
படமெடுத்த
மின்னலுக்கும்,
பார்த்து சிரித்த இடிகளுக்கும்

ஆகாச வெளியில்
மழைக்காகவே
காத்திருக்கின்றன
எத்தனையோ
முகங்கள்

அத்தனை
முகங்களும் ஒரே நேரத்தில் பார்த்தமையால்
வெட்கத்தில்
என்தோட்ட
பூஞ்செடிகள்

மண்வாசம் நாசியில் நுழையும் போதே
விழித்துக் கொண்டேன் நானில்லை நனையப்போவது நாதமென்று

மழையை
திட்டுகிறார்கள் மதிகெட்டவர்கள்
துற்றும் உதடுகளை தூக்கியெறியென்று
எனதுள்ளம்
எப்போதும் சொல்லும்
மழையிடம் என்மனதை பறிகொடுத்தமையால்

பற்றுண்டு கிடக்கும்
பற்றாத நெருப்பாக
அது இருக்கலாம்

அன்புக்கு ஆள்தேட வேண்டியதில்லை
மழையன்பின்
மடியில்
நானுறங்குவதால்

மழையெனக்கு
இன்னொரு தாய்
தாய் மடியில்
தவழ்கிறேன்
நான்,,,

ஜோதிராவ் பூலே "அனுபவம் பேசுகிறது"

"ஜோதிராவ் பூலே" இந்தியாவில் மறைக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளில்
இவருக்கும் இடமுண்டு காரணம் ஜோதிராவ் பூலே அவர்கள் பெண் விடுதலைக்காகவும்
பட்டியலின ஒடுக்கப்பட்ட தலித்தின மக்களுக்காகவும் பாடுபட்டார் என்கிற
காரணத்தாலே அவரின் வரலாற்றுப் பதிவு ஆதிக்க இந்துத்துவ சக்திகளால்
மறைக்கப்பட்டது. சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்கள் தன் குருவாக ஜோதிராவ்
பூலேவை குறிப்பிடுகிறார் . அதுமட்டுமின்றி ஜோதிராவ் பூலே பயன்படுத்திய
"தலித்" (Dalit) எனும் சொல்லை அப்படியே உள்வாங்கிக் கொண்டு "தலித்
விடுதலையே சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தும்" என்கிறார்
அம்பேத்கர்.தன் வாழ்நாள் முழுவதையும் தலித்தின மக்களுக்காவும்,பெண்
விடுதலைக்காகவும், கல்வி மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்தமையால்
காந்தியடிகளிகளுக்கு முன்பாகவே 1888-ல் மும்பையில் மாண்ட்வி எனும்
பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஒடுக்கப்பட்ட தலித்தின மக்கள்
இவருக்கு விழா எடுத்து உலகறிய "மகாத்மா"என்கிற பட்டம் சூட்டினார்கள்.
பார்ப்பன இந்துத்துவர்களுக்கு இது மிகப்பெரும் எரிச்சலாக இருந்தமையால்
அவரின் வரலாற்றுப் பக்கங்கள் முளையிலேயே கிள்ளியெறிப்பட்டது. ஜோதிராவ்
பூலே அவர்கள் இந்துத்துவ பார்ப்பானிய சாதியாதிக்க ஒடுக்குமுறைகளுக்கு
விலக்கானவரில்லை என்பதற்கு அவரின் சொந்த அனுபவமே மிகப்பெரும்
சாட்சியாகவும் ,இந்தியா சாதியின் பெயரால் சந்தித்த அவலநிலைகளுக்கு ஓர்
வரலாற்றுப் பதிவாகவும் இருந்திருக்கிறது. வெளியே தெரிந்தால் எங்கே
சாதிக்கு எதிரான கலகக்குரல்கள் எழுந்துவிடுமோ என்கிற அச்சத்தில் மட்டுமே
ஜோதிராவ் பூலேவை புறக்கணித்தார்கள் நம் இந்துத்துவ வலதுசாரிகள். அவர்தம்
அனுபவத்தை அப்படியே மனதிலேற்றிக் கொள்வது சாதியத்திற்கு விழும்
சவுக்கடியாக இருக்கட்டும் . ஜோதிராவ் பூலேவின் ஆன்மா பேசுகிறது அந்த
நிகழ்வை,,,
1827 ஏப்ரல் 11-ல், மகாராஷ்டிர மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில்
கோவிந்த்ராவ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஜோதிராவ் பூலே. குடும்பப்
பொருளாதார பின்னடைவு காரணமாக தொடக்கக் கல்வியுடன் படிப்பை நிறுத்திக்
கொண்டார். அதன் பிறகு பள்ளிப்படிப்பை விட்டாலும் வாசிப்பை விடாத
ஜோதிராவின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்த பெரியவர் ஒருவரின்
வேண்டுகோளுக்கிணங்க ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத்
தொடர்ந்தார் ஜோதிராவ் பூலே.

சாதி மறந்து நண்பர்கள் தம்முடன் நட்புப் பாராட்டுவதாக அவர் நம்பினார்
இதற்கேற்றார் போல அவரின் பார்ப்பன நண்பர் ஒருவர் தமது திருமண நிகழ்ச்சி
வரவேற்புக்கு ஜோதிராவ் பூலேவை அழைத்திருந்தார். அதன்படியே மாலை நேரத்தில்
நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மிகச் சாதாரண உடையில் அவர்
சென்றிருக்கிறார். அவரை கீழ்சாதிக்காரரென்று மிகச்சரியாக புரிந்து கொண்ட
பார்ப்பன நண்பனின் தோழர்கள் அவருக்கு அனுமதி மறுத்து தடுத்து
நிறுத்தியிருக்கிறார்­கள். என்னுடைய தோழனின் திருமண நிகழ்ச்சியில் நான்
ஏன் கலந்து கொள்ளக்கூடாதென்று பூலே வாக்குவாதம் செய்ய பெரும் சர்ச்சை
அங்கே எழுந்திருக்கிறது. தகவலறிந்த பார்ப்பன நண்பரும் "உனக்கு அழைப்பு
விடுத்திருக்கக் கூடாது தவறுதலாக அழைத்து விட்டேன் வெளியே போ" என்று
விரட்ட ஜோதிராவ் பூலேவின் மீதான தாக்குதலை தொடங்கினார்கள் பார்ப்பன
நண்பனின் உறவினர்கள். இந்துத்துவ பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து ஜோதிராவ்
பூலே அவர்களை ஓட ஓட விரட்டி கற்களாலே அடித்துத் துரத்த வலிதாங்க
முடியாமலும் உடல் சக்தி குறைந்தமையாலும் ஓரிடத்தில் சுருண்டு விழுந்தார்
. அப்போதும் தாக்குதலை நிறுத்தாத பார்ப்பானியர்கள் கடைசியாக தெருவோர
சாக்கடையில் வீசியிருக்கிறார்கள்.­ அக்கம் பக்கத்தில் இருந்த மனிதர்கள்
உயிருக்கு போராடும் ஜோதிராவ் பூலேவை மருத்துவனையில்
சேர்த்திருக்கிறார்கள­். பூலேவை மருத்துவமனையில் சேர்த்த ஒருவர் அவரோடு
கடைசிவரையில் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. இந்த நிகழ்வின்
போது ஜோதிராவ் பூலேவுக்கு வயது 21.

இதுதான் இந்துத்துவ பார்ப்பானியம், இதுதான் இந்தியாவின்
அடிமைத்தனத்திற்கான ஆதாரம். சாதியத்தை உயர்த்திப் பிடிக்கும் எவராலும்
தன் சமூகத்தை உயர்த்தி விட முடியாது என்றும் , தலித்தின விடுதலையே
சமத்துவத்திற்கு வழிவகுக்கும் என்றும் தீர்க்கமாக அவர் நம்பினார் அதோடு
சமூகத்தில் செயல்படுத்தியும் காட்டினார். இன்றைய தலித்தியம்
பேசுவோர்களுக்கும்,பெ­ண்ணியம் பேசுவோர்களுக்கும் ஜோதிராவ்
பூலேவையும்,பெண்கல்வி­ புகுத்திய அவரது துணைவி சாவித்திர்பாய் பூலேவையும்
தெரியவில்லையென்றால் அது அறியாமையின் உச்சம். அதில் பார்ப்பானிய
வெற்றியும் அடங்கியிருக்கிறது. மறைக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுப்பதில்
நமக்கான கடமைகள் நிரம்பி இருக்கிறது.

நான்! குயில்! காதல்!

என் இமைகளை
திறந்தே வைத்திருக்கிறேன்

இரவில்
தூக்கம் பிடிக்கவில்லை எனக்கு

தூரத்தில் குயிலொன்று கூவக்கேட்டேன்

தன் காதலியை
பிரிந்த குயிலாக இருக்கலாம்
துக்கம் தெரிந்தது
அதன் குரலில்

எனக்குள் ஆன
வியப்பில் விழிகள்
தானே பிதுங்கக்
கண்டேன்
இரவில் குயிலோசையா!
குழந்தை மனமல்லவா
அதற்கு!

தனிமையில் நானிருப்பதாக உணரவில்லை
துணைக்கு குயிலிருப்பதனால்

நானும் அதுவும்
பிரிந்த காதலால் ஒன்றானோம்

இரவில் நான் விழித்திருக்க
எனை பிரிந்த
காதலியின் அழியாத
நினைவுகளென்று
குயிலுக்கும் தெரிந்திருக்குமோ

இயற்கையின் படைப்பிதுதானோ
எத்தனையோ கனவுகளையும்
நினைவுகளையும்
சுமந்தபடியே
நானும்,குயிலும், காதலும்,இரவும்

என்னிரவுக்கு
வருகை புரிந்த
குயிலை
காலையில் காணவில்லை

என் கல்லறையில் தேடுகின்றேன்
குயிலை

மரணம் கண்டும்
மனம் மகிழ்சியில்
புதைத்து விட்டார்கள் எனதருகில்
குயிலை

காதலுக்கு இரு
சாட்சிகள் தேவையாம் காதலை
பிரித்தவர்களே எனதருகில் புதைத்து விட்டிருக்கிறார்கள்
குயிலை

ஏ!
காதலே
பிரிவின்
வலியை குயிலுக்கு உணர்த்திய நீ!

மனிதனுக்குணர்த்த
மறந்தது ஏனோ
மன்னிக்க இயலவில்லை
என்னால்

தண்டனை நானுக்கு தருகிறேன்
எம்மிருவர்
கல்லறைக்கும்
நீதான் இன்றுமுதல்
காவலாளி,,,

ஈழம் "மாற்றமொன்றே மாறாததை" உடைக்கும்

விதியென்று
விலகியதில்
இழந்து விட்டோம்
ஈழத்தை

எங்களோடு இல்லை
இன்று ஈழம்
இழந்ததை மீட்க
வாருங்கள்
இன ஒற்றுமை
வேண்டும் நம்மிடத்தில்

எதையும் கடந்துபோவதை எதார்த்தமென
பழகிய மனிதரிடத்தில் எங்கே மனிதாபிமானம்

இறந்த தாயிடம்
பால் தேடும்
குழந்தைகள்

கன்னி இழந்து
சிதைந்த உடலோடு
புதைகுழியில்
பெண்கள்

கிழந்த ஆடையால்
கயிறு வெய்ந்து
கட்டப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட
ஆண்கள்

கருவில் குழந்தையை கிழித்தெறிந்த
வலியில்
ஈழத்தாய்கள்

இசைப்பிரியாவோடு
இன்னும் எண்ணிக்கை கணக்கிடாத
எத்தனையோ
சகோதரிகள்

சிறகடித்துப் பறக்க
முடியாமல்
வெட்டிய சிறகோடு
ஈழச் சிறுவர்
சிறுமியர்கள்

இத்தனை வலிகளையும் விதியென்று
கருதிய தமிழ்
மக்கள்

எழுந்திருக்கவே
இல்லை இன்றளவும்
தமிழினம்
இடிமுழுக்கச்
சிரிப்பொலிகள்
சிங்களவனிடத்தில்

எமது ஈழம் எங்களுக்கு
வேண்டும்
என்ன தவறு கண்டீர்
இன விடுதலையில்?

மாற்றமொன்றே
மாறாதது
என்றார்கள்
மாற்றத்தை
விரும்பாதவர்கள்

புரிதலில்லை அவர்களிடத்தில் புரிதலுக்காய்
ஈழத்தை ஒப்பிடுங்கள்

மாற்றம் நிகழ்வதாலே மாற்றமும்
மாற்று முகம்தான்

நெகிழும் தன்மை அதற்கிருக்க
மாறாதது மாற்றமென்று எப்படிச் சொல்ல
முடியும்

ஈழத்து மாற்றம் ஏமாற்றமல்ல
அது
இன விடுதலைக்கான
ஏணிப்படி

அடிமை மாற்றத்தை
புரட்சி விடுதலையால்
நிகழ்த்தி
நெகிழும் மாற்றத்தை
பெற்றிடும்
அதுவே ஈழம்

ஏமாற்றாதே
மாற்றத்தை
ஈழத்தில் அடிமை
மாற்றாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வழிதேடும் வரையில்

தமிழ்த்தாய்
ஈன்றெக்கத் துடிக்கிறாள்
ஈழ விடுதலையை

ஈழத்து விடுதலை நோக்கிய பயணத்தில்
மாற்றம் நிகழும்
அது மாறாததெனும்
பொய்யை
உடைத்து விதியெனும்
விளங்காதவனை
விரட்டும்
விரைவில்,,,

Saturday, July 18, 2015

காடுகளின் கண்ணீர்த் துளிகள்

காடுகளை
வேட்டையாடி
நகரத்தை
கட்டிய மனிதன்

காய்ந்த
நதிகளின் மேல்
அனல் சூழ்ந்த மணல்வெளிகள்
எங்கும் காடுகளின் கண்ணீர்த் துளிகள்

அதையும் திருடுவார்களே
பிறவி மனிதர்கள்
எனும் அச்சத்தில்

உடனுக்குடன் உள்ளிழுத்து
காடுகளின் கண்ணீரை
சேமிக்கும்
மிஞ்சிய மரங்கள்
ரத்த வங்கியானதை
இயற்கை அன்னை
நன்கறிவாள்

கட்டிப்பிடித்து
தோழமை பாராட்ட தொலைவிலிருக்கும் வேர்களைத் தேடிக் கண்டுபிடித்து
இயற்கை அன்னை முத்தமிடுவதை

எப்படி நுகர்ந்தானோ தெரியவில்லை
மனிதன்

தொடங்கினான்
மீண்டுமொரு
யுத்தம்

பிரயோகிக்கும்
ஆயுதத்தின்
கைப்பிடியே
மரத்தின்
கொடையென்று
அறியாமல்
மனிதனும் மிருகமாக

அடுத்தது என்ன நடக்குமோ,,, அசையாமல்
நிற்கிறது மரம்
அசையும் மனிதர்களின்
ஆயுதத் தாக்குதலால் உறைந்துபோய்,,,

அதிர்ச்சியோடும்
கவலையோடும்
செய்வதறியாது
மரமிருக்கும் 
அதே நிலையில்
சிலையாகிறது
செவ்வாய்க் கிரகணம்

அடுத்த இலக்கு
செவ்வாயென்று
மனிதன் கர்ஜிப்பதை
காது கொடுத்து
கேட்டது அதுவும்

எதுவும் நடக்கலாம்
மனித அழிவு
உட்பட
இயற்கை அன்னை
மனது வைத்தால்

புரிதலை புறக்கணித்த
மனிதன் பூமியில் பிணக்குவியலாகுதல்
வேண்டுமென

புத்தி புகட்ட
எழுந்து வருகிறாள்
இயற்கை அன்னை
பல அவதாரங்களாக,,,

பிணந்தின்னி மனிதர்கள் சூழ் தமிழகம்

மனித இனமானது தன் இனத்தை தானே உண்பதில்லை என்று நாமனைவருக்கும் தெரியும்.
அதில் சில நாடுகளுக்கு விலக்களிக்கலாம் . காரணம் ஆப்ரிக்கா,நைஜீரியா,
போன்ற நாடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் மனிதர்களை உணவாக்கிக்கொண்டு
வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
இதில் மற்றொரு வகையினரும் இருக்கிறார்கள் , அவர்கள் உணவில் மனித உடலை
இறைச்சியாக கலப்படம் செய்து கள்ளச்சந்தையில் விற்பவர்கள். விலங்கின
இறைச்சியில் மனித உடலைச் சேர்த்து கள்ளச்சந்தைகளில் பணம் பார்க்கும்
வகையினரும் பிணந்தின்னிகளாக இங்கே பார்க்கப்பட வேண்டும் .
இச்செயல்புரிவோர் பெரும்பாலும் உலக நாடுகளெங்கும் பரவி கிடக்கிறார்கள்.
இந்தியாவில் மனிதப் பிணந்தின்னிகள் சற்று மாறுபாட்டு இருக்கிறார்கள் எந்த
வகையில் என்றால், உயிரற்ற மனித உடலை அடக்கம் செய்யாமல் திருட்டுத்தனமாக
அதை பதுக்கி வைத்துக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க கற்றுக்
கொண்டிருக்கிறார்கள் என்றால் இவர்களும் பிணந்தின்னிகள் தானே,,
பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் வேறெங்குமில்லை நம் தமிழகத்தில்தான்
நடந்தேறியிருக்கிறது.

திருச்சியில் கருமண்டபம் எரிவாயு தகன மயானத்தில் இறந்த ஒரு மூதாட்டியை
எரிப்பதற்காகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.­ சடலத்தை பெற்றுக்கொண்ட
ஊழியர்கள் சற்று நேரம் கடந்த பின்னர், சடலத்தை எரித்துவிட்டோம் என்று
சம்பந்தப்பட்ட உறவினர்களிடத்தில் சாம்பலைத் தந்திருக்கிறார்கள்.
அச்சாம்பர் சூட்டின் தன்மையை இழந்துவிட்டமையால் சந்தேகமடைந்த உறவினர்கள்,
தகன அறைக்குள் நுழைந்து உள்ளே சோதித்தபோது மூதாட்டியின் பிணத்துடன்,
வேறொரு சடலமும் எரிக்கப்படாமல் ஒரு மூலையில் மூட்டை கட்டி
வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உண்மை
வெளிபட்டு குற்றம் வெளியுலகிற்கு தெரிந்தமையால் ஊழியர்கள் உடனே
அங்கிருந்து தப்பித்து விட்டதாகத்தெரிகிறது.

இச்சம்பவமானது நம்மவர்கள் பணத்திற்காக பிணந்தின்னிக் கழுகுகளை விட
கேவலமாக மாறியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. பிணத்தில் பணம்
பார்க்கும் இவ்வகையினரும் பிணந்தின்னி மனிதர்களாகவே பார்க்க வைக்கிறது.
இதுபோல் இன்னும் எத்தனை சடலங்களை எரிக்காமல் மூடிமறைத்து பணம்
பார்த்திருப்பார்களோ நமக்குத் தெரியவில்லை, அந்த தகன மேடையில் தங்கள்
உறவினர்களின் சடலங்களை ஒப்படைத்தோர்கள் உண்மையாகவே சடலங்கள்
எரிக்கப்பட்டதா? என்கிற மன உளைச்சலையும்,மன வலியையும்,
தர்மச்சங்கடத்தையும் நிச்சயம் இம்மாதிரியான ஈனப் புத்திக்காரர்கள்
உணர்ந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனிதர்களாக மண்ணில் வாழ
பிடிக்காமல் கொடிய மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அனேகமாக
இதற்குப் பின்னால் மாபெரும் சதிக்கும்பல் இருப்பது மட்டும் உறுதியாகத்
தெரிகிறது, செயலிழக்காத உடற்கூறுகளை விற்கும் சமூக விரோதிகள், பிரேத
பரிசோதனையின் மூலம் மாணவர்களுக்கு பாடமெடுக்கும் மருத்துவக் கல்லூரிகள்,
இன்னும் இறந்த உடலில் பணம் பார்க்கும் எத்தனையோ முதலாளிகளென்று இதில்
யார், யார்? தொடர்புடையவர்களாக இருக்கிறார்களென்று நமக்குத் தெரியாது,
ஆனால் நிச்சயமாக ஒன்றைச் சொல்லி விடலாம் மனிதநேயமற்ற மக்கள் தமிழகத்தில்
பெருகிக்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் அது,,, சமூகச் சீரழிவிற்கான
மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இச்சம்பவம் இருப்பதை யாராலும் மறுத்துவிட
முடியாது. இதனை சமூகம் செய்யும் ஊழலாக எடுத்தாளப்பட வேண்டும். ஊழல் யார்
செய்தாலும் அது குற்றமே,,, என்கிற மனப்போக்கு அப்போதுதான் நமக்கு
ஏற்படும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை கேட்டதிலிருந்து
இத்தமிழ்ச்சமூகத்தின்­ மீது நம்பிக்கை இழக்க நேரிடுகிறது. பிணந்தின்னி
மனிதர்களிடமிருந்து பிணங்களே தங்களை காப்பாற்றிக் கொள்ளட்டும் என்கிற
மனப்போக்கு இத்தமிழ்ச்சமூகத்தில்­ வந்தாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை,,
கல்லறைகளும் காசாகத் தெரிவது மனிதர்களுக்கு மட்டுமே,,, என்கிற உண்மை
இச்சம்பவத்தின் மூலம் வெளிபட்டிருப்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது.மனித
இனம் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

Friday, July 17, 2015

அரசின் கொள்கையானது "டாஸ்மாக்" திட்டம்

"குடி குடியை கெடுக்கும்" என்றும் "மது வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு"
என்றும் எழுதிவைத்தாலும் சொட்டுகளைக் கூட வீணாக்காமல் குடிக்கும்
தமிழனிடத்தில் அறிவுரை கூறிப் பயனில்லை என்றேச் சொல்லலாம். அனேகமாக
அனைத்து டாஸ்மாக் எனும் மதுபானக் கடைகளுக்கு முன்னால் "இங்கே அறிவுரைகள்
ஏற்கப்பட மாட்டாது,மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்­" எனும் அறிவிப்புப்
பலகை காண நேரிடலாம். அதன் காலமும் வெகுதொலைவில் இல்லை. ஆளும் ஏகாதிபத்திய
குணங்கொண்ட அதிமுக வாக இருக்கட்டும் அதனோடு எப்போதும் மல்லுகட்டும் திமுக
வாக இருக்கட்டும் மதுவிலக்கு கொள்கையிலிருந்து தன்னை விடுவித்துக்
கொள்கிறது. அரசின் வருமானம் டாஸ்மாக்கிலிருந்துதா­ன் பெறப்படுகிறது
என்கிற பொய்ப்பிரச்சாரங்களை இங்கே பரப்பிய வண்ணம் அரசியல் செய்வதில்
அவர்களுக்கு ஆதாயமும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கிடையே ஜெவின்
விசுவாசிகள் "பூச்சி மருந்துகளைக் கூட அரசு விநியோகப்படுத்துகிறத­ு ஆகவே
அதனை வாங்கி குடிக்க வேண்டியதுதானே" என்று கர்வமாக பேசுவதை ஆங்காங்கே காண
முடிகிறது. பூச்சி மருந்துகளில் போதை கிடைக்குமானால் அதையும் வாங்கிக்
குடிப்பான் தமிழன் என்பது நன்றாகவே அவ்விசுவாசிகளுக்கு
தெரிந்திருக்கிறது. அந்த அளவிற்கு தமிழ்ச்சமூகம் மதுவுக்கு அடிமையாகி
சீரழிந்து கொண்டிருப்பதற்கு ஆளும் அதிமுக அரசு அதிதீவிரமாக செயல்பட்டுக்
கொண்டுப்பதற்கு சாட்சியாக தமிழகத்தில் நூலகங்களை விட டாஸ்மாக் கடைகளே
எங்கும் நிறைந்திருப்பதையும் அதில் மதிமயங்கி விழுந்து கிடப்போரையும்
பார்த்துக் கொண்டே நாம் கடந்தும் செல்கின்றோம். தமிழ்ச்
சமூகத்திற்கெதிரான
பெரும்பாலான குற்றங்கள் மதுவினால் நிகழ்த்தப்படுகிறது . மதுவானது
ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும் அடிமை படுத்தி வைத்திருக்கிறது.
இவ்வாறிருக்கையில் மதுவினால் ஏற்படும் தீங்குகளை நன்கு அறிந்தும் சென்னை
உயர்நீதி மன்றமானது திடுக்கிடும் அதிர்ச்சியான தீர்ப்புரையை
வழங்கியிருக்கிறது. என்னவென்றால் "அரசின் மதுக் கொள்கையில் நீதிமன்றம்
தலையிட முடியாது" எனச் சொல்லியிருக்கிறது .
அரசின் மது விற்பனை விநியோகத்தை "கொள்கை" என்றே நீதிமன்றங்கள் கருதும்
அளவுக்கு இங்கே மலிந்து கிடக்கிறது டாஸ்மாக் எனும் மதுக்கடைகள். அவ்வாறு
ஆளும் அதிகார வர்க்கத்தின் அதிவேக விற்பனை மற்றும்
விநியோகத்திலிருக்கும­் டாஸ்மாக்குகள் "கொள்கை" எனில் தேர்தல்
வாக்குறுதிகளில் இனி "டாஸ்மாக்குகள் தாராளமயமாக்கப்படும்"­ என அறிக்கை
வந்தாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை. இதற்கிடையே அதிமுகவின் அரசியலை
நடத்துபவரான "துக்ளக்"ஆசிரியர் சோ ராமசாமி அவர்களும் "மதுவிலக்கு
சாத்தியமில்லை" என்று பல கட்டுரைகளை எழுதித்தள்ளியிருக்கி­றார். அவர்
கூறுவதும் அரசை நடத்துவதற்கு டாஸ்மாக அவசியப்படுகிறது என்கிறார்.
உண்மையில் ஓர் அரசை இயக்குவதற்கு டாஸ்மாக் பேருதவியாக இருக்கிறதா?
என்றால் முற்றிலுமாக இல்லையென்றேச் சொல்லலாம் ஆனால் இவர்கள் ஏன்
பொய்ப்பரப்புரைகள் புரிகிறார்களென்றால்,­ மது மனிதனை சிந்திக்க விடாமல்
செய்கிறது அதன்காரணமாக மக்கள் அடிமைபட்டு முதலாளித்துவத்திற்கு­
துணைபோகிறார்கள். இதுவே இங்கே பிரதான காரணியாக இருக்கின்ற வேளையில் ஆளும்
அதிகார முதலாளித்துவ வர்க்கத்தினர் மதுவை ஓர் ஆயுதமாக்கி தமிச்சமூக
மக்களின் மீது பிரயோகப்படுத்துகிறார­்கள். சிந்திப்பதற்கு வழியில்லாத
மக்கள் மதுவெனும் ஆயுத தாக்குதலில் சிக்கி சீரழிகிறார்கள். இதற்கு
நீதியும் துணைநிற்கிறதா? எனும் சந்தேகம் எழத்தானே செய்யும். மது எனும்
அரக்கன்மீது பயணித்துக்கொண்டு மக்களுக்கு சாட்டையடி கொடுக்கும்
அதிகாரத்தை ஆளும் அரசிற்கு யார் கொடுத்தார்கள் என்றால் மக்களே
கொடுத்திருக்கிறார்கள­். அதுவும் தனிப் பெரும் பெரும்பான்மையாக,,,
அரசின் கொள்கையாகவே மாறியிருக்கும் மதுவுக்கு எதிராக எப்போது புரட்சி
வெடிக்கிறதோ அப்போதுதான் முழு விடுதலையை நம்மால் சுவாசிக்க முடியும் .
தற்போது இடதுசாரியங்கள் இப்புரட்சிக்கான முற்போக்கு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ச்சமூகம் இனியும் விழித்துக்
கொள்ளவில்லையென்றால் எதிர்காலச் சந்ததியினர் நிச்சயம் நம்மை எட்டி
உதைப்பார்கள் என்பதை என்றுமே நாம் மறந்து விடக்கூடாது. மக்கள்
மதுவிலிருந்து தானாக விடுப்பட்டாலொழிய நீதியையும் இங்கே நாம் நிலைநாட்டிட
முடியாது. அதுவரையில் நீதிமன்றங்களுக்கு மது ஒரு கொள்கையாகவே தெரியும்.
"மதுவிலக்கை ஆதரிப்போம் , தமிழகத்தை நல்வழிப்படுத்துவோம்"­ அதற்கு
வாருங்கள் தமிழ்ச்சமூகமே நாமனைவரும் ஒன்றிணைவோம்,,,

Thursday, July 16, 2015

ருசிதேடிய நாக்கு

பழுத்த கனிகளின்
ருசிதேடிய
பெருத்த உடலின்
நாக்கு,,,

சுவை விரும்பி
சுற்றத்தாரை மிதித்து
வாழ கற்றிருக்க,,,

தன்பெருத்த உடலை தூக்கிக்கொண்டு
திரிகிறது
அச்சுவை விரும்பி,,,

கடற்கரையெங்கும் நடைபயிற்சிப்
பாதச் சுவடுக்குள்
சிக்கித் தவிக்கும்
சேர்ந்த கொழுப்புகள்,,,

திசைகளெங்கும்
காணவில்லை
தேவைக்குதவும்
கரங்கள்,,,

நோக்கும் முகங்களெல்லாம் ஏதோவொரு
ஏக்கங்களோடும், எதிர்பார்ப்புகளோடும்,,,

பெருத்த உடல்களுக்கு மட்டும் அழகாய்த் தெரிகிறது உலகு,,,

பழுத்த கனிகள் பார்த்தவுடன் கிடைப்பதனால்,,,

பணத்தின் மதிப்பு
மனிதாபத்தை
விற்றது
ஏழைக்கு தெரியவாப் போகிறது,,,

காய்ந்த கனிகளைத்
தேடுகிறது
ஏழையின் கண்கள்
வறுமையில்
வாடிய வயிறுக்காக,,,

காய்ந்த கனிகளும்
ஏழையை ஏமாற்ற
விதைகளைத்
தேடுகிறது கண்கள்
அவசர அவசரமாய்,,,

கிடைத்த விதைகளில்
ஏதேனும் ஊட்டச்சத்து ஒளிந்திருக்குமா
அப்போதைய
வயிற்றுப் பசிக்கு,,,

என்றேனும் ஒருநாள்
ஏழைக்கு படையலாகும்
ஆசையோடும் அன்போடும்
அரவணைப்போடும்,,,

மிதித்து வாழும்
பெருத்த உடல்களிடம்
தோற்று தோற்று
மீண்டெழ துடிக்கிறது
பழுத்த கனிகள்,,,

M.S.V ஐயா! மன்னித்துவிடுங்கள்.இது சரியா?தவறா? தெரியவில்லை

தமிழிசைக்கு கட்டற்ற களஞ்சியமாக காலத்திற்கும் அழியாத இசையை தந்தளித்து
தமிழுக்கும், தமிழிசைக்கும் மிகப்பெரிய தொண்டாற்றிய நம் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா இம்மண்ணில் உயிர் துறந்தார் எனும் போது அதை
ஏற்றுக்கொள்ளவும்,மனத­ிலேற்றிக்கொள்ளவும் மிகக்கடினமாகத்தான் இருக்கிறது.
இசைப் படைப்பாளி ஒருவரை தமிழகம் இழந்து கண்ணீரால் நனைவதை காண முடியாமல்
நம் தொண்டைகளில் துக்கம் அடைத்து ஆழ்மனதிலோர் அழியா மனவேதனையானது
மரத்தில் அடித்த ஆணிபோல பாய்கிறது. தன் வாழ்நாள் முழுவதையும்
தமிழிசைக்காக அர்ப்பணித்த மனிதரை மறக்க முடியாமலும் அவர் மரணத்தை
ஜீரணிக்க முடியாமலும் அவரின் இசைகேட்டு துக்கத்தில் பங்கெடுக்கிறார்கள்
தமிழர்கள்.முதியோர்கள் முதல் இளையோர்கள் வரையில் எம் எஸ் வி ஐயாவின்
இசைக்கு அடிமைபட்டவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய
இளைஞர்களுக்கும் ஐயாவின் இசை பிடித்திருக்கிறதென்ற­ால் இசைக்காகவே அவர்
உழைத்திருக்கிறார் என்பது தெள்ளந்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. ஈழ
உணர்வை இளைஞர்களுக்கு பாய்ச்சிய "விடைகொடு எங்கள் நாடே" பாடலானது
இன்னமும் அவரவர் மனங்களில் அழியா இன உணர்வை ஊட்டியிருக்கிறதென்றால்
எம்.எஸ்.வி ஐயா வின் குரலுக்குள்ள வீரியம் வயதானாலும் குறைந்து போகவில்லை
என்பதை உணர்த்திவிட்டுச் செல்கிறது. அதோடல்லாமல் சிறந்த குனச்சித்திர
நடிகராக தோன்றி தன்திறமையின் மூலம் மக்களை கவர்ந்திழுத்த மெல்லிசை
மன்னரவல்லவா அவர்.ஆழ்ந்த துயரத்தோடு அவரின் இறுதி ஊர்வலத்தை தமிழ்த்
தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த திரையுலகினரும்,
அரசியல் தலைவர்களும்,மற்ற கலைத்துறையிர்களும்,வ­ளரும்
இசையமைப்பாளர்களுமாக அங்கே கூடியிருந்தார்கள் துக்கம் அனுசரிக்க,,,
இதற்கிடையே அவரவர் எம்.எஸ்.வி ஐயாவுடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்த
வண்ணமிருந்தனர்.உயிரற்ற அவருடலை (உயிரற்றிருந்தாலும் அவ்வுடலில் இசை
வாழ்கிறது) அடக்கம் செய்வதற்கு இறுதி ஊர்வலம் தயார்நிலையில் இருக்கையில்
சட்டென கண்ணில் பட்டது அந்த விளம்பரம். உற்று கவனிக்கையில் அது தெளிவாகத்
தெரிந்தது.எம்.எஸ்.வி அவர்களின் சடலத்தின் மேல் அவருக்காக உருவாக்கப்பட்ட
அதிகாரப் பூர்வ இணைதள முகவரி பொறிக்கப்பட்ட போர்வை
போர்த்தப்பட்டிருந்தத­ு. அந்த இணையதள முகவரி
www.msvtimes.comஆகும். இசைக்காக உழைத்தவருக்கு இணையதள
உருவாக்கப்பட்டிருக்க­ிறது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனால் உலகம்
முழுக்க அவரின் இசையும்,புகழும் பரப்பப்படும் என்பதில் மிக்க மகிழ்சியே ,
ஆனால் இணையதளத்தை அறிமுகப்படுத்திய விதம் மிகுந்த சங்கடத்திற்கு
உள்ளாக்கியுள்ளதென்றே­ உணரப்படுகிறது. அவர் வாழ்ந்த காலத்திலேயே
இந்நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் அதை விடுத்த அவரின் சடலடத்தின் மூலம்
அறிமுகப்படுத்தும் இம்மாதிரியான செயல்களை வரவேற்க வேண்டுமா? இல்லை
வருத்தப்பட வேண்டுமா? என்றுகூட ஒரு முடிவெடுக்க முடியாத இக்கட்டான
சூழ்நிலைகளோடு அவருக்கு அஞ்சலி செலுத்த
வேண்டியிருக்கிறது.எதையும்,எப்போதும் சரியான காலத்தில் செய்யும்
எம்.எஸ்.வி ஐயாவுக்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தை
அறிமுகப்படுத்துதலுக்­கு அவரின் மரணத்தை உபயோகப்படுத்துவது சரியானச்
செயலா? அவர் உயிரோடிக்கும் போதே இணையதள அறிமுகத்தை செய்திருந்திருந்தால்­
அதன் தன்மையும்,பார்வையும்­ எப்படி இருந்திருக்கும், உயிரோடிருக்கும்
போது அறிமுகப் படுத்துதலுக்கும், இறப்பில் அறிமுகப்ப டுத்துதலுக்கும்
பிரபலப்படுத்துதல் சார்பாக சிக்கல் எழ வாய்ப்புள்ளதா? என்று எந்த
கேள்விகளுக்கும் விடையறியாமல் இன்னமும் அவரின் இசையோடு பயணிக்க
வைக்கிறது. இது எதார்த்தங்களை மிஞ்சிய படைப்பாளியின் வளர்ச்சியென்று
மிகச் சாதாரணமாக கடந்து போகவும் முடியவில்லை, இன்னமும் நம்மால்
எம்.எஸ்.வி ஐயா இறந்துவிட்டாரென்று நம்பக்கூட முடியவில்லை, அந்தளவிற்கு
அவரின் இசை நம்மை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. எங்களால் ஆன
உதவியாக,நீங்கள் தமிழிசைக்கு செய்த சேவைக்குப் பலனாக நாங்கள் அந்த
இணையதளத்தை புகழின் உச்சிக்கு நிச்சயம் எடுத்துச் செல்வோம் என்பதுமட்டும்
உறுதி.இம்மண்ணிற்கு நீங்கள் செய்த இசைப் பணிக்காக உங்களுக்கு நாங்கள்
கண்ணீர் அஞ்சலி செலுத்த கடமைபட்டுள்ளோம் எம்.எஸ்.வி ஐயா ! உங்கள் ஆன்மா
சாந்தியடையட்டும்.

Wednesday, July 15, 2015

Mr.மோடி எங்கே ஓடுகிறீர்கள்?

"இந்தியா ஒரு தீபகற்ப நாடு" என்பதை இனி யாரும் உச்சரிக்கப் போவதில்லை
அதற்குப் பதிலாக "இந்தியா திருடர்கள் நாடு" என்றே அனைவரும்
உச்சரிக்கப்போகிறார்க­ள். அந்த அளவுக்கிங்கே மலிந்து கிடக்கிறது ஊழல் .
அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் மூலம் தனியார்மையம் உட்புகுந்து
தங்களின் ஏகாதிபத்தியத்தால் இந்திய வளங்களைச் சுரண்டுதல்தான்
வளர்ச்சியென்று பாமர மக்களை நம்பவைப்பதில் ஆளும் பிஜெபி அரசானது வெற்றி
கண்டிருக்கிறதென்றால்­ இது அடிமைத்தனத்தின் உச்சமென உணர வேண்டும் நம்
இந்தியச் சமூகம்.ஊழலற்ற இந்தியாவை காங்கரஸாலும்,பிஜெபிய­ாலும் இனியும்
உறுவாக்கிவிட முடியாதென்பதற்குச் சான்றாக வான்தொடும் பூகம்பப்
பேரதிர்ச்சி ஊழல் மத்திய பிரதேசத்தில் " வியாபம்" என்கிற பெயரில்
அரங்கேற்றப் பட்டிருக்கிறதென்றால்­ இதற்கு பொருப்பேற்க வேண்டிய பிரதமர்
சர்வ சாதாரணமாக இயல்பான தோற்றத்தில் கடந்து போகிறார் இதுதான் மக்களுக்கு
அவர் அளித்த வாக்குறுதி போலும்,,,பத்தாண்டு கால காங்ரஸின் ஊழலாட்சியில்
இந்தியா சிக்கித் தவிப்பதாகவும்
ஊழலற்ற இந்தியாவை பிஜெபியால் மட்டுமே தரமுடியுமெனவும் அதோடல்லாமல்
தேர்தல் வாக்குறுதியாகவும் இந்துத்துவ ஆர் எஸ் எஸ் மோடி
மக்களுக்களித்தார்.இந்தியாவை அடிமைபடுத்தி தன் ஆளுமையால் நில வளச்
சுரண்டலையும்,மனித வளச் சுரண்டையும் மேற்கொள்வதில் என்றுமே இருதேசிய
கட்சிகளின் கரங்களும் இணைந்தே பாமர மக்களின் கழுத்தை நெறிக்கும்.
காங்ரஸின் ஊழலைச் சுட்டிக்காட்டிய பிஜெபி மோடி இன்று தன் கட்சி
செய்திருக்கும் ஊழலை பற்றி வாய்திறக்கவே மறுக்கிறார். இந்தியா
முதலாளித்துவத்தின் அடிமைச் சின்னமாகிறது என்பதற்கு மத்தியப் பிரதேச
மாநில "வியாபம்" ஊழல் தெளிவுபடுத்துகிறது.மத்தியப் பிரதேச மாநில அரசின்
கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில்முறை தேர்வு வாரியமான
"வியாபம்"(VYAVSAYIK PAREEKSHA MANDAL) மருத்துவம், பொறியியல் படிப்பு
மற்றும் அரசுப் பணி காலியிடங்களுக்கான தகுதித் தேர்வு நடத்துகிறது .
2007ம் ஆண்டு இவ்வாரியத்தில் மிகப்பெரிய ஊழல்முறைகேடு நடந்துள்ளதாக
தெரியவந்ததைத் தொடர்ந்து, மேலோட்டமாக ஒரு விசாரணைக்குழு அப்போது
அமைக்கப்பட்டது.அதன் பின்னர் அதன் செயல்திட்டதில் பல்வேறு முறைகேடுகள்
நடைபெற்றதால் மீண்டும் கண்துடைப்புக்காக 2013ம் ஆண்டில் அம்மாநில சிறப்பு
காவல் துறை ஆணையத்திற்கு மாற்றப்பட்டு அதன் முதற்கட்டமாக 2100 பேர்
கைதுசெய்யப்பட்டார்கள­் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த ஊழலை மறைக்கும்
நோக்கத்தோடு சாட்சியாளர்கள்,ஊழல் குற்றவாளிகளென்று 47 பேர் தொடர்ந்த
மர்மமான முறையில் இறக்கிறார்கள் . பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட
வியாபம் ஊழலானது பொதுநல வழக்கின் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு
சென்றதையடுத்து இறுதியாக சிபிஐவிசாரணைக்கு உத்திரவிட்டது. இந்த ஊழலின்
மதிப்பு சரியாக இன்னமும் கணக்கிடப்படவில்லை பரவலாக இருபதாயிரம்
கோடிரூபாய் எனத் தெரியவருகிறது. வியாபம் ஊழலில் மத்தியப்பிரதேச மாநில
ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், அம்மாநில பிஜெபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
மற்றும் அவரது மனைவி சாதனா, உமா பாரதி ஆகியோர்களுக்கு நேரடியாகவே
தொடர்பிருப்பது தற்போது தெரியவந்துள்ளது . இது வேடிக்கை என்னவெனில்
தொடர்புடையவரே பதவியின் உதவியுடன் பல்வேறு ஆணைகளை பிறப்பித்து வருகிறார்
என்பதுதான், இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்திய ஜனநாயகம்
இறந்துக்கொண்டிருப்பத­ை திடமாக உணர்த்துகிறது. மேலும் இந்த வழக்கை
விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தங்கள் கைவசம் இருந்த 10
டன் ஆவணங்களை டிரக்கரில் ஏற்றி சி.பி.ஐ., அதிகாரிகளிடம்
ஒப்படைக்கவுள்ளனர்.
ஆவணங்களே 10டன் என்றால் பணத்தின் மதிப்பு எனவாயிருக்குமென்று ஓரளவு
ஊகிக்க முடிகிறது.அதுபோக வியாபம் ஊழல் உங்களுக்கு வேண்டுமென்றால்
பெரியதாக இருக்கலாம், எங்களுக்கு சிறிய சம்பவம்தான் என்று அம்மாநில
பாரதீய ஜனதா மந்திரி கைலாஷ் விஜய்வார்கியா கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலிலே வளர்ந்தவர்களிடத்தில்­ இம்மாதிரியான கருத்துக்கள்தான் வருமென்பது
எதிர்பார்க்கப்பட்டது­தான். இதற்கு பிஜெபி மோடி எப்போதும் தன்கைவசம்
வைத்துள்ள அதிகார வார்த்தையான "அது அவரின சொந்த கருத்து" என்பதையே
பயன்படுத்துகிறார்.ஊழல் விவகாரங்களாகட்டும் மக்கள் விரோதச்
செயல்களாகட்டும் ஒரு அரசு தவறு செய்கின்றபோது அந்த அரசானது "நீங்கள்
மட்டும் ஊழல் செய்யவில்லையா?" என்கிய மாய நியாயத் தோற்றத்தை உறுவாக்கி
ஊழலிலிருந்தும், மக்கள் விரோத செயல்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும்
அல்லது மறைந்து கொள்ளும். பிஜெபி மோடி அவர்கள் மீண்டும் அதை
பிரயோகப்படுத்திவிட்டு அதானிகளிகளுக்கும்,அம­்பானிகளுக்கும்,லலித்­
மோடிக்களுக்கும் தொண்டு செய்ய வெளிநாட்டிற்குச் சென்று
தலைமறைவாகிறார்.ஊழலற்ற இந்தியாவை உறுவாக்குவோம் என்று வாக்குறுதி
அளித்தீர்களே Mr.மோடி எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்.­ ஊழலை மறைக்க
திட்டம் தீட்டும் யுக்திதான் உங்களுக்கு கைவந்தக் கலையாயிற்றே! இந்திய
மக்கள் மறதியில் வாழ்ந்து பழகியவர்கள் ஆகவே தைரியமாக வெளியேவந்து
வெளிப்படையாகவே திட்டம் தீட்டுங்கள். தேசம் சுடுகாடாக ஆவதில்தான்
உங்களுக்கு மிக பிடிக்கும் என்று "வியாபம்" வியந்து வியந்து உங்களை
பாராட்டுகிறது.

Tuesday, July 14, 2015

புது விடியலோடு புது மழையும்

வான வெளிச்சத்தில்
மழை கூடும்
கண்டு ரசிக்க
நீ!!! வர
வேண்டும்

புது விடியலோடு
புது மழையும்
சேர்ந்துனை
அழைக்கிறது

பூத்த மலர்
புன்னகையோடும்
பூத்துக் குலுங்கும் மலர்களோடும்
மகிழ்ச்சியினை
பகிர்ந்திடவே

இயற்கையின்
மனதோடு இணைந்து
வாழ நீ வர
வேண்டும்
வெளியே

வெளியே வா!
பார் இந்த பூமியை இளங்காற்றோடும்
இடி,மழை, மின்னலோடும்
குளிர்ந்து கிடக்கிறது
நம் பூமி

நீயும் அதனோடு
சேர்ந்து உன்
மனதை குளிரச்செய்திடவே
வா!!!
வெளியே

நமக்குத் தோழன்
இந்த பூமிதானே
வந்து நுகர்ந்துவிடு
அதன் வாசத்தை

மகிழ்ச்சியான
புது வாழ்வுனக்கு
இப்பூமி உனக்கு
திறந்து காட்டும்
அதற்கு முதலில்
கதவைத் திறந்து
நீ!!! வர
வேண்டும்,,,

உழைத்து வாழ வேண்டும் - ஷீலா கோஷ்

ஷீலா கோஷ் என்கிற முதியவருக்கு தற்போது 87 வயதாகிறது இன்னமும் அவர்
உழைத்துக் கொண்டிருக்கிறார். யாருடைய உதவியும்,அனுசரிப்பும் இன்றி தன்
சொந்த உழைப்பில் உயிர் வாழ்கிறாரென்றால் தன்மானத்தில் கூட உழைப்பும்
கலந்திருக்க வேண்டுமென்று நமக்கு அவர் உணர்த்துகிறார் என்றே பொருளாகும்.
இந்தியாவின் கிழக்குப்பகுதியான
மேற்குவங்கம் மாநிலத்தில் பாலி என்ற ஊரில் வசிக்கும் இவரை 2012ம் ஆண்டு
முகநூலில் ஒரு தோழர் பகிர்ந்திருந்தார் . அன்று கண்ட அதே உழைப்பு ,அதே
சுறுசுறுப்பு அவரிடத்தில் இன்றளவும் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம்
உழைப்புதான் முன்னிலை பெறுகிறது. நிலப்பிரபுத்துவம் பிரபலமடைந்து தன்
ஆதிக்கத்தின் கீழ் அனைத்து உழைப்பாளர்களையும் சுரண்டி மேலெழும்
காலனியத்தின் நடுவில் தன் அயராத உழைப்பால் மட்டுமே நான் உயிர்வாழ்வேன் என
உறுதியெடுத்து அதன்படியே வாழ்ந்தும் காட்டி வர்க்கச் சுரண்டல்களுக்கு
இவர் சவால் விடுகிறார். தனக்கு உறுதுணையாக இருந்த ஒரே மகனை
இதயநோயானது பிடித்துக்கொள்ள 2012ம் ஆண்டு அவர் மரணித்துவிடுகிறார்.
தனக்கென துணையாக யாருமில்லாத தனியொருவராய் சமூகத்தில் தள்ளப்பட்ட
அம்மூதாட்டி விரக்கதியடையவில்லை அதற்கு மாறாக விழித்தெழுகிறார் முழுமையாக
உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கிறார்.
உழைப்பெனும்
உன்னத எண்ணத்தில்
தினமும்
பாலியிலிருந்து
கொல்கத்தாவுக்கு வந்து
தின்பண்டங்களை விற்று
அதில் கிடைக்கும் வருமானத்தில் தன்னுயிரை தன்மானத்தோடு மரணத்திடமிருந்து
மீட்டெடுத்து வாழ்கிறார்.
அவரது கண்ணியமும் உழைப்பின் மீதான அதீத நம்பிக்கையும்
வாழ்வின் இறுதிவரை
உழைத்து வாழ வேண்டுமென்கிற சிந்தனையை நமக்குள்ளே விதையாகிறது. பல
தொண்டு நிறுவனங்கள்
அவரின் நிலை கண்டு உதவ முன்வந்த போதும்
முதாட்டி தன் உழைப்பால் வாழ்க்கையை தீர்மானிப்பதே சரியாக இருக்கும் ஆகவே
எனக்காக உதவ விரும்புவோர் என் திண்பண்டங்களை வாங்குங்கள் , வாங்கிய
திண்பண்டங்களை ஒருபோதும் வீணடிக்காதீர்களென்று­ அன்பாக கூறி சொந்த காலில்
நிற்க முனைந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறாரென்றால்
இது உழைப்பிற்கு கிடைத்த வெற்றிதானே,,,இன்று அவர் ஸியாம்பஜார் என்கிற
இடத்தில் தினமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
நம் தமிழ்க் கவிஞன் படைத்து விட்டுச் சென்ற "உழைத்து வாழ வேண்டும் ,
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" என்கிற உன்னதமான வரிகளானது உண்மை
உழைப்புக்கு ஊன்றுகோலாய் அமையத்தானே செய்கிறது.

Monday, July 13, 2015

"மாற்றம்,முன்னேற்றம்" பா.ம.க வின் விளம்பரமும்,ஊடகமும்

நேற்றைய தினத்தில் (12.7.2015) ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து
செய்தி பத்திரிக்கைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்து
முதல்வர் வேட்பாளராக? அறிவிக்கப்பட்ட தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர்
அன்புமணி ராமதாஸ் அவர்களின் "மாற்றம்,முன்னேற்றம்­" என்கிற சொற்களோடு
அவரது அதிகாரப்பூர்வ இணையதளமான www.anbumani4cm.comஐயும் சேர்த்து
விளம்பரம் செய்யப்பட்டது . சமூக வலைதளங்களில் சாதியாதிக்கமும் தற்போது
சேர்ந்துள்ளது தான் மாற்றம் ,முன்னேற்றமாகும்
ஒரே நாளில் இவ்வளவு விளம்பரத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா?
ஏன் முடியாது இதே இந்துத்துவ பிஜெபி மோடியின் யுக்திதானே அது, அந்த
யுக்தியையே அன்புமணி ராமதாஸ் கையில் எடுத்திருக்கிறார். பணம் படைத்த
முதலாளி வர்க்கத்திற்கு விளம்பரம் செய்ய இங்கே ஒட்டுமொத்த ஊடகங்களும்
போட்டிப்போட்டு காத்துக்கொண்டிருப்பத­ை சாதியாதிக்க முதலாளித்துவர்கள்
நன்கு அறிவார்கள். நேற்று வெளியிடப்பட்ட பாமக வின் "மாற்றம்,
முன்னேற்றம்" விளம்பரத்தை பல்வேறு தரப்பினர்கள் கேலி கிண்டலுக்கு
உள்ளாக்கினார்கள் இது அரசியலில் தெளிவின்மை என்பதையே சுட்டிக்காட்டுகிறது
. காரணம் விளம்பர யுக்தியின் செயல்பாடுகள், அதன் நோக்கம், சமூகத்தில்
எந்த மாற்றத்திற்காக அவர் மாற்றம், முன்னேற்றம் என்கிற முழக்கத்தை
முன்வைக்கிறார் என்பதை சிந்திக்க மறந்த மக்கள் சிரித்துப் பழகுகிறார்கள்
என்றேச் சொல்லலாம் . உண்மையில் மிகப்பெரிய சதிவலைகளை தமிழகத்தில்
செயல்படுத்த வேண்டுமென்பதே அம்முழகத்தின் நோக்கமாக இருக்கிறது.
முக்கியமாக சாதிய மனுதர்ம வர்ணாசிரமத்தை
உயர்த்திப்பிடித்தல்,­இந்துத்துவத்தை வளர்த்தெடுத்தல்,இந்த­ுத்துவ ஆர்
எஸ் எஸுக்கு ஆதரவு அளித்தல்,தலித்துகளின­் தலைகளை வெட்டி தண்டவாளத்தில்
வீசுதல், பெயருக்கு பின்னால் சாதி ஒட்டு வைக்க
வலியுறுத்தல்,பெண்ணடி­மைக்கு ஆதரவு அளித்தல், ஆணாதிக்கத்தை
நியாயப்படுத்துதல்,சே­ரிகளை கொளுத்தி சூறையாடுதல், தமிழகத்தை இரண்டாக
பிளத்தல்,திராவிடத்தை­ அழிக்கும் முயற்சியில் ஈடுபடுதல், மருத்துவமனை
மற்றும் கல்லூரிகளில் ஊழல் செய்து அதன்மூலம் குடும்பச் சொத்துக்களை
வளர்த்தெடுத்தல்,வாரி­சு அரசியலை மீண்டும் தமிழ்நாட்டிற்கு
அமல்படுத்துதல், மது விலக்கென்று கூறி தன் சாதிய மக்களை மது விற்க
வலியுறுத்துதல்,தன் தைலாபுர தோட்டத்தை பாதுகாக்க
மார்க்ஸ்,அம்பேத்கர்,­பெரியார் சிலைகளை நிறுவி அவர்களின் கொள்கை
கோட்பாடுகளை புதைகுழியில் தள்ளுதல், தலித்தல்லாதோர் பாதுகாப்பு அமைப்பை
தமிழகம் முழுதும் இயக்கச் செய்தல், அடிமை படுத்துதல் மனிதனின்
கடமையென்கிற அறிவுரையை பாட புத்தகங்களில் சேர்த்தல்,தமிழ்வழிக்­ கல்வியென
கூறி முதலாளித்துவ தோழமைகளுக்கு அதில் விலக்களித்தல் போன்று மெம்மேலும்
நீளும் சமூக அநீதிகளுக்கு ஆதரான செயல்திட்டங்களை "மாற்றம் , முன்னேற்றம்
என்கிற இரண்டே வரிகளில் அடக்கி அதையும் மிகப்பிரபலமாக விளம்பரம்
செய்திருக்கிறார் என்றால் இதனை வெறும் கேலி கிண்டலுக்கு ஆட்படுத்தும்
மக்கள் அரசியலை அறியாதவர்களென்று சொல்வதில் எவ்வித தயக்கமும் ஏற்பட்டுவிட
வில்லை.இதற்கிடையே தன்னை நடுநிலையாளர்களாக காட்டி பெரும் புகழ்பெற்ற
தமிழ் இந்து நாளிதழ் தனது இந்துத்துவ பார்ப்பானியத்தின் உண்மை முகத்தை
மிக அழகாக தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது . நேற்று பா.ம.க.கோவையில்
பொதுகூட்டம் நடத்திய செய்தியினை தமிழ் இந்து இவ்வாறு தலைப்பிட்டு
எழுதியிருக்கிறது "வளமான தமிழகத்தை உருவாக்க பா.ம.க.தலைமையில் புதிய
ஆட்சி"
சாதியத்தை உயிர்த்திப்பிடித்து அதன் பிடியில் வன்னியச் சமூக மக்களை
சிந்திக்கவும், செயல்படவும் விடாமல் தடுத்து நிறுத்தி தன்னுடைய அரசியல்
ஆதாயத்தை தக்கவைப்பதைத் தான் வளமான தமிழகமென்று இவர்கள்
குறிப்பிடுகிறார்கள் . இவ்வகையிலான ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த அல்லது
அறியப்பட்ட சமூக அவலங்களை வேண்டுமென்றே மூடிமறைப்பதில் கெட்டிக்காரர்களாக
இருக்கிறார்கள். தமிழகத்தில் வன்னியர்கள்,கவுண்டர்­கள் வாழும்
பெரும்பான்மையான கிராமங்களில் இந்துத்துவ மனு தர்மத்தின் ஆதரவு பெற்ற
"பெண்கல்வி" மறுப்பு அமலாக்கத்தில் உள்ளது. அதற்கான
நியாயப்படுத்துதலுக்க­ாக சொல்லப்படும் காரணம் என்னவெனில் கல்வி கற்றால்
ஆண்களை பெண்கள் மதிப்பதில்லை என்பதே,, இந்த அவல நிலையானது நிச்சயமாக
பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதற்காக பாடுபடும் தமிழ்ச் செய்தி
ஊடகங்களுக்கும் நிச்சயமாக தெரிந்திருந்தும் உண்மைகளை மறைத்து
முழக்கமிடுகிறார்கள் "மாற்றம்,முன்னேற்றம்­" என்று,,, அதற்கு ஊடகங்கள்
உறுதுணையாக இருப்பதில் எவ்வித வியப்புமில்லை.

பெண்சிசுக் கொலை

அனைத்தும்
அமிர்தமென
படைத்தாய்

அதில்
விஷவாடை
அறியவில்லை
நான்

தாய்ப்பாலெது? கள்ளிப்பாலெது? பிரித்தெடுக்க
முடியா
அறிவெனக்கு

என்ன செய்ய?
அழுகிறேன்
நான்

பெண்ணாக இந்த
பூமியில் நான்தான் பிறந்தது குற்றமா?

வளர்ந்ததும்
நானுமொரு
தாயென
என்தாய்
மறந்தாளோ!

மரணமே
மடியேந்தி
கேட்கிறேன்
எனக்கொரு
வரம் கொடு

சுழலும் பூமிதனில்
சுகமாக கூட
நான் வாழ்ந்திட
வேண்டாம்

பெண்சிசு
கொலை புரியும் சூழ்ச்சிகள் நிறைந்த மனங்களில்
சுயநலமது வெனவும்,
குற்றச்
செயலது வெனவும்,
செய்யாதே
கொலை யெனவும்

புத்தியுரைத்து
விடுவதாக
ஒற்றை
வாக்குறுதியை
வரமாக
கொடு மரணமே

நான் இறந்த
பின்னாலும்
இனியும்
இம்மண்ணில் நிம்மதி பெருமூச்சு விட்டு பெண்சிசு வாழ வேண்டி

இப்போதே வரம்
கேட்கிறேன்
மரணமே எனக்கு
வரம் கொடு
கூடவே அதிலுன் வாக்குறுதியையும் சேர்த்து கொடு,,,

(தமிழகத்தில் தற்போது பெண்சிசு கொலை பரவலாக்கப்படுகிறது. குறிப்பாக
சேலம்,வேலூர்,கிருஷ்ணகிரி,விருதுநகர், போன்ற வறட்சி மாவட்டங்களில்
அதிகளவு பெண்சிசு கொலை நிகழ்த்தப்பட்டு வருகிறது. )

Sunday, July 12, 2015

பெத்த கடனுக்கு,,,

வெவரமில்ல
வெலாசமில்ல
வயித்துக்குள்ள
நாயிருந்தேன்
கொழந்தையா

பத்து மாசமா
தொப்புள் கொடியில
ஊஞ்சல் கட்டி
நானும்
வெளையாடினேன்

வலிச்சிருக்கும்
ஒனக்கு
சொகமா நீயும்
அனுபவிச்ச
அந்த வலிய

ஒலகம் எப்படியிருக்குதுனு ஊட்டு வேல
செஞ்சபடியே
சொல்லி கொடுத்த
எதையும் மறக்கல
நான்

எல்லாத்தையும்
காதுல வாங்கி
கடைசில எட்டி
ஒதச்சேன்
வயித்துல

நான் ஒதச்சதுல
வெளிய வர
துடிக்கிறேன்னு
நீ தெரிஞ்சி
பிரசவ வலிய
தாங்கின

கவருமெண்ட்டு ஆஸ்பித்திரில
நான் அழுதபடியே
கெடக்கறேன்

காரணம்
எனக்கு மட்டுந்தான் தெரியும் அம்மா

என்னைய
வெளிய எடுக்க
உன் வயித்த
கிழிச்சி தச்சியிருங்காங்களே
அதுக்காகதாம்மா
நான் அழரேன்,,,

அதுகூட தெரியாம
பசிக்கு நான்
அழரேன்னு
பாலூட்ட துடிக்கிறியே பாவமா இருக்குதுமா
உன் நெலம

என்னைய பெத்த
கடனுக்காக
இப்பவே ஒனக்காக
மனசுல பதிஞ்சு வச்சிட்டேன்மா

எத்தன
வருஷமானாலும் ஒனக்கு நான்
தாயாக இருப்பேன்னு
இப்பவே ஒனக்காக
மனசுல பதிஞ்சு வச்சிட்டேன்மா,,,

Saturday, July 11, 2015

பெண்ணியத்தை அச்சுறுத்தும் காவல்துறை

ஆளும் அதிகார வர்க்கத்திடம் சமநிலையுள்ள நியாயத்தராசை
எதிர்பார்ப்பதென்பது இயலாத காரியம் இதனை அதிகார அலட்சியம் எனலாம். அந்த
வகையில் தமிழகத்தை ஆளும் அதிமுக வின் அதிகார அலட்சியமென்பது எப்போதும்
பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் . ஒரு மாநில முதலமைச்சரின்
கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையானது சர்வாதிகாரத்தோடு ஏதேனும் தீயச்
செயல்களை செய்து விடுமேயானால் அதற்கான பொறுப்புநிலை ஆட்சியிலிருக்கும்
முதலமைச்சருக்கு உண்டென அறிக , அவ்வாறான பொறுப்பு நிலையிலிருந்து ஆளும்
அதிமுக எப்போதோ விலகிநின்று அநீதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளை இங்கே சுட்டிக்காட்ட
வேண்டிய கடமை சமூகத்தின் நல்லிணக்கத்தை விரும்புவோருக்கு அதிகமாக
தேவைப்படுகிறது. அதன்படியே சில நிகழ்வுகளை இங்கே நினைவுபடுத்துதல்
அவசியப்படுகிறது. காரணம் தமிழகத்தை ஆளும் முதலாளித்துவ அதிமுக அரசும்,
அரசின் துணையோடு காவல்துறையும் பெண்களின் மீதான அத்துமீறலை இணைந்தே
செய்கிறது . இதன் காரணமாகவே வெகுசன தமிழ்ச்சமூக மக்களிடம் காவல்துறையின்
மீதான நம்பிக்கையும்,அவர்கள­ை நண்பர்களாக பார்க்கும் மனோபாவத்தையும்
முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள் . ஊழலோ,லஞ்சமோ அதையும் தாண்டி பாலியல்
தொந்தரவுகளை தருகின்ற காவல்துறையிடம் செல்வதற்கு அச்சம் வருகின்றதென
வெகுசன மக்கள் சொன்னால் அதில் வியப்பேதும் இல்லை , அந்த அளவிற்கு மக்களை
காக்கும் பணியில் இருக்கின்ற காவல்துறையே குற்றச் செயலில் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது .
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியிருந்து
வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில், காத்துக்கொண்டிருந்த
வேளையில்,ரோந்து பணிக்காக அங்கு வந்த செஞ்சி குற்றபிரிவு தலைமைக்காவலர்
ரமேஷ், என்பவர் அம்மாணவியிடம் , 'யார்?எங்கிருந்து வருகிறாய்? என்னவென்று
விசாரித்துவிட்டு, மாணவி கையில் வைத்திருந்த செல்போனை மிரட்டிப்
பிடுங்கி. அதில் 'ரமேஷ் போலீஸ்' என்று தன்னுடைய எண்ணை பதிவு செய்ததோடு,
மாணவியின் எண்ணையும் அவரது போனில் பதிவு செய்துவிட்டு,அதன் பின்னர் அவரை
வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் வருமாறு மாணவியை
மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அருகில் இருந்த கடையில் தஞ்சம் புக, அன்று
இரவு முழுக்க அந்த மாணவியில் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தலைமை காவலர்
ரமேஷ் பாலியல் ரீதியான தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் எரிச்சலைடந்த
மாணவி, தனது நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்,­ அவர்கள்
இந்த தகவலை வாட்ஸ்-அப்பில் உலாவ விட்டுள்ளனர். சிலர் இந்த தகவலை
விழுப்புரம் எஸ்.பியின் வாட்ஸ்-அப் புகார் எண்ணுக்கும் அனுப்பி உடனடி
நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
இதையடுத்து விழுப்புரம் தலைமைக் காவலர்கள் ரமேஷின் செல்போன் பதிவுகளை
ஆய்வு செய்தபோது, மாணவியின் செல் போனுக்கு ரமேஷ் பத்துக்கும் மேற்பட்ட
முறை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தலைமைக்காவலர் ரமேஷை நேரில் அழைத்து விசாரித்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப் பட்டமையால் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த
ரமேஷை விரைவில் இடைநீக்கம் செய்யப்படுவதாக தலைமைக் காவல்துறை
தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லையென தகவல் கசிந்த வண்ணமிருக்கிறது.
இச்சம்பவத்தில் அரசும்,காவல்துறையும்­ எப்போதும் குற்றங்களை மறைத்து
மேலோட்டமாக தூசி தட்டிவிடுதல் போல பழைய முறையான "இடைநீக்கத்தையே"
கையாண்டிருக்கிறது அதற்கும் செயல்வடிவம் தர மறுத்து விடுவது தான் அதிகார
வர்க்கத்தின் ஆளுமைத் திறன்.
பெண்களுக்கெதிராக காவல் துறையின் விதிமீறல்கள் காலங்காலமாக தொடர்ந்தே
இருப்பதை எப்போதும் இச்சமூகம் மறந்து விடக்கூடாது ஒப்பீட்டளவில் ஐந்து
சிறைக்காவலர்களால் 2001 இல் ரீட்டாமேரி கற்பழிக்கப்பட்ட கோரச் சம்பவமானது
இதே ஆளும் முதலாளித்துவ அதிமுக அரசின் காலத்தில் நிகழ்ந்தது. அதுபோலவே
2011 இல் விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு பழங்குடி இனப் பெண்களை விசாரணை
என்கிற பெயரில் அழைத்து கற்பழிக்கப்பட்ட (இதில் ஒருவர் நிறைமாத கற்பிணி)
சம்பவமும் இதே ஆளும் முதலாளித்துவ அதிமுக அரசின் காலத்திலே நடந்தேறியதாய்
இருக்கிறது . சர்வாதிகாரத்தின் உச்சத்தில் தலைவிரிக்கோலமாய்
காட்சியளிக்கும் தமிழகத்தின் ஆளும் அரசானது தொடர் மக்கள் விரோத
குற்றச்செயல்களுக்கு தத்தம் ஆதரவு தெரிவித்து வருகிறதென்பது
தெள்ளந்தெளிவாகிறது. இதற்கு எதிர்கட்சிகளும் முந்தைய ஆளும் கட்சிகளும்
விதிவிலக்கை கோரிட முடியாது , மக்களை பாதுகாக்கும் பெருங்கடமை கொண்ட
காவல்துறையே எல்லை மீறுகிறது குறிப்பாக பெண்ணினத்தின் மீதான எல்லைமீறல்
இதுவென்று தெரியாமல் நாம் வழக்கம் போல மறந்தும், மறுத்தும் விடுகின்றோம்.
சமூகமானது காவல்துறைமேல் வைத்திருக்கும் அவநம்பிக்கையை களைவது ஆளும்
அரசிற்கு கடமையாக இருக்கிறது. செயல்பாடுகளை முடுக்கி விடுமா? அரசென்று
எதிர்ப்பார்ப்பிலேயே இன்னமும் வாழ்கின்றார்கள் தமிழர்கள்.

Friday, July 10, 2015

தமிழகத்தை பிரித்தாளும் சாதியாதிக்கம்

தமிழகத்தில் சாதியாதிக்கம் தலைவிரித்தாடுகின்ற போதெல்லாம் அதன் மீதான
விமரிசனப் பார்வையானது இரண்டாக பார்க்கப்படுகிறது. வட தமிழகம்,தென்
தமிழகம் என்று திசைகளை அடிப்படையாய் வைத்துதான் சாதியாதிக்க விமரிசனம்
முன்வைக்கப்படுகிறது . சாதியமானது தன் பிரித்தாளும் பணியில் இருதிசைகளையே
கொண்டிருக்கிறது என்றாலும் அதன் மீதான விமரிசன பார்வையில் அவ்வாறு
பிரித்தாளப்பட வேண்டியதில்லை. சாதியத்தின் மீதான எதிர்ப்பினை
தெரிவிக்கும் பொழுது திசைகளை மறந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே எடுத்தாளுதல்
என்பதே காலச் சிறந்ததாகும்.தென் தமிழகத்தில் அடிமைபடுத்தும்
சாதியாதிக்கர்களாக கொங்கு வெள்ளாள கவுண்டர்,தேவர், தேவேந்திரர்
இத்யாதி,,,இத்யாதி,,,­ என நீளும் இடைநிலைச் சாதிகளின்
அடக்குமுறைகளாகட்டும்­ , தென் தமிழகத்தில் அடிமைபடுத்தும்
சாதியாதிக்கர்களாக வன்னியர்,கவுண்டர், என்கிற இடைநிலைச் சாதிகளின்
அடக்குமுறைகளாகட்டும்­ இரண்டுக்குமான ஒரே நேர்கோட்டுச் செயல்பாடென்பது
ஒத்த தன்மையுடையதாக இருக்கின்ற பொழுது சாதிக்கு எதிராக எழும் குரல்கள்
ஒட்டுமொத்த தமிழகத்தை சேர்ந்ததாக இருக்குமேயானால் சாதி ஒழிப்புக்கான
கூர்தீட்டல் சீராக அமையும். நெடுங்காலமாக இச்சாதியாதிக்கத்தை முன்வைத்தே
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென்ற
கோரிக்கையை முன்வைத்து அதற்கான அறிக்கைகளையும் அவ்வப்போது
வெளியிடுகின்றார் . இடைநிலைச் சாதிகளின் இந்நிலைப்பாட்டிற்கும­் ,
வர்க்கச் சுரண்டலுக்கும் இசைந்துபோவது போலவே சாதியத்தை எதிர்த்து
விமர்ச்சிப்பவர்களும்­ செயல்படுகிறார்கள் எனும் போது தமிழகம்
கேள்விக்குறியாகிறது. வட தமிழகம்,தென் தமிழகம் என்று பிரித்தாளும்
சூழ்ச்சியில் இடைநிலை சாதியாதிக்கர்களுக்கு­ முழு அளவில் ஒத்துழைப்பு
அளிப்பதில் இந்துத்துவ பார்ப்பானியர்களும் , போலி தமிழ்த்தேசியர்களும்
பெரும்பங்காற்றிவருகி­றார்கள். இந்துத்துவ பார்ப்பானியமானது
மறைமுகமாகவும் , போலி தமிழ்த்தேசியமானது நேரடியாகவும் செயல்படுகிறது.
தமிழராய் ஒன்றிணைவோம் வாருங்கள் என குரலெழுப்பும் தமிழ்த்தேசியமானது
தமிழகம் இரண்டாக பிளவுபடும் அறிக்கைகள் வருகின்றபோதெல்லாம் அதுபற்றி
வாய்திறக்க மறுக்கிறது அல்லது அதனை ஆதரித்தே செயல்படுகிறது எனலாம்.
இவ்வாறான எந்தவொரு சூழலையும் கணக்கில் கொள்ளாமலும்,கவலைபடாம­லும்
சாதியாதிக்கத்தை எதிர்ப்பவர்களும் குறிப்பாக தமிழகத்தை இரண்டாக
பார்க்கிறார்கள் என்பது என்றுமே சமூக நல்லிணக்கத்திற்கு வித்திடாது.
எங்கெல்லாம் சாதியத்தின் பேரில்
அடக்குமுறைகளோ,வன்முற­ைகளோ,வண்புணர்ச்சிகளோ­,கொலைகளோ நடக்கின்ற பொழுது
அதனை எதிர்த்துச் செயல்படுவோர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையே உச்சரிக்கப்பட
வேண்டியது அவசியமாகிறது. செயல்பாட்டளவில் அதற்கான தேவையே இடைநிலைச்
சாதிகளே தத்தம் உறுவாக்கி வைத்திருக்கிறது. எவ்வாறெனில் இடைநிலை சாதிகள்
பெரும்பாலும் பல்வேறு சாதிப்பெயர்களில் அழைக்கப்பெற்றாலும் அவர்கள்
முன்னிருத்திச் செல்வது இந்துத்துவ சாதிய மனுதர்ம வர்ணாசிரமத்தை மட்டுமே,
இதன் பொருட்டே அவர்கள் "நாங்கள் ஷத்ரியர்கள்" என்றுகூறி ஆதிக்கத்தை
நிலைநிறுத்துகிறார்கள­். வட தமிழகமானாலும்,தென் தமிழகமானாலும்
ஷத்ரியர்கள் என்கிற ஒருமித்த குரலில் இடைநிலைச் சாதிகள் ஒன்றிணைகிறார்கள்
இதுவை இத்துத்துவ ஆர் எஸ் எஸ் பார்ப்பானியத்திற்கு போதுமானதாக
இருக்கிறது. ஆகவே சமூகத்தின் மீது அக்கரை கொண்டு சாதியத்தை எதிர்க்கின்ற
எவரும் தங்களின் செயல்பாட்டு நோக்கங்களில் ஒருமித்த கருத்துக்களோடு
ஒட்டுமொத்த தமிழகத்தை முன்னிருத்துவதன் மூலம் தமிழ்ச்சமூகத்தில்
சமத்துவத்தை நிலைநாட்டிடலாம் . கூடுமானவரை சாதியத்தில் வட,தென் என்று
பாகுபடுத்திச் செயல்படுவது இந்துத்துவ பார்ப்பானிய இடைநிலைச் சாதிகளுக்கே
பெரும் ஆதாயமாக அமைந்து விடும் என்பதை என்றுமே மறந்து விடக் கூடாது.
இரட்டை வேடத்திலிருந்து தமிகத்தை மீட்டெடுக்க வேண்டியது நமது
முதற்கடமையாகும்.

Wednesday, July 08, 2015

மதுவுக்கு அடிமையான சமூகம் மெய்பிக்கிறது சம்பவங்கள்

சமூகம் எங்கெல்லாம் பெருந்திரளாக கூடுகின்றதோ அங்கெல்லாம் தங்களின்
வர்க்கச் சுரண்டலுக்காக
அரசானது டாஸ்மாக் எனும் மதுகடைகளை திறந்து வைத்துக்கொண்டு வாருங்கள்!
தமிழ்ச்சமூகமே உங்களின் மூளைகள் இங்கே விலைக்கு வாங்கப்படுமென்று,,,
சந்தை விரித்து சங்கை அறுக்கும் கொலை குற்றப் பணியை செய்கின்ற வேளையில்
சமூகமானது சீரழிந்துபோகத்தானே செய்யும். இதில் எவ்வித
தயக்கமோ,பின்வாங்குதல­ையோ இதுவரை நாம் காண கிடைத்ததில்லை என்பதே
குற்றத்திற்கான உடந்தையாகிறது.
கோவை பள்ளி மாணவி குடித்துவிட்டு வந்து சலசலப்புச் செய்த சம்பவமாகட்டும்
, திருவண்ணாமலையில் இளைஞர்களால் நான்கு வயது குழந்தைக்கு மது கொடுத்து
குடிக்கச்செய்து கட்டாயப்படுத்திய சம்பவமாகட்டும் இரண்டையும் கடந்து செல்பவர்கள் இளைய தலைமுறைகளையும்,
பெற்றோர்களையும் மட்டுமே திட்டிவிட்டு
அதன் பின்விளைவுகள் ஏதும் அறியாமல் முகமூடிகளுக்குள் ஒளிந்துகொண்டு
தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்கிறார்கள­். எதை முதன்மையாக எதிர்க்கப்பட
வேண்டுமென்பது அம்முகமூடிகளுக்கு தெரிந்தும் மௌனம் மட்டுமே பதிலாக
அளிக்கிறார்கள். இதற்கெதற்கு வேஷமிடுகிறீர்கள் தயவுகூர்ந்து உத்தம வேஷம்
போடாதீர்கள் அந்தச் சிறுமி குடித்திருக்கிறார் என்றாலோ, அந்த இளைஞர்கள்
குழந்தைக்கு மது கொடுத்து தீங்கிழைத்திருக்கிறா­ர்கள் என்றாலோ அதற்கு
முழுக்க முழுக்க அரசும்,சமூகமே காரணம். இதிலிருந்து சமூகம்
தப்பித்துக்கொள்ள
பழியை பெற்றோர் வளர்ப்பில் போடுகிறார்கள் , அரசு தப்பித்துக் கொள்ளவும்
பெற்றோர் வளர்ப்பையே பலிகாடாக்குகிறது. வளர்ப்புச் சரியில்லை என்பது ஒரு
காரணமேத் தவிர அதுவே முதன்மைத் தவறாக இருக்கவில்லை ஏனெனில் அவ்வாறான
கண்ணோட்டத்தில் நோக்கினால் டாஸ்மாக் எனும் மதுக்கடைகள்,அரசு,சமூ­கம் என
மூன்றுமே தப்பித்துக்கொள்ளும்.­ முடிந்தால் திறந்து கிடக்கும் டாஸ்மாக்
கடைகளை மூடுங்கள் . இல்லையேல் வாய்மூடி மதுவுக்கு அடிமையாய் கிடந்து
குடல்வெந்து சாகுங்கள். இவ்விரு சம்பவங்களையும் விட மிகவும் வேதனை தரும்
தகவல் என்னவென்றால் ஒட்டுமொத்த சமூகமும் குடிப்பதை
நியாயப்படுத்துதலையும­், குடிப்பதை பெருமையடிபபதலும் மிகச்சாதரனமாக
எடுத்துக்கொள்கிறது என்பதுதான் அது,,, மனிதன் பிறப்பில் தொடங்கி
அம்மனிதனின் இழப்பால் ஆன இழவு வீடு வரையில் இங்கே மதுபோதை இல்லாமல்
மக்கள் ஒன்றுகூடல் இல்லையென்றேச் சொல்லலாம் . பல திருமணங்களில் மணமகன்கள்
குடித்துவிட்டுதான் மணமேடையேறுகிறார்கள் அந்தளவிற்கு இச்சமூகம் குடியை
நியாயப்படுத்தி பெருமையடித்துக்கொள்க­ிறது.இணையத்தில் சண்டே
ஸ்பெஷல்,வீக்கெண்ட் ஸ்பெஷல், சாட்டர்டே ஸ்பெஷல், என்று மதுபாட்டிலோடு
பெருமையாக புகைப்படமெடுத்து போடும் சமூகத்தில் வெறென்ன மாற்றத்தை
எதிர்பார்க்க முடியும் . இதில் இன்னொரு கள்ள முடிச்சு பணியும் நடந்து
கொண்டுதான் இருக்கிறது , என்னவென்றால் ஆணாதிக்க பார்வை கொண்ட ஆதிக்கர்கள்
அந்த சிறுமியின் புகைப்படத்தையும்,காண­ொளியையும் பதிந்து கலாச்சாரத்தைப்
பற்றி பேசுகிறார்கள் அப்படி பேசுகிறவர்கள் எவரும் ஆண்மக்கள் மது
அருந்துவதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் . எது எப்படியோ விடியலைத் தேடாத
சமூகம் வீழ்ச்சியடைந்தே தீரும் .
"கேட்டியாக்கா சேதியென்று! நகர்ந்து போகும் மனநிலை உங்களுடையதெனில்
நாளை உங்கள் பிள்ளைகளும் குடித்துவிட்டு வரலாம் மறக்காலம் துடைத்து
வையுங்கள் உங்கள் கேமராவை,,,

Thursday, July 02, 2015

கடத்தல் கனவு

என் கனாவில்
உனை
கடத்திச் செல்கிறேன்
நிதானமாக

பாதையில் பாதி
நிலவு
அருகில் எனை
அழைக்கையில்

அதுதான்
காதலென
உணர்ந்தேன்

நீரோடு காற்று
காதல் வலை
வீசுவதை
இரவு
அறிந்திருக்குமோ

வெகுதூரம்
போவதுபோல்
உள்ளுணர்வு
எனக்குச்
சொல்லிவிட

சட்டென விழித்துக்கொள்கிறேன்­ உடலெங்கும் வியர்வைத்துளிகள்

விவரம் அப்போதறிந்தேன்

உன் கனாவில்
எனை கடத்திச் செல்கிறாய்
அதே
நிதானத்தோடு,,,

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...