Tuesday, September 29, 2015

பிழைப்புவாத பார்ப்பானியம்

சமீப காலமாக சமூகத்தின் மீது பார்ப்பானியம் சுமத்தும் குற்றங்களில் ஒன்று
"பார்ப்பனர்களை இச்சமூகம் கீழ்த்தரமாக பாவிக்கிறது" என்பதாக இருக்கையில்
எப்படி இது நடைமுறைபடுத்தப்படுகி­­­றது என்பதற்கான விளக்கங்களை தத்தம்
குமுறலாக எடுத்துரைக்கிறார்கள்­­­ எழுத்தாளர்கள் என்கிற போர்வையில்
இருக்கும் இந்துத்துவர்களான ஜெமோ, பத்ரி ஷேசாத்ரி, போன்றோர்கள் . அவர்கள்
முன்னெடுத்துச்செல்லு­­­ம் பார்ப்பானிய அணுகுமுறைகள் மிகவும்
அசாத்தியமானவை, மற்றும் அசத்தலானவையும் கூட, வெகுசன மக்களிடம்
பார்ப்பானியத்தின் மீது ஒருவித ,பாசத்தையும்,இரக்கத்தையும் தூண்டுவதன்
மூலம் பார்ப்பானியத்தையும் அதன் முதற்பொருளான இந்துத்துவத்தையும் எளிதில்
வென்றெடுக்கலாம் என்பதே அவ்வாறான எழுத்தாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
சக இந்து எழுத்தாளரான பெருமாள் முருகன் அவர்களின் " மாதொரு பாகன்"
நாவலுக்கெதிரான அடக்குமுறைகளைக் கையாண்ட அதே இந்துத்துவத்தை எதிர்க்கவும்
அதற்கான செயல்பாட்டினை முன்னெடுக்கவும் பார்ப்பானிய பற்றுகொண்ட
எழுத்தாளர்கள் முன்வராததற்கு மாதொரு பாகனால் தங்கள் பார்ப்பானியம்
சீர்குலைந்து விடுமென்கிற உண்மையும் மக்களுக்கு தங்களின் இந்துத்துவ
கட்டுக்கதைகளால் உறுவான கடவுளர்களின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும்
என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள்­­­. அதே வேளையில் அவர்களின்
மீதான கறையை முற்றிலுமாக வெளியில் தெரியாத வண்ணம் பத்திரப்படுத்தி
வைத்துக் கொண்டு பார்ப்பானியம் மட்டுமே மக்களின் மீதான கறையை துடைக்கும்
ஆகச்சிறந்த ஒன்றாக அதே மக்களை நம்பவும் வைத்து விடுகிறார்கள்.ஓரளவிற­­்கு
பார்ப்பானியத்திலிருந­­்து வெளிவரும் மக்கள் அதனை எதிர்ப்பதற்கான உண்மைக்
காரணங்களை வெளிப்படையாகவே பேசத்தொடங்கி அதன் மீதான விமரிசனங்களை
முன்வைக்கிறார்கள் எனும் உண்மை பார்ப்பானியத்தை அச்சப்பட
வைத்திருக்கிறதென்றுச­­­் சொன்னால் அது மிகையன்று, கைபர் போலன் கனவாய்கள்
இன்னும் திறந்தே இருக்கிறது ஆதிக்கர்களாகிய ஆரியர்களே எப்போது நீங்கள்
வெளியேறுவீர்கள் என்று வெளிப்படையாகவே கேட்கத்தொடங்கி விட்ட மக்கள்
பார்ப்பானியத்தின் முந்தையகால வரலாற்றை அறிந்தகொண்டுதான் அவ்வாறு
கேட்கிறார்கள் எனும் உண்மையும் பார்ப்பானியர்களை மிகவும் அச்சப்பட வைத்து
விட்டது
மேலும் பார்ப்பானியம் தங்களின் உழைப்பை செலுத்தி உயிர்பிழைக்க
விரும்பவில்லை அதற்கு மாறாக தங்களால் அடிமைபடுத்தப்பட்ட மக்களை உழைக்கச்
செய்து அதன் பலன்கள் முழுவதையும் அனுபவிப்பதை கண்டு மக்கள் வெகுண்டெழ
தொடங்கிவிட்டார்கள் . இதன் மூலம் பார்ப்பானியம் பயப்படத் தொடங்கிவிட்டதாக
அவ்விதமான எழுத்தாளர்கள் உணர்ந்துவிட்டதன் பலனாக பார்ப்பானியர்களும்
மூன்று சதவிகிதம் இருக்கும் சிறுபான்மை மக்களே என்று பரப்புரையும்
செய்யத் துணிந்து விட்டார்கள்.
"அந்த நாட்களில் கீழ்ச்சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் காலை வேளைகளில்
கல்கத்தாவின் சாலை ஒரத்தில் கையில் நீர் நிறைந்த குவளைகளுடன் வரிசையாக
நிற்பார்கள். அந்தப்பக்கம் ஒரு பிராமிணர் எப்போது வருவார் என்று ஆவலோடு
எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள் . ஏனெனில் அந்த பிராமிணர்களின் காலை
கழிவீய நீரை வீட்டிற்கு எடுத்துச் சென்றால்தான் பெற்றோர்க்ள் அதனை
சிறிதளவு உறிஞ்சி குடித்துவிட்டு உணவு உண்ண ஆரம்பிப்பார்கள். சர் .பி சி
ரே அதொநூ 17 பக்கம் 80
மேற்கோள்: "இட ஒதுக்கீடல்ல
மறு பங்கீடு" - ஆதவன் தீட்சண்யா 2008.
ஆரம்பகால அடிமைத்தனத்தின் உச்சம் நம்மை வெட்கித் தலைகுணிய வைக்கிறது .
ஆண்டாண்டு காலமாக பார்ப்பானியத்தின் காலைக்கழுவி குடிக்கும்
அடிமைச்சமூகம் இப்போதும் அப்படியே தொடர்ந்தாலும் தான்
அடிமைபட்டுகிடக்கிறோம­­­் என்கிற குற்றவுணர்ச்சி வெகுசனங்களிடம்
முற்போக்காக வந்துவிடுகின்றது. சாதியப் படிநிலைகளை விலக்கிக் கொண்டு
சமத்துவத்தை நிலைநாட்ட பார்ப்பானியம் என்றுமே முன்வந்ததில்லை,
அவ்வாறிருக்க அவர்களை கேவலமாக நடத்துகிறார்கள் என்று பொய்யுரை எங்கும்
சுற்றித்திரிவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கிறது
பார்ப்பானியம்.
"மன்னர் ஒரு பெண்ணை தன்னுடைய மனைவியாக தேர்ந்தெடுத்ததும் பிராமிணர்களில்
மிகச் சிறந்தவனை, மிகவும் தகுதியானவனை அழைத்து தன்னுடைய மனைவியைக்
கன்னிக்கழிக்கும்படி கேட்கிறான். அதற்காக அவனுக்கு நூறு முதல் ஐநூறு
டுகாட் பணம் தருவதற்கு அரசன் கடமைபட்டிருக்கிறான் . (வர்த்தேமாவின்
சுற்றுப்பயணம்) . ஹக்லுயத் சமுதாயம் தொகுதி 1 பக் 141
மேற்கோள் : "இட ஒதுக்கீடல்ல
மறு பங்கீடு" - ஆதவன் தீட்சண்யா 2008.
தங்களை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக்கொள்ளும் பார்ப்பானியம் தன்
ஆதிக்கத்தினை ஆட்சியாளர்களிடமும் செலுத்தியிருக்கிறது.­­­ பழைய
நடைமுறைகளை பின்பற்றத் தயங்கும் ஆட்சியாளர்கள் புதிய பரிணாம யுக்திகளை
பார்ப்பானிய ஆதிக்கத்திடம் அப்படியே பெற்றுக்கொள்கிறார்கள­­­். முந்தைய
முறையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் நவீன காலத்திற்கு ஏற்றவாறு
மாறிக்கொள்கிறது அவ்வளவே, மற்றபடி எந்த கலாச்சாரத்தை காப்பதாக
பார்ப்பானியம் சொல்கிறதோ அதே கலாச்சாரத்தை முன்னின்று அழித்த பெருமை
அதற்கு உண்டு. முழுக்க முழுக்க ஆணாத்திக்கம் பெற்றுள்ள பார்ப்பானியம்
பெண்ணினத்தை பகடைக்காயாக உருட்டியிருப்பது தெளிவாகப்
புலப்படுகிறது.அதுவும­் ஆட்சியாளர்களின் துணையோடும் , அவர்களின்
சம்மதத்தோடும் அதோடல்லாமல் வருமானப் பெருக்கத்தோடும் பார்ப்பானியம்
அன்றைய காலத்தை தனது இந்துத்துவத்தால் கட்டிப்போட்டிருக்கிற­­­து.
பெண்ணினத்திற்கு தெய்வ வழிபாடு தந்த ஒரே மதமென்று பெருமையடிக்கும் அதே
பார்ப்பானியம்தான் பெண்ணடிமையை வளர்த்தெடுத்திருக்கி­­­றது. சொந்த
மண்ணில் கீழ்த்தர குடிமக்களாள் பார்ப்பானர்களை நடத்துகிறார்கள் எனப்
பொங்கும் இந்துத்துவ வாதிகள் இன்றுவரையில் தெருக்களில் ஓடும் சாக்கடையை
சுத்தம் செய்யவும், துப்புரவுப் பணியாளர்களாக தங்களை மாற்றிக்கொள்ளவும்,
மலம் அள்ளும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாராக இல்லையெனும்
பொழுது பொய் பரப்புரையை கையாள்வது அவதூறு குற்றமாகத்தானே இருக்க
முடியும்.பார்ப்பானியத்தின் வேஷம் வெளிவரத் தொடங்கிவிட்டது. விழிப்புடன்
சமூகம்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...