Tuesday, October 27, 2015

BJP,RSS அளவில்லாத இந்துத்துவ சர்வாதிகாரம்

இந்திய நாட்டை பசுமையாக்க நேரமில்லாமலும், வேண்டுமென்றே தவிர்த்தும்
தங்கள் "காவி" நிறத்தை கையிலெடுத்திருக்கும்­ இந்துத்துவ ஆர்எஸ்எஸ் பாஜக
விடமிருந்து வன்முறையை மட்டுமே எதிர்பார்க்க முடியும் அதுவும் ஒன்றரை
ஆண்டுகளில்,,, இன்னும் மூன்றரை ஆண்டுகளில் இந்தியா சமத்துவ நாடென்பதை
கைவிட்டுவிட்டு இருள் சூழ்ந்த குற்றப் பிண்ணனி நாடாக இருக்கும் என்பதில்
எவ்வித ஐயமும் இல்லை,அத்துணை பயங்கரவாதச் செயல்களையும் கணக்கச்சிதமாக
செய்து முடிப்பதில் கைதேர்ந்தவர்களாக இந்துத்துவ காவிகள் சிறந்து
விளங்குகிறார்கள். இதற்கு பெரும் சான்றாக ஜம்முவில் ஆர்எஸ்எஸ் பேரணியும்
அதையும் கூச்சமின்றி ஒளிபரப்பு செய்த இந்திய தேசிய தூர்ஷன்
தொலைக்காட்சியும் உண்மையில் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றது. தொடர்ந்து
எழும் இந்துத்துவ பார்ப்பானிய காவிகளின் சர்ச்சனைகளுக்குப் பின்னால்
இரண்டு விஷயங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. விஷ நாக்குகளை
பெற்றிருக்கின்ற ஆர்எஸ்எஸ் , பாஜக , மற்றும் சிவசேனாக்களிடம்
மாட்டிக்கொண்டு மரணத்தின் வாசலில் தத்தளித்துக்கொண்டிரு­க்கிறது இந்திய
சனநாயகம், எந்த மாநிலங்களை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஓலக்குரலாகவே
ஒலிக்கிறது அவ்வளவு சீக்கிரமாக இந்திய தேசியத்தை "இந்து தேசியமாக மாற்றத்
துடிக்கும் மதியிழந்தோர் ஆட்சியார்களாக இருக்கையில் எதுவும்
சாத்தியமாகலாம் சமத்துவம் தவிர்த்து,,, இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் முகப்புரையில் அதற்கே உரித்தான ஒருப் பொதுநிலை முரண்பாட்டை
களைத்து சமூக நீதியை பேணிகாத்து வந்துக்கொண்டிருக்கிற­து. என்னவெனில்
"இந்தியா ஒரு சமயசார்பற்ற சமத்துவ நாடு, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட
நாடு"
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள அனைத்து சமூக
நீதிகளையும் அழித்து இந்தியா ஒரு இந்துக்கள் நாடு? என்கிற பாணியினை
புகுத்த "பொது சிவில் சட்டம்" கொண்டுவரும் முனைப்போடுதான் இந்துத்துவ
பார்ப்பானிய ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் இதற்குச் சான்றாக ஆர்எஸ்எஸ்
சங்பரிவார ஆதரவுடன் ஆட்சியமைத்த பாஜக மோடி அரசின் ஒன்றரை ஆண்டுகால
ஆட்சியில் இந்தியாவின் அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த ஒன்றரை
ஆண்டுகளில் தலித் , இசுலாமிய , பழங்குடி மக்களின் மீதான தாக்குதல்களும் ,
அவர்களை பகிரங்கமாக எதிர்க்கும் விதமான கருத்துக்களும், அதனை
நியாயப்படுத்தி வெளியிடும் செய்தி ஊடகங்களும் சமத்துவத்திற்கு எதிரான
மிகப்பெரும் சவாலை விடுக்கிறது. இந்தியாவில் தலித்துகளை தாக்கி அவர்களின்
உரிமையினை பறித்து ஒட்டுமொத்தமாக அடிமைபடுத்தி ஆதிக்கம் செலுத்த
முற்படும் இந்துத்துவ பார்ப்பானிய பாஜக வின் உச்சக்கட்ட நடவடிக்கைதான்
ஹரியானாவில் சாதிவெறியர்களால் கொளுத்தப்பட்ட பச்சிளம் தலித் குழந்தைகளை
"நாய்கள்" எனும் விதமாக கருத்துகளை விதைக்கிறது. போலவே காவிக்கு பச்சை
ஆகாதெனும் கீழ்மட்டச் சிந்தனையின் விளைவாக தாத்ரி இசுலாமியர் ஒருவரை
மாட்டிறைச்சி சமைத்து உண்ணதாக குற்றம் சுமத்தி அடித்துக் கொலைச் செய்ய
வைத்திருக்கிறது. மேலும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வையும்
கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்த பார்ப்பானிய ஆணாதிக்க ஆட்சியதிகாரம்.

உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் படி "உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு
பயப்படும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவிற்கு ஏழாவது இடம்" இதுதான்
மோடி அரசின் டிஜிட்டல் மற்றும் கிளீன் இந்தியா திட்டமென்றால் இந்தியர்கள்
நம்பித்தான் ஆக வேண்டும். இட ஒதுக்கீட்டில் மூக்கை நுழைத்தல்,
எழுத்தாளர்கள் படுகொலைகள், விவசாய்களை வசைபாடுதல் , தலித் விரோத
போக்குகள், சிறுபான்மை மக்களை இழிவாக நடத்துதல், மாட்டிறைச்சி உணவில்
இந்துத்துவ வெறியை காட்டுதல் , இந்தி மொழி திணிப்பு, பெண்ணடிமையை
ஆதரித்தல், சாதியாதிக்கத்தை புகுத்துதல், போன்ற பல்வேறு நடவடிக்கைகள்
மூலம் மக்களிடம் சாதிமத இனவெறியைத் தூண்டி அதன் மூலம் இந்துத்துவத்தை
வளர்த்தெடுப்பது மட்டுமல்லாது மேலும் முக்கியமான இரண்டு காரணங்களை
முன்வைத்தே மூன்று இந்துத்துவ பார்ப்பானிய அதிகாரங்கள் செயல்படுகின்றன.
முதலாவது காரணம்: தங்களது இந்துத்துவ பாசிச ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு
விட்டனர் என்பதை உறுதி செய்வதற்காகவும்,பாஜக­ா நல்லாட்சி புரிகிறது
என்பதனை சுட்டிக்காட்டவும், இந்தியா இந்துக்கள் நாடாக இருக்க
விரும்புகிறது என்பதனை எடுத்துரைக்கவும் "பீகார் தேர்தல்" அவர்களுக்கு
தேவைப்படுகிறது. ஆட்சியதிகாரம் பிடித்து தனது ஆட்சியின் தவறுகளை சரிசெய்ய
பாஜக முயல்கிறது. இரண்டாவது காரணம் : பருப்பு மற்றும் அத்யாவசிய உணவுப்
பற்றாக்குறை,பதுக்கல்­கள்,மற்றும் விலையுயர்வை மறைத்து மக்களை தங்களது
ஆட்சிக்கு ஆதராவாக திசைதிருப்பதல் மற்றும் சிந்திக்க விடாமல் தடுத்தல்.
போலவே "வியாபம்" எனும் மிகப் பெரும் ஊழலை மறைத்து அதற்கும் ஆட்சிபுரியும்
பாஜகவிற்கும் எவ்விதச் சம்மதமும் இல்லை என்கிற மாயத்தோற்றத்தை
உறுவாக்குதல். இவ்விரு காரணங்களையும் முன்வைத்தே ஆளும் பாஜக அரசு பாசிசப்
போக்கை கையிலெடுத்திருக்கிறத­ு என்பதே உண்மையாக இருக்கிறது. இதற்கு
ஏற்றார்போல் அதன் பிரதான எதிர்கட்சியான காங்கரஸும்
செயல்பட்டுக்கொண்டிரு­க்கிறது. முன்னாள் காங்கரஸ் நிதி அமைச்சரான பிரணாப்
முகர்ஜி, தன்னை எவ்வித அரசியல் சார்புடைய இந்தியக் குடிமாகனாக காட்டிக்
கொள்வாரேயானால் இந்தியக் குடியரசுத் தலைவர் என்கிற முறையில்
அரங்கேற்றப்படும் அனைத்துவிதமான சமூகச் சீர்கேடுகளை முன்வைத்து
இதுவரையில் ஏன் எந்தவொரு கண்டனமோ,அறிக்கையோ,எச­்சரிக்கையோ விடுக்கவில்லை
எனும் கேள்விக்கு எந்த அதிகாரத்தாலும் பதில் சொல்லவே முடியாது.
கடைசிவரையில் மக்களும் ஊமையாக,,, மன்னனும் வசதியாக,,,
வாழ்ந்தே பழகிவிட்டோம் இந்திய திருநாட்டின் தலைவிதி அதுவென தலையெழுத்தை
மாற்ற நாமும் தயாரற்று இருந்து விட்டோம்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...