Tuesday, October 13, 2015

கிராம பூ(ச்சாண்டி)சாரிகள் மாநாடு

தமிழ்ச் சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு மதவழிச் செயல்முறைகளில்
முக்கியமானதாக கருதப்படுவது குலதெய்வ வழிபாடு அல்லது சிறுதெய்வ
வழிபாடாகும். தன் பாட்டன் முப்பாட்டன் காலத்திய மதவழிச் சமூகத்தின்
படிநிலைகளின்படி அப்படியே தொடர்ந்து வாழியடி வாழையாக வணங்கப்படும்
தெய்வங்கள் சிறுதெய்வங்களாகும். அச்சிறு தெய்வங்களுக்கு என்று தனியாக
அர்ச்சகர்களோ,புரோகித­ர்களோ இல்லை அதற்கு மாறாக "பூசாரிகள்"
என்றழைப்படுவோர் இறைதூதனாக இருந்து செயல்படுகின்றனர். அவர்கள்
பார்ப்பனராக இருப்பதில்லை அந்தந்த கிராமத்தின் உடைமையாளராக
இருக்கிறார்கள். நமது இந்திய மற்றும் தமிழ்நாட்டு கிராம அமைப்பு முறையின்
படி "இரட்டைக் குடில் முறையிலேயே சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது அதாவது
சேரி அல்லது காலனி,ஊர் என்கிற இரட்டை குடியமைப்புகளாக இனக்குழுக்களை
உருவாக்கிக்கொண்டு வாழுமிடம் கிராமம் என்றழைக்கப்படுகிறது.
அதனடிப்படையில் சேரி அல்லது காலனிக்கென்று ஒரு குலதெய்வமும் அதற்கொரு
கோவிலும் கோவிலின் பணிக்காக தர்மகத்தாவும்,இறைதூத­னாக பூசாரியும்
இருக்கிறார்கள். அதேபோலத்தான் ஊர் எனப்படும் ஆதிக்கர்களும்
பின்பற்றுகிறார்கள். கிராம பூசாரிகள் வேதமோ உபகிடதமோ
போதிப்பதில்லை,மந்திர­ உச்சரிப்போ அவர்கள் பயன்படுத்துவதில்லை மாறாக தன்
தாய்மொழியில் இயல்பான முறையில் குலதெய்வத்திடம் முறையிட்டு மக்களுக்கான
தேவையை பூர்த்திசெய்ய வேண்டி இறைவனை வேண்டுகின்றனர். அதற்காக
அவர்களுக்கென்று தனிக் கட்டுப்பாடு முறைகளேதும் இல்லை . இந்த வகையில்
கிராம பூசாரிகள் மற்ற பார்ப்பன அர்ச்சகர்களிடமிருந்த­ு வேறுபட்டு தனித்தே
செய்படுகின்றார்கள். ஆனால் பார்ப்பன ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் கீழே தான்
அவர்களின் நடைமுறைச் செயல்பாடுகள் இருக்கும். பார்ப்பனர்கள் ஆதிக்கத்தின்
கீழ் கிராம பூசாரிகள் என்றழைக்கப்படுவோர் மிக அதிகமாகவே மக்களை
இந்துத்துவத்தில் இணைக்க முற்படும் சக்திகளாக இருக்கிறார்கள் . இதில்
போலிச் சாமியார்கள் என்று சிக்குவோர்களின் எண்ணிக்கையில்
பூசாரிகளுக்கென்று தனியிடம் உண்டு , அதுமட்டுமல்லாத மூடபழக்க வழக்கங்களை
மக்களின் மனதில் பதிந்து தங்களையே கடவுளாக்கப்பட வேண்டும் என்கிற
கட்டளையையும் அம்மக்களின் மீதே திணிக்கிறார்கள் பூசாரிகள். புகழ் பெற்ற
மேல்மருவத்தூர் அடிகளாரையே முன்னுதாரனமாக எடுத்துக்கொள்ளலாம் ஓம்சக்தி
ஆலையம் எனப் பெயரிடப்பட்ட அத்திருத்தலத்திற்கு (அவர்களின் பாஷையில்)
அடிகளாரையே தெய்வமாக வழிபடுகிறார்கள் மக்கள் . குறிப்பாக அதில்
சிக்குவோர் பெரும்பான்மையான பெண்களே,, முழுக்க முழுக்க இந்துவத்துவத்தை
பின்பற்றுகின்ற கிராம பூசாரிகளும் ஆரியர்களே என்று அறியாமல் , ஆரியர்கள்
எதிர்க்க வேண்டுமெனில் பூசாரிகளை புகழ வேண்டுமென்று மாநாடு போட்டு
இந்துத்துவத்தை வளர்த்தெடுக்கும் சீமான் தலைமையிலான வீரத்தமிழர் முண்ணனி
எனும் அமைப்பு பார்ப்பானியத்தின் செயல்திட்ட அமைப்பே அன்றி வேறென்னவாக
இருக்க முடியும். முடிந்தால் அவர்கள் மருவத்தூர் அடிகளாரின் ஆதிக்கத்தை
எதிர்த்து களமாட முடியுமா?
சிறு தெய்வ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு என்கிற போர்வையில் பூசாரிகள்
செய்யும் ஒவ்வொரு அட்டூழியத்திலும் ஏழை பாமர மக்களின் வியர்வை
சுரண்டப்படுகிறது என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது. அவ்வாறு
இருக்கையில் தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் வீரத்தமிழர் முண்ணனி
அமைப்பானது இன்னொரு சங்பரிவார அமைப்பாகவே மாறியிருக்கிறது ஆர் எஸ் எஸ்
இன் அனைத்து விதமான பார்ப்பன இந்துத்துவ நடவடிக்கைகளை அப்படியே
உள்வாங்கியதொரு அமைப்பிற்கு பிற்போக்குத் தனங்களை தவிர வேறென்ன
அறிந்திருக்க முடியும். அதையெல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு
அப்படியென்ன புரட்சி பேசுகிறார்கள் கிராம பூசாரிகள் மாநாட்டில் என்று
பார்வையிட்டால் தகவலேதும் அதிலில்லை, அனைத்தும் ஒரே சுழற்சி மையமாக
நின்று ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிபோல "திரும்ப திரும்ப பேசுர
நீ" என்றபடியே முடித்திருக்கிறார் நாம்தமிழர் கட்சி சீமான் அவர்கள்,,,
விடுதலைப் போராட்ட வீரர் ஐயா "கக்கன்" அவர்கள் முதன்முதலித்
பூசாரிகளுக்கென்று தனி அந்தஸ்து வாங்கித் தந்து தலித்துகள் மற்றும்
சாணார்கள் கோயில்களில் நுழைய தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் அன்றைய
இராஜாஜி 1939 அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம்,
சட்டத்தினைக் கொண்டு மதுரையில் கிராம பூசாரிகள், தலித்துக்கள் மற்றும்
சாணார்களை அழைத்துக் கொண்டு தலைமைதாங்கி கோயிலினுள் நுழைந்தார். கிராம
பூசாரிகளுக்கான முதல் அங்கீகாரம் அங்கேதான் கிடைக்கப்பெற்றது.
இவ்வரலாற்றை தனது ஒன்றரை மணி நேர உரையில் ஓரிடத்தில் கூட குறிப்பிடாத
சீமானுக்கே இந்நிகழவு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லையென்றுதான் தெரிகிறது.
போலவே மாநாட்டில் கூடிய கிராம பூசாரிகளுக்கே இது தெரிந்திருக்குமா? என்று
கூட எண்ணத்தோன்றுகிறது. ஆகஸ்ட் 30 அன்று நிகழ்ந்த கிராம பூசாரிகள் மாநாடு
என்பது இந்துத்துவ பூச்சாண்டிகள் மாநாடு என்று வேண்டுமானால் அழைக்கலாமே
அன்றி அது ஒருபொழுதும் தமிழ்த்தேசியத்தில் இடம்பெறாது காரணம்
இந்துத்துவத்தின் பிடியில் இருக்கும் போலித்தமிழ்த்தேசியம்­ ஒருபொழுதும்
முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும்,வா­ர்த்தெடுக்கவும் வாய்ப்பே
இல்லை என்பதும் பிற்போக்குத் தனத்திற்கான வழியே அதுவென்றும் மிகத்
தெளிவாக உணர்த்தும் முப்பாட்டன் முருகனுடைய பிள்ளைகள் அல்லவா அவர்கள்,,
முப்பாட்டி யாரென்று இன்னமும் அவர்கள் முடிவு செய்ய வில்லையாம் ஒரு வேளை
ஜெயலலிதாவாகக் கூட இருக்கலாம்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...