Saturday, October 31, 2015

சிவசேனாவின் தொடர் அட்டூழியங்கள்

சிவசேனாக்கள் காவி உடையில் வலம் வரும் கொலைக்கார கும்பல்கள் என்பதை
எப்போதும் நிருபித்துக் கொண்டிருப்பவர்கள். அந்த வகையில் சமீபத்தில்
எழுத்தாளரான குல்கர்னியின் மீது மை வீசி தங்கள் எதிர்ப்பை ஆதிக்க
வெறியோடு காட்டியதை இந்தியா அறிந்திருக்கும். ஒட்டுமொத்த இந்திய
எழுத்தாளர்களையும் கதிகலங்கச் செய்திட்ட இச்செயலுக்கு எதிர்வினையாக
அவர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப அளித்து தங்கள்
எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனாலும்
தொடர்ந்து சிவசேனாக்கள் தங்கள் கொலைவெறியை காட்டிக்கொண்டேதான்
இருக்கிறார்கள் . அந்தளவிற்கு சாதிய மதவெறியும், ஊழலும்,
கொள்ளையடித்தலும் அவர்களுக்குள்ளே ஊறிப்போயிருக்கிறது என்பதற்கு இன்றைய
நிகழ்வும் ஒரு சாட்சியாக நிற்கிறது.

மகாராஷ்டிராவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை (RTI) செயற்பாட்டாளர்
மல்லிகார்ஜூன் பாய்கட் என்பவர் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக நடக்கும் பல
சமூக அநீதிகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக வெளிச்சத்திற்கு
கொண்டு வந்து அண்மையில் இந்த சட்டத்தின் மூலமாக,சமூகத்தில் நிகழ்ந்த நில
அபகரிப்பான 14 ஆயிரம் சதுர அடியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட ஒரு
கட்டிடத்தைப் பற்றிய விவரங்களை, லத்தூர் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்
சந்திப்பில் அம்பலப்படுத்தினார். இதனை கண்டிக்கும்,
வகையிலும்,குறிப்பிட்­ட அந்த கட்டிடம் சிவசேனாக்கள் கட்டுப்பாட்டில்
இருந்தமையாலும், இன்று (30.10.2015) அவரை கடத்திச் சென்று கல்லூரி
ஒன்றில் வைத்து அங்கு கூடியிருந்த சுமார் நான்காயிரம் மாணவர்கள்
முன்னிலையில் அவரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கி, அவரது
முகத்தில் கருப்பு மையைப் பூசியுள்ளனர்.
சிவசேனாவின் தொடரும் அட்டூழியம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்துத்துவ
வெறியாட்டியத்தால் இந்தியாவின் இறையாண்மை நேரடியாகவே கொல்லப்படுகிறது.
மேலும் நான்காயிரம் மாணவர்கள் முன்னிலையில்? என்பது மிகவும்
வருத்தத்திற்குரியது.­ மாணவர்களின் இந்த மௌனம் நிச்சயம் அழிவின் பாதைக்கே
இட்டுச்செல்லும். இனியும் எதிர்ப்பு என்பதை காட்டாத வரையில் இந்துத்துவ
பார்ப்பானிய சிவசேனாக்கள் மனித பிணங்களின் குவியலில் ஏகபோகமாய் வாழ்ந்து
தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவார்கள் என்பதே உண்மை.
சாதியம்,மதவெறி,ஊழல்,­சுரண்டல், ஆகியவற்றை எதிர்க்க வேண்டிய கடமையை
நிறைவேற்றுவதுதான் உண்மையான சமூக சமத்துவத்திற்கான வழிவகுக்கும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...