Wednesday, October 28, 2015

மரணம் தழுவிய மண்

பின்னால் தொடரும்
நிழல் மறைகிறது
பூமிதொடும்
அன்பெனும் நிஜங்களை
பார்த்து,,,

_______

இதயம் தொலைத்து
நின்றேன் இனியவளே
உனக்காக,,,
காதல் கண்களை
மூடியது காட்சிகள்
இங்கு பிழையாக,,,

_______

தன்னை மறந்து
மண்ணை நேசிக்கும்
காற்றிடம் தன் காதலை
சொல்லத் துடிக்கிறது
இயற்கை,,,

_______

நட்பை விதைக்கும்
எந்த கணங்களும்
ரணங்களானதில்லை
உண்மையான
நட்பில் விரிசல்கள்
விழுந்ததில்லை,,,

_______

பார்த்தவுடன்
பன்னீரை
தெளித்துவிடுகிறாய்
உச்சத்தில் என்
உயிர் நனைகிறது,,,

_______

தாமாக அமைவதல்ல
வாழ்க்கை
அதுவொரு தேடலின்
சிறுபகுதியாக,,,

பனிச் சாரலில்
வெடித்த இரவுகள்
சுழன்ற நிலவிடம்
சூழ்ச்சிகள்
பலிக்கவில்லை
பத்திரமாய் இறக்கிவிட
பஸ்பமாகிறது
நட்சத்திரம்,,,

என்னைக் கடந்து
செல்பவனே
வதைக்காதே
உன்பார்வையில்
விளைந்தவள் நான்
மலர் தருவாய்
என் பெண்மை
மலர்ந்திட,,,
_______

திட்டாதீர்கள்
மரங்களே என்னை
காகிதங்களை
எரிப்பவன் நானல்ல
வடிக்கிறேன் கண்ணீரை
கவிதையாக,,,

_______

எமன் வீசிய
பாசக்கயிறு
உறுதியற்றதாய்
எளிதில்,,,
எழுதிவைத்தாய்
காதலிக்கிறேன்
உன்னையென்று,,,

_______

தூவலின்
ஒளிச் சிற்பம்
நிறப்பிரிகை
நகைச்சுவையாகிறது,,,

_______

தயவு
தாட்சனைகள்
தாழிட்டிக்கொண்டன
தவறுகள்
தட்டில்
தட்சனையாக,,,

_______

நெகிழியில்
மழைத் துளி
மரணத்தை
தழுவியது
-மண்

_______

மனம்விட்டுப்
பேசுங்கள்
மனதை
விட்டுவிட்டு
பேசாதீர்கள்,,,

_______

சாரல்
கிழவியின் தளர்ந்த
உடலில்
கிழிந்த சீலை
காற்றை
நிறுத்துகிறது,,,

_______

மர்மம்
அவிழ்க்கப்படவே
இல்லை
மனதின் ஆழத்தால்
அவளே
பெண்ணாக,,,

_______

கட்டிய கணவன்
நானிருக்க
கண்டாங்கி சேலை
எதுக்கடி
ஒட்டிக்கொள்
என்னையே
ஆடையாக.,,

_______****_______

2 comments:

  1. "கட்டிய கணவன்
    நானிருக்க
    கண்டாங்கி சேலை
    எதுக்கடி
    ஒட்டிக்கொள்
    என்னையே
    ஆடையாக..." என்ற
    அழகான அருமைான வரிகளை
    வரவேற்கிறேன்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...