Wednesday, November 25, 2015

திருவாங்கூர் சமஸ்த்தான இந்துத்துவ தலைவரின் ஆணாதிக்க கருத்து,,,

நாம் பார்க்கும் சராசரி
நடவடிக்கைகளில் ஒன்று டாஸ்மாக
கடைகளில் எப்போதும் அலைமோதும்
கூட்டங்களை பார்த்தும்
பார்க்காதவாறே அல்லது அதனை
சகித்துக்கொண்டே கடந்து போவோம்,
ஆனால் கார்த்திகை மாதம் பிறந்து
விட்டலே ஒரு ஆத்ம திருப்தி நமக்குள்
முளைக்கத் தொடங்கும், அதற்கு
காரணம் "அப்பாடா ஓரளவிற்கு யாரும்
குடிச்சிட்டு வண்டி ஓட்ட மாட்டங்க"
"இப்பதா நிம்மதியா இருக்கு
குடிச்சிட்டு அவ்வளவா யாரும்
வம்பிழுக்கல" இப்படியான
சிந்தனைகளும் அதிலொரு
மனநிம்மதியே நமக்கு வரும். இந்த மன
நிம்மதியானது "ஐய்யப்பன்" என்று
இந்துக்களால் கடவுளாக்கப்பட்ட
கற்சிலைக்கு வந்தால்தான்
ஆச்சர்யமே,,, அன்றிரவு முழுக்கு மது
அருந்தி மதியிழந்து மயங்கிய
நிலையில் களியாட்டம் போட்டுவிட்டு
அதிகாலையில் திடீரென சபரி மலை
ஐய்யப்பனுக்கு மாலை
போட்டுக்கொண்டு உத்தரமாய்
வேஷமிடும் ஒழுக்கமற்றவர்களை
நிச்சயமாக இச்சமூகம் நிறைய
கண்டிருக்கும்.மற்ற மாதங்களில் வராத
ஒழுக்கம் அவர்களுக்கு கார்த்திகை
மாத 40 நாட்களில்
வந்துவிடுகிறது,,,அதுமட்டுமில்லாது
திடீர் சாமியார்களான அக்
குடிகாரர்களை மற்றவர்களும் "சாமி"
என்றே அழைக்க வேண்டுமாம்.
அந்தளவான பக்தி மயக்கம் ஏன்
மதுபாட்டிலை தொடும் போது
ஏற்படவில்லை என்று
கேட்டுவிடாதீர்கள், நம்மவர்கள்
"பூமாதேவி" என்று அதே
இந்துக்களால் அழைக்கப்படும் பெண்
கடவுளான பூமிக்கும் ஒரு சொட்டு
குடிக்கக் கொடுத்து மார்டன் நாகரீகமாக
"சியர்ஸ்" அடித்துக் கொள்கிறார்கள்.
பாவம் பூமித்தாய் அதுவும் குடிக்கு
அடிமையாகி போதையில்
தன்னையும்,தன்னை சுற்றியுள்ள
கோள்கலையும் சுற்றிக்கொண்டிருக்கி
றது. இப்படியான சபரி மலை ஐய்யப்ப
பக்தர்களின் ஒழுக்கச்
சீர்கேடுகளையும் ஆதரித்தே
வந்திருக்கிறோம், அதைவிடவும் அந்த
40 நாள் விரதமும் தற்போது 48
மணிநேர விரதமாகி காலையில் மாலை
போட்டு மறுநாள் மாலையில் சபரி
மலைக்கு கிளம்பி மாலையை
கழட்டிப்போட்டவுடனே மதுபாட்டில்
கையில் ஏந்துபவர்களின் சீர்கெட்ட
ஒழுக்க நெறியை என்றேனும் கேள்வி
கேட்டிருக்கிறோமா? அப்படிக் கேள்வி
கேட்கத்தான் இந்த இந்துமதச் சமூகம்
சம்மதிக்குமா? இவற்றையெல்லாம்
ஒதுக்கி விட்டு உற்றுப் பார்த்தால்
ஆங்காங்கே "கோவிலுக்கு செல்லுதல்"
என்கிற பகுதியை எடுத்து விவாதிக்க
தொடங்கியிருக்கிறார்கள். நல்ல
முயற்சிதானே எதையும்
விவாதத்திற்கு எடுத்தாளுதல் சமூக
வளர்ச்சிக்கு உந்துதலாகலாம் எனும்
பார்வையில் தூசித்தான் விழுகிறது.
எந்த மதமானாலும் தங்களின்
மதப்பற்றின்பால் கொண்ட உணர்ச்சியின்
காரணமாக "கோவிலுக்கு
செல்லுதலை" நியாயப்படுத்தியும்
கூடாது என்போரை
குற்றவாளிகளாகவும் சித்தரிக்கிறது.
"கோவிலுக்குச் செல்லுதல் கூடாது"
என்போரை குற்றவாளியாக்கியவர்கள்
குடித்துவிட்டு பிறகு கோவிலுக்குச்
சென்று வந்தபின் உடனே மீண்டும்
குடிக்க ஆரம்பிக்கும் உத்தம சாமி?
களை எதிர்க்க முன்வர மறுக்கிறார்கள்
அதைவிடவும் எல்லா மதத்திலும்
இருக்கும் "யாரெல்லாம் கோவிலுக்குள்
நுழையலாம்" என்கிற திணிக்கப்பட்ட
ஒரு நியாயத்தை? தெளிவுபடுத்த
வேண்டும். அதிமுக்கியமாக
பெண்களை குறிவைத்து தாக்கும்
"கோவிலுக்கு போகத் தடை"
என்பதற்கான பிற்போக்கு
அடிமைத்தனத்துக்கு
மதவாதியாளர்களிடையே
மண்டிக்கிடப்பது என்னவோ
பழமைவாதமாகத்தான் இருக்கிறது.
பெண்கள் சபரிமலை கோவிலுக்குள்
எப்போது அனுமதிக்கப்படுவார்கள்
என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட
கேள்விக்கு பதிலளித்த திருவாங்கூர்
தேவஸ்தான தலைவர் பிறையார்
கோபாலகிருஷ்ணன், " பெண்கள்
தூய்மையாக தான் இருக்கிறார்களா
என உறுதி செய்வதற்கான பரிசோதனை
செய்யும் கருவி ஏதேனும்
கண்டுபிடித்தால்தான் அது சாத்தியம்
என்றார். அப்படியெனில் சபரி
மலைக்குப் போகும் ஆண்களெல்லாம்
துய்மையானவர்கள் என்று
கண்டுபிடிக்க இந்த இந்துத்துவ
பார்ப்பானியர்கள் ஏதேனும்
பரிசோதனைக் கருவி
வைத்திருக்கிறார்களா? அவ்வாறு
கண்டுபிடிக்கப்பட்ட கருவியின்
கண்டுபிடிப்பாளருக்கும் ஏன் விழா
எடுத்துக் கொண்டாடி
அக்கண்டுபிடிப்பை பொதுவில்
வைக்கவில்லை? பெரும்
ஊழல்வாதிகளில் தொடங்கி சிறுதொழில்
சுரண்டல் கயவர்கள் முதற்கொண்டும்,
பெண்களைப் போகப் பொருளாக,ஒரு
இயந்திரமாக பயன்படுத்திவிட்டு
தூக்கியெறியும் "விபச்சாரன்"களும் ,
குடிக்கும்,சூதாட்டத்திற்கும்
அடிமையாகிப்போன அனேக ஆண்களும்
சபரி மலைக்கு மாலைப் போட்டுக்
கொண்டு தங்களை அந்த ஒரு
மாதத்திற்கு மட்டும்
தூய்மையானவர்களாக
காட்டிக்கொள்ளும் ஆணாதிக்க
பேர்வழிகளை இன்னமும் இவர்களால்
தடுக்கமுடிவில்லை, இவர்கள்
தடைகள் போடுகிறார்கள்,
பெண்தூய்மை பற்றிப் பேசுகிறார்கள்
என்றால் ஆதிக்க மனநிலையின்
உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதே
தெளிவாகத் தெரிகிறது. பெண்களின்
பிறப்பில் இயற்கையாக
அமைந்திருக்கும் "மாதவிடாய்" போக்கு
தூய்மையற்றதாகவும்,
ஒழுக்கமற்றதாகவும் தீர்மாணிக்க
ஆணாதித்திற்கு திறந்தத்
தன்மையிலான உரிமை
இருக்கிறதெனில் , ஆண்களுக்கும்
அவ்வாறு அமையுமேயானல் இந்த
மதப்பற்றாளர்கள் எதை வைத்து
தீர்மானிப்பார்கள் என்பதை பொதுவில்
வைத்தேயாக வேண்டும்.
மாதவிடாயை காரணங்காட்டி பெண்கள்
சபரி மலை கோவிலுக்குள்
நுழைவதற்குத் தடைவிதிக்கும்
அதேநேரத்தில் ஆண்களிடம் காணாமல்
போய்விட்ட ஒழுக்க நெறிகளை
முன்வைத்து தடைவிதித்தால் சபரி
மலை ஐய்யப்ப கோவிலின் வருமானம்
மிகப்பெரிய அளவில் பாதிப்படையும்
என்பது மட்டும் உறுதி. இதனை
கருத்தில் கொண்டே பெண்களின்
தூய்மைத் தன்மையை கேள்வி
கேட்கும் ஆணாதிக்கர்கள் தங்களின்
தூய்மைத்தன்மை குறித்து
வாய்திறந்து கூட பேசுவதில்லை.
கோவிலுக்குச் செல்லுதலை அவரவர்
விருப்பமெனவும் , நாத்திகர்கள்
இதற்குள் மூக்கை நுழைக்க
வேண்டாம் எனவும் கேட்கும்
மதப்பற்றாளர்களும் மாதவிடாய்
ஒழுக்கமற்றது, என
ஏற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். அப்படி
இல்லையெனில் மீண்டும் ஒரு
சப்பைக்கட்டு ஐய்யப்பன் என்பவன்
கண்ணிகழியாதவனென்று,
அதற்கென்ன வந்தது உங்கள் கடவுள்
உத்தமனெனில் கோவில் கருவறைக்குள்
நுழையும் பெண்களின் அங்கங்களை
திருட்டத்தனமாக பார்க்கிறானா என்ன,,,
காஞ்சி கோவில் தேவஸ்தானத்தில்
பெண்களை மிரட்டி காமலீலை செய்து
அதை வீடியோ எடுத்து
சிக்கிக்கொண்டவனின்
ஒழுக்கத்தையும்,தூய்மையையும்
என்றேனும் கேள்வி கேட்காமலும்,
அவனின் பிராமினத்தன்மைமை
இழக்கச் செய்யாத முகபோலித்தனத்தை
கொண்டிருக்கும் பார்ப்பானிய புத்திதான்
பெண்களின் மாதவிடாயை
தூய்மையற்றது என்கிறது,
பெண்களின் பிறப்புருப்பில் அதுவும்
புதிய கண்டுபிடிப்புகளைச் சொருகத்
துடிக்கிறது. ஆணாதிக்கத்தின்
பிடியிலும் அதே ஆணாதிக்க புத்தி
கொண்டு மதக் கொள்கை பிடியிலும்
காலங்காலமாக அடிமைபட்டிருக்கும்
பெண்கள் மீதான ஒருதலைப்பட்ச
தாக்கதலை நிகழ்த்திக்கொண்டிருக்கும்
பிறையார் கோபாலக்கிருஷ்ணன் போன்ற
பார்ப்பன அதிமேதாவிகளை கண்டிக்க
வேண்டிய கடமை பெண்களுக்கு
மட்டுமல்லாது ஆண்களுக்கும்
சேர்ந்தே இருக்கிறது. மதப்போர்வையில்
இவர்கள் செய்யும் அயோக்கியத்தனம்
மற்றும் தீமிர் பேச்சுக்களில் ஒன்று
மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அது
பெண்களும் ஆணாதிக்கத்தை
ஆதரிக்கவே செய்கிறார்கள். அதனால்
இயற்கையாக அமையும் மாதவிடாய்
தன்மை இல்லாமல் போய்விடுமா
என்ன? மாதவிடாய் காலங்களில்
பெண்களும் படும்
கஷ்டங்களையும்,வேதனைக
ளையும்,வலிகளையும்,அவ
ஸ்தைகளையும் கடவுள் வேண்டாம்
ஆணாதிக்கம் ஒருமுறை
அனுபவித்தாலே அத்தனை
யுகங்களையும் மரணத்
தூண்டுதலாக்கி மடிந்துபோவார்கள்
என்பதை ஆணாதிக்கத்தாலே மறுக்க
முடியாது. அப்படியிருந்தும்
தூய்மையற்றவர்கள் பெண்கள் என
மாதவிடாயை காரணம் காட்டும்
ஆணாதிக்க மனோபாவத்தை கழட்டி
தூரே எறிய முன்வருவதில்லை.
காரணம் பெண்கள் காலம் முழுக்க
ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க
வேண்டுமென்று அவர்கள்
நினைக்கிறார்கள். அதனை
நிறைவேற்றவும் செய்து
விடுகிறார்கள்.பார்ப்பானியல் அதன்
இலக்கை இப்படியே தொடர்ந்து
எடுத்துச் செல்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...