என்னில் ஆசைகள்
பல உண்டு
இனியவளே
அதை உன்னில்
செலுத்திவிட எண்ணம்
இருந்ததில்லை
நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்
என் அன்பை மட்டுமே
நீ யாசிக்க வேண்டும்
என் பெயரை மட்டுமே
நீ வாசிக்க வேண்டும்
என் காதலை மட்டுமே
நீ தொழ வேண்டும்
இன்னும்,,, இன்னும்,,,
நீள்கிறதென் ஆசைகள்
முடிவிலா ஒரு
பயணத்தை போல
சுயமாய் சுதந்திரமாய்
வானில் சிறகடித்துப்
பறக்க உனக்கு மட்டும்
ஆசை இருக்காதா
என்ன
எனது ஆசைகள்
முளைத்த இடத்தில் பல
சிலுவைகள் தோன்றி
உரைத்தன
அதுவொன்றும்
ஆசையில்லை
அறிவிழந்தவனே
பேராசை
அதுவும் வெறும்
பேராசை மட்டுமன்று
சுயநலமெனும்
மரணக் காற்று
எச்சரிக்கை
ஒருபோதும் சுவாசித்து
விடாதே
வேடிக்கையாகத்தான்
இருந்தது
மரணம் தரும்
சிலுவையே மரணம்பற்றி
எச்சரிக்கையில்
ஏன் கூடாது
சுயநலக் காதலை
சுட்டிக்காட்டுவதில்
சிலுவையாக இருந்தால்
என்ன
சீனப் பெருஞ்சுவராக
இருந்தால் என்ன
உண்மைதான்
மனக்குரங்கிடம்
காதலெனும்
மலரை கொடுக்கவே
கூடாது
ஒரே அடியாய்
ஆசையை துறக்க
நான் புத்தனுமில்லை
அதையே
பிடித்துக்கொண்டிருக்கும்
கிறுக்கனுமில்ல
ஆனாலும்
விட்டொழித்தேன் எனது
ஆசைகளை
முழுமையாக
அர்த்தமற்றவை
அவைகளென
அறிந்து
கொண்டமையால்
என் காதல் உண்மை
என் சுவாசத்தில்
நீயிருப்பது உண்மை
என் இதயத்தில்
உன் துடிப்பையும்
உள்ளிழுத்து
வைத்திருக்கிறேன்
உண்மை,,, உண்மை,,,
அத்தனையும் உண்மை,,,
அதனாலே தூக்கி எறிந்து
விடுகிறேன் ஓர்
எரிதழலில்
என் ஆசைகளை
என்னவளே
எனக்கு வேண்டியது
உன்னிடத்தில்
அன்பும் அரவணைப்பும்
அத்தோடு இணைந்து
உறவாடும் இதயத்து
காதல் மட்டுமே,,,
அருமை
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete