Monday, January 04, 2016

மிருகமாகிய நான்

கடுகின் நுனியில்
வேர் திறக்கும்
ஒற்றைத் தண்டுகளை
ஒவ்வொன்றாக
உடைத்து விடுவேனோ
வேர்த்திருக்கும்
முகத்தில்
விளங்காத ஆத்திரங்கள்

சுதாரித்துக் கொண்டு
சுவற்றோடு
ஒட்டிநிற்கையில்
பல்லிகளும்
அலறுகின்றன

நமக்கான நரக
பாதகன் இவனென்று
பட்டப்பெயரும்
பக்கத்தில் என் பெயரும்

பைத்தியத் தன்மையா?
பிணம் தின்னும்
வெறியா?
பற்றி எரியும் கோபமா?

எனக்கு நானே
அலசிவிடுகிறேன் அவசியமற்றதாகிறது வாழ்க்கை

மிருகமாகிப்போனதில்
மனித பிறவியை
தொலைத்தேன்
வாழ்ந்தும் பயனில்லை
வாழ்க்கையும்
அர்த்தமின்றி

கொன்று விடுங்கள்
என்னை
கொஞ்சமிருக்கும்
மனிதமாவது
வாழட்டும்

இந்த மானுட
மிருக உடலை
கொடுங்கோலன்
என சுட்டிக்காட்ட
ஒரு
கல்லறையை நானே
செதுக்கி விடுகிறேன்

இருந்தேன் நான்
அப்படியே
ஒரு மத வெறியனாக
ஒரு சாதி வெறியனாக
ஒரு சமூக விரோதியாக!
மிருகமாகிய நான்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...